Monday, January 9, 2012

மதம்



சிலர் சொல்ல்கிரார்கள் கடவுள் இல்லை என்று. சிலர் சொல்வார்கள் மதம் போய் என்று. சிலர் சொல்ல்வர்கள் சடங்குகள் மூட நம்பிக்கை என்று. இப்படி கதைத்தால் பகுத்தறிவாளிகளாம்.
கடவுள் என்ற ஒன்று இருக்கா இல்லையா? நம்மை மீறிய ஒரு சக்தி ஒன்று உள்ளது ! இதை யாராலும் மறுக்க முடியாது!ஏன் 99% (அண்ணளவாக) விஞ்ஞானிகள் கூட கடவுளை நம்புகிறனர்!
ஆனால் மனிதன் கடவுளை நோக்கும் விதம்தான் மதங்களுக்கு மதம்(மதச்சடங்குகள்) வேறுபடுகிறது. அது ஒரு குறிப்பிட்ட மதம் உருவாகும் அல்லது ஆதிக்கம் செலுத்தும் புவியியல் பிரதேசத்தை அடிப்படையாக கொண்டு அமைகின்றன.
இந்து சமயம் உருவாக்கம் (ஆதிக்கம் செலுத்தும் பகுதி) தெற்குஆசியா  ஆகும்.இந்து சமயத்தின் கடப்பாடுகளும் சம்பிரதாயங்களும்,ஆடைகளும், தெற்குஆசிய காலநிலைக்கு ஏற்றவாறு காணப்படுகிறன.
இவ்வாறுதான் இஸ்லாமும் கிறிஸ்தவம் ஆகியன உருவாகும் அல்லது ஆதிக்கம் செலுத்தும் புவியியல் பிரதேசத்தை அடிப்படையாக கொண்டு காலநிலைக்கு எற்றவாறு அதன் கடப்பாடுகளும் சம்பிரதாயங்களும்,ஆடைகளும் காணப்படுன்றன.
சில பகுத்தறிவாளிகள் என்று தங்களைதானே சொல்லி கொள்வார்கள் மதத்தையும் கலாச்சாரத்தையும் பிரிக்கபார்கிறார்கள்.மதம் வேண்டாமாம் கலாச்சாரம் வேண்டுமாம்.எந்த ஒரு கலாச்சாரம் தோன்றுவதற்கும் காரணம் மதம்தான்.அப்படியானால் இவர்கள் வேரை பிடிங்கி விட்டு மரம் வளர்க்க பார்கிறார்களா?இதுக்கு பெயர்தான் பகுத்தறிவா?  இது ஒரு வகையானவர்கள்.
அடுத்தது இன்னொரு வகையானவர்கள் சடங்குகள் எல்லாம் மூடநம்பிக்கைகளாம். ஒரு மதத்தின் சடங்குகள் சடங்குகள் ஏதோ ஒரு நல்ல காரணத்திற்காகத்தான் உருவாக்கபட்டன! சில சடங்குகள் இப்போதைய விஞ்ஞான வளர்ச்சி காரணமாக தேவை இல்லாமல் போகலாம் ஆனால் எல்லா சடங்குகளையும் நாம் ஒதுக்கி விட முடியாது.(ஆனால் மூடநம்பிக்கையான சில செயல்களை ஏற்று கொள்ள முடியாது.)
எல்லா மதமக்களிலும் மூடநம்பிக்கை மத கடப்பாடுகளுக்கு புறம்பான நம்பிக்கைகள் காணப்படுகின்றன. இது நிச்சயம் தங்களுடைய மதம் பற்றிய அறிவின்மை காரணம் ஆகும். இன்னொரு விடயம் ஒரு மதம் இன்னொரு பிரதேசக்கு பருவும் போது சில மதக்கடப்பாடுகள் தேவையற்றனவாக  போய்விடுகின்றன.உதாரணத்துக்கு இஸ்லாம் மற்றும் இந்துக்களின் ஆடைக்கடப்பாடுகள் எல்லா பிரதேசத்துக்கும் பொருந்தாது.
.
மதம் -2
மதம் என்பது மனிதனால் தன் சமுகத்திற்கு  கட்டுபாடுகளை  ஏற்படுத்தவும் ஒழுக்கமான சமுகத்தை ஏற்படுத்த அவனுக்கு மீறிய சக்தியை கடவுளாக கொண்டு அவர்களின் புவியியல்அமைப்பு ,மொழி அடிப்படையில் உருவாக்க பட்டதுதான் மதம்!(எல்லா மதங்களும் ஒரு சக்தியைத்தான் மையப்படுத்தி காணப்படுகின்றன.)
திராவிடம் ஏதோ மத எதிர்ப்புதான் அடிப்படை காரணம் கொண்டு உருவாக்க பட்டது. ஆனாலும் தமிழகத்தில் உள்ள இரண்டு பெரும் திராவிட கட்சிகளும் மதத்தை  எப்படி ஆதரிக்கின்றன என்பதை அவர்களின் ஊடகங்களை பார்த்தல் புரியும்.

அடிப்படையில் திராவிடம் மதத்தை எதிர்ப்பதற்கு ஒரு காரணம் சாதி.சாதி என்பது எந்த மதத்திலும் இல்லை ஆனால் மதங்களின் பெயரால் சிலரால் தங்கள் சுயநலத்துக்காக உருவாக்கபட்டதுதான் சாதி. ஆனாலும் தமிழ் நாட்டில் ஒழிக்க முடியவில்லை ஏன் என்றால் அங்கு அவர்கள் வாழ்க்கையில் கலந்து விட்டது. ஏன் என்றால் அது மதத்தில் இல்லை அவர்கள் மனதில் (நாள் எல்லோரையும் குறிப்பிடவில்லை).
இலங்கையில் யுத்த காலத்தில் இடபெயர்வின் போது(உள்நாட்டு) சாதி இல்லை மதம் இருந்தது.(அனுபவம்)இது எப்படி சாத்தியமானது உயிரை கையில் பிடித்து கொண்டு ஓடும் போது எல்லோரும் ஒன்றாகத்தான்  காணப்படுவர் அகதி என்ற சாதி! ஆனால் மதம் இருந்தது ஒவ்வொரு எறிகணை சத்தத்திற்கும் எத்தனை கடவுள்கள் அழைக்க படுவார்கள்  தெரியுமமா? கந்தா...! ஜெசப்பா! மாரி அம்மா...! மேரியம்மா! அம்மா! அப்பா! இன்னும் எத்தனையோ கூக்குரல்கள்! எனக்கு தெரிந்த நாத்திகர்கள் சொன்னது யாரவது எங்களா காப்பத்த மாட்டாங்களா? அவர்கள் தங்களை மீறிய ஒரு சக்தியை எதிர்பார்த்தார்கள்! அங்கு உருவாக்கபட்டது அதே எண்ணம்தான்( கந்தா! ஜெசப்பா !) என்ன கொஞ்சம் வித்தியாசமாக!
எந்த மதமாகினும்  மத அடிப்படையில் எந்த சாதியும் இல்லை.ஆனாலும் பிரிவுகள் இல்லாத மதங்களும் இல்லை.ஏன் இந்த மதங்களுக்குள் பிரிவு???(நான் சாதிப்பிரிவை குறிப்பிடவில்லை).

இந்த மதங்களை பின்பற்றுவோர் சிலர் ஒரு தங்களுக்கு ஏற்படும் வித்தியாசமான சிந்தனையால் மதக்களில் சில மாற்றங்களை செய்து ஒரு மதபிரிவாக ஏற்படுத்தி விடுகின்றனர். இது ஒரு விதண்டாவாதமாகவும் சுயநல செயலாகவும் இருக்கலாம். இது சில மதங்களில் மூடநம்பிக்கைகள் வளர்வதற்கு காரணமாக அமைகின்றன.
ஆனாலும் குறிப்பாக சில மதப்பிரிவுகள் தங்கள் மதத்தை பரப்புவதற்கான முனைப்புகளில் இடுபடுகின்றன! இது ஒரு மூடத்தனமான செயல். ஏன் என்றால் எல்லாம் மதங்களும் அன்பைத்தான் அடிப்படியாக போதிக்கின்றன! எல்லா மதங்களும் ஒரே விடையத்தைதான் சொல்கின்றன சொன்ன விதம்தான் வித்தியாசமானது. தன் மதத்தின் அடிப்படைகளை கூட புரிந்து கொள்ளாதவர்கள்தான் மத மாற்றத்திற்கு உட்படுவார்கள்.
எந்த மதத்தவரும் தங்கள் மதம் சொன்னவற்றை 100% பின்பற்றி நடந்து இருக்க முடியாது !நடக்கவும் முடியாது! இது மாற்று கருத்து இல்லாத உண்மை. ஆனாலும் தங்கள் மதத்தின் படி வாழ்தால் உலகத்தில் பிரச்சினை இருக்காது!

Sunday, January 8, 2012

முதல் காதல்



 (திருகோணமலையில் ஒரு ஒல்லாந்த பெண்ணின் காதல் கதை )
18ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி !  காலையில் சூரிய உதயத்தை ரசிக்கும் அவளுக்கு இன்று ரசிக்கும் மனநிலை இல்லை.பிற தேசம்  என்றாலும் அவளுக்கு அவள் வாழ்நாளில் அதிக மகிழ்வை தந்தது இந்த திருகோணமலைதான்.இன்று அவளுக்கு பெரும் சோகத்தை கொடுத்து விட்டது.
தூரத்தே கப்பல் புறப்படுவதற்க்கான சங்கொலியும் ஒழித்தது.தன் கண்களை தனது அறையில் இருந்து கொண்டு கடலை நோக்கி கண்களை குவித்த அவளுக்கு பாய்மரம் விரிந்தது புரிந்த்தது.
என்னதான் அந்த கப்பலில் இருக்கிறது அவளுக்கு...எதுவும் முக்கியமான பொருளாக இருக்குமோ......முக்கியமான பொருள்தான் அவள் காதல்!
ப்ரன்சினா வான் ரீட் ஒல்லாந்தில் பிறந்தவள் தந்தை அதிகாரி என்பாதால் அவள் ஒல்லாந்தில் வாழ்த்ததில்லை. இவள் பருவம் அடைந்த வயது தொடக்கம் எல்லாம் இந்த பிரேடிக் மலைக்கோட்டையும்,திருகோணமலை என்ற இந்த ஊரும்தான்.
ஜோசொப்பியன் அவன் கொட்டை ராணுவ அதிகாரி அவனை காதல் கொண்ட நாளில் இருந்து காதல் எனபதற்கு அர்த்தம் புரிந்தது. முதல் காதல் திகட்ட திகட்ட காதலித்தாள் அவனிடம் சொல்லாமலே.
அவனை அவள் காதலிப்பதை தனது தந்தையிடம் சொன்னாள்.அவளது தந்தையும் ஜோசொப்பிடம் பேசி திருமண திகதியும் குறிக்கபட்டது. ஆனாலும் அவன் விருப்பம் அவள் மீது அல்ல அவளது தந்தை பதவி மீது.அதற்காக சீதனமாக அந்த பதவியை கேட்க்க முயன்றான் கடைசில் அவனுக்கு இருந்த ராணுவ அதிகாரி பதவியும் போயிற்று. கொவமடைந்த ரீட்டாவின் தந்தை அவனுக்கு அவன் பதவியை நீக்கி ஒல்லாந்து செல்ல கட்டளை இட்டார்.
கப்பல் செல்ல தயார் ஆகி விட்டது காற்றில் அசைகிறது பாய்மரம்.மெல்ல மெல்ல கப்பலும் நகருகிறது.ரீட்டவுக்கு என்ன செய்வது தெரிய வில்லை.
தன் காதல் கனவு வாழ்க்கை அந்த கப்பலுடன் செல்வதாக உணர்வு.அறையை விட்டு வெளியே வருகிறாள். கோணேசர் மலைக்கு சாமந்தரமாக செல்லும் அந்த கப்பலுடன் தானும் மலையில் ஓட தொடங்குகிறாள்.கடலுடன் கலந்த அந்த மலைக்கு ஒரு முடிவு இருக்கும் என்று தெரியாமல் ஓடிய அவளுக்கு வாழ்வும் அந்த மலையுடன் முடிந்து விட்டது. 

இது ஒரு உண்மை சம்பவம் 1680 காலப்பகுதில் இடம் பெற்றது( கொஞ்சம் கற்பனை)
 இந்த சம்பவங்கள் லேப்.கேணல் .தோமஸ்(பிரித்தானிய ராணுவம்) அவர்களால் 1940 ஆண்டு கண்டு எடுக்கபட்ட ஒல்லாந்த குறிப்புகள் அடிப்படியாக கொண்டது .
(அந்த ராணுவ அதிகாரி பெயர் தெரியவில்லை இக்கதையில் குறிப்பிட்டது கற்பனை பெயர்.)

Thursday, January 5, 2012

ஏதாவது நாம் கிழிக்க வேணும்

(2012ன் முதல் பதிவு )
நமது சமகால அரசியலை புரிந்து கொள்ளல் கொஞ்சம் கடினம்தான்.தமிழ் அரசியல் தலைகளின் கோரிக்கைகள் ஒரு புள்ளியில் நிற்கின்றன. கொஞ்சம் விரிவாக சொன்னால் அரசாங்கத்திடம் நல்உறவு கொள்ளும் சில தமிழ் கட்சிகள் அரசுடன் சுமுகமாக இருப்பதற்கு என்ன நோக்கத்தை காரணம் சொன்னார்களோ அதே காரணத்தை கையில் எடுத்து கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசுடன் பேசி கொண்டு இருக்கிறது(இது காலத்தின் கட்டாயம் அது வேறு விடயம்).
நான் சிறு வயதாக இருந்து ஏதோ ஏதோ அரசியல் தீர்வுகள் பற்றி எல்லாம் செய்தியில் சொல்வார்கள். எல்லாம் முடிந்து (தனி நாடு உட்பட ) ஏதோ சொன்னாங்களே.....ஆஆஆஆஅ .......ஆஅ  சமஸ்டி ஆட்சி முறை ...(இந்த விசயமும் ஏற்கனவே நான் பிறக்க முதல் வட்ட சதுர முக்கோண மேசை எல்லாம் போட்டு கதச்சவன்களாம்).
 ஆனால் இப்ப கையில எடுத்து இருக்கிறது சமஸ்டி ஆட்சி முறையின் குறுகிய வடிவமாம்(என்ன கொதறியோ ) அதாவது காணி போலீஸ் அதிகாரம் உட்பட சில விடயங்களை கேட்க போறாங்களாம் கேட்டாங்களாம் கேப்பாங்களாம்.( விளங்கல்லைய? எனக்கும் விளங்கஇல்ல! ஏன் எண்டு தினசரி பத்திரிக்கை பாருங்க விளங்கும்! இத சொல்லுற தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கூட விளங்க இல்ல எண்டு)
(அவன் அவன் அந்த இடத்தில இருந்தாத்தான் தெரியும் கஷ்டம்.எண்டு நீங்க சொல்லுறது விளங்குது ஆனாலும் நாம செய்ய போனத சரியா செய்யணும் அப்படி செய்ய இயலாவிட்டால் என்ன போல இப்படி இருந்து வெட்டியா எழுதணும்)
ஒரு விடயம் மட்டும் விளங்குது என்னதான் ஆளும் தரப்புக்கு ஆதரவு வழங்கும் கட்சிகளுக்கும் ஆதரவு வழங்காத கட்சிகளுக்கும் பிரச்சனை இருந்தாலும் அவர்கள் சொல்லும் நோக்கம் இப்போதைக்கு  ஒன்றுதான்!
அப்ப என்ன எல்லோரும் சேர்ந்து சட்டுபுட்டு எண்டு ஒரு முடிவுக்கு வந்து கூட்டமைப்பு பேசட்டும் அரசுடன் சேர்ந்து இருக்கும் கட்சிகள் உங்கள் வழியில் கேளுங்க! (கிழிஞ்சிது போ)
இது எல்லாம் நடக்கிற காரியமா எண்டு நீங்க சொல்லுவிங்க! இதுக்கு ஒரே பதில்தான் அதுவும் கமல் பாசையில் சொன்னால் “நான் நடக்கும் எண்டு சொல்ல இல்ல ,நடந்தா நல்லம் எண்டுதான் சொல்லுறன்”
ஏன் எண்டா இனி நமக்கு வேற வழி இல்ல இப்படிதான் போகணும். அதற்க்கான சூழ்நிலை இருக்கு! சர்வேதேச சமுகம் இலங்கைய தன்னுடைய கண் பார்வையில வைச்சிருக்கு! ஒரு தீர்வு வழங்க வேண்டிய நிர்பந்தத்தில் இலங்கை அரசும் உள்ளது.
இக்காலகட்டத்தில் இங்கு இருக்கும் மக்களும் இதைதான் விருப்புகிறார்கள்.
14 வருடம் யுத்தத்தை அனுபவித்த எங்களுக்கே இப்படி மனநிலை இருக்கும் போது (நினைவு தெரிந்த நாளில் இருந்து) ஆரம்ப காலத்தில் இருந்து அனுபவித்தவர்களுக்கு எப்படி  இருக்கும்.
மக்களில் மனதில் கொஞ்சம் நின்மதி வந்திருக்கிறது.. அது என்ன எண்டா சாதிச்ச நிம்மதி இல்ல.. ஒரு பிரச்சனையும் இப்போதைக்கு இல்ல ஏன்டா நிம்மதி.....
அரசியல் பற்றி  எனக்கு பெரிதாக ஒன்றும்  தெரியாது! (ஆனால் இலங்கை வரலாறு தெரியும் 2012.01.06 வரை)அப்படி தெரிந்து இருந்தாலும் இலங்கை அரசியலை புரிதல் கடினம். அப்படி இருந்தும் கூட இந்த பொடியனுக்கு தெரியும் விடயம் கூட எமது தமிழ் அரசியல்வாதிகளுக்கு (சகல அரசியல் வாதிகளும்)புரியவில்லை என்றால் அடுத்த சந்ததி உங்களை தூற்றும்!
பின் குறிப்பு –தமிழ் நாட்டு அரசியல் வாதிகளை நம் பிரச்சனையில் இழுப்பது ஏசுவது வாழ்த்துவது நமக்கு எந்த பிரஜோசனமும் இல்ல! அவங்கட பிரச்சனைய (ஏதோ அனையாம் அல்லது ஏதோ ஒரு நடிகனுக்காக பால் அபிசேகம் பண்ணுற பிரச்சனையாக இருக்கும் ) முடிக்கிறத்துக்கு அவங்க நாட்டுல படுறபாட பாருங்க!  இப்போ ஏதோ நகை கடைக்கு புரட்சி செய்றாங்க இன்னும் கொஞ்ச நாள்ல எல்லாம் பெரும் தலைவன் MGR உடன் முடிஞ்சி போச்சி !
*வழமை போல தொப்பி அளவனவங்க போட்டு கொள்ளுங்க! (நிபந்தனைக்கு உட்பட்டது )

Friday, December 16, 2011

நமக்கு தேவை கல்விதான், வாய் வீரம் அல்ல!

ஈழத்தில் சிலருக்கு போர் முடிந்துவிட்டது சிலருக்கு முடியவில்லை! ஆனால் ஈழத்தில் உள்ளவர்கள் யாரவது இப்படி கருத்து தெரிவிக்கிறார்களா?
ஏன் என்றால் இங்கு எல்லாம் முடிந்துவிட்டது.அவ்வளவும்தான் வேறு சொல்வதற்கு ஒன்றும் இல்லை.புலம் பெயர் தமிழர்களே (இணையங்களே) ஒன்று புரிந்து கொள்ளுங்கள்.இங்குள்ள மக்களுக்கு தேவை வாய்வீரம் அல்ல,அடிப்படை உதவிகள். இங்கு உள்ளவர்கள் ஓடி,உறவை இழந்து, மண்ணை இழந்து,கல்வியை இழந்து களைத்து போயிருக்கிறார்கள்.
நீங்கள் இங்கு இருக்கும் போது இருந்த நிலைமை வேறு இன்று வேறு மனநிலையும் வேறு! எனக்கு தெரிந்தவரையில் கல்வியால் மட்டும்தான் நாங்கள் சாதிக்கலாம்.இதற்க்கு ஒரேவழி அடிப்படை உதவிகளையும் கல்வி உதவிகளையும் வழங்குங்கள். நேரடியாக வழங்கலாம் அல்லது இங்கு சேவை நோக்கம் கொண்ட பல தொண்டு நிறுவனங்கள் செயல்படுகின்றன,அவைகள் ஊடக செய்யலாம்.
வீரம் பற்றி பேசுபவர்கள் இங்கு புனர்வாழ்வு பெற்ற போராளிகளுக்கு ஏதாவது உதவி செய்ய முடிந்ததா? அவர்களுக்கு வேலை வாய்ப்பு,குடும்ப சுமை எவ்வளவோ சுமைகள்.இலங்கை அரசு செய்த உதவி கூட நீங்கள் செய்யவில்லை இது அப்பட்டமான உண்மை.
உங்களுக்கு ஒரே ஒரு பிரச்சனைதான் இங்கு நடக்கு நல்ல விடையங்கள் உங்களுக்கு தெரிவதில்லை ஆனால் கெட்ட விடையங்கள் பெரிதக்கபடுகின்றன! அது மட்டும் அல்ல, குடும்ப பிரச்னை கூட உங்கள் இணைய தளங்களில் அரசியல் ஆக்கபடுகின்றன.
நான் குறிப்பிடுவது 2009 பிறகு உள்ள அரசியலை,இது கொஞ்சம் வித்தியாசமானது, நீங்கள் இங்கு இருந்தால் புரிந்து இருக்கும்.
இலங்கை அரசுக்கு எங்களது பிரச்னையை தீர்க்க வேண்டிய கட்டாய சூழல் சர்வதேசம் ஊடக ஏற்பட்டு இருக்கிறதது. இலங்கை அரசியல் வேறு மாதிரி சென்றுகொண்டு இருக்கிறது (அபிவிருத்தியுடன்).
ஆயுதவழி போராட்டம் தொடங்குவதற்கு உயர்கல்வி பல்கலைகழக தெரிவு பிரச்சனை ஒரு காரணம். இப்பொழுது இப்பிரச்சனை முளுவாக தீர்ந்து விட்டது.பல்கலைகழகங்களில் வளாகங்கள் ஒவ்வொரு மாவட்டங்களிலும் அமைய பெற்று விட்டது. பாடநெறிகள் அதிகமாக்க பட்டுவிட்டன. இலங்கை உயர் தொழிநுட்ப கல்வி நிறுவனத்தின் வளாகங்கள் வடகிழக்கில் நான்கு (இரு பிரிவுகள் உட்பட) அமைந்துள்ளது அது மட்டும் அல்லாமல் வவுனியாவில் அமைக்கபட்டு வருகிறது.இன் நிறுவனம் உயர் தொழில்கள் ஆன கணக்கியல்,தகவல் தொழில்நுட்பம்,விவசாயம்,பொறியியல் , ஆகிய வற்றிக்கு பட்டப்படிப்பை வழங்குகிறது. அடுத்த வருடத்தில் இருந்து இன் நிறுவனம் உயர் கல்வி அமைச்சால் பல்கலைகழகக்கல்லூரியாக தரம் உயர்த்தபடவுள்ளது.அவை தவிர இளைஞர் விவகார அமைச்சின் கீழ் தொழில்நுட்ப கல்லூரிகள்,தொழில் பயிர்ச்சி நிலையங்கள், அனைத்து துறைகளுக்கும் பயிற்சிநெறிகளை வழங்குகின்றன .கல்வியல் கல்லூரிகள் (ஆரம்ப காலத்தில் இருந்து இத்துறையில் தமிழர்கள் வெளியிடு அதிகம்)இவை அனைத்தும் இலவச கல்வி அடிப்படையில் தான் இடம்பெறுகின்றன அது மட்டும் அல்லாது பல்கலைகழக,மற்றும் உயர் தொழில் நுட்ப மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்க படுகிறது. தொழில் நுட்ப கல்லூரி மாணவர்களுக்கு போக்குவரத்து படி கிடைக்கிறது.
இதை தவிர வெளிநாட்டு பல்கலைகழகங்கள், கல்லூரிகள் இலங்கையில் நிறுவப்பட்டுள்ளன!
இலங்கை கல்வி துறையில் ஒரு திட்டமிடபட்ட வளர்ச்சியை அடைந்து கொண்டுஉள்ளது(இது நமக்கும்தான்). “இதுதான் தற்போதைய நிதர்சனம்”.
இவைகளை நான் ஏன் குறிப்பிட்டேன் என்றால் நமது மாணவர்கள் உயர் தரத்தை சித்தி அடைந்து விட்டார்கள் (ஆககக் குறைந்தது சாதாரண சித்தி) என்றால் அவர்களுக்கு எதாவது ஒரு உயர் கல்வி வாய்ப்பு நிச்சயம் உள்ளது.
அதற்க்கு சிறு தள்ளுதலையாவது நாம் மேற்கொள்ள வேண்டும். யுத்தத்தால் பாதிக்க பட்ட மாணவர்கக்கு ஒரு அழிப்பான் கொடுப்பது கூட உதவியாக இருக்கும்.
யதார்த்தத்தை புரிந்து நமது மாணவர்களின் கல்வியை உயர்த்துவது நம் கடமை! உதவுவதற்கு வழிகள் அதிகம் உள்ளன!
சமுகவலைதளங்களில் நாடு! மக்கள்! என்று முழங்கும் நீங்கள் நம் இன மாணவர்களுக்கு எதாவது செய்யுங்கள்! 

Wednesday, December 14, 2011

ஏன் மானம்கெட்ட தொழில் உங்களுக்கு"


இன்றைய காலகட்டத்தில் புலம்பெயர் நாடுகளில் இருந்து பல இணையதளங்கள் செயல் பட்டு வருகின்றன அவைகள் எந்த அளவுக்கு நம்பகரமான செய்திகளை வெளியீடுகின்றன?
யுத்தம் முடிவடைந்த காலப்பகுதியில் இருந்து சில இணையங்களில் இலங்கையில் வடகிழக்கு பகுதிகளில் இடம்பெறும் கலாச்சார சீரழிவுகள் பற்றிய செய்திகள் முக்கிய இடம்பெற்று வருகிறது.
சில உண்மையாகினும் பல சொடிக்கப்பட்ட கட்டுகதைகளாக வெளிவருகின்றன.ஏன் இவ்வாறு தங்களின் இணையதளங்களின் விளம்பரத்தை தேடி கொள்வதற்கு தங்கள் பிறந்தஇடத்தை கேவலபடுத்துகிறிர்கள்?கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏன் நண்பர் ஒருவரால் ஒரு இணையத்தின் செய்தி ஒன்று முகஏட்டில் பகிரப்பட்டது.
இது திருகோணமலை எடுக்கபட்டதாக குறிப்பிடபட்டிருந்தது  இது கலாச்சார சீரழிவு எனவும் ....
அந்த ஒளிப்படத்தில் ஒரு இளைஞன் ஒருவரும் ஒரு யுவதின் கையை பிடித்து உரையாடி கொண்டு இருக்கிறார்.அதனை ஒருவர் மறைத்து வைத்த கமரா மூலமாக படம்பிடிக்கிறார்? இதில் யார் செய்தது காலச்சாரசீரழிவு?
  • காதலியின் கையை பிடித்து கதைத்தவரா ?
  • அதை படம் பிடித்த வக்கிர புத்திகொண்டவரா???????
    அல்லது
  • விளம்பரத்திற்காக ஒரு சிறிய விடயத்தை பெரிய விடையமாக்கி அதை அரசியல் ஆக்கி தன் மகளுக்கும் மகனுக்கும் பப்புக்கும்,டேய்டிங்க்கும் போவதற்கும் பணம் கொடுப்பதற்கு நடத்தப்படும் இணையதளங்களா????????

இது என்ன மானம்கெட்ட தொழில் உங்களுக்கு ?????இப்படி வாழ்வதற்கா உயிரை கையில் பிடித்து கொண்டு வெளிநாடு ஓடினாய் ???
உன் மகள்மாரின் மகனின் மனைவியின்  facebook புகைப்பட பகிர்வை பார்! அப்போது விளங்கும் எது காலச்சார சீரழிவு என்று! உன் மகள் மது கோப்பையை உடன் தனது boy friendஉடன் (100 க்கு 1 வீதம் காதலனாக இருக்கலாம்)புகைபடம் எடுத்து facebookல் பகிர்தல் காலச்சார சீரழிவு இல்லையா ???

இவ்வாறன இணையங்கள் ஒன்று புரிந்து கொள்ளவேண்டும்..வெளிநாடுகளில் நம்மவர்கள் செய்வதை விடவா இலங்கையில் நடக்கிறன.
இதுதான் நம் பிரச்சனையா?
உங்கள் இணையங்களில் பகிரப்படும் செய்திகள்தான்  என்ன ?
  • வீரஆவேச கட்டுரைகள்.
  • நடிகர்களின் கிசு கிசு.
  • நடிகைகைகளின் ஜிலு ஜிலு வீடியோ.

வீரமும் ஆவேசமும் இங்கு உள்ளவர்களுக்கு நிறையவே உள்ளது,இருப்பதால் தான்.அவர்கள் எங்கும் ஓடி போய்விடவில்லை. கொழும்பில் இருந்து கூட தமிழர் நலனுக்காக பாடுபடும் ஊடகத்துறைசார்தவர்கள்,அரசியல்வாதிகள்,சமுகநலவாதிகள் உண்டு.
உங்கள் வாய் வீரம் எங்களுக்கு தேவை இல்லை! யுத்த காலத்தில் நீங்கள் என்ன செய்திர்கள் எம் மக்களின் பிணம்களின் படங்களின் போட்டு பிழைத்தீர்கள் .
இவ்வாறு செய்த நீங்கள் இப்போது விபச்சார அரசியல்துணிந்துவிட்டிர்கள்!
காதலன் காதலி கைபிடிப்பது சமுக சீரழிவாம் இது இலங்கை அரசின் செயலாம்!!!!!!!
நாங்கள் ஈழத்தில்தான் இருக்கிறோம் இங்கு நடப்பவை உங்களை விட எங்களுக்கு தெரியும். எதுவும் நடக்கவில்லை என்று நான் சொல்லவரவில்லை!!!! ஆனால் உங்கள் மண்ணை அவமானபடுத்தாதிர்கள் !!!!
அந்த ஒளிப்படத்தில் வந்தவர் யாரகவும் இருக்கட்டும்,!என்ன இனத்தவராக இருக்கட்டும்! மற்றவர்கள் தனிப்பட்ட விடயத்தை விடியோ எடுப்பது எவ்வளவு கேவலமான செயல்!!! அதை வெளியீடு செய்தல் எவ்வளவு ஈனச்செயல்!!!!

பின் குறிப்பு-
தொப்பி அளவானவர்கள் போட்டு கொள்ளவும்!!!