Monday, December 24, 2012

பெரும் கற்கால திருகோணமலை


இதுவரை திருகோணமலையின்  வரலாறு   ஆய்வாளர்களால் ஆராயப்பட்டு பல நூல்களாக வந்து விட்டன.ஆனால் அவற்றில் வரலாற்றுக் காலம் தான் முக்கியத்துவப் படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் நாகரிக வளர்ச்சியை.வரலாற்றுக்கு முந்திய காலம்,வரலாறு உருவாக்கக் காலம், வரலாற்றுக்காலம் என்று மூன்று வகையாக பிரிக்கலாம்.
ஈழத்து நாகரிக வளர்ச்சியில் இந்த மூன்று காலங்களிலும் திருகோணமலையின் பங்கு முக்கியமானது என்பது இதுவரை கிடைத்த ஆதாரங்களில் இருந்தது புலப்படுகிறது.

இதில் வரலாற்றுக்கு முந்திய காலத்தில் திருமலையின் பங்கு என்ன?
 மக்கள் எழுத்து பாவனையை தொடங்காத காலம் வரலாற்றுக்கு முந்திய காலம் எனப்படுகிறது. எல்லா இனக்குழுக்களின் வரலாறுகளை ஆராயும் போதும் இந்த காலப்பகுதி மிகவும் சவாலுக்கு உரியதாக காணப்படுகிறது. இக்காலப்பகுதில் மக்கள் இருப்பு தொடர்பாக ஆதாரங்களை தேடும் போது பின் வந்த பெரும்கற்காலம் தொடர்பான குறிப்புக்களும்,அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் ,உபகரணங்களின் எச்சங்களும் மட்டுமே  ஆதாரங்களாக கொள்ள முடியும்.
பெரும்கற்கால(கி.மு500 முன்னர்) திருகோணமலை பாரிய சனத்தொகையோ ,கட்டமைக்கபட்ட ஆட்சி முறையையோ கொண்டிருந்திருக்காத,சில மனித குழுக்கள் தங்களது அடிப்படை தேவைகளை நிறைவு செய்து கொண்டு வாழ்திருக்கிறார்கள்.

கதிரவெளி (தற்போது மட்டக்களப்புமாவட்டம்),திரியாய்,தென்னமரவாடி,கிழக்கு மூதூரில் அமைத்துள்ள “ராஜவந்தான்” மலை தொடக்கம் “படைகுமித்த கல்”வரை உள்ள குன்றுகள்   ஆகிய வற்றில் காணப்படும் ஆதாரங்கள் அம்மக்கள் இருப்பை உறுதி செய்கின்றன.

தற்போது திருகோணமலை மாவட்டமாக அடையாளப்படுத்த பட்ட பகுதி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் கிடைக்கும் கருப்பு சிவப்பு நிற பெரும்கற்கால மட்பாண்டங்கள் ,தாழிகள் மக்களின் இருப்புக்கள் இருந்தது என்பதை உறுதி செய்கின்றன.
கண்ணால் காணக்கூடிய ஆதாரங்கள் இப்படி சொல்ல திருமலை பகுதியில் செல்வாக்கை கொண்டிருந்த இம்மக்களை ஆரிய இலக்கியமான ராமாயணம்  உயர் தொழில் நுட்பம் கொண்டவர்களாகவும் ,கட்டுக்கோப்பான ஆட்சி முறையை கொண்டவர்களாகவும் இனம் காட்டுகிறது.அதாவது இந்த மனிதர்களின் தலைவனிடம்(ராவணனிடம்) விமானம் இருந்ததாக கூட அப்புராணம் கூறுகிறது .
இன்னுமொரு ஆரிய புராணமான மாகவம்சம் இம்மனிதர்களை யட்சினிகள் என்ற பெயர் கொண்டு அழைக்கிறது.அதுமட்டும் அல்லாது எதோ ஒரு சக்தியை கொண்ட ஒரு கூட்டமாக அடையாளப்படுத்துகிறது.அதற்க்கு பின் வந்த வரலாற்று ஆசிரியர்கள் அவர்களை  இயக்கர் ,நாகர் என்ற இனமாக அடையாளப்படுத்தினர்.
கி.மு 500 ஆண்டுக்கு பிறகுதான் ஆரியர்கள் இங்கு வந்தார்கள் என்றால்
அதற்க்கு முன் இங்கு வாழ்ந்த மக்கள் யார் ? வரலாற்று ஆசிரியர்கள் இவர்களை அடையாளபடுத்துவதே  இயக்கர் நாகர் என்ற தமிழ் பெயர்களை கொண்டுதான். .அதை விட இங்கு கிடைத்த அடிப்படை தொழில்நுட்பங்களை கொண்ட மட்பாண்டங்கள் மற்றும் பிற உபகரணங்கள் வடிவமைப்பும் காலபகுதியும்  தமிழ் நாட்டில் கிடைத்த பொருட்களுடன் ஒத்து போகின்றன. அப்படியானால் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் பெரும்கற்காலத்தில்  இங்கு வாழ்த்து எந்த இனம் என்று !!!

1917ஆண்டு கந்தரோடையில் ஆய்வு செய்த சேர் போல் பிரிஸ் அவர்கள் 1919 ஆண்டு டெயிலி நியூஸ் என்ற ஆங்கில பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
“இதுவரை கனவிலும் எண்ணிப் பாராத நமது நாகரிகத்தின் கவரத்தக்க வளர்ச்சிக்கட்டம் பற்றிய சான்றுகள் உண்மையாகவே மண்ணுக்குள் புதைந்து இருப்பதை தமிழ் மக்கள் ஒருகாலத்தில் உணர்வார்கள் என்று நம்புகிறேன்...”

Friday, December 14, 2012

மொழி ரீதியாக ஈழம் உட்பட குமரிக்கண்ட நாடுகளின் தொடர்பு


தமிழ் வரலாற்று ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வு துனைகளாக பழைய சாசனங்கள், கல்வெட்டுக்கள் ,இலக்கியங்கள் போன்றவற்றைதான்  எடுத்து கொள்கிறார்களே தவிர அறிவியல் அம்சங்கள் மூலமாகவும் ஆராயலாம் என்பதை மறந்து விடுகின்றனர்.

உலகில் உள்ள அனைத்து உரினங்களும்  தனக்கு தெரிந்தும் தெரியாமலும் தன் முன்னோர்களின் தடையங்களை சுமந்து கொண்டுதான் இருக்கிறன.அப்படித்தான் மனித இனமும் காலம் காலமாக தங்களது இரத்த உறவுகளின் மரபணுக்களை சுமந்து கொண்டு இருக்கிறது.
உங்களுக்கு குமரிக்கும் மரபணுக்களுக்கும் என்ன சம்பந்தம் என நினைக்க தோன்றும். ..சம்பந்தம் இருக்கிறது ..அதுதான் "M130" எனப்படும் மரபணு  இந்த வகை மரபணுவானது சுமார் 60,000ஆண்டில் இல் இருந்து 70,000 ஆண்டுகள் பழமையானது (குமரிக்கால மரபணு). நாங்கள்தான்   இந்த மரபணுக்கு சொந்த காரர்கள்.இந்த பூரண மரபணு கொண்ட மனிதர்கள் குமரியின் பாகமாக இருந்த மடகஸ்கார் இந்தியா அவுஸ்திரேலியா(பழம்குடிகள்)ஆகிய பகுதியில் வாழ்த்து வருவது  இதுவரை செய்யபட்ட ஆராட்சிகளில் இருந்து தெரிய வருகிறது. (ஆதாரம் -"Michael Wood " என்ற பிரபல பிருத்தானிய  மரபணு ஆய்வாளர் BBC தொலைக்காட்சியில் இந்த தகவலை வெளியிட்டார்.)
இலங்கையில் "M130மரபணு  தொடர்பாக எந்த ஆராட்சியும் இது வரை தொடங்கவில்லை.ஆனாலும் புவியியல் ரீதியாக நாம் குமரியின் நடுப்பகுதியில் இருந்த படியால் நிச்சயம் அதன்  தாக்கம் நமக்கும் இருக்கும்.
உங்களுக்கு கேள்வி எழலாம்.அவுஸ்திரேலிய பழங்குடியினரும்குமரி வாசிகளா ,அவர்கள் தமிழையா(திராவிட மொழியையா) பேசினார்கள் என்று ? என்று. சந்தேகமே இல்லை அவர்கள் குமரி வாசிகள்தான் அவர்கள் பேசியது தமிழ் தான்.இன்னும் வரை சில தூய தமிழ் சொற்களை கூட பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
 எ. விருமாண்டி
முதலில் நாம் தமிழ் நாட்டில் இருந்து தொடங்குவோம்."M130" எனப்படும் மரபணு வின் பூரணத்தன்மை கொண்ட நபர்களை காமராசர் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ராமநாதன் பிச்சப்பன் என்பவர் தமிழ் நாட்டில்  உசிலம்பட்டி பகுதியில் கண்டு பிடித்தார்.இதில்  எ. விருமாண்டி என்ற நபர் உட்பட 13 நபர்கள் M130 மரபணுவைக் கொண்டுள்ளதை கண்டு பிடித்தார்.. இதே மரபணுக்களை கொண்ட நபர்கள் மடகஸ்கார் நாட்டில் அதிகமாக காணப்படுகின்றனர்.
அவுஸ்ரேலியாவின் வடமேற்குப் பகுதியில் தற்போதும் வாழும் கரிறியா போன்ற ஆதிக்குடிகள்M130 மரபணுவைக் கொண்டு காணப்படுவது , குமரிக்கண்ட வாசிகளின் வழித்தோன்றல் என்பதையும்  அவர்களது மொழி , உருவத் தோற்றப்பாடு என்பன தமிழர்கள் என்பதையும் நிருபிக்கின்றன.
அவுஸ்ரேலிய பழம்குடியினரின் தோற்ற அமைப்பு தமிழரின் தோற்ற அமைப்புடன் முழுமையாக ஒத்து போகிறது.அதை விட அவர்களது மொழியிலும் தமிழ் (திராவிட )மொழியின் சாயலும் இலக்கண, ஒலியியல்  ஒற்றுமைகள் உள்ளது.

மேலும் அங்குள்ள சில ஆதிக்குடிகளின் சில இனக்குழுமங்களின் பெயர்கள் வியப்புத்தருவதாகவும் மேலும் ஆராயப்பட வேண்டியதாகவும் இருக்கிறது . அவையில் ஒரு குழுவின் பெயர்தான் குவேனி . இது இலங்கையின் இயக்கர் இனப்பெண்ணான (திராவிட பெண் )குவேனியின் பெயரை ஒத்திருக்கின்றது. இவரையே இந்தியாவின் கலிங்கத்திலிருந்து துரத்தப்பட்ட கலிங்கத்து இளவரசனான விஜயன்மணம் முடித்தார் என மகாவம்சம் கூறுகின்றது. மேலும் அவுஸ்திரேலிய ஆதிக் குடிகளின் சில குழுக்களின் பெயர்கள் நகர, நன, நந்தா, நங்கா, நகரியா, நகுரி, நகண்டி, நகம்பா என்று காணப்படுகின்றன. இலங்கையில் கூட நாகர் என்ற பண்டைய தமிழ் இனமும் காணப்படுகிறது .நாக என்ற சொல் இந்தியாவிலும் இலங்கையிலும் நிறைய சந்தர்பங்களில்  பாவிக்கப்படுவது நாம் அனைவரும் அறிந்தது.
இங்குதான் மொழியியல் அடிப்படையில் குமரிக்கண்ட நாடுகள் தொடர்பு படுவது நமக்கு புரிகிறது.

பெரும் கற்காலத்தில் என்ன செய்து கொண்டு இருந்தது திருகோணமலை


சென்ற வாரம் மலைமுரசு செய்தித்தாளுக்காக தேடியவை 
இதுவரை திருகோணமலையின்  வரலாறு   ஆய்வாளர்களால் ஆராயப்பட்டு பல நூல்களாக வந்து விட்டன.ஆனால் அவற்றில் வரலாற்றுக் காலம் தான் முக்கியத்துவப் படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் நாகரிக வளர்ச்சியை.வரலாற்றுக்கு முந்திய காலம்,வரலாறு உருவாக்கக் காலம், வரலாற்றுக்காலம் என்று மூன்று வகையாக பிரிக்கலாம்.
ஈழத்து நாகரிக வளர்ச்சியில் இந்த மூன்று காலங்களிலும் திருகோணமலையின் பங்கு முக்கியமானது என்பது இதுவரை கிடைத்த ஆதாரங்களில் இருந்தது புலப்படுகிறது.

இதில் வரலாற்றுக்கு முந்திய காலத்தில் திருமலையின் பங்கு என்ன?
 மக்கள் எழுத்து பாவனையை தொடங்காத காலம் வரலாற்றுக்கு முந்திய காலம் எனப்படுகிறது. எல்லா இனக்குழுக்களின் வரலாறுகளை ஆராயும் போதும் இந்த காலப்பகுதி மிகவும் சவாலுக்கு உரியதாக காணப்படுகிறது. இக்காலப்பகுதில் மக்கள் இருப்பு தொடர்பாக ஆதாரங்களை தேடும் போது பின் வந்த பெரும்கற்காலம் தொடர்பான குறிப்புக்களும்,அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் ,உபகரணங்களின் எச்சங்களும் மட்டுமே  ஆதாரங்களாக கொள்ள முடியும்.
பெரும்கற்கால(கி.மு500 முன்னர்) திருகோணமலை பாரிய சனத்தொகையோ ,கட்டமைக்கபட்ட ஆட்சி முறையையோ கொண்டிருந்திருக்காத,சில மனித குழுக்கள் தங்களது அடிப்படை தேவைகளை நிறைவு செய்து கொண்டு வாழ்திருக்கிறார்கள்.

கதிரவெளி (தற்போது மட்டக்களப்புமாவட்டம்),திரியாய்,தென்னமரவாடி,கிழக்கு மூதூரில் அமைத்துள்ள “ராஜவந்தான்” மலை தொடக்கம் “படைகுமித்த கல்”வரை உள்ள குன்றுகள்   ஆகிய வற்றில் காணப்படும் ஆதாரங்கள் அம்மக்கள் இருப்பை உறுதி செய்கின்றன.

தற்போது திருகோணமலை மாவட்டமாக அடையாளப்படுத்த பட்ட பகுதி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் கிடைக்கும் கருப்பு சிவப்பு நிற பெரும்கற்கால மட்பாண்டங்கள் ,தாழிகள் மக்களின் இருப்புக்கள் இருந்தது என்பதை உறுதி செய்கின்றன.
கண்ணால் காணக்கூடிய ஆதாரங்கள் இப்படி சொல்ல திருமலை பகுதியில் செல்வாக்கை கொண்டிருந்த இம்மக்களை ஆரிய இலக்கியமான ராமாயணம்  உயர் தொழில் நுட்பம் கொண்டவர்களாகவும் ,கட்டுக்கோப்பான ஆட்சி முறையை கொண்டவர்களாகவும் இனம் காட்டுகிறது.அதாவது இந்த மனிதர்களின் தலைவனிடம்(ராவணனிடம்) விமானம் இருந்ததாக கூட அப்புராணம் கூறுகிறது .
இன்னுமொரு ஆரிய புராணமான மாகவம்சம் இம்மனிதர்களை யட்சினிகள் என்ற பெயர் கொண்டு அழைக்கிறது.அதுமட்டும் அல்லாது எதோ ஒரு சக்தியை கொண்ட ஒரு கூட்டமாக அடையாளப்படுத்துகிறது.அதற்க்கு பின் வந்த வரலாற்று ஆசிரியர்கள் அவர்களை  இயக்கர் ,நாகர் என்ற இனமாக அடையாளப்படுத்தினர்.
கி.மு 500 ஆண்டுக்கு பிறகுதான் ஆரியர்கள் இங்கு வந்தார்கள் என்றால்
அதற்க்கு முன் இங்கு வாழ்ந்த மக்கள் யார் ? வரலாற்று ஆசிரியர்கள் இவர்களை அடையாளபடுத்துவதே  இயக்கர் நாகர் என்ற தமிழ் பெயர்களை கொண்டுதான். .அதை விட இங்கு கிடைத்த அடிப்படை தொழில்நுட்பங்களை கொண்ட மட்பாண்டங்கள் மற்றும் பிற உபகரணங்கள் வடிவமைப்பும் காலபகுதியும்  தமிழ் நாட்டில் கிடைத்த பொருட்களுடன் ஒத்து போகின்றன. அப்படியானால் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் பெரும்கற்காலத்தில்  இங்கு வாழ்த்து எந்த இனம் என்று !!!

1917ஆண்டு கந்தரோடையில் ஆய்வு செய்த சேர் போல் பிரிஸ் அவர்கள் 1919 ஆண்டு டெயிலி நியூஸ் என்ற ஆங்கில பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
“இதுவரை கனவிலும் எண்ணிப் பாராத நமது நாகரிகத்தின் கவரத்தக்க வளர்ச்சிக்கட்டம் பற்றிய சான்றுகள் உண்மையாகவே மண்ணுக்குள் புதைந்து இருப்பதை தமிழ் மக்கள் ஒருகாலத்தில் உணர்வார்கள் என்று நம்புகிறேன்...”

Saturday, December 8, 2012

குமரி வரலாற்றில் ஈழத்தின் பங்கு என்ன-கடல் தின்ற நம் நிலம்-பாகம் மூன்று


.அழிந்த குமரிக்கும் ஈழத்திற்க்கும் என்ன சம்பந்தம்

இக்கேள்விக்கு பதில் குமரி இருந்ததாக கூறப்படும் இடத்தின் வரைபடத்தை பார்த்தாலே புரிந்து விடும்.மடகஸ்கார் அவுஸ்ரேலியா இந்தியாவை இணைத்த குமரியில் நடுப்பகுதிதான் இலங்கை.
இவற்றை புவியியல் ரீதியாக நிருபித்து விட்டாலும்...சுவாரசியாமான இன்னுமொரு ஆதாரமும் உண்டு.
சித்தர்கள் என்ற சொல் என்றும் தமிழர் வரலாற்றுடன் தொடர்புடையது. சித்தர்கள் என்பவர்கள் பல்துறை உயர் அறிவு கொண்டவர்களாக காணப்பட்டவர்கள் இன்றைய அறிவியலை விஞ்சும் சக்தி அவர்களிடம் இருந்ததாக சித்தர்கள் பற்றிய ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
நம் குமரிக்கண்டத்தில் இது வரை நான்கு சிறப்பு வாய்ந்த சித்தர்கள் இருந்திருக்கிறார்கள்
•             காகபுசுண்டர்
•             அகத்தியர்
•             போகர்
•             மகாவதார பாபா
நான் ஏன் சித்தர்களை பற்றி கூறினேன் என்றால் இந்த சித்தர்களின் ஒருவர்தான் குமரிக்கும் ஈழத்திற்கு பிணைப்பை உறுதி செய்கிறார்.
வாசித்த உடனே சில பேர் புரிந்திருப்பீர்கள் அது அகத்தியர்தான் என்று ..
அகத்தியரை குறு முனியாக அறிமுகப்படுத்தும் சமய புராணங்கள்,அகத்தியரது குறிப்புகளையையும் தகவல்களையும் மிகைபடுத்தல்களுடனும் புனைவுகளுடனும் தராமல் இல்லை.அது மட்டும் அல்லாது புராணங்கள் தவிர்ந்த சில இந்திய சித்தர்கள் பற்றிய குறிப்புக்களின் ஆணி வேர்கள் அகத்தியரில்தான் முடிகின்றன.
அகத்தியர் என்ற குமரிக்கண்ட  காலத்து மனிதர் சகலகலாவல்லவன் என்பதால் அவர் எந்த துறை சார்த்தவர் என்பதை வரையறுத்து கூறமுடியவில்லை.அவர் எழுதிய நூல்களை பற்றி எழுதப்போனால் குமரி க்கண்டம் பற்றிய தொடர் அகத்தியர் பற்றியதொடராக மாறிப்போகும்.
ஆதலால் வாருங்கள் நாம் நம் குமரிக்கே செல்வோம். அகத்தியர்தான் ஈழத்துக்கும் குமரிக்கும் இருக்கும் தொடர்புக்கு ஆதாரம் என்று சொன்னேன் அல்லவா?சில வேளை உங்களுக்கே தெரிந்திருக்கும் ஈழத்துக்கும் அகத்தியருக்கும் நெருங்கிய தொடர்புகள் இருக்கின்றன என்பது.
அகத்தியரின் ஈழத்து வருகை பற்றி கூறும் திருக்கரசை புராணம் மிகத்தெளிவாக அகத்தியர் ஈழ வருகை பற்றி கூறுகிறது.சில வேளை சிலர் திருகரசை புராணம் என்பதுபுராணம்தானே .அவைகள்  புனைவுகளும் கற்பனைகளும்தானே என்று கூறலாம். உண்மைதான் புராணங்களில் புனைவுகள் அதிகம்தான்.உறவுகளே ! கடந்த கால சம்பவங்கள் வரலாறுகள் ஆகின்றன.. காலம் செல்லச்செல்ல வரலாறுகள் இதிகாசங்களாகவும் புராணங்களாகவும் மாறுகின்றன .
இன்றுவரை திருகோணமலைப் பட்டினத்தில் இருந்து 23 மைல் தொலைவில் உள்ள மூதூர் பகுதியில் அமைந்துள்ள கங்குவேலியில்  (திருக்கரைசையம்பதி) கிராமத்தில் ஆதி சிவன் கோவில் காணப்படுகின்றது. அங்கிருந்து ஆறு கிலோமீற்றர் தொலைவில் அகத்தியர் ஸ்தாபனமானது மகாவலி கங்கைக் கரையில் வனப்பகுதியில்அமைந்துள்ளது
இங்கு அமைந்துள்ள கற்தூண்களும், அகத்தியர் ஆலயமும், சிவலிங்கமும், வரலாற்று சான்றுகள் பதிவு செய்கின்றன.(அகத்தியர் ஸ்தாபனத்தின் வரலாறு சோழர் காலம் வரை நீள்கிறது)
திருமலையை சென்றடைந்த அகத்தியர், அங்குள்ள கங்குவேலிப் பகுதியில் சிவலிங்கம் அமைத்து, தனது தவவலிமையால் கைலை மலையை வழமைக்கு கொண்டு வந்ததோடு, அங்கிருந்தவாறே சிவன் பார்வதி திருமணத்தை தரிசித்ததாகவும் புனைவு கதைகள்  உள்ளன.
இதன் பின்னர் திருமலையில் வாழ்ந்த அகத்திய முனிவர், தற்பொழுது மாவிலாறு என்று அழைக்கப்படும் அகத்தியனாற்றில் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தியதாகவும் ஐதீகங்கள் கூறுகின்றன.
இது போல இந்திய பெரும் கண்டத்திலும் அகத்தியரை பற்றி பல பல  தடயங்கள் உள்ளன.
இவை அனைத்தையும் இணைத்தால் குமரி என்ற புள்ளியில் முடிகின்றன.ஆகவே மிகக்சாதரணமாக புரிகிறது குமரி காலத்திலும் நம் இருப்பு ஈழத்தில் இருந்திருக்கிறது.

Friday, December 7, 2012

கடல் தின்ற நம் நிலம்- 2,குமரி அழிவு பற்றி கூறும் நம் தமிழ் இலக்கியங்கள்


குமரி அழிவு பற்றி கூறும் நம் தமிழ் இலக்கியங்கள்


தேடல்கள் எப்போதும் நம் இலக்குகளை அடைய செய்து விடும்.இது எல்லைக்கல் பகுதிக்கு நூற்றுக்கு இருநூறு வீதம் சரியாகி போய்விட்டது.தமிழர் வரலாற்றில் பல ஓட்டைகள் இருந்தாலும் அந்த ஓட்டைகள் அடைக்கபடாமைக்கு தேடல் இன்மையும் வரலாற்று ஆசிரியர்களில் ஒற்றுமையாக,நம்பத்தகுந்த ,பல்துறைகளிலும் வரலாற்றை நோக்காதது ஒரு காரணமாக இருக்கலாம்.
அவற்றை உடைக்கவே எல்லைக்கல் எல்லாத்துறை ஆதாரங்களுடன் நம் வரலாற்றை தேட ஆரம்பித்தது .சென்ற வாரம் குமரி எப்படி அழிந்திருக்கலாம் என்று அறிவியல் ரீதியாக பார்த்தோம்.உலகில் சில விடயங்கள் புதிராக இருந்தாலும் எங்கோ ஒரு இடத்தில் அதற்க்கான விடை இருக்கும்.என்னதான் நம் குமரி எனும் வரலாற்று புதையல் பற்றி நாம் அறிவியல் ஊகங்களை வெளியிட்டாலும் , எழுத்து மூலமான குறிப்புகள் எப்போதும் நம்ப தகுந்தவை.
குமரிக்கும் அப்படியான அழிவு குறிப்புக்கள் நம்முடைய முன்னோர்கள் பதிவு செய்து விட்டனர்.குமரி அழிவுக்கு பின் தப்பி பிழைத்த மற்றும் அதன் பின் வந்த மக்கள் தங்களது இலக்கியங்களில் பதிவு செய்துள்ளனர்.
இந்த இலக்கிய பதிவு தொடர்பாக ஆராய்ந்த மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர், பேரா.கா.சுப்பிரமணியப்பிள்ளை ஆகியோர் நமது பண்டைய பின்வருவன வற்றை கண்டு பிடித்தனர்.

 சிலப்பதிகாரத்தில் "பஃறுளியாறும்", "பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும்" "கொடுங்கடல் கொண்டது" பற்றிக் கூறுகின்றது.
    அடியில் தன்னள வரசர்க் குணர்த்தி
    வடிவே லெறிந்த வான்பகை பொறாது
    பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
    குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
    வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
    தென்றிசை யாண்ட தென்னவன் வாழி (சிலப். 11:17-22)
   புறநானுற்றில்  பாண்டியனை வாழ்த்தும் பொழுது
    "செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த
    முந்நீர் விழவின் நெடியோன்
    நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே" (புறம் 9)எனவும்.
வேறு ஒரு இடத்தில்
தெனாஅ துருகெழு குமரியின் தெற்கும்"
 "குமரியம் பெருங்துறை யயிரை மாந்தி" (புறம் 6:67)

இரண்டாம் சங்கம் இருந்த காலத்தில் கபாடபுரம் என்ற தலைநகரம் அழிந்த பின்னரும் குமரி ஆறு இருந்ததென்பதை தொல்காப்பிய சிறப்பு வரி,
"வட வேங்கடந் தென்குமரி"எனவும்.
 கலித்தொகையில்
 "மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின்
மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)எனவும் குறிப்பிடுபவை

 குமரிக்கண்டத்தை கடல்கொண்டதை குறிக்கிறது என்றும் தமிழ் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்

இவ்வாறு குமரி அழிவு பற்றி கூறப்பட்ட இலக்கியங்களின் உண்மைதன்மைகள் கேள்விக்குரியவைதான் .(எல்லா இலக்கியங்களும் அப்படித்தான் இன்றுவரை ) ஆனாலும் இலக்கியங்கள் மக்கள் வாழ்வியலையும் மனத்தாக்கங்களை அடிப்படையாக கொண்டு எழுபவைதான்.குமரி அழிவு என்பது நிச்சயம் அம் மக்களை பாதித்து இருக்கும். அதன் வெளிப்பாடுகளாகத்தான் இவை இருக்கும்.