Friday, August 31, 2012

தமிழர்களும் செவ்விந்தியர்களும் (Mayans, Incas) :


மகேந்திரன் ஆறுமுகம்
  ஆராட்சி குறிப்புக்கள்  



உலக நாகரீகங்களுடனான நம்முடைய தொடர்பு.இன்று உலகமே Mayan என்கிற வார்த்தையை அறிந்திருக்கிறது. Mayan Calendar-யை வைத்து உலகம் முழுவதும் இன்று பரபரப்பு கிளப்பப்படுகிறது. 2012-ல் உலகம் அழிந்திவிடலாம் என்கிற புனைவுகளும் தொலைக்காட்சி மர்மத் தொடர்களால் முன்னெடுக்கப்படுகின்றன. Mayan-கள் யார் என்றுத் தெரியாதவர்கள் கூட Mayan என்கிறப் பெயரை உச்சரிக்கிறார்கள்.  முன்னோடித் தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்தும் Mayan Calendar பற்றிய நிகழ்ச்சிகளை வெளிநாட்டு தொலைக்காட்சி நிறுவனங்களிடமிருந்து பிச்சையெடுத்து, தமிழ் படுத்தி கட்டைக் குரல்களில் உலக அழிவைப் பற்றி பேசுகின்றன. வரலாற்று அறிவு கொஞ்சம் கூட இல்லாத நம்முடைய தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் Mayan தொடர்பான வரலாற்று நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவது அபத்தம்.

Omlec, Aztec, Mayan, Inca இவைகள் வட மற்றும் தென் அமெரிக்க கண்டங்களில் வாழ்ந்த மக்களுடைய நாகரீகங்களின் பெயர்கள். இவர்களை வெள்ளையர்கள் செவ்விந்தியர்கள் என்று பொதுபட அழைத்தார்கள். ஆங்கிலேயர்கள் இவர்களை செவ்விந்தியர்கள் என்று அழைத்ததற்கு வரலாற்று பின்னனி உண்டு. கி.பி. 14, 15 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியர்கள் இந்தியாவிற்கு செல்ல கடல் வழியைத் தேடிக்கொண்டிருந்தார்கள். அந்த காலகட்டத்தில் Atlantic Ocean-யை குறுக்காக கடந்து இந்தியாவிற்கு போய்விடலாம் என்று Columbus நம்பினார். அவருடைய நம்பிக்கையின்படியே அவர் Atlantic Ocean-யை கடந்தார். ஆனால் அவர் போய் சேர்ந்த கண்டம் அமெரிக்கா. ஆனால் Columbus தாம் வந்து இறங்கிய நாடு இந்தியா என்றே நம்பினார். அமெரிக்க கண்டத்தை சேர்ந்த மக்கள், இனக்குழு வழக்கப்படி தங்கள் உடம்பில் சிகப்பு சாயம் பூசிக்கொள்வது வழக்கம். இதை பார்த்த ஐரோப்பியர்கள் உடம்பில் சிகப்பு சாயம் பூசிய அந்த மக்களையும் தாங்கள் கண்டுபிடித்தது இந்தியா என்கிற நம்பிக்கையையும் ஒன்றாக்கி அந்த மக்களை செவ்ந்தியர்கள் (Red Indians) என்று அழைக்கத் தொடங்கினார்கள். Columbus-க்கு முன்பே Americo Vesbugi என்பவர் அமெரிக்க கண்டத்தை கண்டுபிடித்துவிட்டார் என்பது வேறு கதை. இவரை பெருமைபடுத்தும் விதமாகவே அந்த கண்டம் America என்று அழைக்கப்படுகிறது.

இந்த செவ்விந்தியர்கள் எப்படி இரு அமெரிக்க கண்டங்களிலும் (Green Land, Ice Land, Canada உட்பட) குடியெரினார்கள் என்பது இன்று வரை அவிழ்க்கப்படாத முடிச்சாக இருக்கிறது. ஆனால் ஒன்றை மட்டும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் உருதிபடுத்தியிருக்கிறார்கள். அந்த ஒரு விசயத்தைப் பற்றிதான் நம்முடைய முன்னோடித் தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு தெரியாமல் போயிற்று. வரலாற்று அறிவுக்கும் இவர்களுக்கும்தான் ஏழாம் பொறுத்தமாயிற்றே! வெளிநாட்டு வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்திய அந்த விசயம் செவ்விந்தியர்களுக்கும், தமிழர்களுக்கும் தொடர்பு உண்டு என்பதுதான். இதை படிப்பவர்களுக்கு, இது எதோ இட்டுகட்டிய சமாச்சாரம், வலிந்து தமிழர்களுக்கு பெருமை தேடுகிற விசயம், உலகத்தில் உள்ளவர்களையெல்லாம் தமிழர்களோடு தொடர்புபடுத்துகிற மோசடி என்று நினைக்கத் தோன்றலாம் ஆனால் உண்மை இதுதான்.

நல்லவேளை இந்த உண்மையை கண்டுபிடித்தவர்கள் வெளிநாட்டு வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் அதனால் நம்மவர்கள் இதை நம்பத் துணிவார்கள். நம்மவர்களுக்கு Made in Foreign என்றாலே ஒரு கிலுகிலுப்புதானே! தமிழ் வரலாற்று ஆராய்ச்சியாளர் ஒருவர் இந்த உண்மையை கண்டிருந்தால் அவரை பைத்தியக்காரன் என்று முத்திரை குத்தி மூலையில் தள்ளி இருப்போம். தன் இனத்து அறிஞனை மதிக்காத எந்த இனமும் உருப்பட்டதாக வரலாறு கிடையாது. இதற்கு வாழும் உதாரணம் தமிழனே.

The Conquest of Mexico and Peru என்கிற வரலாற்று நூலை எழுதிய William H. Prescott என்பவரே முதன் முதலில் செவ்விந்தியர் தமிழர் தொடர்பை பற்றி பேசுகிறார். ஐரோப்பியர்கள் எப்படி செவ்விந்தியர்களை, மெக்சிகோ மற்றும் பெரூ நாடுகள் முழுவதிலிருந்தும் ஒழித்துகட்டினார்கள் என்பதை விலாவாரியாக இந்த நூல் விவரிக்கிறது. இந்த நூலின் தொடக்கத்தில் செவ்விந்தியர்களின் பூர்வீகம் குறித்து பேசும் Prescott தமிழர் தொடர்பை அடித்து கூறுகிறார். வரலாற்று ஆராய்ச்சியாளர் இல்லையென்றாலும் சே குவேராவும் தன்னுடைய தென் அமெரிக்க பயண குறிப்புகளில் இதை பற்றி எழுதியிருக்கிறார்.

‘இன்காகள் (Incas) தென் அமெரிக்க சோழர்கள்’ என்கிற ஆராய்ச்சி நூல் ஒன்று தமிழிலும் இருக்கிறது. பத்து வருடங்களுக்கு முன்னால் நூலகத்தில், யாரும் திரும்பி பார்க்க கூட யோசிக்கும் புத்தக அடுக்கில், தூசி தும்பட்டைகளுக்கு மத்தியிலிருந்து எடுத்து இந்த புத்தகத்தை நான் படித்திருக்கிறேன். இந்த புத்தகத்தை எழுதிய ஆராய்ச்சியாளரின் பெயரை நான் மறந்துவிட்டதின் காரணமாக என்னால் அது குறித்த தகவலை தர இயலவில்லை. இது வருத்தமளிக்க கூடி விசயம். இந்த கட்டுரை எழுதும் பொறுட்டு இந்த அறுமையான புத்தகத்தை நூலக்கத்தில் எவ்வளவோ முயன்று தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த புத்தகத்திற்கு மறுபதிப்பு இல்லை என்பதும் வேதனையான விசயம். தமிழ் அறிஞர்களின் ஆராய்ச்சி அறிவு இப்படிதான் கண்டுகொள்ள ஆளில்லாமல் காணாமல் போகிறது.

செவ்விந்தியர்களின் கலாச்சார கூறுகள் மிகத் தெளிவாக தமிழர்களின் கலாச்சார கூறுகளை உள்ளடக்கி இருக்கின்றன. தமிழர்களின் வானியியல், செவ்விந்தியர்களின் வானியியலோடு ஒத்துப்போகின்றன. செவ்விந்தியர்களின் வானியியல் நுட்பத்தை ஆராய்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளர்கள், பல்லாயிரம் ஆண்டுகள் அனுபவத்தின் மூலமாகே இத்தகைய நுட்பங்களை பெற முடியும் என்றும் செவ்விந்தியர்களுக்கு இது ஒரே இரவில் கைவர சாத்தியம் இல்லையென்றும் கணிக்கிறார்கள். காரணம் செவ்விந்தியர்கள் ஒரிடத்தில் நிலைத்து வாழ்பவர்கள் கிடையாது அவர்களுடையது நாடோடி கலாச்சாரம். நாடோடி இனம் வானியியலில் தேர்ச்சி பெறுவது சாத்தியம் அற்றது. தமிழர்களுடனான தொடர்பே இவர்கள் வானியியலில் தேர்ச்சி பெறுவதற்கு உதவியிருக்கும் என்று கருதுகிறார்கள். மெசப்பத்தோமியா, எகிப்பது நாகரீகங்களின் தொடர்புகள் செவ்விந்தியர்களிடம் கிடையாது.

செவ்விந்தியர்கள் ஏறக்குறைய 3000 ஆண்டுகளாக அமெரிக்க கண்டங்களில் வாழ்ந்தாலும் அவர்களுடைய வாழ்க்கை, நிலையான விவசாய முறை சார்ந்த நிலவுடமை கலச்சாரம் கொண்டது கிடையாது. காடு சார்ந்த பொருட்களும், கால் நடைகளுமே அவர்களுடைய சொத்துகள். தென் அமெரிக்காவில் காடுகளிலும், வட அமெரிக்காவில் இடம் விட்டு இடம் நகரும் வகையிலுமே அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை அமைத்துகொண்டார்கள். அமெரிக்கா போன்ற இயற்கை வளம் நிறைந்த நாட்டில், செவ்விந்தியர்கள் நிலையான விவசாய சமூகத்தை ஏற்படுத்தாதது ஆச்சரியமான விசயம். Mel Gibson-னின் Apocalypto படம் தென் அமெரிக்க செவ்விந்தியர்களின் சமுதாய அமைப்பை மிகத் துள்ளியமாக காட்சி படுத்தியிருக்கும். Hollywood-ன் இனவெறிப் பிடித்த Cowboy படங்களில் வெள்ளையர்களுக்கும் செவ்விந்தியர்களுக்கும் இடையிலான சண்டை காட்சிகளில் வட அமெரிக்க செவ்விந்தியர்களின் சமுதாய அமைப்பை தெரிந்து கொள்ளலாம்.

ஐரோப்பியர்களுக்கு அமெரிக்கா என்று ஒரு கண்டம் இருப்பதே கி.பி. 12, 13 நூற்றாண்டுகளுக்கு பிறகுதான் தெரியவந்தது. ஆனால் 2500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களுக்கு அமெரிக்கா கண்டத்தோடு தொடர்பு இருந்திருக்கிறது. இது கற்பனை கதைப் போல இருந்தாலும் இதற்கு வலுவான சான்று உண்டு. தென் பசிபிக் மகாகடலில் (Pacific Ocean) ஆஸ்திரேலிய கடல் பகுதியில் கடல் அகழ்வாராய்ச்சி(Ocean Archeology) மேற்கொண்ட சமயத்தில் மிகப் பெரிய சரக்குக் கப்பல் ஒன்றை கண்டுபிடித்தார்கள். முழுவதும் மரத்தால் கட்டப்பட்டிருந்த இந்த கப்பல் வணிகப் பொருட்களுடன் முழ்கியிருக்கிறது. Carbon-Dating முறையின்படி இந்த கப்பலின் வயது இன்றிலிருந்து 2500 வருடங்களுக்கும் மேல் என்று தெரிந்திருக்கிறது. தரவுகளை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள், தமிழர்கள் வணிகத்திற்கு உபயோகப்படுத்திய கப்பல்களில் ஓன்று ஆஸ்திரேலிய கண்டத்தைத் தாண்டி அமெரிக்கா செல்லும் வழியில் பசிபிக் கடலில் முழுகியிருக்கிறது என்ற முடிவிற்கு வந்தார்கள்.

ஆராய்ச்சியார்கள் கண்ணை மூடிக்கொண்டு இந்த கப்பல் தமிழர்களுடையது என்கிற கணிப்பிற்கு வந்துவிடவில்லை. முதலில் இந்த கப்பல் எந்த மரத்தால் கட்டப்பட்டது என்று ஆராய்ந்தபோது தேக்கு மரத்தால் ஆனது என்று தெரிந்திருக்கிறது. தேக்கு தென்னிந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டுமே கிடைக்க கூடியது. அதுமட்டும் இல்லாமல் 3000 ஆண்டுகளுக்கு முன்னால் கடல்களில் மிகப் பெரிய கப்பல்களை வைத்து வாணிபம் செய்த நாகரீகம் இரண்டே இரண்டுதான். ஒன்று தமிழர்களுடைய நாகரீகம் மற்றது எகிப்திய நாகரீகம். மூழ்கிய அந்த கப்பலின் கட்டுமான அமைப்பு எகிப்தியர்களின் சரக்கு கப்பல்களோடு பொறுந்திபோகவில்லை. மேலும் எகிப்தியர்கள் கறையோரமாகவே பயணித்து செல்லக் கூடியவர்கள். அவர்களுக்கு நடுகடலில் கப்பல் செலுத்தத் தெரியாது. அதன் காரணமாக அவர்களுடைய கப்பல்களின் கட்டுமானமும் கரையோரமாக பயணிக்க ஏற்ற வகையில்தான் இருக்கும்.

கண்டுபிடிக்கப்பட்ட கப்பலோ மிகப் பெரியதாக நிறைய சரக்குகளை கையாளக் கூடியதாக இருந்ததோடு நடுகடலில் பயணம் செய்வதற்கு ஏற்றபடியும் கட்டப்பட்டிருக்கிறது. இந்த கப்பலில் இருந்த சரக்குகளும் தென்னிந்தியாவில் மட்டுமே கிடைக்ககூடியவைகள். தமிழ் இலக்கியங்கள் மட்டுமே கடலில் பயணிக்கும் களங்களுக்கு உபயோகத்தின் அடிபடையில் அமைந்த பெயர்களைப் பற்றி கூறுகிறது. இவைகள் மூலம் தமிழர்களின் கடலோடும் அனுபவத்தை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் இது தமிழர்களுடைய வணிக கப்பல்தான் என்று உறுதி செய்திருக்கிறார்கள். ஆக வெள்ளையர்கள் நாடோடிகளாக சுற்றிதிரிந்த காலத்திலேயே தமிழன் ஆஸ்திரேலிய கண்டத்தையும், அமெரிக்க கண்டத்தையும் கண்டு அறிந்து வைத்திருந்தான். இந்த கண்டங்களோடு வணிகத் தொடர்புகள் அவனுக்கு இருந்திருக்கிறது. நம்முடைய சாபக்கேடு இவற்றை பற்றிய முறையான வரலாற்று ஆவணங்கள் இல்லாதது. 3000 ஆண்டுகளுக்கு முன்பே நடுகடலில் பயணிக்கத் தெரிந்த தமிழன், தன்னுடைய சிறப்புகள் பற்றி பதிய தவறியது கேடுகாலமே.

நல்லவேலை ஆரிய வேதங்கள் கடல் பயணத்தை தடை செய்திருக்கின்றன (கடல் என்றால் ஆரியர்களுக்கு பயத்தில் பேதியாகிவிடும்) இல்லை என்றால் மூழ்கிய இந்த தமிழர்களுடைய கப்பலுக்கு தலைவன்(Captain) ஒரு பிராமணன் என்று இல்லாத வரலாற்றை இருப்பதுபோல் எழுதியிருப்பார்கள். தன்னுடைய சிறப்புகள் பற்றிய விழிப்புணர்வே அற்ற தமிழனும் அதை அப்படியே நம்பிவிடுவான்.

உலக நாகரீகங்களுடனான நம்முடைய தொடர்புகளைப் பற்றி பேச இன்று நாதியில்லை. ஆங்கொன்றும் இங்கொன்றுமாக நம்முடைய சிறப்புகள் குறித்து வரலாற்று ஆதாரங்கள் கிடைத்தாலும் வெகு மக்களிடம் அதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழர்கள் தவறிவிடுகிறார்கள். தவறிவிடுகிறார்கள் என்பதை விட அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. ஆயிரம் ஆண்டுகளாக தொடரும் இந்த அக்கறையின்மை, நாடு இழப்புகளிலும், இனப் படுகொலைகளிலும் தமிழனை கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.

நன்றி: மகேந்திரன் ஆறுமுகம்

Saturday, August 25, 2012

எப்பிடி அன்ன புடிச்சிங்க ???வல போட்டு புடிச்சோம் !!; :P

கிழக்கு மாகாண சபை தேர்தல்க்களம் சூடாக தொடங்கி விட்டது.தமிழரின் சர்வேதேச அணுகுமுறை போராட்ட முறையின் அத்திவாரம் இந்த தேர்தல்.தமிழ் தேசிய கூட்டமைப்புத்தான் முள்ளிவாய்க்காலுக்கு பின்னரான தமிழர்களின் தலைமைத்துவம் என மாறியிருக்கும் காலம் இது.ஏன் என்றால் தமிழ் தேசியத்தை அடையாளமாக கொண்டு தனித்துவமாக எந்த கட்சியும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தவிர இலங்கையில் இல்லை.தமிழர் என்ற அடையாளத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆதரிப்பதை தவிர தமிழ் மக்களுக்கு வேறு வழி இல்லை.




இது ஒரு புறம இருக்கட்டும்.
தனது கட்சியின் கொள்கைகளை நடைமுறை படுத்துவதற்கு அக்கட்சிக்கு தேர்தலில் வெற்றி தேவை, அவ் வெற்றிக்கு அக்கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும்.அப்படி அந்த வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்றால் மக்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டும்.அப்படி அவர் மக்களிடம் இருந்து வாக்குகளை பெற எப்படி பட்டவராக இருந்திருக்க(இருக்க) வேண்டும்???அதாவது ஒரு நல்ல அரசியல் வாதி எப்படி இருக்க வேண்டும்??
கட்சி என்பதை தவிர்த்து தனிப்பட்ட ரீதியில் சமுக அக்கறை கொண்டவராக இருக்க வேண்டும்....தேர்தல் காலங்களில் மட்டும் மக்களில் அன்பு கொண்டவர்களாக இருக்க கூடாது. (நான் சொல்லுறது சரிதானே??)அவர்களைத்தான் மக்களுக்கு பிடிக்கும்.அப்படி எந்த அரசியல் வாதியையும் திருமலை மாவட்டத்தில் நான் கண்டதில்லை.ஒரு தேர்தல் கால கவர்ச்சி காரணமாகவே சிலர் தேர்தலில் வெற்றி பெறுகின்றனர்.
இதுவும் ஒரு புறமாக இருக்கட்டும்
ஒரு வேட்பாளர் தேர்தலில் குதிக்கிறார் என்றால் அவருடைய நோக்கம் என்னவாக இருக்கும் ???சமுகத்தின் மீதான அக்கறையாகத்தான் இருக்கும்.(காலம் காலமாக இதத்தான் சொல்லுறாங்க).
இதைத்தவிர என்ன காரணங்கள் இருக்கும் ஏதாவது உங்களுக்கு தெரியுமா ??
சொல்லுறன் கேளுங்க!!! உங்களுக்கு ஒழுங்கான வேலை இல்லை,அல்லது செய்யும் வேளையில் நீங்கள் எதிர்பார்க்கும் சம்பளம் கிடைக்கவில்லை.இலங்கையில் இருந்து ஒன்றும் செய்ய முடியாது... என் பக்கத்து வீட்டு காரன் எல்லாம் பிரச்சன நேரம் வெளிநாட்டுக்கு போய் அங்க சிட்டிசன் கிடைச்சு இப்ப facebookல காருக்கு முன்னுக்கு நிண்டு போட்டோ எடுத்து போட்டு இருக்கிறான்.!! என்ற பல பிரச்சனைகள் இருக்கும்.இதற்க்கான அவர்களது தீர்வு என்ன?? வெளிநாடு போகணும் ,அங்க போய் எப்படியாவது வாழ்நாள் முழுவதும் அந்நாட்டில் வாழ்வதற்கு ஏதாவது உரிமையை பெற்று விடுவது.இதற்க்கு நீங்கள் இந்த தேர்தலை பயன் படுத்திக்கொள்ளலாம். இதை விட பல காரணங்கள் இருக்கு சொன்னா வெக்கக்கேடு  நமது சமுக அரசியலை இப்படியும் பயன்படுத்தலாமா ???என்று நீங்களே யோசிப்பிங்க அத விடுங்க நாம விசயத்துக்கு வருவம்.
முதலில் நீங்கள் அவன்ட இவன்ட காலப்பிடிச்சி நாலு பேர்களை சேர்த்துக்கொண்டு நீங்களும் சமுகத்தில் பெரிய அப்பாடக்கர் என்ற மாயையை உருவாக்க வேண்டும் பிறகு எப்படியாவது ஒரு கட்சியில் அல்லது சுயட்சையாக அரசியலில் குதிக்க வேண்டும்,
பத்திரிகைகளில் உங்களது செய்தி இடம்பெறுகிற மாதிரி பார்த்துக்கொள்ளுங்கள்.(முழக்கம்,விளக்கம்,விஜயம்)என்ற சொற்கள் முக்கியம்)அரசை தாக்கி பேசிய ஒலி ,ஒளி பதிவுகள் இருந்தால் மிகவும் நல்லது.உங்களது வேட்பாளர் அடையாள அட்டை,செய்திதாள்களில் வந்த உங்களது செய்திகள் என்பவற்றை பத்திரமாக வைத்திருங்கள்.
தேர்தலும் வரும் உங்களது சொந்தங்கள் ,நண்பர்கள் ,தெரிஞ்சவன், எல்லோரும் பழகின பாவத்துக்காக உனக்கு வாக்களிப்பார்கள்.நீ ஒரு தமிழ் தேசியத்துக்கு அப்பால் பட்ட கட்சியின் வேட்பாளர் ஆயின் இம்மாகாண சபை தேர்தலில் தமிழ் மக்களின் எதிர்கால முக்கியத்துவத்தை விளங்காமல்  உனக்கு ஆதரவான உன் உறவுகள் நண்பர்கள் வாக்களிக்கும் போது உனக்கு வந்த வாக்குகள் நம் மக்களுக்கு ஆப்புகளாக மாறும். நீங்கள் இலகுவாக அது இது எல்லாம் காட்டி...ஏதாவது அபிவிருத்தி அடைந்த நாட்டில் அகதி அந்தஸ்து பெற்று விடுங்கள்.....


இது இன்னொரு வகை தமிழ் தேசியம் கதைப்பவர்கள் பற்றி ................
 தேர்தல் காலங்களில் மட்டும் நான் அத்தனையாம் ஆண்டில் இருந்து அரசியலில் இருக்கிறேன், மக்கள் வேண்டுகோள் என்று பீலா விட்டிங்க...மக்கள் அன்றிலிருந்து இன்று வரை  பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் அவர்கள் ஒன்றும் வானத்தில் இருந்து குதித்தவர்கள் அல்ல
கனவான்களே மக்களுக்காக தேர்தலில் ஈடுபடுதல் என்பது தானாக  வரணும்...தானாக வந்தவர்களே  ஒன்றும் செய்ய வில்லை நீங்கள் என்ன செய்ய போகிறிர்கள்???
மக்கள் உங்கள் வெறுப்பில் கட்சிக்கு கூட வாக்களிக்காமல் விட்டு விடுவார்கள்.மக்களோடு மக்களாக ...மக்களுக்காக தங்கள் உயிரை பணயம் வைத்து...யார் என்றாலும் சிரித்த முகத்துடன் உதவி செய்து ...விழாக்களில் அதிதியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படாமல் மக்களுக்காக மக்களோடு இன்னும் அகதியாக இருப்பவர்கள்தான் அவர்களுக்கு தேவை
கனவான்களே ...வெற்றியா நல்லது எதாவது சமுக விழாக்களில் நீங்கள்தான் பிரதம அதிதி...தோல்வியா ஏதாவது அபிவிருத்தி அடைந்த நாட்டில் அரசியல் தஞ்ச அந்தஸ்து...அவ்வளவுதான் ...அங்க போன பிறகு பேஸ்பூக்ல, ட்விட்டர்ல மக்கள் போராட்டம் மயிறு மட்ட என்று தயவு செய்து கூச்சல்  போட வேண்டாம் ..(அதுக்கு அங்க நிறைய பேர் இருக்கிறாங்க )
வேட்பாள கனவான்களே !!!!30 வருட யுத்தம் நம் மக்களை அரசியலில் நாட்டம் இல்லாமல் பண்ணிவிட்டது..அவங்களே அதில் இடுபாடு இல்லாமல் இருக்கும் போது, இந்திய அரசியல் வாதிகள் போல நீங்களும் நடந்தால் என்ன ஐயா செய்வது???மக்களுக்கு உண்மையை சொல்லுங்கள் தமிழ் மக்களுக்கு இந் தேர்தலின் முக்கியத்துவத்தை உணர்த்துங்கள் உங்கள் கட்டுக்கதைகளை விட்டு.
..
பின் குறிப்பு-சில உதிரிகளும் தேர்தல் களத்தில்….. நாயகர்களாக தேர்தல் அறிவிப்பில் இருந்து சமுக சேவகர்களாக மாறிவிட்டார்கள் அவர்களை பற்றி கதைக்க தேவை இல்லை தேர்தலுக்கு பிறகு ஒய்ந்து விடுவார்கள்.

முக்கிய குறிப்பு-வேட்பாளர்களே நீங்கள் தேர்தல் காலங்களில் காட்டும் சமுக அக்கறையை கொஞ்சம் மற்றைய நாட்களில் காட்டுங்கள் தானாக மக்கள் உங்களுக்குத்தான் வாக்களிப்பார்கள்.

Friday, August 24, 2012

First Love


(Una storia d'amore in Ollanta donna di Trincomalee)
Verso la fine del 18 ° secolo! Si potranno godere il sorgere del sole al mattino e in vena di godere oggi. Altra nazione, ma ha dato la sua vita per questo tirukonamalaitan più per favore. Ora ha una grande tragedia. Abolizione nave Turatte purappatuvatar della conchiglia. Suoi occhi dalla sua camera e sono andato al mare con gli occhi ampliato albero purinttatu.La nave è così importante per lei ... Quale potrebbe essere il più importante è una ...... amarla! Reed è nato a Van ollant prancina ollant suo padre, un ufficiale della enpat valttatillai. In questa stagione ha raggiunto l'età di tutti Rockfort piretik, la urumtan di Trincomalee.
In amore con lui dal giorno in cui è ufficiale jocoppiyan militare capito il significato dell'amore enapatarku. Dirgli che ho amato per raggiungere la saturazione completa raggiungere la saturazione completa. Lei lo ama, disse a suo padre. Jocop a parlare con il suo matrimonio Data kurikkapattatu padre. Ma lui non la auguro a nell'ufficio del padre. Citanam Ho provato a chiedere le dimissioni del funzionario militare per la posizione era in kataic. Kovamatainta padre di Rita gli ordinò di andare nel suo ufficio ollantu rimosso.
La nave si preparò per andare a le mosse albero in aria. Nave si muove lentamente. Ritta non sapeva cosa fare. La nave sta andando ad amare la sensazione della sua vita onirica. Uscendo dalla stanza. Con la nave per andare alla montagna camantaram konecar comincia a correre sulla montagna. Miscelato con il mare alla montagna che è una decisione di non correre per la sua vita oltre la collina.

 Provate a immaginare un vero incidente che ha avuto luogo nel 1680 kalappakut
  Etichettare questa storia. Colonnello. Thomas (British Army), si basano su l'anno 1940 di riferimento e con Ollanta etukkapatta.
(Non so il nome di un ufficiale militare ha osservato in questa storia è frutto di fantasia.)

நொக்ஸ் மரம் (Knox Tree)


மூதூர் (கொட்டியாரம்)  எத்தனையோ பல விடயங்களுக்குப் பெயர் பெற்றது. இங்கு ஆங்கிலேயர் ஒருவரின் பெயரில் பிரபலமான வீதி ஒன்று மிக நீண்ட காலமாக இருந்து வருகின்றது. அதுதான் நொக்ஸ் வீதி. மூதூர் நகரின் முக்கியமான வீதிகளில் ஒன்றாகவூள்ள இந்த நொக்ஸ் வீதியூடன் தொடர்புடைய வரலாறு ஒன்றுள்ளது. அந்த வரலாற்றுக்குச் சான்றாக ஒரு புளியை மரம் உள்ளது. கி.பி. 1668ம் ஆண்டளவில் ஆங்கிலேய மாலுமியான றொபட் நொக்ஸ் தலைமையில் பிரயாணம் புரிந்த ‘ஆன்’ (ANN) எனும் கப்பல் புயலில் சிக்கி நமது கொட்டியாரக்குடாவினுhடாக மூதுhரின் கோட்டையாற்றுக் கரையை வந்தடைந்தது. அந்த மாலுமியூம் அவனுடன் வந்திருந்த அவனது இளைஞனாகிய மகன் றொபட் நொக்ஸ் (ஜுனியர்) மற்றும் அவனது நண்பர்கள் குழுவினரும் அங்கிருந்த ஒரு புளியை மரத்தின் கீழ் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த வேளையில் அன்றைய கண்டி இராச்சிய மன்னனின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.17ம் நுhற்றாண்டின் நடுப்பகுதியில் நிகழ்ந்த இந்த வரலாற்றுச் சம்பவத்தை நினைவூ கூருவதற்காக பின்வந்து இலங்கையைக் கைப்பற்றிய ஆங்கிலேயர்களின் அரசு 1893ல் அந்தப் புளியமரத்தின் கீழ் ஒரு நடுகல்லை இட்டது. அந்தக் கல் இன்று வரை உள்ளது. 1964ம் ஆண்டு மார்கழி மாதத்தில் வீசிய புயலில் நிஜ மரம் வீழ்ந்த பின்பு அதே இடத்தில் இப்போது இருப்பது பின்பு இளம் கன்றாக நடப்பட்டு வளர்ந்துள்ள இளம் புளியை மரமாகும். அதனையே இப்போதும் நொக்ஸ் மரம் (Knox Tree) என அழைக்கின்றோம் ..




Pa albero Knox in lingua italiana......
 E 'famosa per molte cose Mutur. Una delle strade più famose del nome di uno dei qui britannico ed è stato per un lungo periodo di tempo. Che noks Road. Strada nella città principale proverbio strade onrakavulla h legata alla storia di vitiyutan noks corona. La prova della storia è un albero di tamarindo. DC Nel 1668 l'esploratore britannico che stava viaggiando in noks ropat 'ma' (ANN), una nave sorpreso dalla tempesta, come il nostro proverbio h Rin Tin raggiunto confine kottaiyarru. La malumiyum era con suo figlio ilainanakiya ropat noks (Jr.) e dei suoi amici e l'equipaggio si trova un albero di tamarindo, il resto della giornata di lavoro, Kandy Unito, re autorità hanno arrestato 17 E Nu h rrant nel bel mezzo del centro storico incidente kuruvatark ricorda la riuscita dello Sri Lanka e catturato il governo britannico nel 1893, la messa a dimora in puliyamarat incaricato uno. La pietra è fino ad oggi. Nave in una tempesta nel dicembre del 1964, dopo la caduta di alberi veri piantati al suo posto è ora il vitello e la crescita giovane albero di tamarindo

 (chenthooran kalirajah)

Tuesday, August 14, 2012

சுஜாதாவின் பத்துக் கட்டளைகள்


இது ஒரு படித்து பிடித்து போன முகநூல் பதிவு 

1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.

2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.

3. மூன்று மணிக்குத் துவங்கும் மாட்டனி போகாதீர்கள். க்ளாஸ் கட்பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம். இளமைக்காலம், ஒளிக் கீற்றைப் போல் மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள். 

4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் – யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக் கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம். 

5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில், யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம் ஆயிரம் ரூபாய்க்கு ஷர்ட், சுடிதார் கேட்கும் முன். 

6. இந்தச் தகவல்களை படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.

7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம்(உடல்), எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம்.குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்கு கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும், உபத்திரமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை. 

8.எட்டு முறை மைதானத்தை சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்குச் சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாக தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காக சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும். 

9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம். ஒரு மணி நேரம் பாடம் அல்லது புத்தகம் படிக்கலாம். 
10. படுக்கப் போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணன், தங்கை யாருடனாவது பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம், நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்). எதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான். 

Sunday, August 5, 2012

உங்களுக்கு வந்தா இரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்டினியா ???முஹம்மத் யூசுப்களே தமிழன் தமிழந்தாண்டா!!!!!

முகநூல் முஸ்லிம் நண்பர் முஹம்மது யூசுப் அவர்கள் வீரகேசரி பத்திரிகை facebook பக்கத்தில்  தமிழர்கள் அழியப் போகிறார்கள் ,தமிழர்களுக்கு தண்ணீர் கூட கொடுக்க கூடாது,தமிழருக்கு அதிகாரங்கள் கொடுக்க கூடாது,இன்னும் பல சாபங்களையும் ...துவேச பின்னூட்டங்களையும் இட்டார்  (அவற்றைஇப்போதுஅகற்றிவிட்டார்கள்) நான்அந்தநபரைமட்டும்அல்லபலநபர்கள்தங்களுடைய துவேச கருத்துக்களை ஊடகங்கள் ஊடாக வெளியிட்டதை நான் பார்த்திருக்கிறேன்... இந்த முஹம்மது யூசுப்களுக்கு... சில சம்பவங்கள் கூறுகிறேன் ஏன் என்றால் நாங்களும்(மூதூர் தமிழ் மக்கள்) கெட்ட  முஸ்லிம்களால் பாதிக்கபட்டவர்கள்தான்.. இந்த பிரச்னையை பூரணமாக அனுபவித்தவர்கள் மூதூர் தமிழ் பேசும் மக்கள்தான்
எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து மூதூர் நகர பகுதியில் இருக்கும் முஸ்லிம் மக்களுக்கும் நகரத்தை சுற்றி இருக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் எப்போதும் எதோ தகராறு இருந்து கொண்டே இருக்கும்.. சில சமயங்கள் தமிழ் மக்கள் பயத்தின் காரணமாக மூதூர் நகரத்தை விட்டு விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த கட்டைபறிச்சான் கிராமத்துக்கு அகதிகளாக வந்த சம்பவங்களும் உள்ளன. சில நேரங்களில் அவசர விபத்துகள் நோய்களுக்கு கூட மூதூர் தள வைத்தியசாலைக்கு செல்லமுடியாத சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது ஒரு சமயம் முஸ்லிம்கள் எறிந்த நாட்டு வெடி குண்டு வெடித்ததில் சம்பூரை சேர்ந்த ஒருவர் மரணம் அடைந்த சம்பவமும் உள்ளன.அச்சமயத்தில் யுத்த நிறுத்த கண்காணிப்பு குழு இல்லாவிட்டால் அது பாரிய பிரச்சனையாக உருவாகி இருக்கும்.எங்கள் ஊரில் எல்லாம் ஜிகாத் என்ற அமைப்பு மூதூர் முஸ்லிம்கள் உருவாக்கி இருப்பதாக கதைத்து கொள்வார்கள் உண்மையோ பொய்யோ அந்த அல்லாவுக்குத்தான் தெரியும்..

மூதூர் கிழக்கு பகுதியை ராணுவத்தினர் கைப்பற்றிய போது நடந்த களவுச் சம்பவங்கள் எப்படி நடந்தது யுத்தத்தின் போது ராணுவத்தினர் போரில்தான் இடுபட்டனர்.அவர்களுக்கு அதுக்கே நேரம் இருந்திருக்காது ஆனால் நீங்கள் பின்னால் வந்து ....ம்ம்ம்ம் ஒரு வீட்டில் ஒரு மண் சட்டிய கூட விட்டிங்களா??? உங்களுக்கு தெரியும் அந்த பழி ராணுவத்தினர் மீதுதான் விழும்.செய்யாத பிழையை நாங்கள் ஏன் அவர்கள் மீது தூக்கிபோட வேண்டும்...இது என் காலப்பகுதியில் நடந்தது.இது நான் கூறியது சம்பவங்களின் சுருக்கம். என்னுடைய அனுபவம். நான் கூறியது சம்பவங்களின் சுருக்கம்.

திரு-செபஸ்டியன்(வலைப்பதிவாளர்) அவர்கள் (((9(99(900[] நீங்கள் செய்த அநியாங்களை பக்கம் பக்கமாக எழுதி இருக்கிறார்.அவர் எழுதியதிற்கு காரணம் யாரோ ஒரு முஸ்லிம் நபருடைய துவேச பதிவு.
திரு-செபஸ்டியன் அவர்களால் நீதி அமைச்சர் கவனத்திற்கு கொண்டு வந்த பதிவின் சுருக்கம்
நீதி அமைச்சர் கவனத்துக்கு:
இங்கே கீழே தரப்படும் விடங்களை மூதூரிலிருந்து விரட்டப் பட்ட தமிழ் மக்களின் சார்பில் முன்வைக்கிறேன்.
ஆலஞ்சேனை எப்படி ஆலிம்நகராக மாறியது எப்படி?
மூதூர் ஜெட்டியிலிருந்து புளியடிச்சந்தி வரைக்கும் இருந்த தமிழ் மக்களுக்கு நடந்தது என்னஇவர்கள் எங்கே எப்படி இருந்த இடம் தெரியாமல் போனார்கள் இந்த வழியே இருந்த நவரத்தினம் மதுபானக் கடை அடையாளமாக இருந்நது எப்படி இப்போ விளையாட்டு அரங்காக மாறியுள்ளதுஏன்எப்படி?

முஸ்லீம் பிரதேசங்களில் இருந்த இராணுவ முகாம்கள் எப்படி உடனடியாக அகற்றப்படுகிறது இதற்காக காரணங்கள் என்னமுன்பு தமிழர்களின் கிராமமான 64ல் இப்போது முஸ்லீம் கிராமமாக மாறியுள்ளது எப்படிமூதூர் பல நோக்கு கூட்டுறவுச்சங்கம் உதவி முகாமையாளர் ராமச்சந்திரன் சலீம் தலைமையில் கொல்லப்பட்டது?
ஏன்எப்படிமூதூர் பிரதேச சபையில் ஒரு தமிழர் உதவி பிரதி தலைவராக கூட இல்லை ஆனால் வடகிழக்கின் வேறு இடங்களில் உள்ள பிரதேசங்களில் முஸ்லீம்கள் சிறுபான்மையாக உள்ள இடங்களில்(யாழ்) முஸ்லீம்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்கப்படுகின்றது முஸ்லீம் பிரதேசங்களில் உள்ள தமிழர் சிறுபான்மையாக உள்ள இடங்களில் மூஸ்லீம்களால் வழங்கப்படுவதில்லை.

இப்படியான தமிழர் பிரதிநிதித்துவம் பற்றிய பேச்சின் காரணமாகவே முஸலீம்களால் வி எஸ் தங்கராசா ஜிகாத்தினால் கொல்ப்பட்டார் இது தமிழ் கிராமங்களை இணைத்து பிரதேச சபை உருவாக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டதாகவும் இது சில பகுதிகளில் முஸ்லீம்களை சிறுபான்மையினராக்குவதாகவும் கருதியியே இவரது கொலை நடைபெற்றதாக பேசப்படுகின்றது. இதே போலவே மூதூரில் விஏ தங்கராசாவும் டாக்டர் அந்தோனியும்(கத்தோலிக்கர்) கொல்ப்பட்டதாகவும் அறியப்படுகின்றது.

தமிழர் பிரதேசத்திற்காக பஸ்ஓட அனுமதிகொடாமல் முஸ்லீம் அரசியல்வாதிகள் பார்த்துக் கொண்டதிற்கான அடிப்படைக்காரணம் என்னபிரதேசங்களில் முஸ்லீம் ஆட்டோகாரர்களின் உழைப்பிற்காகவே அதுமட்டுமல்ல மூதூர் அண்டிய பிரதேசங்களிலும் தமிழ் ஒருவர் இது வரை ஆட்டோ ஓட்ட முடியாது அப்படி ஒருவர் ஆட்டோ ஓடினால் அவர் கொல்ப்படுவார்.(இது சந்தேகத்திற்க்கு இடமில்லாத கருத்து) தமிழர் பெரும்பான்மையினராக உள்ள இடங்களில் இருக்கும் சிறுபான்மை முஸ்லீம்களுக்கு கிடைக்கும் பிரதிநிதித்துவம் பாதுகாப்பு முஸ்லீம் பகுதிகளில் சிறுபான்மையினராக உள்ள தமிழர்க்கு வழங்கப்படுவதில்லை இத பற்றி கேட்போது முஸ்லீம்களுடன் மக்களுடன் மட்டுமே உறவுகொள் சகோதரன் என்று சொல் மற்வர்களுடன் அல்ல என்ற கருத்துப்பட பதில் வந்ததாம்.

மூதூர் பல நோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் மனேஜர் நாகரத்தினம் மயில்வாகனம் பள்ளி குடியிருப்பை சேர்ந்தவர் வேலை முடிந்து வரும் போது முஸ்லீம்களால் துரத்தப்பட்டு அடிக்கப்பட்டு இனிமெல் தமிழன் முஸ்லீம் பிரதேசத்திற்க்கு வேலைக்கு வரக்கூடாது என் மிரட்டப்பட்டார் ஏன்?(உறவினர்கள் சாட்சியமாக உள்ளனர்)
1990களில் சலீம் (முஸ்லீம் பயங்கரவாதி) தலைமையில் மூதூரில் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது எப்படியார் இந்த அலுவல்களுக்கு உறுதுணையாக இருந்தது விலாசங்களை பார்த்து அந்தக் காலங்களில் தமிழ் இளைஞர்கள் தெரிவு செய்யப்பட்டு கொலை செய்ப்பட்டனர் விசாரணைகள் எங்கேஏன் இது பற்றி முஸ்லீம் புத்திஜீவிகள் வாய் திறக்கவில்லை?

எக்காலத்திலும் கிழக்கில் தமிழர்களால் இப்படியான சம்பவங்கள் நடாத்தப்படவில்லை (ஆதாரம்: எமில்டர் பற்றிமாகரன் நொக்சர்3)(மனித உரிமைகள் குழுவினர்கு கூறியுள்ளனர்) இது வரையில் எந்த ஒரு முஸ்லீம் தலைவர்களும் இதற்காக மன்னிப்பு கேட்டதில்லை ஏன்என்ற கேள்வி தமிழர்களிடையே எழுகின்றதுஏன் இது பற்றி முஸ்லீம் புத்திஜீவிகள் வாய் திறக்கவில்லைஇவர்கள் மனிதர்களா?
உடையார் குடும்பத்திற்க்கு சொந்தமான நிலம் ஆலங்கேணியில் கைலாசபிள்ளை குடும்பம் செல்வம் குடும்பம் ஆகியோர்களை கடத்தி முஸ்லீம்களே கொலை செய்தனர் என்றும் இவர்களின் சொந்த நிலங்கள் முஸ்லீம்கள் பெயருக்கு மாற்ப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகின்றது. எப்படி மாற்றப்பட்டதுஎந்த அரசியல்வாதி இதன் பின்னால்? (2006ல் மணற்சேனையில் விறகு வெட்டி விற்கும் தமிழரை முஸ்லீம் பகுதிகளில் விற்பவர் கொலைசெய்து உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது (அவர்களது லான்மாஸ்டர் கையளிக்கப்படவில்லை) இந்த லான் மாஸ்டர் இன்றும் முஸ்லீம்களால் பாவிக்கப்படுகின்றதே அது எப்படி முடிகிறது?

யோகன் மகன் ஜதீஸ்வரனை பஸ்சிலிருந்து இறக்கி தமிழனை கொலை செய்ய வேண்டும் என்று கொலை செய்ப்பட்டது இவற்றிக்காக எந்த மூதூர் இஸ்லாமிய அமைப்பினரும் மன்னிப்போ அனுதாபமோ பேசவில்லைஏன்?
இப்போதும் 58 பிரதேசத்ற்க்கு தமிழர்கள் போக முடியாத நிலையே உள்ளதாக அறியப்படுகின்றது இந்த கோயிலும் குடியிருப்பு காணிகளும் மக்களிடம் மீள கையளிக்கப்படுமாஇந்த விடயத்தில் முஸ்லீம்களின் நிலைப்பாடுதான் என்ன?
முஸ்லீம்கள் சிறுபான்மையினராக உள்ள இடங்களில் தமிழர்களால் முஸ்லீம்கள் இப்படி இம்மிசைக்கப்படவில்லை என்பது ஆழமானகருத்து. மூதூரில் புனித அந்தோனியார் கோவில் தாக்குதலில் முஸ்லீம்கள் யேசுவின் சிலையை உடைத்து கடலில் போட்டனர் இதை மீள எடுத்து வந்து சிலையை திரும்ப நிலை நிறுத்தியதிற்காக டாக்டர் அந்தோனியை முஸ்லிம்கள் கொலை செய்யதனர் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் பிரதி தலைவர் ரங்காஇ சம்பூர் கூனித்தீவு சிவராசாவைஇ தபாற்கந்தோர் பால்ராஜ் ஆசிரியர் வசந்தன் (கணித ஆசிரியர் இவர்களை கடத்தி கொலை செய்தனர்.

மணல்ச்சேனை 64ல் பஸ்சில் கொலை செய்யப்பட்ட தமிழர்கள் பலர் ஏன் இது பற்றி முஸ்லீம் புத்திஜீவிகள் வாய் திறக்கவில்லைஇவர்கள் மனிதர்கள் இல்லையாஎப்படி முஸ்லீம் தமிழ் இன உறவுகள் பற்றி பேசமுடியும்? 1994ல் தேர்தல் காலத்தில் மூஸ்லீம் காங்கிரஸ் வெற்றிக்காக ஆனன்சேனை மூதூர் ரஞ்சன் மோகன் போன்றோர் கடத்தி கொலை செய்ப்பட்டனர் ராஜதுரை நாகேஸ்வரன் ராஜதுரை ரவிச்சந்திரன் சம்பூர் கட்டைப்பறிச்சான் கொலைகள் முஸ்லீம்களால் தமிழர்கள் இழந்த பிரதேசங்கள் உடைமைகள் உயிர்கள் மிகப் பல இதைப்பற்றி முஸ்லிம் தலைவரகள் பெரிதாக கண்டு கொள்ளவில்லை முஸ்லீம்களால் நடைபெற்ற கொலைகளுக்கும் மன்னிப்பும் கேட்கவுமில்லை. எப்படி முஸ்லீம் தமிழ் இன உறவுகள் பற்றி பேசமுடியும்ஏன் இது பற்றி முஸ்லீம் புத்திஜீவிகள் வாய் திறக்கவில்லைஇவர்கள் மனிதர்கள் இல்லையாஎப்படி முஸ்லீம் தமிழ் இன உறவுகள் பற்றி பேசமுடியும்?
திருகோணமலை லிங்க நகரில் 5 அல்லது 6 முஸ்லீம் குடும்பங்களே இருந்த காலத்தில் இவர்களுக்கு எந்த தமிழர்களும் எந்த இடைஞசல்களும் செய்வில்லை இவர்கள் திரகோணமலையில் பிள்ளையார் கோவிலுக்கு பக்கத்தே பள்விவாசல் கட்ட தமிழரே நிலம் வழங்கினார் இந்தப்பள்ளிவாசல் என்றுமே தாக்கப்படவில்லை மூதூரில் பல தமிழர்கள் தமிழர் கோவில்கள் சேர்ச்சுகள் தாகக்பட்டபோதும் இவைகள் பத்திரமாகவே இருந்தன தமிழர்கள் முஸ்லீம்களை இந்தக்காலங்களில் ஜனநாயகமாகவே நடாத்தினர்.

முஸ்லீம்களில் யார் இந்த சம்பவங்களுக்கு பொறுப்பானவர்கள் என்பது வெளியே வராத வரைக்கும் மூதூரில் நடைபெற்ற பல கொலைகளின் சாட்டியங்கள் ஜ நா மனித உரிமைக் குழுவிடம் பல பதியப்பட்டுள்ளன அதில் பல ஜரோப்பாவில் உள்ள சில முஸ்லீம் எழுத்தாளர்களுடைய பெயர்களும் விபரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
பொதுவாகவே முஸ்லீம்கள் தமது மதம் விடயத்தில் மட்டும் அக்கறையை காட்டிக்கொண்டு அதில் தமது எல்லா விடயங்களையும் வைத்து சவாரி செய்து கொள்வார்கள் தேவைப்படும்போது மதம் என்றும் இனம் என்றும் இலங்கை என்றும் பேசிக்கொள்கிறார்கள்
அஸ்ரப் காலத்தில் தமிழர்களின் காணிகளில் கேட்காமலே துறைமுகம் கட்டப்பட்டும் அந்த காணி சொந்தக்கார் வழக்கு பதிவுசெய்தும் நட்ட ஈடு கொடுக்காமல் இழுபறிப்பட்டது. இப்டியாக என்றுமே முஸ்லீம் நிலங்களுக்கு அஸ்ரப் செய்யவில்லை.
உவைஸ்ஜை புலிகள் சுட்டதும் பாலைநகர் தமிழர்களை (சுத்திகரிப்பு தொழிலாளிகள்)யும் இந்திய வம்சாவழியினரையும் முஸ்லீம்கள் வீடு புகுந்து கொலைகள் செய்தனர்
எத்தனை தமிழ் பிரதேசங்கள் இஸ்லாமிய பெயர் பெற்றன யார் இப்படி மாற்ற்ம செய்கிறார்கள் இதற்கான அடிப்படைகள் என்னஅரசில் எப்படி இதற்காக அனுமதி கொடுக்கப்படுகிறது
மூதூர் கல்வி பணிப்பாளர் ஆர் குணராசாவுடனான பல பிரச்சினைகள் வெளிவரல் வேண்டும்.இந்த பிரச்சினைகளில் சம்பந்தப்பட்ட முஸ்லீம் அமைப்பினர் யார்எதற்காகசெய்தனர் போன்றன வெளிப்படுத்தப்படல் வேண்டும் நீதி வெளிவர வேண்டும் இப்படியான சம்பவங்களுக்கு நீதி கிடைக்காமல் முஸ்லீம்களை தமிழர்கள் எப்படி சகோதர உறவுடன் அணுக முடியும் இவையே தமிழர்களில் பலர் முஸ்லீம்களுக்கு எதிரான குரோதங்களுக்கான காரணங்களுமாகும்.
அரசியல்வாதிகள் தமிழ் பள்ளி ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை முஸ்லிம் ஆசிரியர்களால் நிரப்பி அவர்களை தமிழ் பாடசாலைகளில் வைத்து படிப்பித்தல் தொழிலை ஆரம்பித்து விட்டு பின்னர் நிரந்தர ஆசிரியர்களாக முஸ்லீம் கல்லூரிகளில் நியமித்தனர். ஜேவிபியினர் திருமலையில் ஒரு கருத்தரங்கு கூட்டத்தில் முஸ்லீம் அதிகாரிகளின் பாகுபாடு பற்றி பேசினர் இதன்போது பேசும்போது புலிகளின் பயங்கரவாத்ததைவிட முஸ்லீம்களின் அடிப்படைவாதம் மிக ஆபத்தானது என்றும் இதில் இலங்கையில் ஜிகாத் அல்கைடா புனித இஸ்லாமிய விடுதலை முன்னணிகள் மிக ஆபத்தானவைகள் எனவும் பேசினார்.
இப்படி பலதரப்பட்ட பிரச்சினைகளை இஸ்லாமியர்களால் இஸ்லாத்தின் பெயரால் மூதூர் சார்ந்த பிரதேசங்களின் மிகச்சிலவே இங்கு குறிப்பிட்டவைகள் மிகச்சிலவே. நீதி நியாயம் பேசுவது என்றால் இருபக்கமும் பேச வேண்டும்

மூதூர் பிரதேசத்தில் நடந்த சம்பவங்கள் இவை இப்படி எத்தனையோ பிரதேசங்களில் நடந்து இருக்கிறது.அவர் வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற சம்பவங்களையும் எழுதி இருந்தார் அது சேர்க்கப்படவில்லை.
 முஹம்மது யூசுப்களே  தமிழர்கள் பட்ட துன்பத்தை அளவுகளால் கூட அளக்க முடியாது. ஆனாலும் அவர்கள் இறைமையை விட்டு கொடுப்பதில்லை.அவர்களுக்கு யாரும் தண்ணீர் கொடுக்க தேவை இல்லை அவர்கள் அவர்களின் பூமியில் குடித்து கொள்வார்கள். தமிழர்கள் இன்னமும் இலங்கையில் இருக்கிறார்கள் அவர்கள் அதிகாரத்தை எப்படியாவது பெற்றுவிடுவார்கள்.எங்களிடம் நல்ல அரசியல்வாதிகள் இருக்கிறார்கள் அரசதரப்பிலும் எதிர்தரப்பிலும்.
இவ்வாறு முஹம்மது யூசுப் போல இப்பக்கம்  ஒவ்வொருதமிழனும்துவேசத்தனமாகபேசத்தொடங்கினால்,....????
நீங்கள் எங்கள் மீது கொட்டிய கழிவுகளை நாங்கள் குப்பை தொட்டியில் போட்டு விட்டோம்,தயவு செய்து அவ் குப்பை தொட்டிகளை உங்கள் மீது கொட்ட எந்த தமிழனுக்கும் சந்தர்பத்தை ஏற்படுத்தாதீர்கள்.
முஹம்மத் யூசுப்களே !!!!!நீங்கள் அங்கும் இல்லை இங்கும் இல்லை எங்கு போக போகிறிர்கள்???
பதில் சொல்லும் அளவுக்கு அந்த முஹம்மத் யூசுப் ஒண்டும் அவ்வளவு பெரிய அப்பாடக்கர் இல்லை.அவனை போல பலர் இவ்வாறு கருத்து தெரிவிப்பதால் அவர்களுக்கான பதிலாக இதை எடுத்துக்கொள்ளலாம். நல்ல முஸ்லிம்களும் தமிழர்களும் ஒன்றாகத்தான் இருக்கின்றனர். உங்களை போல முட்டாள்கள்தான் இப்படி எண்ணம் கொள்வார்கள்

பின் குறிப்பு-இந்த பதிவு முஹம்மத் யூசுப்க்களை பற்றியது மட்டுமே முஸ்லிம்களை பற்றியது அல்ல.
ஒரு முகநூல் நண்பரின் முஹம்மத் யூசுப்புக்கான பதில்கள் 
"ஆனால்தமிழர்கள்முஸ்லிம்களைதமிழர்களாகசுட்டிகாட்டிஅவர்களின்நிலபுலன்களைஆட்சிசெய்யநிர்வகிக்கஏன்நீதிசெழுத்தஆசைபடுகின்றனர்"
இது உங்களுடைய கருத்து.. MOHAMAD YOOSUF..உண்மை என்ன தெரியுமா? இலங்கை தமிழன் ஆண்ட நாடு... வந்தவர்கள் எல்லா
ம் ஒட்டிக்கொண்டார்கள்... உரிமை செலுத்தினார்கள்.. ஒதுங்கி போக தமிழர்கள் ஒண்டும் ஒண்ட வந்த பிடாரிகள் இல்லை.. உரிமை செலுத்த தகுதியானவர்கள்.. உரிமை செலுத்துகிறார்கள்... நீங்கள் ஏன் உரிமை கேட்கவில்லை..? உங்களுக்கு தெரிந்திருக்கிறது? நில புலன்களுக்கு யார் உரிமை கொண்டாடலாம்? யார் மூடிட்டு இருக்கலாம் என்று.

TheerththigaSathiyaseelan "உங்களுக்குநீதிகிடைக்கபோவதும்இல்லைஉங்கள்இனம்உறுப்படபோவதும்இல்லை" அப்படியாசொன்னீர்கள்MOHAMAD YOOSUF?
"""தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்.. மறுபடியும் தர்மம் வெல்லும்""" இதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்