Showing posts with label நாய்கள். Show all posts
Showing posts with label நாய்கள். Show all posts

Friday, August 30, 2013

நாய்களின் கல்லறைகள் ...கோணேசர் கோவில் கோட்டைக்குள்



திருகோணமலை மனித புதை நிலமாக இருந்த காலங்களும் உண்டு ஆனால் இங்கு நாய்களுக்கு என்று தனியாக புதை நிலம்  இருப்பது எத்தனை பேருக்கு தெரியும்?.
கொட்டியாரம் பற்றிய தகவல்களை இணையத்தில் தேடிக்கொண்டு இருக்கும் போது ஒரு சுற்றுலா பயணியின் வலைப்பக்கம் கண்ணில் பட்டது.அதில் திருகோணமலையில் இருப்பதாக சில கல்லறைகளின் படங்கள் போடப்பட்டு இருந்தது. சில வேளை இது ஆக்கிரமிப்பாளர்கள் கல்லறைகளா என்று வாசித்து பார்த்தால் அவைகள் யாவும் நாய்கள் கல்லறைகள் தொடர்பானவை.
ஆனால் எல்லா நாய்களும் பிரிடிஷ் நாய்கள்....
இவையாவும் ஆங்கில ஆட்சி காலத்தில் அமைக்கபட்டு இருகின்றன.இது திருமலை கோட்டையின் உள்ளே கோணேசர் கோவிலுக்கு செல்லும் வழிக்கு பக்கத்தில் பற்றை கட்டுக்குள் இன்று ஒளித்துக் கொண்டு இருகின்றது.