Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Tuesday, August 14, 2012

சுஜாதாவின் பத்துக் கட்டளைகள்


இது ஒரு படித்து பிடித்து போன முகநூல் பதிவு 

1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.

2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.

3. மூன்று மணிக்குத் துவங்கும் மாட்டனி போகாதீர்கள். க்ளாஸ் கட்பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம். இளமைக்காலம், ஒளிக் கீற்றைப் போல் மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள். 

4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் – யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக் கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம். 

5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில், யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம் ஆயிரம் ரூபாய்க்கு ஷர்ட், சுடிதார் கேட்கும் முன். 

6. இந்தச் தகவல்களை படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.

7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம்(உடல்), எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம்.குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்கு கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும், உபத்திரமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை. 

8.எட்டு முறை மைதானத்தை சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்குச் சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாக தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காக சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும். 

9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம். ஒரு மணி நேரம் பாடம் அல்லது புத்தகம் படிக்கலாம். 
10. படுக்கப் போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணன், தங்கை யாருடனாவது பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம், நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்). எதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான். 

Sunday, January 8, 2012

முதல் காதல்



 (திருகோணமலையில் ஒரு ஒல்லாந்த பெண்ணின் காதல் கதை )
18ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி !  காலையில் சூரிய உதயத்தை ரசிக்கும் அவளுக்கு இன்று ரசிக்கும் மனநிலை இல்லை.பிற தேசம்  என்றாலும் அவளுக்கு அவள் வாழ்நாளில் அதிக மகிழ்வை தந்தது இந்த திருகோணமலைதான்.இன்று அவளுக்கு பெரும் சோகத்தை கொடுத்து விட்டது.
தூரத்தே கப்பல் புறப்படுவதற்க்கான சங்கொலியும் ஒழித்தது.தன் கண்களை தனது அறையில் இருந்து கொண்டு கடலை நோக்கி கண்களை குவித்த அவளுக்கு பாய்மரம் விரிந்தது புரிந்த்தது.
என்னதான் அந்த கப்பலில் இருக்கிறது அவளுக்கு...எதுவும் முக்கியமான பொருளாக இருக்குமோ......முக்கியமான பொருள்தான் அவள் காதல்!
ப்ரன்சினா வான் ரீட் ஒல்லாந்தில் பிறந்தவள் தந்தை அதிகாரி என்பாதால் அவள் ஒல்லாந்தில் வாழ்த்ததில்லை. இவள் பருவம் அடைந்த வயது தொடக்கம் எல்லாம் இந்த பிரேடிக் மலைக்கோட்டையும்,திருகோணமலை என்ற இந்த ஊரும்தான்.
ஜோசொப்பியன் அவன் கொட்டை ராணுவ அதிகாரி அவனை காதல் கொண்ட நாளில் இருந்து காதல் எனபதற்கு அர்த்தம் புரிந்தது. முதல் காதல் திகட்ட திகட்ட காதலித்தாள் அவனிடம் சொல்லாமலே.
அவனை அவள் காதலிப்பதை தனது தந்தையிடம் சொன்னாள்.அவளது தந்தையும் ஜோசொப்பிடம் பேசி திருமண திகதியும் குறிக்கபட்டது. ஆனாலும் அவன் விருப்பம் அவள் மீது அல்ல அவளது தந்தை பதவி மீது.அதற்காக சீதனமாக அந்த பதவியை கேட்க்க முயன்றான் கடைசில் அவனுக்கு இருந்த ராணுவ அதிகாரி பதவியும் போயிற்று. கொவமடைந்த ரீட்டாவின் தந்தை அவனுக்கு அவன் பதவியை நீக்கி ஒல்லாந்து செல்ல கட்டளை இட்டார்.
கப்பல் செல்ல தயார் ஆகி விட்டது காற்றில் அசைகிறது பாய்மரம்.மெல்ல மெல்ல கப்பலும் நகருகிறது.ரீட்டவுக்கு என்ன செய்வது தெரிய வில்லை.
தன் காதல் கனவு வாழ்க்கை அந்த கப்பலுடன் செல்வதாக உணர்வு.அறையை விட்டு வெளியே வருகிறாள். கோணேசர் மலைக்கு சாமந்தரமாக செல்லும் அந்த கப்பலுடன் தானும் மலையில் ஓட தொடங்குகிறாள்.கடலுடன் கலந்த அந்த மலைக்கு ஒரு முடிவு இருக்கும் என்று தெரியாமல் ஓடிய அவளுக்கு வாழ்வும் அந்த மலையுடன் முடிந்து விட்டது. 

இது ஒரு உண்மை சம்பவம் 1680 காலப்பகுதில் இடம் பெற்றது( கொஞ்சம் கற்பனை)
 இந்த சம்பவங்கள் லேப்.கேணல் .தோமஸ்(பிரித்தானிய ராணுவம்) அவர்களால் 1940 ஆண்டு கண்டு எடுக்கபட்ட ஒல்லாந்த குறிப்புகள் அடிப்படியாக கொண்டது .
(அந்த ராணுவ அதிகாரி பெயர் தெரியவில்லை இக்கதையில் குறிப்பிட்டது கற்பனை பெயர்.)

Wednesday, December 14, 2011

ஏன் மானம்கெட்ட தொழில் உங்களுக்கு"


இன்றைய காலகட்டத்தில் புலம்பெயர் நாடுகளில் இருந்து பல இணையதளங்கள் செயல் பட்டு வருகின்றன அவைகள் எந்த அளவுக்கு நம்பகரமான செய்திகளை வெளியீடுகின்றன?
யுத்தம் முடிவடைந்த காலப்பகுதியில் இருந்து சில இணையங்களில் இலங்கையில் வடகிழக்கு பகுதிகளில் இடம்பெறும் கலாச்சார சீரழிவுகள் பற்றிய செய்திகள் முக்கிய இடம்பெற்று வருகிறது.
சில உண்மையாகினும் பல சொடிக்கப்பட்ட கட்டுகதைகளாக வெளிவருகின்றன.ஏன் இவ்வாறு தங்களின் இணையதளங்களின் விளம்பரத்தை தேடி கொள்வதற்கு தங்கள் பிறந்தஇடத்தை கேவலபடுத்துகிறிர்கள்?கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏன் நண்பர் ஒருவரால் ஒரு இணையத்தின் செய்தி ஒன்று முகஏட்டில் பகிரப்பட்டது.
இது திருகோணமலை எடுக்கபட்டதாக குறிப்பிடபட்டிருந்தது  இது கலாச்சார சீரழிவு எனவும் ....
அந்த ஒளிப்படத்தில் ஒரு இளைஞன் ஒருவரும் ஒரு யுவதின் கையை பிடித்து உரையாடி கொண்டு இருக்கிறார்.அதனை ஒருவர் மறைத்து வைத்த கமரா மூலமாக படம்பிடிக்கிறார்? இதில் யார் செய்தது காலச்சாரசீரழிவு?
  • காதலியின் கையை பிடித்து கதைத்தவரா ?
  • அதை படம் பிடித்த வக்கிர புத்திகொண்டவரா???????
    அல்லது
  • விளம்பரத்திற்காக ஒரு சிறிய விடயத்தை பெரிய விடையமாக்கி அதை அரசியல் ஆக்கி தன் மகளுக்கும் மகனுக்கும் பப்புக்கும்,டேய்டிங்க்கும் போவதற்கும் பணம் கொடுப்பதற்கு நடத்தப்படும் இணையதளங்களா????????

இது என்ன மானம்கெட்ட தொழில் உங்களுக்கு ?????இப்படி வாழ்வதற்கா உயிரை கையில் பிடித்து கொண்டு வெளிநாடு ஓடினாய் ???
உன் மகள்மாரின் மகனின் மனைவியின்  facebook புகைப்பட பகிர்வை பார்! அப்போது விளங்கும் எது காலச்சார சீரழிவு என்று! உன் மகள் மது கோப்பையை உடன் தனது boy friendஉடன் (100 க்கு 1 வீதம் காதலனாக இருக்கலாம்)புகைபடம் எடுத்து facebookல் பகிர்தல் காலச்சார சீரழிவு இல்லையா ???

இவ்வாறன இணையங்கள் ஒன்று புரிந்து கொள்ளவேண்டும்..வெளிநாடுகளில் நம்மவர்கள் செய்வதை விடவா இலங்கையில் நடக்கிறன.
இதுதான் நம் பிரச்சனையா?
உங்கள் இணையங்களில் பகிரப்படும் செய்திகள்தான்  என்ன ?
  • வீரஆவேச கட்டுரைகள்.
  • நடிகர்களின் கிசு கிசு.
  • நடிகைகைகளின் ஜிலு ஜிலு வீடியோ.

வீரமும் ஆவேசமும் இங்கு உள்ளவர்களுக்கு நிறையவே உள்ளது,இருப்பதால் தான்.அவர்கள் எங்கும் ஓடி போய்விடவில்லை. கொழும்பில் இருந்து கூட தமிழர் நலனுக்காக பாடுபடும் ஊடகத்துறைசார்தவர்கள்,அரசியல்வாதிகள்,சமுகநலவாதிகள் உண்டு.
உங்கள் வாய் வீரம் எங்களுக்கு தேவை இல்லை! யுத்த காலத்தில் நீங்கள் என்ன செய்திர்கள் எம் மக்களின் பிணம்களின் படங்களின் போட்டு பிழைத்தீர்கள் .
இவ்வாறு செய்த நீங்கள் இப்போது விபச்சார அரசியல்துணிந்துவிட்டிர்கள்!
காதலன் காதலி கைபிடிப்பது சமுக சீரழிவாம் இது இலங்கை அரசின் செயலாம்!!!!!!!
நாங்கள் ஈழத்தில்தான் இருக்கிறோம் இங்கு நடப்பவை உங்களை விட எங்களுக்கு தெரியும். எதுவும் நடக்கவில்லை என்று நான் சொல்லவரவில்லை!!!! ஆனால் உங்கள் மண்ணை அவமானபடுத்தாதிர்கள் !!!!
அந்த ஒளிப்படத்தில் வந்தவர் யாரகவும் இருக்கட்டும்,!என்ன இனத்தவராக இருக்கட்டும்! மற்றவர்கள் தனிப்பட்ட விடயத்தை விடியோ எடுப்பது எவ்வளவு கேவலமான செயல்!!! அதை வெளியீடு செய்தல் எவ்வளவு ஈனச்செயல்!!!!

பின் குறிப்பு-
தொப்பி அளவானவர்கள் போட்டு கொள்ளவும்!!!