Showing posts with label தமிழர். Show all posts
Showing posts with label தமிழர். Show all posts

Tuesday, August 19, 2014

இலங்கை வரலாற்றில் கம்பளைக் கால முருகன் கோயில் எம்பெக்க - தமிழர் கலையும் கடவுளும்


கண்டி நகர் நோக்கி நெடுஞ்சாலையில் பிரயாணம் செய்பவர்கள் பிலிமத்தலாவை நகரை அடைந்ததும் 'எம்பெக்க' தேவாலயம் என்ற பெயர்ப் பலகையை கண்டு கொள்வர் . அவ்விடத்திலிருந்து செல்லும்போது 1370 ஆம் ஆண்டைச் சேர்ந்த இலங்கை வரலாற்றில் கம்பளைக் காலம் என்று அழைக்கப்படுவதும் 3 ஆம் விக்கிரமபாகு மன்னனின் ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்டதுமான 'எம்பெக்க' தேவாலயம் காணப்படுகின்றது.

வரலாற்று ஐதீகம்(புனைவு )
இந்த தேவாலயம் உருவானது தொடர்பான கொஞ்சம் புனைவுகளுடன் கூடிய கதை ஒன்று உள்ளது. முன்பு ஒரு காலத்தில் எம்பெக்க கிராமத்துக்கு அருகாமையில் பெர வாத்தியக்காரன் ஒருவன் கடுமையான குஷ்ட ரோகத்தால் அவதியூற்றபோது தன்னை இந்த நோயின் அவலத்திலிருந்து மீட்டெடுக்கும்படி அவன் கதிரமலைக் கந்தனிடம் தவஞ்செய்து நேர்த்திக்கடன் வைத்தான். அதனைத் தொடர்ந்து அவனுக்கு அந்த நோயில் இருந்து சுகம் கிடைத்தது. அதனால் மகிழ்ச்சியடைந்த அவன் வருடந்தோறும் கதிர்காமத்துக்குச் சென்று பூஜை வழிபாடுகள் செய்து கந்தப் பெருமானை வழிபட்டு வந்தான். எனினும் வயதாக வயதாக தன்னால் கதிர்காமத்துக்குச் சென்று கந்தப் பெருமானை வழிபட முடியூமா? என்ற கவலை அவனை வாட்டியது. ஒரு நாள் இத்தகைய கவலையூடன் அவன் கந்தப் பெருமானை வணங்கி விட்டு கோயிலுக்கருகாமையில் இருந்த கதிர மரத்தடியில் உறங்கிப் போய் விட்டான். அன்றிரவில் அவன் கனவில் வந்த முருகன்  கவலையை விட்டு ஊருக்குப் போகும் படியும்  ஊரில் நல்ல தகவல் கிடைக்குமென்றும் அருளிச் சென்றார்.
கந்தப்பெருமானில் நம்பிக்கை கொண்டிருந்த அவன் நிம்மதியூடன் ஊர் திரும்பினான். ஊர் திரும்பியவனுக்கு ஒரு விசித்திரமான செய்தி கிடைத்தது. 'எம்பக்க' என்ற கிராமத்து தச்சன் ஒருவன் கதிர மரம் ஒன்றை தரிசித்தபோது ஐந்தாறு அடி உயரத்துக்கு அதில் இருந்து இரத்தம் சீறிப் பாய்ந்ததாம். உடனே அவ்விடத்துக்குச் சென்ற வாத்தியக்காரன் கதிர்காமக் கந்தன் தனக்கு காட்சியளித்து சொன்ன செய்தியைக் கூற தச்சன் அறுசுவையூடன் உணவூ படைத்தான். வாத்தியக்காரன் பெர வாத்தியம் இசைத்து வழிபடத் தொடங்கினான். இன்றும் கூட இங்கு மூன்று வேளை பூசை வழிபாடுகள் உணவூப் படையலுடனும் பெர வாத்திய இசையூடனுமே நடைபெறுகின்றது. கோயிலின் பிரதான மண்டபம் விசாலமாகவூம் பெர வாத்தியம் இசைக்கவூம் ஆடிப்பாடவூம் ஏற்ற விதத்தில் வசதியாக அமைக்கப்பட்டுள்ளது.

வரலாறு
கி.பி. 1370 ஆம் ஆண்டு கம்பளை இராச்சியத்தை 3 ஆம் விக்கிரமபாகு மன்னன் ஆட்சி செய்தபோது மேற்படி எம்பெக்க என்ற இடத்தில்  கதிர்காமக் கந்தனுக்கு வழிபாடு இடம்பெற்று வருவதைக் கண்ணுற்று அங்கு ஒரு தேவாலயத்தை அமைக்க நன்கொடையும்  உதவி உபகாரங்களும் செய்துள்ளான்.
பின்னர் இத்தேவாலயத்தைக் கண்டு களிக்க மன்னன் தனது பல்லக்கில் ஏறி அவ்விடத்துக்கு விஜயம் மேற்கொண்டான். எனினும் அவன் திரும்பிச் செல்ல முற்பட்டபோது பல்லக்கு ஒரு பக்கம் ஒடிந்து சாய்ந்து கொண்டதால் தொடர்ந்து செல்ல முடியவில்லை. இதனை வெறுமனே சாதாரண நிகழ்வாகக் கருதாத மன்னன் யானைத் தந்தங்களுடனும் வெள்ளிப் பூச்சுக்களுடனும் கூடிய அந்த விலையூயர்ந்த பல்லக்கினை மேற்படி தேவாலயத்துக்கே அன்பளிப்புச் செய்தான் என்று சொல்கிறது இக்கோயிலின் இன்னுமொரு வரலாறு .


 இப்பல்லக்கு இன்றுவரையும் பூஜைப் பொருளாக இருந்து வந்துள்ளதுடன் இன்று இக்கோயிலின் அரும்பொருட் காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னரும் அரசன் தனது பட்டத்து ராஜ குஞ்சரங்களின் தந்தங்களை இக்கோயிலுக்கு வழங்கியதுடன் தேவாலயத்தின் பணிகளுக்கென 67 பேரை நியமித்தான். இன்றும் இக்கோயிலின் நிர்வாகத்தை அரத்தன பணிக்கி என்ற பெர வாத்தியக்கார வம்சத்தினரே கவனித்து வருகின்றனர். இக்கோவிலின் பூந்தோட்டத்தினை கவனித்துக் கொண்டிருப்பவர்கள். 'கங்காணி வீட்டு' (கங்காணிகெதர) பரம்பரையினர் ஆகும்.
 பிரதான நிர்வாகிகளாக விதானை ஒருவரும்இ வண்ணக்குரால என்பவரும் நிலமேயால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கம்பளை வரலாற்றுக் காலம் இலங்கை வரலாற்றாசிரியர்கள் இலங்கை வரலாற்றின் கம்பளைக் காலத்துக்கு அதிக முக்கியத்துவம் வழங்குவதில்லை என்றாலும் இக்காலத்தில் இடம்பெற்ற பல நிகழ்வூகள் இப்போதும் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்டுள்ளன. 


குறிப்பாக இலங்கையின் கலை இலக்கிய வளர்ச்சி தொடர்பான சிறப்புகள் இக்காலத்தில் பதியப்பட்டுள்ளன.
இலங்கை வரலாற்றின் இதுவரை காலம் இருந்து வந்த சமஸ்கிருத பாளி மொழிகளின் செல்வாக்கு குறைந்து சிங்கள மொழி இலக்கியங்கள் வளர்ச்சிபெற்றன. இதற்கு முக்கிய காரணம் இந்தியாவின் வட பகுதியில் முஸ்லிம் ஆதிக்கம் அதிகரித்ததால் வட மொழி செல்வாக்கிழந்தமை ஒரு புறமும் மறுபுறம் தென்னிந்தியாவில் எழுச்சி பெற்ற விஜய நகரப் பேரரசு திராவிட மொழிகளை ஊக்குவித்தமையூம் இலங்கைக்கும் விஜய நகர பேரரசுக்கும் ஏற்பட்ட உறவுகளும்  ஆகும்.
விஜய நகர பேரரசு வைஷ்ணவ மதத்தை ஆதரித்ததால் அதேகாலப் பகுதியில் இலங்கையிலும் விஷ்ணு (உபுல்வன் தெய்வம்) தெய்வ வழிபாடு பரவலாயிற்று. இதற்கு மற்றுமொரு காரணம் சீதாவாக்கை காலம் முதல் கம்பளை அரசு காலத்தில் அழகக்கோனார் என்ற தமிழ் கோனார்கள் அரச அதிகாரத்தில் செல்வாக்கு செலுத்தியமையூம் அரசர்கள் தென்னிந்திய பாண்டிய அரச வம்சத்தில் இருந்து பட்டத்து ராணிகளை கொண்டிருந்தமையூம் ஆகும்.
மறு புறத்தில் இந்தியாவில் முஸ்லிம் அரசர்களின் ஆதிக்கம் பெருகிய போது கல் தச்சர்களும் மரச் சிற்பக் கலைஞர்களும் இலங்கையில் வந்து குடியேறியூள்ளனர். இவர்களைக் கொண்டு அரசர்கள் விகாரைகள்இ தேவாலயங்கள் அமைத்தபோது அவற்றில் திராவிட கலை மரபுகள் பொதிந்து காணப்பட்டன. கண்டிக்கும்இ கம்பளைக்கும் நடுவில் உள்ள எம்பெக்கஇ லங்காதிலக்கஇ கடலாதெனிய ஆகிய தேவாலயங்களில் இத் திராவிட கட்டிடக்கலை மரபுகளைக் காணலாம்.
இவற்றில் புத்தபெருமானின் சிலையூடன் விஷ்ணு (உப்புல்வன்) விபீசனன் ஸ்கந்தகுமார (முருகன்) கணேசர் (கணபதி) ஆகியவர்களின் சிலைகளும் புறச் சுவர்களில் வைத்து நிர்மாணிக்கப்பட்டு உள்ளன. அதேபோல் தமிழ் இலக்கிய மரபுகளையொட்டி தூதுக் காவியங்கள் (சந்தேசய) பல தோன்றின. பரவிசந்தேசய (புறாவிடு தூது) அத்தகைய நூல்களில் பெயர் பெற்றது.
தேவாலயத்தின் பணி செய்பவர்களாக நியமிக்கப்பட்டுள்ள பத்து பங்குக்காரர்கள் 
1.கங்காணி வீடு  
2.வீதியே வீடு 
3.முல்கம்பல வீடு
4.கற்பலகை வீடு 
5.மனந்திவெல 
6.சியம்பலாகொட
7.ரன்கம 
8.தும்பக்கே 
9.தொடந்தெனிய 
10.தலவத்துர ஆகிய வீடுகள்.இவர்கள் இணைந்து விமரிசையாக வருடாந்த பெரஹெர வைபவத்தை செய்து வருகின்றார்கள்.


கட்டிடக்கலை மிளிரும் கலையம்சங்கள்
தேவாலயத்தின் கட்டிடத் தொகுதி எட்டு பிரிவூகளைக் கொண்டுள்ளது. அவற்றில் ரிட்டா கெதர (ஆபரணங்கள் வைக்கும் அறை) மற்றும் சிங்காசன மண்டபம் என்பன தேவாலயத்துக்கு வெளியில் அமைக்கப்பட்டுள்ளன. ஏனைய வாகல்கட (நுழைவாயில்) மகா தேவாலயம் (கீழ் தேவாலயம்) முழுத்தென்கெய (மண்டபம்) அட்டுவ (நெற்களஞ்சியம்) புதுகெய (புத்தபெருமான் கோயில்) என்பனவாகும்.
தேவாலயத்தின் கலை வேலைபாடுகள் கொண்ட சிங்காசன மண்டபம் தேவாலயத்தில் இருந்து கொஞ்ச தூரத்தில் நுழைவாயிலுக்கருகே காணப்படுகின்றது. சற்றே மேட்டு நிலத்தில் சிங்காசன பீடம் அமைக்கப்பட்டுள்ளது. பெரஹெர காலத்தில் தேவ ஆபரணங்கள் அதில் அலங்கரிக்கப்பட்டு மன்னன் சிங்காசனத்தில் இருந்து வீதி வலத்தை கண்டு களிப்பான் என்று சொல்லப்படுகின்றது.கோவில் வளவுக்குள்  பிரவேசிக்கும் நுழைவாயில் வாயில் மண்டபம் என்பது மிகுந்த கலை வேலைப்பாடுகளுடன் பொருந்திய தூண்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான கூரை அமைக்கப்பட்டு அவற்றுக்கு மேல் துண்டு துண்டுகளாக சிவந்த ஓடுகள் நேர்த்தியாக பொருத்தப்பட்டுள்ளன. இந்த நுழைவாயில் மண்டபத்தின் மரத் தூண்களின் இரட்டை அன்னப் பறவைகள்இ யானைக் குஞ்சரம் நாகணவாய்ப்பறவை நீண்ட தந்தங்கள் கொண்ட யானை தாய் சேய் அரவணைப்பு வைரவர் போன்ற உருவங்கள் நுண்ணிய கலை வேலைப்பாடுகளுடன் செதுக்கப்பட்டுள்ளன.
 
தேவாலயத்தின் அமைப்பு
பிரதான தேவாலயம் ஐந்து வேறு வேறான கட்டிடங்களை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டுள்ளது. அவையாவன:
1. பெர வாத்தியக்கார மண்டபம்
2. சந்தனக் கூடம்
3. இடைக்கூடம் அல்லது மத்திய கூடம்
4. பிரித் ஓதும் பண்டபம்
5. கர்ப்பக்கிருகம் அல்லது பிரதிஷ்டா மாளிகை
பெர வாத்தியக்கார மண்டபம் என்றழைக்கப்படும் முன் மண்டபம் சற்று நீண்டதும் அகலமானதுமாகும். இதன் நீளமான பக்கத்தில் ஆறு தூண்களும்இ அகலமான பக்கத்தில் நான்கு தூண்களும் கூரையைத் தாங்கி நிற்கின்றன.
அதனைத் தவிர உட்புறம் நான்கு பக்கத்திலும் வரிசையாக மொத்தம் 32 தூண்கள் மேலும் கூரையைத் தாங்கி நிற்கின்றன. கூரையைத் தாங்கும் தூண்களுக்கும் கூரைக்கும் இடையில் இணைப்புப் பாலங்களாக சமாந்தரங்களாக இடது புறமாகவூம் வலது புறமாகவூம் 7 ஜோடித் தூண்கள் கிடையாகப் பொருத்தப்பட்டுள்ளன.
கூரையில் அகலவாக்கில் 12 பராலைகளும் நீளவாக்கில் 66 பராலைகளும் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றைத் தவிர கூரையின் இறங்கு பிரதேசத்தைப் பிரித்து அவற்றில் இரு புறமும் நீளவாக்கில் 41 பராலைகளும் மேற்படி எல்லா தூண்களும் இந்தியாவின் கேரளத்தில் இருந்து தருவிக்கப்பட்ட நன்கு முற்றிய வேங்கை மரங்களில் இருந்து குடைந்தெடுக்கப்பட்டுள்ளன என்று கூறப்படுகின்றது. இச்சித்திர வேலைப்பாடுகளை உருவாக்குவதற்கு தலைமைச் சிற்பியாகச் செயற்பட்டவர் தெல்மட தேவேந்திர மூலாச்சாரியார் என்றும் இவர் விஜயநகர சாம்ராஜ்யத்தின் இறுதிப் பகுதியில் இலங்கைக்குப் புலம்பெயர்ந்தவர் திராவிட கட்டிட பாணியில் சிறப்பு தேர்ச்சி பெற்றவர் .அவரது தலைமையின் கீழ் நூற்றுக்கணக்கான சிற்பிகள் இத்தூண்களில் மரச் சித்திர வேலைப்பாடுகளை செய்துள்ளனர்.மொத்தம் -514


அகலவாக்கில் 12 பராலைகளும் பொருத்தப்பட்டுள்ளன. இந்தப் பாராலைகள் அனைத்தும் கூரையின் உச்சியில் இருந்து நாலாபுறமும் விரிந்துஇ ஒரு குடையை விரித்து வைத்த மாதிரி கூரையைத் தாங்கி நிற்கும் கிடையான தூண்களின் மேல் இறுக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கூரையின் உச்சியில் "குருப்பாவை' என்றழைக்கப்படும் உத்தரத்தில் பிணைக்கப்பட்டிருக்கும்.
கலை அம்சம் கொண்ட பூமடலுடன் செதுக்கப்பட்டுள்ள இத்தகைய 'குருப்பாவை' யூடன் கூடிய உத்தரத் தூண் வேறு எங்குமே கிடையாது என்று சொல்லப்படுகின்றது. ஆதலால் இதனை எம்பெக்க தேவாலயத்துக்கு மட்டுமே உரித்தான விசேட கலை சிருஷ்டியாகக் கருதப்படுகின்றது. அதன் மற்றுமொரு சிறப்பம்சம் எந்த விதமான இரும்பு ஆணி வகைகளும் பாவிக்கப்படாமல் முற்றிலும் மரப் பொறிமுறை வேலைப்பாடுகள் மட்டுமே கொண்டு முழுக் கூரையும் அமைக்கப்பட்டுள்ளமையாகும்.
மரச் சிற்பக்கலை உயர் கலைநுட்பங்கள் கோவில் எங்கும் கலை நுணுக்கங்கள் பொங்கிப் பிரவகித்துக் கிடந்தாலும் பெர வாத்தியக்கார மண்டபம் என்றழைக்கப்படும் முன் மண்டபமே கலைச் சிருஷ்டியின் அச்சாணியாகத் திகழ்கின்றது. முன் சொன்னபடி இம்மண்டபத்தில் காணப்படுகின்ற கலை நுணுக்க வேலைப்பாடுகளை பின்வருமாறு பிரிக்கலாம்.
1. ஒரு தூணில் 4 என 32 தூண்களில் காணப்படும் மரச் சித்திர   செதுக்கல்கள்- 128
2.ஒரு தூணில் 8 என 32 தூண்களில் காணப்படும் சீவல் மர செதுக்கல்கள்   256
3.தூண் உச்சியில் செதுக்கப்பட்டுள்ள அலங்கார தாமரை மலர் வடிவங்கள் -64
4. உத்தரத் தூண் மரச் சித்திர செதுக்கல்கள்- 30
5. உத்தர கிடைத் தூண் மரச் சித்திர செதுக்கல்கள் -36

இலங்கை வரலாற்றில் தமிழர்களுடைய செல்வாக்கு சிங்கள பகுதியில் எப்படி இருந்தது என்பதற்கு எம்பக்க மிகச் சிறந்த சாட்சி ...

Friday, January 4, 2013

திருமலையின் வரலாறு உருவாகிய காலம்



உலக வரலாறுகள் உருவாக்க காலம் என்பது கிட்டத்தட்ட கிறிஸ்துக்கு பின் வந்த காலப் பகுதிகளை ஒட்டித்தான் காணப்படுகின்றன.அப்படித்தான் இலங்கை வரலாறும் கி.மு 500 ஆண்டளவில் விஜயன் வருகையோடு தொடங்குகிறது என்று வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.
ஆனால் மகாவம்சம் விஜயன் வருகைக்கு முன்னரான திருகோணமலையில்  இறுக்கமான ஒரு ஆட்சி முறை இருந்ததை வெளிப்படையாக சொல்லவிட்டாலும் சில இடங்களில் சொல்லாமலும் இல்லை.
அப்படித்தான் விஜயனது வருகைக்குப் பின்னரான சம்பவம் ஒன்றை கூறும் மகாவம்சம் நம் தேடலை அதிகரித்து சென்று விடுகிறது ,
விஜயன் வருகைக்கு பின்னர் விஜயனுக்கு வாரிசு இல்லாமல் போகவே விஜயன் தனது வாரிசுக்காக கலிங்க நாட்டில் இருந்து தனது தம்பி சுமிதனின் மகனான பாண்டு வாசுதேவனை இலங்கை தீவில் உள்ள தனது ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசத்துக்கு அழைக்கிறான்.
அப்படி அழைக்கப்பட்ட பாண்டு வாசு தேவனும் அவனுடைய 32 மந்திரிகளும் துறவிகள் வேடம் பூண்டே திருகோணமலை துறை முகத்தை அடைந்ததாக மகாவம்சம் கூறுகிறது .
இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு நமக்கு ஒரு கேள்வி எழுகிறது.
பாண்டு வாசு தேவனும் அவனது மந்திரிகளும் மாறு வேடத்தில் திருகோணமலைக்கு வர காரணம் என்ன ?
அப்படியானால் விஜயனது கூட்டத்திற்கு எதிரானவர்களின் கட்டமைப்பு  திருகோணமலை பகுதியில் இருந்திருக்க வேண்டும்.அதன் காரணமாகவே இக்குழுவினர் மாறுவேடத்தில் வந்திருக்கின்றனர்.இவ் மகாவம்ச குறிப்பில் இருந்து இன்னும் ஒன்று புலப்படுகிறது.இங்கு வாழ்ந்த மக்கள் துறவிகளை மதிக்கத்தக்கவர்களாக வாழ்த்திருகின்றனர்.ஆகவேதான் பாண்டு வாசுதேவன் குழுவினர் துறவி வேடத்தை தேர்ந்து எடுத்திருகின்றனர்.
ஒழுங்கான ஆட்சி முறையுடன் இம் மக்கள் வாழ்தார்கள் என்று நிருபிக்க மகாவம்சத்தில் இன்னுமொரு குறிப்பு காணப்படுகிறது.துட்டகைமுனு எல்லாளன் போரை பற்றி குறிப்பிடும் மகாவம்சம் எல்லாளனை துட்டகைமுனு வெல்வதற்கு முன்பு 32 தமிழ் ஆரசுகளை வென்றதாக கூறுகிறது.
அதுமட்டும் அல்லாது அக்காலத்தில் மிகப்பிரபலமாக இருந்த கோகர்ண (திருமலை) துறைமுகப்பகுதியை எந்த ஆரிய வம்சத்தில் இருந்து வந்த ஆட்சியாளனும்  ஆண்டதாக குறிப்பிடவில்லை.ஆரிய வம்சத்துக்கு ஆதரவாக எழுதப்பட்ட நூலில் அடிக்கடி கோகர்ணம்(திருமலை)சவாலுக்குரிய பகுதியாகவே குறிப்பிடப்பட்டுள்ளது என்பது அவர்களின் செல்வாக்கு குறைவான இடம் என்பதை மட்டும் காட்டுகிறது .அப்படியானால் அந்த 32 அரசர்களில் யாரோ ஒருவனால் இப்பகுதி ஆளப்பட்டு இருக்கிறது என்பது சந்தேகமில்லாமல் புலப்படுகிறது.

இவ்வாறு சவாலுக்குரிய பிரதேசமாக இருந்த கோகர்ணம் வழிபாட்டு ரீதியாகவும் பிரச்னைகள் ஏற்படுகின்றன.
கி. மு 300 ஆண்டு காலப்பகுதியில்தான் இலங்கையில் சைவ மற்றும் பிராமணர்களின் செல்வாக்கு அதிகரிக்க தொடங்கிய காலம் எனலாம்.இதற்கு முக்கிய காரணம் வியாபார தொடர்புகள்தான்.இதே மாதிரித்தான் சமணமும் தேவாதார மற்றும் மகாயான பௌத்தங்கள் நிறுவன ரீதியாக இலங்கை தீவில் காலடி எடுத்து வைக்கின்றன.
. கி மு 3 நூற்றாண்டு காலப்பகுதியில் மகாயான பௌத்தத்துக்கு மாறிய மகாசேனன் கோகர்ணம்(திருகோணமலை) ,எரகாவில்லை(ஏறாவூர்),மற்றும் இலங்கை தீவின் கிழக்கு பகுதியில் இருந்த பிராமணன் கலந்தனின் ஊர் ஆகிய வற்றில் இருந்த லிங்க கோவில்கள் அழிக்கப்பட்டதாக மாகவம்சம் கூறுகிறது. மகாசெனனால் அழிக்கப்பட்ட மூன்று லிங்க வழிபாட்டு தலங்களும் இருந்த இடங்கள் திருகோணமலையை அண்டிய பிரதேசங்கள்தான் இருந்திருக்கின்றன.
இதில் முக்கியமான விடயம்  என்னவேனில் பலமான தென்னிந்திய தொடர்பை திருகோணமலை கொண்டிருந்திருக்கிறது . என் என்றால் இலங்கையில் லிங்க வழிபாடு என்பது ஆதார ரீதியாக இலங்கை ஆதிக்குடிகளிடம் இருக்க வில்லை.கந்த, வேல் ஆகிய பெயர்களால் அழைக்கப்பட்ட முருக வழிபாடுதான் இவர்களிடம் இருந்தது.அப்படி காணப்பட்ட திருகோணமலையில் வணிகர்களில் வருகை மூலமே லிங்க வழிபாடு அறிமுகப்படுத்த பட்டிருக்க வேண்டும்.
இவ்வாறு திருகோணமலையில் லிங்க வழிபாடு ,மற்றும் மகாயான புத்த மதங்கள் போட்டி போட்டு கொள்ள முருக வழிபாடு அழியாமல் தனித்துவமான வழிபாட்டு முறையாக கி பி எழாம் நூற்றாண்டு வரை சிறப்பாக இருந்ததை சூளவம்சம் சில புனைவுகளுடன் எடுத்துரைக்கிறது.
கி பி எழாம் நூற்றாண்டு காலப்பகுதியில் மானவர்வன் என்ற இளவரசன் கந்தக்கடவுளை நினைத்து வேள்வி செய்ததாகவும் அப்போது கந்த கடவுள் மயில் பறவையில் வந்து காட்சி தந்ததாகவும் பாளி இலக்கியமான சூளவம்சம் கூறுப்பிடுகிறது.



Friday, December 14, 2012

மொழி ரீதியாக ஈழம் உட்பட குமரிக்கண்ட நாடுகளின் தொடர்பு


தமிழ் வரலாற்று ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வு துனைகளாக பழைய சாசனங்கள், கல்வெட்டுக்கள் ,இலக்கியங்கள் போன்றவற்றைதான்  எடுத்து கொள்கிறார்களே தவிர அறிவியல் அம்சங்கள் மூலமாகவும் ஆராயலாம் என்பதை மறந்து விடுகின்றனர்.

உலகில் உள்ள அனைத்து உரினங்களும்  தனக்கு தெரிந்தும் தெரியாமலும் தன் முன்னோர்களின் தடையங்களை சுமந்து கொண்டுதான் இருக்கிறன.அப்படித்தான் மனித இனமும் காலம் காலமாக தங்களது இரத்த உறவுகளின் மரபணுக்களை சுமந்து கொண்டு இருக்கிறது.
உங்களுக்கு குமரிக்கும் மரபணுக்களுக்கும் என்ன சம்பந்தம் என நினைக்க தோன்றும். ..சம்பந்தம் இருக்கிறது ..அதுதான் "M130" எனப்படும் மரபணு  இந்த வகை மரபணுவானது சுமார் 60,000ஆண்டில் இல் இருந்து 70,000 ஆண்டுகள் பழமையானது (குமரிக்கால மரபணு). நாங்கள்தான்   இந்த மரபணுக்கு சொந்த காரர்கள்.இந்த பூரண மரபணு கொண்ட மனிதர்கள் குமரியின் பாகமாக இருந்த மடகஸ்கார் இந்தியா அவுஸ்திரேலியா(பழம்குடிகள்)ஆகிய பகுதியில் வாழ்த்து வருவது  இதுவரை செய்யபட்ட ஆராட்சிகளில் இருந்து தெரிய வருகிறது. (ஆதாரம் -"Michael Wood " என்ற பிரபல பிருத்தானிய  மரபணு ஆய்வாளர் BBC தொலைக்காட்சியில் இந்த தகவலை வெளியிட்டார்.)
இலங்கையில் "M130மரபணு  தொடர்பாக எந்த ஆராட்சியும் இது வரை தொடங்கவில்லை.ஆனாலும் புவியியல் ரீதியாக நாம் குமரியின் நடுப்பகுதியில் இருந்த படியால் நிச்சயம் அதன்  தாக்கம் நமக்கும் இருக்கும்.
உங்களுக்கு கேள்வி எழலாம்.அவுஸ்திரேலிய பழங்குடியினரும்குமரி வாசிகளா ,அவர்கள் தமிழையா(திராவிட மொழியையா) பேசினார்கள் என்று ? என்று. சந்தேகமே இல்லை அவர்கள் குமரி வாசிகள்தான் அவர்கள் பேசியது தமிழ் தான்.இன்னும் வரை சில தூய தமிழ் சொற்களை கூட பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
 எ. விருமாண்டி
முதலில் நாம் தமிழ் நாட்டில் இருந்து தொடங்குவோம்."M130" எனப்படும் மரபணு வின் பூரணத்தன்மை கொண்ட நபர்களை காமராசர் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ராமநாதன் பிச்சப்பன் என்பவர் தமிழ் நாட்டில்  உசிலம்பட்டி பகுதியில் கண்டு பிடித்தார்.இதில்  எ. விருமாண்டி என்ற நபர் உட்பட 13 நபர்கள் M130 மரபணுவைக் கொண்டுள்ளதை கண்டு பிடித்தார்.. இதே மரபணுக்களை கொண்ட நபர்கள் மடகஸ்கார் நாட்டில் அதிகமாக காணப்படுகின்றனர்.
அவுஸ்ரேலியாவின் வடமேற்குப் பகுதியில் தற்போதும் வாழும் கரிறியா போன்ற ஆதிக்குடிகள்M130 மரபணுவைக் கொண்டு காணப்படுவது , குமரிக்கண்ட வாசிகளின் வழித்தோன்றல் என்பதையும்  அவர்களது மொழி , உருவத் தோற்றப்பாடு என்பன தமிழர்கள் என்பதையும் நிருபிக்கின்றன.
அவுஸ்ரேலிய பழம்குடியினரின் தோற்ற அமைப்பு தமிழரின் தோற்ற அமைப்புடன் முழுமையாக ஒத்து போகிறது.அதை விட அவர்களது மொழியிலும் தமிழ் (திராவிட )மொழியின் சாயலும் இலக்கண, ஒலியியல்  ஒற்றுமைகள் உள்ளது.

மேலும் அங்குள்ள சில ஆதிக்குடிகளின் சில இனக்குழுமங்களின் பெயர்கள் வியப்புத்தருவதாகவும் மேலும் ஆராயப்பட வேண்டியதாகவும் இருக்கிறது . அவையில் ஒரு குழுவின் பெயர்தான் குவேனி . இது இலங்கையின் இயக்கர் இனப்பெண்ணான (திராவிட பெண் )குவேனியின் பெயரை ஒத்திருக்கின்றது. இவரையே இந்தியாவின் கலிங்கத்திலிருந்து துரத்தப்பட்ட கலிங்கத்து இளவரசனான விஜயன்மணம் முடித்தார் என மகாவம்சம் கூறுகின்றது. மேலும் அவுஸ்திரேலிய ஆதிக் குடிகளின் சில குழுக்களின் பெயர்கள் நகர, நன, நந்தா, நங்கா, நகரியா, நகுரி, நகண்டி, நகம்பா என்று காணப்படுகின்றன. இலங்கையில் கூட நாகர் என்ற பண்டைய தமிழ் இனமும் காணப்படுகிறது .நாக என்ற சொல் இந்தியாவிலும் இலங்கையிலும் நிறைய சந்தர்பங்களில்  பாவிக்கப்படுவது நாம் அனைவரும் அறிந்தது.
இங்குதான் மொழியியல் அடிப்படையில் குமரிக்கண்ட நாடுகள் தொடர்பு படுவது நமக்கு புரிகிறது.

பெரும் கற்காலத்தில் என்ன செய்து கொண்டு இருந்தது திருகோணமலை


சென்ற வாரம் மலைமுரசு செய்தித்தாளுக்காக தேடியவை 
இதுவரை திருகோணமலையின்  வரலாறு   ஆய்வாளர்களால் ஆராயப்பட்டு பல நூல்களாக வந்து விட்டன.ஆனால் அவற்றில் வரலாற்றுக் காலம் தான் முக்கியத்துவப் படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் நாகரிக வளர்ச்சியை.வரலாற்றுக்கு முந்திய காலம்,வரலாறு உருவாக்கக் காலம், வரலாற்றுக்காலம் என்று மூன்று வகையாக பிரிக்கலாம்.
ஈழத்து நாகரிக வளர்ச்சியில் இந்த மூன்று காலங்களிலும் திருகோணமலையின் பங்கு முக்கியமானது என்பது இதுவரை கிடைத்த ஆதாரங்களில் இருந்தது புலப்படுகிறது.

இதில் வரலாற்றுக்கு முந்திய காலத்தில் திருமலையின் பங்கு என்ன?
 மக்கள் எழுத்து பாவனையை தொடங்காத காலம் வரலாற்றுக்கு முந்திய காலம் எனப்படுகிறது. எல்லா இனக்குழுக்களின் வரலாறுகளை ஆராயும் போதும் இந்த காலப்பகுதி மிகவும் சவாலுக்கு உரியதாக காணப்படுகிறது. இக்காலப்பகுதில் மக்கள் இருப்பு தொடர்பாக ஆதாரங்களை தேடும் போது பின் வந்த பெரும்கற்காலம் தொடர்பான குறிப்புக்களும்,அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் ,உபகரணங்களின் எச்சங்களும் மட்டுமே  ஆதாரங்களாக கொள்ள முடியும்.
பெரும்கற்கால(கி.மு500 முன்னர்) திருகோணமலை பாரிய சனத்தொகையோ ,கட்டமைக்கபட்ட ஆட்சி முறையையோ கொண்டிருந்திருக்காத,சில மனித குழுக்கள் தங்களது அடிப்படை தேவைகளை நிறைவு செய்து கொண்டு வாழ்திருக்கிறார்கள்.

கதிரவெளி (தற்போது மட்டக்களப்புமாவட்டம்),திரியாய்,தென்னமரவாடி,கிழக்கு மூதூரில் அமைத்துள்ள “ராஜவந்தான்” மலை தொடக்கம் “படைகுமித்த கல்”வரை உள்ள குன்றுகள்   ஆகிய வற்றில் காணப்படும் ஆதாரங்கள் அம்மக்கள் இருப்பை உறுதி செய்கின்றன.

தற்போது திருகோணமலை மாவட்டமாக அடையாளப்படுத்த பட்ட பகுதி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் கிடைக்கும் கருப்பு சிவப்பு நிற பெரும்கற்கால மட்பாண்டங்கள் ,தாழிகள் மக்களின் இருப்புக்கள் இருந்தது என்பதை உறுதி செய்கின்றன.
கண்ணால் காணக்கூடிய ஆதாரங்கள் இப்படி சொல்ல திருமலை பகுதியில் செல்வாக்கை கொண்டிருந்த இம்மக்களை ஆரிய இலக்கியமான ராமாயணம்  உயர் தொழில் நுட்பம் கொண்டவர்களாகவும் ,கட்டுக்கோப்பான ஆட்சி முறையை கொண்டவர்களாகவும் இனம் காட்டுகிறது.அதாவது இந்த மனிதர்களின் தலைவனிடம்(ராவணனிடம்) விமானம் இருந்ததாக கூட அப்புராணம் கூறுகிறது .
இன்னுமொரு ஆரிய புராணமான மாகவம்சம் இம்மனிதர்களை யட்சினிகள் என்ற பெயர் கொண்டு அழைக்கிறது.அதுமட்டும் அல்லாது எதோ ஒரு சக்தியை கொண்ட ஒரு கூட்டமாக அடையாளப்படுத்துகிறது.அதற்க்கு பின் வந்த வரலாற்று ஆசிரியர்கள் அவர்களை  இயக்கர் ,நாகர் என்ற இனமாக அடையாளப்படுத்தினர்.
கி.மு 500 ஆண்டுக்கு பிறகுதான் ஆரியர்கள் இங்கு வந்தார்கள் என்றால்
அதற்க்கு முன் இங்கு வாழ்ந்த மக்கள் யார் ? வரலாற்று ஆசிரியர்கள் இவர்களை அடையாளபடுத்துவதே  இயக்கர் நாகர் என்ற தமிழ் பெயர்களை கொண்டுதான். .அதை விட இங்கு கிடைத்த அடிப்படை தொழில்நுட்பங்களை கொண்ட மட்பாண்டங்கள் மற்றும் பிற உபகரணங்கள் வடிவமைப்பும் காலபகுதியும்  தமிழ் நாட்டில் கிடைத்த பொருட்களுடன் ஒத்து போகின்றன. அப்படியானால் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் பெரும்கற்காலத்தில்  இங்கு வாழ்த்து எந்த இனம் என்று !!!

1917ஆண்டு கந்தரோடையில் ஆய்வு செய்த சேர் போல் பிரிஸ் அவர்கள் 1919 ஆண்டு டெயிலி நியூஸ் என்ற ஆங்கில பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
“இதுவரை கனவிலும் எண்ணிப் பாராத நமது நாகரிகத்தின் கவரத்தக்க வளர்ச்சிக்கட்டம் பற்றிய சான்றுகள் உண்மையாகவே மண்ணுக்குள் புதைந்து இருப்பதை தமிழ் மக்கள் ஒருகாலத்தில் உணர்வார்கள் என்று நம்புகிறேன்...”

Saturday, December 8, 2012

குமரி வரலாற்றில் ஈழத்தின் பங்கு என்ன-கடல் தின்ற நம் நிலம்-பாகம் மூன்று


.அழிந்த குமரிக்கும் ஈழத்திற்க்கும் என்ன சம்பந்தம்

இக்கேள்விக்கு பதில் குமரி இருந்ததாக கூறப்படும் இடத்தின் வரைபடத்தை பார்த்தாலே புரிந்து விடும்.மடகஸ்கார் அவுஸ்ரேலியா இந்தியாவை இணைத்த குமரியில் நடுப்பகுதிதான் இலங்கை.
இவற்றை புவியியல் ரீதியாக நிருபித்து விட்டாலும்...சுவாரசியாமான இன்னுமொரு ஆதாரமும் உண்டு.
சித்தர்கள் என்ற சொல் என்றும் தமிழர் வரலாற்றுடன் தொடர்புடையது. சித்தர்கள் என்பவர்கள் பல்துறை உயர் அறிவு கொண்டவர்களாக காணப்பட்டவர்கள் இன்றைய அறிவியலை விஞ்சும் சக்தி அவர்களிடம் இருந்ததாக சித்தர்கள் பற்றிய ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
நம் குமரிக்கண்டத்தில் இது வரை நான்கு சிறப்பு வாய்ந்த சித்தர்கள் இருந்திருக்கிறார்கள்
•             காகபுசுண்டர்
•             அகத்தியர்
•             போகர்
•             மகாவதார பாபா
நான் ஏன் சித்தர்களை பற்றி கூறினேன் என்றால் இந்த சித்தர்களின் ஒருவர்தான் குமரிக்கும் ஈழத்திற்கு பிணைப்பை உறுதி செய்கிறார்.
வாசித்த உடனே சில பேர் புரிந்திருப்பீர்கள் அது அகத்தியர்தான் என்று ..
அகத்தியரை குறு முனியாக அறிமுகப்படுத்தும் சமய புராணங்கள்,அகத்தியரது குறிப்புகளையையும் தகவல்களையும் மிகைபடுத்தல்களுடனும் புனைவுகளுடனும் தராமல் இல்லை.அது மட்டும் அல்லாது புராணங்கள் தவிர்ந்த சில இந்திய சித்தர்கள் பற்றிய குறிப்புக்களின் ஆணி வேர்கள் அகத்தியரில்தான் முடிகின்றன.
அகத்தியர் என்ற குமரிக்கண்ட  காலத்து மனிதர் சகலகலாவல்லவன் என்பதால் அவர் எந்த துறை சார்த்தவர் என்பதை வரையறுத்து கூறமுடியவில்லை.அவர் எழுதிய நூல்களை பற்றி எழுதப்போனால் குமரி க்கண்டம் பற்றிய தொடர் அகத்தியர் பற்றியதொடராக மாறிப்போகும்.
ஆதலால் வாருங்கள் நாம் நம் குமரிக்கே செல்வோம். அகத்தியர்தான் ஈழத்துக்கும் குமரிக்கும் இருக்கும் தொடர்புக்கு ஆதாரம் என்று சொன்னேன் அல்லவா?சில வேளை உங்களுக்கே தெரிந்திருக்கும் ஈழத்துக்கும் அகத்தியருக்கும் நெருங்கிய தொடர்புகள் இருக்கின்றன என்பது.
அகத்தியரின் ஈழத்து வருகை பற்றி கூறும் திருக்கரசை புராணம் மிகத்தெளிவாக அகத்தியர் ஈழ வருகை பற்றி கூறுகிறது.சில வேளை சிலர் திருகரசை புராணம் என்பதுபுராணம்தானே .அவைகள்  புனைவுகளும் கற்பனைகளும்தானே என்று கூறலாம். உண்மைதான் புராணங்களில் புனைவுகள் அதிகம்தான்.உறவுகளே ! கடந்த கால சம்பவங்கள் வரலாறுகள் ஆகின்றன.. காலம் செல்லச்செல்ல வரலாறுகள் இதிகாசங்களாகவும் புராணங்களாகவும் மாறுகின்றன .
இன்றுவரை திருகோணமலைப் பட்டினத்தில் இருந்து 23 மைல் தொலைவில் உள்ள மூதூர் பகுதியில் அமைந்துள்ள கங்குவேலியில்  (திருக்கரைசையம்பதி) கிராமத்தில் ஆதி சிவன் கோவில் காணப்படுகின்றது. அங்கிருந்து ஆறு கிலோமீற்றர் தொலைவில் அகத்தியர் ஸ்தாபனமானது மகாவலி கங்கைக் கரையில் வனப்பகுதியில்அமைந்துள்ளது
இங்கு அமைந்துள்ள கற்தூண்களும், அகத்தியர் ஆலயமும், சிவலிங்கமும், வரலாற்று சான்றுகள் பதிவு செய்கின்றன.(அகத்தியர் ஸ்தாபனத்தின் வரலாறு சோழர் காலம் வரை நீள்கிறது)
திருமலையை சென்றடைந்த அகத்தியர், அங்குள்ள கங்குவேலிப் பகுதியில் சிவலிங்கம் அமைத்து, தனது தவவலிமையால் கைலை மலையை வழமைக்கு கொண்டு வந்ததோடு, அங்கிருந்தவாறே சிவன் பார்வதி திருமணத்தை தரிசித்ததாகவும் புனைவு கதைகள்  உள்ளன.
இதன் பின்னர் திருமலையில் வாழ்ந்த அகத்திய முனிவர், தற்பொழுது மாவிலாறு என்று அழைக்கப்படும் அகத்தியனாற்றில் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தியதாகவும் ஐதீகங்கள் கூறுகின்றன.
இது போல இந்திய பெரும் கண்டத்திலும் அகத்தியரை பற்றி பல பல  தடயங்கள் உள்ளன.
இவை அனைத்தையும் இணைத்தால் குமரி என்ற புள்ளியில் முடிகின்றன.ஆகவே மிகக்சாதரணமாக புரிகிறது குமரி காலத்திலும் நம் இருப்பு ஈழத்தில் இருந்திருக்கிறது.

Friday, December 7, 2012

கடல் தின்ற நம் நிலம்- 2,குமரி அழிவு பற்றி கூறும் நம் தமிழ் இலக்கியங்கள்


குமரி அழிவு பற்றி கூறும் நம் தமிழ் இலக்கியங்கள்


தேடல்கள் எப்போதும் நம் இலக்குகளை அடைய செய்து விடும்.இது எல்லைக்கல் பகுதிக்கு நூற்றுக்கு இருநூறு வீதம் சரியாகி போய்விட்டது.தமிழர் வரலாற்றில் பல ஓட்டைகள் இருந்தாலும் அந்த ஓட்டைகள் அடைக்கபடாமைக்கு தேடல் இன்மையும் வரலாற்று ஆசிரியர்களில் ஒற்றுமையாக,நம்பத்தகுந்த ,பல்துறைகளிலும் வரலாற்றை நோக்காதது ஒரு காரணமாக இருக்கலாம்.
அவற்றை உடைக்கவே எல்லைக்கல் எல்லாத்துறை ஆதாரங்களுடன் நம் வரலாற்றை தேட ஆரம்பித்தது .சென்ற வாரம் குமரி எப்படி அழிந்திருக்கலாம் என்று அறிவியல் ரீதியாக பார்த்தோம்.உலகில் சில விடயங்கள் புதிராக இருந்தாலும் எங்கோ ஒரு இடத்தில் அதற்க்கான விடை இருக்கும்.என்னதான் நம் குமரி எனும் வரலாற்று புதையல் பற்றி நாம் அறிவியல் ஊகங்களை வெளியிட்டாலும் , எழுத்து மூலமான குறிப்புகள் எப்போதும் நம்ப தகுந்தவை.
குமரிக்கும் அப்படியான அழிவு குறிப்புக்கள் நம்முடைய முன்னோர்கள் பதிவு செய்து விட்டனர்.குமரி அழிவுக்கு பின் தப்பி பிழைத்த மற்றும் அதன் பின் வந்த மக்கள் தங்களது இலக்கியங்களில் பதிவு செய்துள்ளனர்.
இந்த இலக்கிய பதிவு தொடர்பாக ஆராய்ந்த மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர், பேரா.கா.சுப்பிரமணியப்பிள்ளை ஆகியோர் நமது பண்டைய பின்வருவன வற்றை கண்டு பிடித்தனர்.

 சிலப்பதிகாரத்தில் "பஃறுளியாறும்", "பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும்" "கொடுங்கடல் கொண்டது" பற்றிக் கூறுகின்றது.
    அடியில் தன்னள வரசர்க் குணர்த்தி
    வடிவே லெறிந்த வான்பகை பொறாது
    பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
    குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
    வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
    தென்றிசை யாண்ட தென்னவன் வாழி (சிலப். 11:17-22)
   புறநானுற்றில்  பாண்டியனை வாழ்த்தும் பொழுது
    "செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த
    முந்நீர் விழவின் நெடியோன்
    நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே" (புறம் 9)எனவும்.
வேறு ஒரு இடத்தில்
தெனாஅ துருகெழு குமரியின் தெற்கும்"
 "குமரியம் பெருங்துறை யயிரை மாந்தி" (புறம் 6:67)

இரண்டாம் சங்கம் இருந்த காலத்தில் கபாடபுரம் என்ற தலைநகரம் அழிந்த பின்னரும் குமரி ஆறு இருந்ததென்பதை தொல்காப்பிய சிறப்பு வரி,
"வட வேங்கடந் தென்குமரி"எனவும்.
 கலித்தொகையில்
 "மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின்
மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)எனவும் குறிப்பிடுபவை

 குமரிக்கண்டத்தை கடல்கொண்டதை குறிக்கிறது என்றும் தமிழ் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்

இவ்வாறு குமரி அழிவு பற்றி கூறப்பட்ட இலக்கியங்களின் உண்மைதன்மைகள் கேள்விக்குரியவைதான் .(எல்லா இலக்கியங்களும் அப்படித்தான் இன்றுவரை ) ஆனாலும் இலக்கியங்கள் மக்கள் வாழ்வியலையும் மனத்தாக்கங்களை அடிப்படையாக கொண்டு எழுபவைதான்.குமரி அழிவு என்பது நிச்சயம் அம் மக்களை பாதித்து இருக்கும். அதன் வெளிப்பாடுகளாகத்தான் இவை இருக்கும்.