Tuesday, January 24, 2012

அன்புள்ள கலாமுக்கு ,,,,,,


மதிப்புக்குரிய அப்துல்கலாம் அவர்களுக்கு இலங்கையில் அமைதிப்படையில் பணி புரிந்த இந்தியவீரன் எழுதிக்கொள்வது.ஐயா நீங்கள் இலங்கை சென்ற பொழுது இந்திய வீரர்கள் நினைவு இடத்தில் பெருமையுடன் அஞ்சலி செய்தீர்கள்

நீங்கள்  அஞ்சலி செய்ததை இட்டு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நாங்கள் பிற நாட்டை எப்படி நீங்கள் பெருமைப்படும் அளவுக்கு பாதுகாத்தோம் என்பதை நீங்கள் கேட்டால் நீங்களும் எங்களை நினைத்து இன்னும் பெருமைப்படுவீர்கள். உங்களுக்காக ஒரு மணித்தியாலம் நடந்த சம்பவத்தை கூறுகிறேன்,கேட்டு பெருமைப்படுங்கள்.
1989 ஆண்டு ஒன்பதாம் மாதம் 13திகதி(புதன்கிழமை) அண்ணளவாக 8.30 இருக்கும் மூதூர், கட்டைபறிச்சான் பகுதியில் உள்ள சின்னமட்டக்களப்பு பகுதியில் எங்களுக்கும் புலிகளுக்கும் சண்டை மூளுகிறது. எங்கள் படை வீரன் ஒருவன் அச்சண்டையில் சாவடைந்தான். அந்த ஆத்திரத்தை தீர்க்க பழிக்குப் பழி வாங்க வேண்டிய தேவை இருந்தது.(எத்தனை சினிமா பார்த்திருப்போம்!! நண்பனை கொன்ற வில்லன் கூட்டத்தை பழி வாங்க வேண்டும்) நாங்கள் கட்டைபறிச்சான் கிராமத்தினுள் புகுந்தோம்.முதலில் எங்கள் கண்ணில்பட்டது.விபுலானந்த வித்தியாலயம் என்ற பாடசாலை. அன்று பள்ளிநாள் எங்களுக்கு வசதியாய் போய்விட்டது.எங்கள் இயந்திர துப்பாக்கிகள் சுழன்றன,எல்லோரும் 9ம் ஆண்டுக்கு உட்பட்ட மாணவர்கள்!!!!!!!!!!11பேர் பலி!!!! படுகாயங்கள்!!!!  பாடசாலையில் இரத்தஆறு ஓட வைத்தோம்.அத்துடன் நாங்கள் முடித்து கொள்ளவில்லை. கண்ணில் பட்ட வீடுகளை நோக்கி எங்கள் துப்பாக்கிகள் முழங்கின. சாவுகள் படுகாயங்கள்,இதில் எங்களுடைய திறமை என்ன என்றால் இறந்தது எல்லாம் சிறுவர்களும் வயோதிபர்களும்.
இப்போது புரிகிறதா? நாங்கள் எப்படி பிற நாட்டையும் அம்மக்களையும் எப்படி பாதுகாத்தோம் என்று!!!!!!!இந்த சம்பவம் ஒரு கிராமத்தில் ஒரு மணித்தியாலம் நாங்கள் நடத்திய சாதனை இது . அத்த ஒரு கிராமத்தில் நாங்கள் செய்த சாதனைகள் வீர தீர செயல்கள் ஏராளம் ஒரு கடிதம் போதாது. இன்னமும் எங்களால் கால் கை (வாழ்கையை) இழந்தவர்கள் சாட்சிகளாக இருப்பார்கள்!!!

உங்கள் பெருமைக்குரிய
இந்தியப்படைவீரன்

(1989.09.13 #####அன்று இந்திய படையால் மேற்கொள்ளப்பட்ட படுகொலை சம்பவம் !!!! என்னதான் அதன் பிறகு 18 வருடங்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டாலும் எம் கிராம மக்களுக்கு மறக்க முடியாத நாள். முதல் முதலாக 11 சிறுவர்களை பிணமாக பார்த்தநாள். என் சகோதரி சங்கீதாவை எங்கள் குடும்பம் இழந்தநாள்!!! அவர்கள் செய்த வீரசெயல்களின் சாட்சியாக கட்டைபறிச்சானில் உள்ள  “தில்லம்கேணி” என்ற அழிந்தகிராமம் இன்னும் சாட்சியாக இருக்கிறது)
***கடிதம் கற்பனை சம்பவம் உண்மை

Thursday, January 12, 2012

இலங்கை தமிழர் சிங்களவர்களின் “ப்ளாஷ்பேக்”


இலங்கையில் என்னதான் பிரச்சனை? இரண்டு இனங்களுக்கு இடையில் ஆதிகார பிரச்சனை  இதில் மதங்களும் சம்பந்தபட்டுகொள்ளும்.
இனம் என்றால் என்ன ?ஒரு மொழி காலச்சாரத்தை கொண்ட மக்கள்.இலங்கையில் பிரச்சனைக்குரிய இரண்டு இனங்கள் தமிழர் சிங்களவர். சரி வாங்க இவங்கட ப்ளாஷ்பேக்க கொஞ்சம் சுருக்கமாக பார்போம் ..  
.இலங்கையில் ஆதிகுடிகள் இயக்கர் நாகர்(திராவிடர் ) இதை சொல்லுவது மகாவம்சம். அதன் பிறகு வடஇந்தியாவில் இருந்து தனது 700 நண்பர்களுடன் விஜயன் வருகை, அதன் பிறகுதான்  இலங்கையில் இன்னுமொரு புதிய இனம் உருவாக அத்திவாரம் இடப்படுகிறது .அதாவது குவேனி என்ற  பெண்ணை திராவிட(தமிழ்குடி) பெண்னை விஜயன் திருமணம் செய்வதன்  மூலம் இரண்டு பிள்ளைகள் பிறக்கின்றன.ஆனாலும் விஜயன் மறுபடியும் மதுரை பகுதியை ஆண்ட பாண்டு என்ற மன்னனின் மகளை திருமணம் செய்கிறான் அது மட்டும் இல்லாமல் தனது 700 நண்பர்களுக்கும் மதுரை பெண்களை திருமணம் செய்து வைக்கிறான்.
குவேனி விஜயனால் துரத்தபட்டு தனது இரு பிள்ளைகளோடு (ஆண்,பெண்) வாழ்கிறாள். குவேனி திராவிடர்களால் கொல்லப்படுகிறாள்.அதன் பிறகு விஜயனுடைய பிள்ளைகள் தங்களை தங்களே திருமணம் செய்து கொண்டு மலையா (malaya)(விஜயனின் சந்ததி) என்ற இனம் உருவாகிறது.
அதன் பிறகு மதுரை இளவரசிக்கும் விஜயனுக்கும் பிறந்த குழந்தைகள் மூலம் புலிந்தா (Pulinda) என்ற இனம் உருவாகிறது. அது மட்டும் அல்ல விஜனால் தனது மாமா மூலம் (மதுரை ராஜா) கலை குடும்பத்தினர் பிராமணர்கள் இலங்கைக்கு வருகின்றனர்.
இவை அனைத்தும் நடந்தாலும் இயக்கரும் நாகரும்(தமிழ் குடிகள்) இலங்கையில் வடகிழக்கு பகுதியை தங்கள் ஆட்சி செய்கின்றனர்.


 ஆனால் இலங்கை பூராகவும் காலாச்சாரம் ஒன்றாக காணப்பட்டது 
(இந்து).இதற்க்கு காரணம் இந்திய ஆதிக்கம்.
கிட்டதட்ட கி.பி நான்காம் நுற்றாண்டு தொடக்க காலப்பகுதி  விஜயனின் சந்ததிகள்(ஆரிய திராவிட கலப்பு ) மற்றும் மதுரை வம்சத்தினர்கள்,பிராமணர்கள் என்பவர்கள் மூலம் ஒரு புதிய இனம் உருவாகிறது.

மலையா இனம்+புலித்தா இனம்+பிராமணர்கள்+மதுரை வம்சத்தினர்

= சிங்களவர் என்ற இனம் உருவாக அடிப்படையான இனம்
  
ஆரிய திராவிடம் கலந்த இனம்தான் சிங்களஇனம். ஆனாலும் இம்மக்கள் தமிழ்,பாளி மொழிகளைதான் பேசி இருக்க வேண்டும்.ஏன் என்றால் அந்த இன மக்களின் தாய்மார்கள் தமிழர்கள்! தந்தையர் ஆரியர்.
அதன் பிறகு பௌத்த மதம் இலங்கை தீவுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. பௌத்தம் இனம் (திராவிடர்,ஆரியர்)  பாராமல் பரவுகிறது.
இப்போதுதான் சிங்கள மொழிக்கு அடித்தளம் இடப்படுகிறது. இலங்கை தீவில் உள்ள பௌத்த மதத்தவர்களுக்கு பொதுவான மொழி ஒன்று தேவைபடுகிறது.ஏன் என்றால் தமிழ் பாளி சமஸ்கிதம் ஆகிய மொழிகளை கொண்டவர்கள் கானபடுவதால் மொழி பிரச்சனை ஏற்படுகிறது. அப்பொழுதான் சிங்களம் என்ற மொழி தமிழ் பாளி சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை கொண்டு உருவாக்கபடுகிறது.
*பழைய சிங்களம் -கி.பி 7 - 12ம்நூற்றாண்டு வரை காலப்பகுதியிலும்
புதிய சிங்களம் 12ம் நூற்றாண்டு முதல் தற்போது வரை வரையிலும் உருவாக்கப்பட்டன.
தற்போதைய சிங்களமொழி உருவாக காரணமாக அமைந்த மொழிகள்  தமிழ்,வங்காள மொழி, பாளி, சமஸ்கிருதம்,டச்,ஆங்கிலம்,அது மட்டும் அல்ல இந்திய மொழிகள் அனைத்தும் சிங்களத்தில் உள்ளன.
இப்பொழுது ஒரு தீவில் இரண்டு மொழிகள்......இரு இனம்.....
இரண்டு இனத்திற்கும் தென்இந்திய தொடர்புகள்.. திருமணங்கள், படையெடுப்புகள் ,ஆக்கிரமிப்பு,...என்பவை போர்த்துகீசியர் வருகை மட்டும் இடம் பெறுகிறது..பிறகு ஒல்லாந்தர், பிறகு ....பிரித்தானியர் எல்லோரையும் ஒன்றாக்கி “பிரிடிஷ் சிலோன் மக்கள்” ஆக்கினான்!
அதுக்கு பிறகு நமக்கு நாமே வைச்சிகிட்டம் ஆப்பு!
நாங்க ஒண்டா இருக்கிறம் சாமி எண்டு சொல்லி அவனிட்ட நாட்ட வாங்கி...... இண்டைக்கு வரைக்கும் மல்லுக்கட்ட வேண்டிஇருக்கு.....


(((நான் இந்த பதிவு  எழுத முன்பு மகாவம்சம் சுருக்கம் (334 பக்கம்) படித்தேன்.
அதன்பிறகுதான் இது எழுவதற்கான எண்ணம் வந்தது. இதில் கூறப்பட்டவை மகாவம்சத்தை அடிப்படையாக கொண்டு அமைந்தவை))))
பிழைகள் இருந்தால் கட்டாயம் பின்னூட்டல் இடவும்

வெள்ளை ஹீரோதான் வேணும்- சுகாசினி


தமிழ் திரைப்படங்களில் இனிமேல் இயக்குனர்கள் MGR  போன்ற  வெள்ளையான நடிகர்களைத்தான் தேர்ந்து எடுக்க வேண்டுமாம்! நடிகை சுகாசினி வேண்டுகோள் !!!!!!!

சுகாசினி நல்ல நடிகை, நல்ல நல்ல எழுத்தாளர் ! ஆனாலும் ஏன் அவர் கோமாளித்தனமான கருத்துகளை வெளியிடுகிறார் என்று புரிய வில்லை. சுகாசினி எந்த காலத்தில் இருக்கிறாரோ தெரியவில்லை. இப்போது வந்த தமிழ் படங்களை பார்த்தாரோ தெரியவில்லை! அங்காடித்தெரு,தென்மேற்கு பருவக்காற்று இன்னும் மசாலா இல்லாத படங்கள் சுகாசினி கூறியவாறு MGR போல நடிகர்கள் பொருந்துவார்களா?
அவர் இன்னும் ஒன்று குறிப்பிட்டார் அது ஆதரிக்க கூடியதுதான் நடிகைகளை மட்டும் ஏன் வெள்ளையாக எடுகிரிங்க?இது வாஸ்தவமான கேள்விதான் ! ஆனாலும் விடுத்த வேண்டுகோள்தான்  அவரும் அந்த கூட்டம் தான் என்று நிருபித்து விட்டது.(சில பேருக்கு முகத்தில அரை இஞ்சிக்கு மேக்கப் போடா வேணும்)
கோடி கொடியா பணத்த கொட்டி படம் எடுக்கிற அமேரிக்கா காரன் கூட நிறத்த பார்த்து படம் எடுகிறல்ல!
ஆனால் படங்களுக்கு 5பாட்டு 4பைட்டு அம்மா சென்டிமென்ட் கற்பழிப்புகாட்சி வெள்ளையான ஹீரோ போதுமா? . நல்ல படம் எடுக்கிறவங்களையும் இந்த அம்மா விடமாட்டாங்க போல.
மசாலா படங்கள் கூட கதை தேடிப்போக இந்த அம்மா கலர கையில எடுதிட்டா? ஒரு பிராந்திய படம் அந்த பிரதேசத்தின் தன்மைகளை கொண்டுதான் இருக்க வேண்டும் என்று உலக சினிமாவை பற்றி கதைக்கும் இந்த அம்மைக்கு தெரியாதா?

திரை விமர்சன நிகழ்ச்சியில், ‘தமிழ் ரசிகர்களுக்கு படம் பார்க்கத் தெரியவில்லை’ என்று  குறிப்பிட்டார் கிராமத்திலிருந்து வரும் இயக்குநர்களுக்கு சீன் எப்படி வைப்பதென்று தெரியவில்லை என்றார்.
பின்பு  மணிரத்தினம் படித்தவர்களுக்குத்தான் படம் எடுக்கிறார் என்றார்.
அம்மணி எடுத்த முதல் படம் இந்திரா கிராமத்தை களமாகக் கொண்டு வந்த கதை என்பது நினைவில்லை போலிருக்கிறது (தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை இதற்கு மேல் யாரும் கொச்சைப்படுத்த முடியாது )
கிராமங்களில் இருந்து வந்தவர்கள்தான் இன்று பெரிய இயக்குனர்கள்!
தமிழ் சினிமா நல்ல  படைப்பாளிகள் கையில் போய் ரொம்ப நாளாகிறது. மேடையிலும் ஜெயா டிவியிலும்(முன்னொரு காலத்தில் ) சீன் போட்டு திரும்பவும் ஹீரோயின் ஆக போறவோ தெரியல்ல ....
லாரன்சின் (நடன இயக்குனர்) ராஜாதி ராஜ படம் வந்த பொழுது அவர் விமர்சனம் என்ற பெயரில் தனி மனித விமர்சனம் செய்தார். ஏன் சூப்பர் கிட் படங்கள கூட எவ்வளவு கேவலமாக விமர்சனம் செய்தார்..
இந்த அம்மணிக்கு படைப்புகளை விமர்சனம் செய்ய தெரியாது. படைப்பாளிகளை விமர்சனம் செய்யத்தான் தெரியும்...


கலர விட கதைதான் முக்கியம் எண்டு இந்த அம்மாக்கு தெரியாதா ? இந்த அம்மாக்கு வக்காலத்து வாக்க நினைப்பவர்கள் YOUTUBE போய் பாருங்க இந்த அம்மா விமர்சனம்(காசினி பேசும் படம்) எண்ட பெயரில போட்ட சீன !!!
கா.செந்தூரன்

Tuesday, January 10, 2012

வெட்டி வேல


அது என்ன வெட்டி வேல? ஏதாவது வெட்டுற வேலையா? எல்லா வேலைகளிலும் அதிகமாக வெட்டுதல் என்ற செயல் இருக்கும். தையல்காரர் துணி வெட்டுவார்.விவசாயி மண்ணை வெட்டுவார். முடி திருத்துனர் முடி வெட்டுவார்.கொல்லர் இரும்பை வெட்டுவார்கள்.தட்டார் தங்கத்தை வெட்டுவார்கள்.ஆசிரியர் பிழையான விடைகளை வெட்டுவார்கள்.வைத்தியர் கை கால்களை  வேட்டுவார். எப்படி எல்லோரும் வெட்டி கொண்டுறிருக்க வேல இல்லாத எங்கள ஏன் வெட்டி வேல செய்யிறம் எண்டு சொல்லுறாங்க? அத விடுங்க ஏன் அர்த்தம் இல்லாம இப்படி சொல்றிங்க எண்டு ஜோசிச்சு பார்த்திங்களா? நீங்க நினைக்கிறது எனக்கு விளங்குது “ டேய் இப்படி வெட்டியா இருந்தா இப்படிதாண்டா தொனும்” நீங்க நினைச்சது சரிதானே?
சரி விடுங்க................ வெட்டி வேல எண்டா என்ன?(செம கடுப்பாகிடிங்க  போல)

இது எல்லாம் சரிவராது எண்டுதான் நானும் வெட்டி வேலைய(அர்த்தம்) தேட ஆரம்பிச்சன்! நெட்ல தேடினா! அர்த்தம் புரியல்ல ஆனா வெட்டி வேல அனுபவம் கிடைச்சிது! எல்லோரும் வெட்டித்தனமா எவ்வளவு எழுதினாலும் வெட்டி வேல என்ன எண்டு எழுத்தல்ல!அப்பத்தான் புரிஞ்சிது  இது எல்லாம் வெட்டி வேலை துறையில் முதுமாணி பட்ட பெற்ற என்னை போல உள்ளவர்கள்தான் எழுதவேணும் எண்டு.  ........சரி........  வெட்டி வேலைய பத்தி என்னத்த எழுதிறது? நீங்க கூட ஜோசிச்சு பாருங்க ஒன்டும் தெரியல்லதானே?? ! எக்ஸாம் பேப்பர பார்த்த பீல் இருக்குதில்ல? உங்களுக்கு பதில் தெரியாத ஒன்றை நாங்கள் வெற்றி(ட்டி)கரமாக  நடை முறைபடுத்துகிறோம்!  சரி அத விடுங்க நான்தான் வெட்டியா இப்படி எழுதினா நீங்க இப்படி இருந்து வெட்டியா வாசிப்பிங்களா? போங்கப்பா! போங்க! போய் வேலைய பாருங்க!   முக்கிய குறிப்பு   வெட்டி வேலைக்கு ஒரு வரலாறு உண்டு.ராஜராஜசோழன் தஞ்சை கோயிலை கட்டும் போது பல கிராம மக்களை உணவு மட்டும் கொடுத்து கூலி இல்லாமல் வேலைக்கு அமர்த்தினான்.கிட்டத்தட்ட அடிமைகளாக வேலை வாங்கினான்.(கிட்ட தட்ட ஒரு சின்ன கிட்லர்! இல்ல..... இல்ல....  கிட்லர்தான் பெரிய ராஜராஜசோழன்! வரலாறு தெரிந்தவர்கள் இதற்கு எதிர் கருத்து பேசமாட்டார்கள்!) இந்த வேலையை ( “அப்பறசெண்டிங்க”) செய்பவர்கள் தாங்கள் செய்யும் வேலைக்கு வைத்த பெயர்தான் வெட்டி வேலை! இலங்கை பேச்சு வழக்கில் இந்த சொல் இல்லை ஆனால் சினிமா இந்த சொல்லையும் இலங்கை தமிழில் சேர்த்து விட்டது! தமிழ் சொல்தானே நாமும் அங்கீகரிக்கலாம்! 

கா.செந்தூரன் 

ஒரு உண்மை


மரணவீடு என்று சொல்வதற்குரிய அறிகுறிகளுடன் ஒரு வீடு,வீட்டுவாசலில் மரண அறிவித்தலில்
……………………………………………………………………………………………………………………………… சரவணன்;(லண்டன்)விமலநாதன்(பிரான்ஸ்)ஆஞ்சலி (அவுஸ்ரெலியா) சந்தியா (சுவிஸ்)கமலா (கனடா)பாலச்சந்திரன் ;(லண்டன்)வித்தியா (சுவிஸ்)அமுதன் (அவுஸ்ரெலியா) ஆகியோரின் தந்தையும்ஆவார்……………………………………………………………………………………………………………………………… பல பிளாஸ்திக் கதிரைகளில் சில கதிரைகளில் சிலர் நாட்;டுநடப்பை பற்றி கதைத்துக் கொண்டு இருக்கின்றனர். அவ்இல்லத்தின் சூழ்நிலை தெரியாமல் தொலைபேசியும் சினுங்கிக் கொண்டு இருந்தது.தொலை பேசியின் சினுங்கலை தாங்க முடீயாத ஒருவர் தொலைபெசியை எடுத்து
‘கலோ’ என்றார்.
(மறுபக்கத்தில்) “கலோ சிவராசா சித்தப்பாதானெ கதைக்கிறது,”(இப்பக்கம்) “ஓம் நான்தான் கதைக்கிறன்”

(மறுபக்கம்) “நான் விமலநாதன் கதைக்கிறன்,”
சித்தப்பா என்னால வர ஏலாது,இங்க நான் அகதியா பதின்சிஇருகிறதால எனக்கு இலங்கைக்கு விசா தரமாட்டங்க,நான் எவ்வளவு காசு வேணும் எண்டாலும் அனுப்புறன் அப்பாட சடங்க ஒழுங்கா செய்யுங்க….அம்மாவால இப்ப கதைக்க ஏலாது என்டு எனக்கு தெரியும்
அப்பாவ பாக்;க வேணும் skypeலகாட்ட ஏலுமெ?

(இப்பக்கம்); “ஓம் தம்பி நான் எல்லாததையும் பாத்துக்கொள்ளுறன் எதுக்கும் கொஞ்ச காசு போட்டு விட்டா நல்லம் தம்பி!என்ர கைக்காச போட்டு கோஞச வேலை முடிச்சித்தன்! தம்பி என்ர accountla காச போட்டு விடுங்களன்;” என்று தனது பேச்சை தொடர்ந்தார்………..
தனது உடன் பிறந்த அண்ணனின் இறப்பை வியாபாரமாக மாற்றி தனது காசுப்பையை நிரப்ப நினைத்த சிவராசா அதை வெற்றிகரமாக முடித்து அழைப்பை துண்டித்தார்.

மறுபடியும் தொலைபெசி சினுங்கியது மறுபடியும் சிவராசா தொலைபெசியை எடுக்க, (மறுபக்கம்) ‘அழுகையுடன் தொடங்கியது அஞ்சலியின் உரையாடல் அதெ உரையாடல் அதெ சிவராசாவின் வியாபாரப் பேச்சும் தொடர்ந்தது………………..
இவ்வாறு ஒவ்வோரு பிள்ளைகளும் தங்களது தந்தையின் இறுதி சடங்கினை செய்ய தமது சித்தப்பாவிடம் ஒப்பந்தம் செய்து முடித்தனர்..


வரவேற்பு அறையில் தனது கணவனின் அசைவில்லா முகத்தை அழுது அழுது கண்ணீர் வற்றிய தனது கண்களால் பார்த்துக் கொண்டு இருக்க,….அறையின் மூலையில் வழமையாக தன்னுடன் விளையாடும் தனது எஜமான் அசைவின்றி இருப்பதை பார்த்த நாயும்   தனது எஜமானை பார்த்துக் கண் நீர்விட்டுக் கொண்டு   இருந்தது…………………..

இக்கரையில் அனாதைப் பிணமாய் தந்தை அக்கரையில் அகதியாய் பிள்ளைகள்”

(பெயர்களைத் தவிர யாவும் உண்மை )
கா.செந்தூரன்