Showing posts with label திருகோணமலை. Show all posts
Showing posts with label திருகோணமலை. Show all posts

Friday, September 26, 2014

இந்தியன் ஆமியும் ஈரப்பாவாடையும்!!!!

இண்டைக்கு சூட்டு இறைச்சி கறி நல்லத்தான் இருக்கு.. இதுக்காகவே கொஞ்ச நாள் இங்க இருந்திடலாம் போல இருக்கு, ஆனா என்ன இந்த இந்தியண்ட பம்பருக்கும் கேலிக்குந்தான் பயாமா இருக்கு, எங்க கிடந்து வாரானுகள் எண்டு தெரியல்ல, கொஞ்ச நாள் ரோட்டி மாதிரி எதோ சாப்பாடு போட்டானுகள் இப்ப பறல் போடுரானுகள்,.......
வந்து அஞ்சு நாள் ஆகிட்டு ஊர விட்டு போயட்டனுவளோ தெரியாது, இன்னும் போகல்ல எண்டுதான் நினைக்கிறன் ...போனானுகள் எண்டா வம்பர் சுத்தாது, நேற்று கணேசபுரத்தில பொடியனுகள் எண்டு நினைச்சு ஆக்கள் இருந்த பக்கம் ரண்டு மூண்டு பரள தட்டி விட்டுருக்கானுகள் . இவனுகளும் சும்மா இருந்தாத்தானே சும்மா சுரண்டுறது பிறகு எங்கையாவது ஓடி ஒளிக்கிறது. சனம்தான் சும்மா கிடந்தது கஷ்டப்படுறது. ஊர விட்டு தொழில விட்டு இங்க கிடந்தது பயந்து வாழ வேண்டி கிடக்கு.
பொறுங்க கொஞ்சம் .... இந்த கோதாரி வேற ....இந்தா வாறாளுகள்..இவளுகள பார்த்தாலே ஒரு மாதிரி இருக்கு... நான் சொன்னன் தானே எதோ சொல்லி சிரிச்சிட்டு போறாளுகள், ஏதோ காணாதத கண்ட மாதிரி...
என்ன நடந்த எண்டா .. நேற்று எண்ட மனிசி சொன்னால் வந்து நாலு நாள் ஆகிடப்பா குளிச்சா நல்லம் எண்டு. நான் என்ன செய்ற.... இந்த காட்டுல கிணறா தோண்டுற. வண்டில்ல தானே வந்த... பக்கத்தில இருக்கிற வேப்பம் குளத்தில போய் குளிச்சுட்டு வருவம் எண்டு மாடுகள பிடிச்சு வண்டில பூட்டுறன், அந்த நேரம் பார்த்து இந்த கோதாரி புடிப்பளுகளும் வந்தாளுகள் எண்ட மனிசிய பார்த்து எங்கடி போக போறா எண்டு கேக்க இவளும் குளிக்க வேப்பம் குளத்துக்கு போறம் எண்டால்.. பிறகு என்ன அவளுகளும் வெளிக்கிட்டுதாளுகள்.. 

எல்லாத்தையும் ஏத்திட்டு ராசா மாதிரி ஆசான பலகையில இருந்து வேப்பம் குளதடியில விட்டுத்து பொண்டுகள் எல்லாம் முதல் குளிக்க சொன்னன்.. மாட்ட வண்டில்ல இருந்து அவுக்கமா.. அப்படியே நிப்பட்டித்து இவளுகள் குளிச்ச உடனே நானும் துண்ட கட்டித்து குளிச்சு கொண்டு இருந்தன் அப்பத்தான் அந்த கோதாரி பிடிப்பான் மணியம் கத்திக்கொண்டு வந்தான் யார் எண்டு கேக்குறிங்களா? அவன்தான் கசிப்பு காச்சின எண்டு பொடியனுகள் யாவரியார் சந்தில மொட்ட அடிச்சு போட்டு விட்டானுகளே அவனேதான் .. அவனுக்கு வாசியா போச்சி முடி வெட்டுற காசு மிச்சம்... சரி சரி விசயத்துக்கு வாறன். இந்தியன் ஆமிக்காரன் இங்கால பக்கம்தான் ரோந்து வாராணம் எல்லாரும் ஓடுறாங்க!! நீங்க என்ன குளிச்சுக் கொண்டு நிக்கிறிங்க.. எண்டு அவன் சொல்லி வாய எடுக்கல்ல.. எண்ட இவளும் அவள்ள கூட்டாளி போட்டையளும் வண்டில்ல எறிட்டாளுகள்.. நானும் ஒரு மாதிரி பாஞ்சி ஆசான பலகையில இருக்கிறன் எண்ட மனிசி கேக்கிறாள் என்னப்பா இப்படி வந்திருகிங்க எண்டு.. எனக்கு விசர்த்தனமா கோவம் வந்திட்டு... நீங்களே சொல்லுங்க ஆமிக்காரன் வாரானாம் அந்த நேரத்தில சேட்ட போட்டு கொண்டா நிக்கிற.நல்லா நாலு கிழி குடுத்தன்.அப்பத்தான் அவள் கையில இருந்த ஈரப் பாவாடைய எடுத்து இதையாவது இடுப்புல கண்டுங்கப்பா எண்டால்... அப்பத்தான் இடுப்ப பார்த்தன் பயத்தில ஓடி வந்ததில இடுப்புல கட்டி இருந்தது விழுந்த கூட விளங்கல்ல ..
மூலக்கதை - மதுரன்(கட்டைபறிச்சான்),

Friday, August 30, 2013

நாய்களின் கல்லறைகள் ...கோணேசர் கோவில் கோட்டைக்குள்



திருகோணமலை மனித புதை நிலமாக இருந்த காலங்களும் உண்டு ஆனால் இங்கு நாய்களுக்கு என்று தனியாக புதை நிலம்  இருப்பது எத்தனை பேருக்கு தெரியும்?.
கொட்டியாரம் பற்றிய தகவல்களை இணையத்தில் தேடிக்கொண்டு இருக்கும் போது ஒரு சுற்றுலா பயணியின் வலைப்பக்கம் கண்ணில் பட்டது.அதில் திருகோணமலையில் இருப்பதாக சில கல்லறைகளின் படங்கள் போடப்பட்டு இருந்தது. சில வேளை இது ஆக்கிரமிப்பாளர்கள் கல்லறைகளா என்று வாசித்து பார்த்தால் அவைகள் யாவும் நாய்கள் கல்லறைகள் தொடர்பானவை.
ஆனால் எல்லா நாய்களும் பிரிடிஷ் நாய்கள்....
இவையாவும் ஆங்கில ஆட்சி காலத்தில் அமைக்கபட்டு இருகின்றன.இது திருமலை கோட்டையின் உள்ளே கோணேசர் கோவிலுக்கு செல்லும் வழிக்கு பக்கத்தில் பற்றை கட்டுக்குள் இன்று ஒளித்துக் கொண்டு இருகின்றது.




Friday, January 4, 2013

திருமலையின் வரலாறு உருவாகிய காலம்



உலக வரலாறுகள் உருவாக்க காலம் என்பது கிட்டத்தட்ட கிறிஸ்துக்கு பின் வந்த காலப் பகுதிகளை ஒட்டித்தான் காணப்படுகின்றன.அப்படித்தான் இலங்கை வரலாறும் கி.மு 500 ஆண்டளவில் விஜயன் வருகையோடு தொடங்குகிறது என்று வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.
ஆனால் மகாவம்சம் விஜயன் வருகைக்கு முன்னரான திருகோணமலையில்  இறுக்கமான ஒரு ஆட்சி முறை இருந்ததை வெளிப்படையாக சொல்லவிட்டாலும் சில இடங்களில் சொல்லாமலும் இல்லை.
அப்படித்தான் விஜயனது வருகைக்குப் பின்னரான சம்பவம் ஒன்றை கூறும் மகாவம்சம் நம் தேடலை அதிகரித்து சென்று விடுகிறது ,
விஜயன் வருகைக்கு பின்னர் விஜயனுக்கு வாரிசு இல்லாமல் போகவே விஜயன் தனது வாரிசுக்காக கலிங்க நாட்டில் இருந்து தனது தம்பி சுமிதனின் மகனான பாண்டு வாசுதேவனை இலங்கை தீவில் உள்ள தனது ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசத்துக்கு அழைக்கிறான்.
அப்படி அழைக்கப்பட்ட பாண்டு வாசு தேவனும் அவனுடைய 32 மந்திரிகளும் துறவிகள் வேடம் பூண்டே திருகோணமலை துறை முகத்தை அடைந்ததாக மகாவம்சம் கூறுகிறது .
இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு நமக்கு ஒரு கேள்வி எழுகிறது.
பாண்டு வாசு தேவனும் அவனது மந்திரிகளும் மாறு வேடத்தில் திருகோணமலைக்கு வர காரணம் என்ன ?
அப்படியானால் விஜயனது கூட்டத்திற்கு எதிரானவர்களின் கட்டமைப்பு  திருகோணமலை பகுதியில் இருந்திருக்க வேண்டும்.அதன் காரணமாகவே இக்குழுவினர் மாறுவேடத்தில் வந்திருக்கின்றனர்.இவ் மகாவம்ச குறிப்பில் இருந்து இன்னும் ஒன்று புலப்படுகிறது.இங்கு வாழ்ந்த மக்கள் துறவிகளை மதிக்கத்தக்கவர்களாக வாழ்த்திருகின்றனர்.ஆகவேதான் பாண்டு வாசுதேவன் குழுவினர் துறவி வேடத்தை தேர்ந்து எடுத்திருகின்றனர்.
ஒழுங்கான ஆட்சி முறையுடன் இம் மக்கள் வாழ்தார்கள் என்று நிருபிக்க மகாவம்சத்தில் இன்னுமொரு குறிப்பு காணப்படுகிறது.துட்டகைமுனு எல்லாளன் போரை பற்றி குறிப்பிடும் மகாவம்சம் எல்லாளனை துட்டகைமுனு வெல்வதற்கு முன்பு 32 தமிழ் ஆரசுகளை வென்றதாக கூறுகிறது.
அதுமட்டும் அல்லாது அக்காலத்தில் மிகப்பிரபலமாக இருந்த கோகர்ண (திருமலை) துறைமுகப்பகுதியை எந்த ஆரிய வம்சத்தில் இருந்து வந்த ஆட்சியாளனும்  ஆண்டதாக குறிப்பிடவில்லை.ஆரிய வம்சத்துக்கு ஆதரவாக எழுதப்பட்ட நூலில் அடிக்கடி கோகர்ணம்(திருமலை)சவாலுக்குரிய பகுதியாகவே குறிப்பிடப்பட்டுள்ளது என்பது அவர்களின் செல்வாக்கு குறைவான இடம் என்பதை மட்டும் காட்டுகிறது .அப்படியானால் அந்த 32 அரசர்களில் யாரோ ஒருவனால் இப்பகுதி ஆளப்பட்டு இருக்கிறது என்பது சந்தேகமில்லாமல் புலப்படுகிறது.

இவ்வாறு சவாலுக்குரிய பிரதேசமாக இருந்த கோகர்ணம் வழிபாட்டு ரீதியாகவும் பிரச்னைகள் ஏற்படுகின்றன.
கி. மு 300 ஆண்டு காலப்பகுதியில்தான் இலங்கையில் சைவ மற்றும் பிராமணர்களின் செல்வாக்கு அதிகரிக்க தொடங்கிய காலம் எனலாம்.இதற்கு முக்கிய காரணம் வியாபார தொடர்புகள்தான்.இதே மாதிரித்தான் சமணமும் தேவாதார மற்றும் மகாயான பௌத்தங்கள் நிறுவன ரீதியாக இலங்கை தீவில் காலடி எடுத்து வைக்கின்றன.
. கி மு 3 நூற்றாண்டு காலப்பகுதியில் மகாயான பௌத்தத்துக்கு மாறிய மகாசேனன் கோகர்ணம்(திருகோணமலை) ,எரகாவில்லை(ஏறாவூர்),மற்றும் இலங்கை தீவின் கிழக்கு பகுதியில் இருந்த பிராமணன் கலந்தனின் ஊர் ஆகிய வற்றில் இருந்த லிங்க கோவில்கள் அழிக்கப்பட்டதாக மாகவம்சம் கூறுகிறது. மகாசெனனால் அழிக்கப்பட்ட மூன்று லிங்க வழிபாட்டு தலங்களும் இருந்த இடங்கள் திருகோணமலையை அண்டிய பிரதேசங்கள்தான் இருந்திருக்கின்றன.
இதில் முக்கியமான விடயம்  என்னவேனில் பலமான தென்னிந்திய தொடர்பை திருகோணமலை கொண்டிருந்திருக்கிறது . என் என்றால் இலங்கையில் லிங்க வழிபாடு என்பது ஆதார ரீதியாக இலங்கை ஆதிக்குடிகளிடம் இருக்க வில்லை.கந்த, வேல் ஆகிய பெயர்களால் அழைக்கப்பட்ட முருக வழிபாடுதான் இவர்களிடம் இருந்தது.அப்படி காணப்பட்ட திருகோணமலையில் வணிகர்களில் வருகை மூலமே லிங்க வழிபாடு அறிமுகப்படுத்த பட்டிருக்க வேண்டும்.
இவ்வாறு திருகோணமலையில் லிங்க வழிபாடு ,மற்றும் மகாயான புத்த மதங்கள் போட்டி போட்டு கொள்ள முருக வழிபாடு அழியாமல் தனித்துவமான வழிபாட்டு முறையாக கி பி எழாம் நூற்றாண்டு வரை சிறப்பாக இருந்ததை சூளவம்சம் சில புனைவுகளுடன் எடுத்துரைக்கிறது.
கி பி எழாம் நூற்றாண்டு காலப்பகுதியில் மானவர்வன் என்ற இளவரசன் கந்தக்கடவுளை நினைத்து வேள்வி செய்ததாகவும் அப்போது கந்த கடவுள் மயில் பறவையில் வந்து காட்சி தந்ததாகவும் பாளி இலக்கியமான சூளவம்சம் கூறுப்பிடுகிறது.



Monday, December 24, 2012

பெரும் கற்கால திருகோணமலை


இதுவரை திருகோணமலையின்  வரலாறு   ஆய்வாளர்களால் ஆராயப்பட்டு பல நூல்களாக வந்து விட்டன.ஆனால் அவற்றில் வரலாற்றுக் காலம் தான் முக்கியத்துவப் படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் நாகரிக வளர்ச்சியை.வரலாற்றுக்கு முந்திய காலம்,வரலாறு உருவாக்கக் காலம், வரலாற்றுக்காலம் என்று மூன்று வகையாக பிரிக்கலாம்.
ஈழத்து நாகரிக வளர்ச்சியில் இந்த மூன்று காலங்களிலும் திருகோணமலையின் பங்கு முக்கியமானது என்பது இதுவரை கிடைத்த ஆதாரங்களில் இருந்தது புலப்படுகிறது.

இதில் வரலாற்றுக்கு முந்திய காலத்தில் திருமலையின் பங்கு என்ன?
 மக்கள் எழுத்து பாவனையை தொடங்காத காலம் வரலாற்றுக்கு முந்திய காலம் எனப்படுகிறது. எல்லா இனக்குழுக்களின் வரலாறுகளை ஆராயும் போதும் இந்த காலப்பகுதி மிகவும் சவாலுக்கு உரியதாக காணப்படுகிறது. இக்காலப்பகுதில் மக்கள் இருப்பு தொடர்பாக ஆதாரங்களை தேடும் போது பின் வந்த பெரும்கற்காலம் தொடர்பான குறிப்புக்களும்,அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் ,உபகரணங்களின் எச்சங்களும் மட்டுமே  ஆதாரங்களாக கொள்ள முடியும்.
பெரும்கற்கால(கி.மு500 முன்னர்) திருகோணமலை பாரிய சனத்தொகையோ ,கட்டமைக்கபட்ட ஆட்சி முறையையோ கொண்டிருந்திருக்காத,சில மனித குழுக்கள் தங்களது அடிப்படை தேவைகளை நிறைவு செய்து கொண்டு வாழ்திருக்கிறார்கள்.

கதிரவெளி (தற்போது மட்டக்களப்புமாவட்டம்),திரியாய்,தென்னமரவாடி,கிழக்கு மூதூரில் அமைத்துள்ள “ராஜவந்தான்” மலை தொடக்கம் “படைகுமித்த கல்”வரை உள்ள குன்றுகள்   ஆகிய வற்றில் காணப்படும் ஆதாரங்கள் அம்மக்கள் இருப்பை உறுதி செய்கின்றன.

தற்போது திருகோணமலை மாவட்டமாக அடையாளப்படுத்த பட்ட பகுதி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் கிடைக்கும் கருப்பு சிவப்பு நிற பெரும்கற்கால மட்பாண்டங்கள் ,தாழிகள் மக்களின் இருப்புக்கள் இருந்தது என்பதை உறுதி செய்கின்றன.
கண்ணால் காணக்கூடிய ஆதாரங்கள் இப்படி சொல்ல திருமலை பகுதியில் செல்வாக்கை கொண்டிருந்த இம்மக்களை ஆரிய இலக்கியமான ராமாயணம்  உயர் தொழில் நுட்பம் கொண்டவர்களாகவும் ,கட்டுக்கோப்பான ஆட்சி முறையை கொண்டவர்களாகவும் இனம் காட்டுகிறது.அதாவது இந்த மனிதர்களின் தலைவனிடம்(ராவணனிடம்) விமானம் இருந்ததாக கூட அப்புராணம் கூறுகிறது .
இன்னுமொரு ஆரிய புராணமான மாகவம்சம் இம்மனிதர்களை யட்சினிகள் என்ற பெயர் கொண்டு அழைக்கிறது.அதுமட்டும் அல்லாது எதோ ஒரு சக்தியை கொண்ட ஒரு கூட்டமாக அடையாளப்படுத்துகிறது.அதற்க்கு பின் வந்த வரலாற்று ஆசிரியர்கள் அவர்களை  இயக்கர் ,நாகர் என்ற இனமாக அடையாளப்படுத்தினர்.
கி.மு 500 ஆண்டுக்கு பிறகுதான் ஆரியர்கள் இங்கு வந்தார்கள் என்றால்
அதற்க்கு முன் இங்கு வாழ்ந்த மக்கள் யார் ? வரலாற்று ஆசிரியர்கள் இவர்களை அடையாளபடுத்துவதே  இயக்கர் நாகர் என்ற தமிழ் பெயர்களை கொண்டுதான். .அதை விட இங்கு கிடைத்த அடிப்படை தொழில்நுட்பங்களை கொண்ட மட்பாண்டங்கள் மற்றும் பிற உபகரணங்கள் வடிவமைப்பும் காலபகுதியும்  தமிழ் நாட்டில் கிடைத்த பொருட்களுடன் ஒத்து போகின்றன. அப்படியானால் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் பெரும்கற்காலத்தில்  இங்கு வாழ்த்து எந்த இனம் என்று !!!

1917ஆண்டு கந்தரோடையில் ஆய்வு செய்த சேர் போல் பிரிஸ் அவர்கள் 1919 ஆண்டு டெயிலி நியூஸ் என்ற ஆங்கில பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
“இதுவரை கனவிலும் எண்ணிப் பாராத நமது நாகரிகத்தின் கவரத்தக்க வளர்ச்சிக்கட்டம் பற்றிய சான்றுகள் உண்மையாகவே மண்ணுக்குள் புதைந்து இருப்பதை தமிழ் மக்கள் ஒருகாலத்தில் உணர்வார்கள் என்று நம்புகிறேன்...”

Friday, December 14, 2012

பெரும் கற்காலத்தில் என்ன செய்து கொண்டு இருந்தது திருகோணமலை


சென்ற வாரம் மலைமுரசு செய்தித்தாளுக்காக தேடியவை 
இதுவரை திருகோணமலையின்  வரலாறு   ஆய்வாளர்களால் ஆராயப்பட்டு பல நூல்களாக வந்து விட்டன.ஆனால் அவற்றில் வரலாற்றுக் காலம் தான் முக்கியத்துவப் படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் நாகரிக வளர்ச்சியை.வரலாற்றுக்கு முந்திய காலம்,வரலாறு உருவாக்கக் காலம், வரலாற்றுக்காலம் என்று மூன்று வகையாக பிரிக்கலாம்.
ஈழத்து நாகரிக வளர்ச்சியில் இந்த மூன்று காலங்களிலும் திருகோணமலையின் பங்கு முக்கியமானது என்பது இதுவரை கிடைத்த ஆதாரங்களில் இருந்தது புலப்படுகிறது.

இதில் வரலாற்றுக்கு முந்திய காலத்தில் திருமலையின் பங்கு என்ன?
 மக்கள் எழுத்து பாவனையை தொடங்காத காலம் வரலாற்றுக்கு முந்திய காலம் எனப்படுகிறது. எல்லா இனக்குழுக்களின் வரலாறுகளை ஆராயும் போதும் இந்த காலப்பகுதி மிகவும் சவாலுக்கு உரியதாக காணப்படுகிறது. இக்காலப்பகுதில் மக்கள் இருப்பு தொடர்பாக ஆதாரங்களை தேடும் போது பின் வந்த பெரும்கற்காலம் தொடர்பான குறிப்புக்களும்,அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் ,உபகரணங்களின் எச்சங்களும் மட்டுமே  ஆதாரங்களாக கொள்ள முடியும்.
பெரும்கற்கால(கி.மு500 முன்னர்) திருகோணமலை பாரிய சனத்தொகையோ ,கட்டமைக்கபட்ட ஆட்சி முறையையோ கொண்டிருந்திருக்காத,சில மனித குழுக்கள் தங்களது அடிப்படை தேவைகளை நிறைவு செய்து கொண்டு வாழ்திருக்கிறார்கள்.

கதிரவெளி (தற்போது மட்டக்களப்புமாவட்டம்),திரியாய்,தென்னமரவாடி,கிழக்கு மூதூரில் அமைத்துள்ள “ராஜவந்தான்” மலை தொடக்கம் “படைகுமித்த கல்”வரை உள்ள குன்றுகள்   ஆகிய வற்றில் காணப்படும் ஆதாரங்கள் அம்மக்கள் இருப்பை உறுதி செய்கின்றன.

தற்போது திருகோணமலை மாவட்டமாக அடையாளப்படுத்த பட்ட பகுதி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் கிடைக்கும் கருப்பு சிவப்பு நிற பெரும்கற்கால மட்பாண்டங்கள் ,தாழிகள் மக்களின் இருப்புக்கள் இருந்தது என்பதை உறுதி செய்கின்றன.
கண்ணால் காணக்கூடிய ஆதாரங்கள் இப்படி சொல்ல திருமலை பகுதியில் செல்வாக்கை கொண்டிருந்த இம்மக்களை ஆரிய இலக்கியமான ராமாயணம்  உயர் தொழில் நுட்பம் கொண்டவர்களாகவும் ,கட்டுக்கோப்பான ஆட்சி முறையை கொண்டவர்களாகவும் இனம் காட்டுகிறது.அதாவது இந்த மனிதர்களின் தலைவனிடம்(ராவணனிடம்) விமானம் இருந்ததாக கூட அப்புராணம் கூறுகிறது .
இன்னுமொரு ஆரிய புராணமான மாகவம்சம் இம்மனிதர்களை யட்சினிகள் என்ற பெயர் கொண்டு அழைக்கிறது.அதுமட்டும் அல்லாது எதோ ஒரு சக்தியை கொண்ட ஒரு கூட்டமாக அடையாளப்படுத்துகிறது.அதற்க்கு பின் வந்த வரலாற்று ஆசிரியர்கள் அவர்களை  இயக்கர் ,நாகர் என்ற இனமாக அடையாளப்படுத்தினர்.
கி.மு 500 ஆண்டுக்கு பிறகுதான் ஆரியர்கள் இங்கு வந்தார்கள் என்றால்
அதற்க்கு முன் இங்கு வாழ்ந்த மக்கள் யார் ? வரலாற்று ஆசிரியர்கள் இவர்களை அடையாளபடுத்துவதே  இயக்கர் நாகர் என்ற தமிழ் பெயர்களை கொண்டுதான். .அதை விட இங்கு கிடைத்த அடிப்படை தொழில்நுட்பங்களை கொண்ட மட்பாண்டங்கள் மற்றும் பிற உபகரணங்கள் வடிவமைப்பும் காலபகுதியும்  தமிழ் நாட்டில் கிடைத்த பொருட்களுடன் ஒத்து போகின்றன. அப்படியானால் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் பெரும்கற்காலத்தில்  இங்கு வாழ்த்து எந்த இனம் என்று !!!

1917ஆண்டு கந்தரோடையில் ஆய்வு செய்த சேர் போல் பிரிஸ் அவர்கள் 1919 ஆண்டு டெயிலி நியூஸ் என்ற ஆங்கில பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
“இதுவரை கனவிலும் எண்ணிப் பாராத நமது நாகரிகத்தின் கவரத்தக்க வளர்ச்சிக்கட்டம் பற்றிய சான்றுகள் உண்மையாகவே மண்ணுக்குள் புதைந்து இருப்பதை தமிழ் மக்கள் ஒருகாலத்தில் உணர்வார்கள் என்று நம்புகிறேன்...”

Saturday, December 8, 2012

குமரி வரலாற்றில் ஈழத்தின் பங்கு என்ன-கடல் தின்ற நம் நிலம்-பாகம் மூன்று


.அழிந்த குமரிக்கும் ஈழத்திற்க்கும் என்ன சம்பந்தம்

இக்கேள்விக்கு பதில் குமரி இருந்ததாக கூறப்படும் இடத்தின் வரைபடத்தை பார்த்தாலே புரிந்து விடும்.மடகஸ்கார் அவுஸ்ரேலியா இந்தியாவை இணைத்த குமரியில் நடுப்பகுதிதான் இலங்கை.
இவற்றை புவியியல் ரீதியாக நிருபித்து விட்டாலும்...சுவாரசியாமான இன்னுமொரு ஆதாரமும் உண்டு.
சித்தர்கள் என்ற சொல் என்றும் தமிழர் வரலாற்றுடன் தொடர்புடையது. சித்தர்கள் என்பவர்கள் பல்துறை உயர் அறிவு கொண்டவர்களாக காணப்பட்டவர்கள் இன்றைய அறிவியலை விஞ்சும் சக்தி அவர்களிடம் இருந்ததாக சித்தர்கள் பற்றிய ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
நம் குமரிக்கண்டத்தில் இது வரை நான்கு சிறப்பு வாய்ந்த சித்தர்கள் இருந்திருக்கிறார்கள்
•             காகபுசுண்டர்
•             அகத்தியர்
•             போகர்
•             மகாவதார பாபா
நான் ஏன் சித்தர்களை பற்றி கூறினேன் என்றால் இந்த சித்தர்களின் ஒருவர்தான் குமரிக்கும் ஈழத்திற்கு பிணைப்பை உறுதி செய்கிறார்.
வாசித்த உடனே சில பேர் புரிந்திருப்பீர்கள் அது அகத்தியர்தான் என்று ..
அகத்தியரை குறு முனியாக அறிமுகப்படுத்தும் சமய புராணங்கள்,அகத்தியரது குறிப்புகளையையும் தகவல்களையும் மிகைபடுத்தல்களுடனும் புனைவுகளுடனும் தராமல் இல்லை.அது மட்டும் அல்லாது புராணங்கள் தவிர்ந்த சில இந்திய சித்தர்கள் பற்றிய குறிப்புக்களின் ஆணி வேர்கள் அகத்தியரில்தான் முடிகின்றன.
அகத்தியர் என்ற குமரிக்கண்ட  காலத்து மனிதர் சகலகலாவல்லவன் என்பதால் அவர் எந்த துறை சார்த்தவர் என்பதை வரையறுத்து கூறமுடியவில்லை.அவர் எழுதிய நூல்களை பற்றி எழுதப்போனால் குமரி க்கண்டம் பற்றிய தொடர் அகத்தியர் பற்றியதொடராக மாறிப்போகும்.
ஆதலால் வாருங்கள் நாம் நம் குமரிக்கே செல்வோம். அகத்தியர்தான் ஈழத்துக்கும் குமரிக்கும் இருக்கும் தொடர்புக்கு ஆதாரம் என்று சொன்னேன் அல்லவா?சில வேளை உங்களுக்கே தெரிந்திருக்கும் ஈழத்துக்கும் அகத்தியருக்கும் நெருங்கிய தொடர்புகள் இருக்கின்றன என்பது.
அகத்தியரின் ஈழத்து வருகை பற்றி கூறும் திருக்கரசை புராணம் மிகத்தெளிவாக அகத்தியர் ஈழ வருகை பற்றி கூறுகிறது.சில வேளை சிலர் திருகரசை புராணம் என்பதுபுராணம்தானே .அவைகள்  புனைவுகளும் கற்பனைகளும்தானே என்று கூறலாம். உண்மைதான் புராணங்களில் புனைவுகள் அதிகம்தான்.உறவுகளே ! கடந்த கால சம்பவங்கள் வரலாறுகள் ஆகின்றன.. காலம் செல்லச்செல்ல வரலாறுகள் இதிகாசங்களாகவும் புராணங்களாகவும் மாறுகின்றன .
இன்றுவரை திருகோணமலைப் பட்டினத்தில் இருந்து 23 மைல் தொலைவில் உள்ள மூதூர் பகுதியில் அமைந்துள்ள கங்குவேலியில்  (திருக்கரைசையம்பதி) கிராமத்தில் ஆதி சிவன் கோவில் காணப்படுகின்றது. அங்கிருந்து ஆறு கிலோமீற்றர் தொலைவில் அகத்தியர் ஸ்தாபனமானது மகாவலி கங்கைக் கரையில் வனப்பகுதியில்அமைந்துள்ளது
இங்கு அமைந்துள்ள கற்தூண்களும், அகத்தியர் ஆலயமும், சிவலிங்கமும், வரலாற்று சான்றுகள் பதிவு செய்கின்றன.(அகத்தியர் ஸ்தாபனத்தின் வரலாறு சோழர் காலம் வரை நீள்கிறது)
திருமலையை சென்றடைந்த அகத்தியர், அங்குள்ள கங்குவேலிப் பகுதியில் சிவலிங்கம் அமைத்து, தனது தவவலிமையால் கைலை மலையை வழமைக்கு கொண்டு வந்ததோடு, அங்கிருந்தவாறே சிவன் பார்வதி திருமணத்தை தரிசித்ததாகவும் புனைவு கதைகள்  உள்ளன.
இதன் பின்னர் திருமலையில் வாழ்ந்த அகத்திய முனிவர், தற்பொழுது மாவிலாறு என்று அழைக்கப்படும் அகத்தியனாற்றில் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தியதாகவும் ஐதீகங்கள் கூறுகின்றன.
இது போல இந்திய பெரும் கண்டத்திலும் அகத்தியரை பற்றி பல பல  தடயங்கள் உள்ளன.
இவை அனைத்தையும் இணைத்தால் குமரி என்ற புள்ளியில் முடிகின்றன.ஆகவே மிகக்சாதரணமாக புரிகிறது குமரி காலத்திலும் நம் இருப்பு ஈழத்தில் இருந்திருக்கிறது.

Thursday, September 13, 2012

மூதூர் குன்றுகள் புதையல் பூமியா? பாகம் -2 தமிழரின் இருப்புக்கான ஆதாரங்கள் மூதூரில் !!!

திருகோணமலை மாவட்டத்தில் கிழக்கு மூதூரில் கட்டைபறிச்சானில் உள்ள கணேசபுரம் கிராமத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள குன்றுதான்  கச்சக்கொடி மலை.

மூதூர் நகருக்கு அருகாமையில் உள்ள “ராஜவந்தான் மலை(மூன்றாம் கட்டை மலை) தொடக்கம் இளக்கந்தை என்ற ஊர் வரை நீளும் “படைகுமித்த கல் குன்று  வரையிலான குன்றுத்தொடர்களில் உயரமான குன்று இதுதான். இங்கு காணப்படும் கல்வெட்டு  இலங்கையில் தமிழரின் பண்டைய  இருப்பையும் அவர்களது வியாபார நடவடிக்கைகளுக்கும் ஆதாரமாக  திகழ்கிறது.
இந்த கல்வெட்டை படி எடுத்த பேராசியர் க. இந்திரபாலா  அவர்கள் இதில்
ப ரு ம க தி ச பு த லெனே
சகச சங்கமய
என்ற எழுத்துக்கள் இருப்பததாக கண்டு பிடித்தார்
கச்சக்கொடி மலை
முதலில் இது எந்த மொழிக்கு உரியவர்களின் எழுத்துக்கள் என்பதை ஆராய முற்படும் போது. இலங்கையில் காணப்படும் பல கல்வெட்டுக்கள் பல வியாபார குறிப்புகள் ஆகவும்,சமயம் சார்ந்த குறிப்புக்களாகவும் காணப்படுகின்றன.இதில் வியாபர குறிப்புக்கள் பிராகிருத மற்றும் தமிழ் பிராமிகளின் கலப்பு கொண்ட கல்வெட்டுக்கள் அதிகமாக காணப்படுகிறது. இதற்க்கு ஒரு காரணமும் உள்ளது. அக்கால இலங்கை இந்திய வியாபார ஆவணப்படுத்தல்களுக்கு பிராகிருதம் என்ற எழுத்து வடிவம் ஒரு பொதுவான வடிவமாக காணப்பட்டது.பிராகிருதம் என்பது தமிழ் பிராமி எழுத்து வடிவத்தில் இருந்து ஆரிய மொழி எழுத்து வடிவத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட எழுத்து வரி வடிவம்(கொச்சை தமிழ் பிராமி) இதை திராவிடர்களும் ஆரியர்களும் விளங்கி கொள்ள கூடியதாக இருந்தபடியால் பிராகிருதம் வியாபார ஆவணப்படுத்தல் மொழியாக பயன்பட்டு வந்திருக்கிறது.இன்னும் விளக்கமாக சொல்லப்போனால் தற்போது ஆங்கிலம் வியாபார குறியீடாக காணப்படுவது போல தமிழ் கலந்த பிராகிருதம் தென்னாசிய வர்த்தகத்தில் காணப்பட்டு இருக்கிறது.
இதற்க்கு ஆதாரங்களாக தென்னாசிய பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் கலந்த பிராகிருத கல்வெட்டுக்களும் தமிழ் நாணயங்களும் சான்று.
தமிழ் வியாபாரிகள் தங்களுடைய வியாபர குறிப்புக்களை கூடுதலான தமிழ் பிராமி எழுத்துக்களுடன் பிராகிதத்துடன் கலந்து ஆவணப்படுத்தி உள்ளனர் அப்படி பிராகித மொழி காணப்பட்டாலும் அது தமிழ் பிராமிக்கு உரிய சாயலில் காணப்படும்..
அவ்வாறான குறிப்புத்தான் இந்த மலையில் உள்ள கல்வெட்டு. இந்த குறிப்புகளில் முற்று முழுதாக தமிழ் மொழியிலேயே தனது விளக்கத்தை வெளிப்படுத்துகிறது. ஆனாலும் இவை தமிழ் கலந்த பிராகிருத மொழியில் எழுதப்பட்டு உள்ளது.
இதில் வரும் “ம என்ற எழுத்து முற்று முழுதாக தமிழ் பிராமிக்கு உரிய எழுத்து இலங்கையில் உள்ள அனேகமாக உள்ள கல்வெட்டுக்களில் இந்த தமிழ் பிராமிக்குரிய “ம காணப்படுகிறது.அது மட்டும் அல்லதாது இதில் காணப்படும் ஆகிய எழுத்துக்கள் தமிழகத்தில் கண்டு பிடிக்கபட்ட கல் வெட்டுகளுடன் தொடர்புடையதாக இருக்கிறது.
இந்த கல்வெட்டில் காணப்படும் சொற்களை ஒவ்வொன்றாக சொற்களை ஆராயும் போது
ப ரு ம க
இது ஒரு நூற்றுக்கு நூறு தமிழுக்குரிய சொல்(திராவிட சொல்) .இது ஒரு இடுகுறிப் பெயர் சொல்(abstract noun)தமிழக மற்றும் இலங்கை யில் காணப்படும் கல்வெட்டுகளில் இந்த பட்டப்பெயர் அதிகமாக காணப்படுகிறது.இந்த சொல் சிங்கள வரலாற்று ஆசிரியர்களால் பாளி மொழிக்குரிய தலைவன் என்ற சொல் என்று கூறப்பட்டாலும் .எந்த பாளி இலக்கியங்களிலும் பருமக என்ற சொல் இடம் பெறவில்லை.
அதே வேளை பருமக என்பது பருமகன் என்ற சொல்லாகும் பிராகிருதம் கலந்த தமிழ் பிராமிக் கல்வெட்டுகளில் “ன் என்ற எழுத்து பயன் படுத்த பாடமையின் காரணமாக பருமகன் பருமக யாக காணப்படுகிறது. இந்த பரு மகன் என்ற சொல் பெருமகன் என்ற சொல்லின் மறு வடிவம் ,பெரு மகன் என்பது தலைவனை குறிக்கும் சொல் அரசனாகவும் வியாபார தலைவனாகவும் இதன் அர்த்தத்தை நாம் எடுத்துக்கொள்ளலாம்.(ஆதாரம் –இலங்கையில் தமிழும் தமிழர்களும்)
திச (திசன்)
இது ஒரு தமிழ் சிறப்புப்பெயர் சொல் (proper noun) .இது ஒரு நபருடைய பெயரை குறிப்பிடுகிறது. திச என்பது ஒரு தமிழ் பெயர் சொல் ஆகும்.இதற்க்கு தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் பல சான்றுகள் உள்ளன. தமிழ் நாட்டில் ,அழகன் குளத்தில் உள்ள ஒரு ஊரில் கிடைத்த பண்டைய மட்பாண்டத்தில் திச என்ற பெயர் காணப்படுகிறது. இலங்கையில் அம்பாறை மாவட்டம் குடிவில் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றில் தீகவாவியில் இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த திச என்ற தமிழர் பெயர் காணப்படுகிறது அது மட்டும் அல்லாது அவர் தமிழர் என்ற ஆதாரத்துக்கான குறிப்புக்களும் காணப்படுகிறது. அனுராத புரத்தில் காணப்படும் கல்வெட்டு ஒன்றில் திச என்ற தமிழ் வியாபாரியும் அவரது கூட்டத்தாரும் ஒன்று கூடி வணிகம் நடத்த ஒரு மண்டபத்தை அமைத்தாக கூறப்பட்டுள்ளது.பருமக என்ற சொல்லில் “ன் விடுபட்டது போல இதிலும் “ன் என்ற எழுத்து விடுபட்டுள்ளது.அப்படியானால் இது திசன் என்ற சொல்லாக காணப்படுகிறது.




புத(பூதன்)
புத(பூதன்) என்ற சொல் பல்வேறு அர்த்தங்களை கொண்டதாக காணப்படுகிறது.
இது ஒரு சிறப்புப்பெயர் சொல்லாக (proper noun) காணப்படுகிறது. அதாவது இது ஒரு நபருடைய பெயர் இப்பெயர்கள் கி.பி இரண்டாம் நூற்றாண்டு காலப்பகுதில் காணப்பட்ட பூத வழிபாட்டின் காரணமாக ஏற்பட்டு இருக்கலாம். அனுராத புரத்தில் புத என்ற சொல்லின் பெண்பால் சொற்கலான பூதி ,சிவ்பூதி,சமணபூதி என்பன கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.அது மட்டும் அல்லாது அங்கு கிடைத்த ஒரு கல் வெட்டில் வெள்பூத(வேல் பூதன்) என்ற ஆண் பால் பெயரும் காணப்படுகிறது.அது மட்டும் அல்லாது தமிழர்களின் இருப்பை வெளிப்படுத்தும் சங்க இலக்கியங்களில் புத என்ற சொல்லுடன் தொடர்புடைய பெயர்கள் காணப்படுகிறது.உதாரணமாக பூதனார்,வெண்பூதன் ,பூதப்பாண்டியன் போன்ற பெயர்களை குறிப்பிடலாம்.அது மட்டும் அல்லாது இப்பெயர் யாழ்ப்பான காலம் வரை புழக்கத்தில் இருந்தது.(ஆதாரம் -சங்க கால இலக்கியங்கள்)
அதுமட்டும் அல்லாது இது பொதுப்பெயராகவும்(common noun),  காணப்படுகிறது.அதாவது புத்திரன் அல்லது புதல்வன் என்ற அர்த்தங்களை கொண்டு காணப்படுகிறது.(ஆதாரம்- பரண விதான நூல்கள்)






லேனே
இந்த சொல் இரண்டு அர்த்தங்களை கொண்டு காணப்படுகிறது .ஒன்று இது ஒரு பொதுப்பெயராக(common noun), இடைச்சொல்லாகவும்,வினைசொல்லாகவும் (verb)காணப்படுகிறது. லேனே என்ற சொல்லை பெயர் சொல்லாக பார்க்கும்மிடத்து  ஒரு இடத்தை குறிப்பதாக இருக்கிறது அதாவது ஒரு நிலையம் ஒன்று கூடும் இடம் ,வேலைக்க்களம்,பள்ளிக்கூடம் போன்ற அர்த்தங்களை வெளிப்படுத்துகிறது.
இதனை வினைச்சொல்லாக பார்க்கும் மிடத்து செய்தான் நிறுவினான்.இருந்தான் என்ற அர்த்தங்களை கொண்டதாக காணப்படுகிறது.
இதனை இடைசொல்லாக பார்க்கும் போது “ஆல் (உதாரணம் அவனால்)என்ற அர்த்தத்தை கொண்டதாக காணப்படுகிறது (உதவி–அரங்கராஜ்,செம்மொழி ஆய்வு மையம், சென்னை)


சகச
இந்த சொல் எல்லோரும் ,எல்லாவற்றுக்கும், என்ற அர்த்தங்களை கொண்டது (உதவி–அரங்கராஜ்,செம்மொழி ஆய்வு மையம், சென்னை)

சங்கமய
இந்த சொல் இரண்டு அர்த்தங்களை கொண்டு காணப்படுகிறது.கூட்டுப்பெயராகவும்,வினைச்சொல்லாகவும் காணப்படுகிறது.இந்த சொல்லை கூட்டுப்பெயராக பார்க்கும் மிடத்து சங்கம் என்ற பொருளை தருகிறது அதாவது மனிதர் கூட்டம்.
வினைச்சொல்லாக பார்க்கும்மிடத்து ,அமைத்தல் என்ற பொருளை தருகிறது (உதவி–அரங்கராஜ்,செம்மொழி ஆய்வு மையம், சென்னை)


இந்த கல்வெட்டில் என்ன கூறப்பட்டுள்ளது? யாருக்குரியது?

ப ரு ம க தி ச பு த லெனே
சகச சங்கமய
பெருமகன் திசன் புத்திரன் ஆல் எல்லாவற்றுக்கும் அமைக்கபட்டது

இரண்டாம் நூற்றாண்டு காலப்பகுதி தமிழகத்திலும் இலங்கையிலும் வியாபாரம் புரட்சி ஏற்றபட்ட காலம்.இலங்கை துறைமுகங்கள் அதனை அண்டிய பகுதிகளும் வணிகர்களின் தங்குமிடங்களாகவும் களஞ்சிய சாலைகளாகவும்,அவர்களுக்குரிய வழிபாட்டு தளங்களாலும் காணப்பட்டு இருக்கிறது.கிழக்கு இலங்கையில் இலங்கைத்துறை முகத்துவாரமும் ஒரு பண்டைய வணிக மையம் ஆகும்.
அது மட்டும் அல்லாது திரியாய் வரை வணிகர்களின் போக்குவரத்தும் செயல்பாடுகளும் அமைத்திருக்கிறது என்பதற்கு திரியாய் கல்வெட்டுக்கள் சான்று பகிர்கின்றன.இலங்கை துறை முகத்துவாரத்தில் இருந்து திரியாய் செல்வதற்கு கொட்டியார பகுதியைத்தான் வியாபாரிகள் கடந்து செல்ல வேண்டும்.அவ்வாறு கடந்து செல்லும் பாதையில்தான் இவ் மலைக்குன்றுகள் காணப்படுகின்றன.இம் மலைகள் அவர்களுக்கு பாதுகாப்பு அரனாகவும் தங்குவதற்கு இசைவான இயற்கை குகைகளும் காணப்படுவதால் அவர்கள் இம்மலையை தங்குமிடமாகவும் சந்திப்பு நிலையங்களாகவும் பயன்படுத்தி இருக்கிறார்கள்.அதுமட்டும் அல்லாது இம்மலையில் செயற்கையாக அமைக்கப்பட்ட உரல்,பாறைகளில் ஏற்படுத்தப்பட்ட குழிகள்,சுடு மண் கற்கள்(பண்டைய கட்டிட எச்சங்கள்)  என்பன மனிதர் தங்கிய இடம் என்பதை உறுதி செய்கின்றன.


எனவே இம்மலை கல்வெட்டுக்கள் இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த தமிழ் வியாபாரிகளின்  தங்குமிடம் அல்லது சந்திக்கும் இடம்  பற்றிய குறிப்புகள் ஆகும்.
இம்மலையை பயன் படுத்திய வியாபார தலைவனால் இங்கு எதோ அமைக்கப்பட்டு இருக்கிறது
எக்காலத்துகுரியது?
.இந்த கல்வெட்டுக்களில் காணப்படும் திசன் ,பூதன் ஆகிய பெயர்கள் இரண்டாம் நூற்றாண்டுக்கு உரியது என்பதை நிருபிக்கும் வகையில் அமைந்துள்ளன ,புத சொல்பெயர் கி.பி இரண்டாம் நூற்றாண்டு காலப்பகுதில் காணப்பட்ட பூத வழிபாட்டின் அடிப்படையாக கொண்டு காணப்படுகிறது.
பூதன் என்ற பெயர் சங்க காலத்துக்குரிய பெயர் ,கி.பி இரண்டாம் நூற்றாண்டு கூட சங்க காலக்காலம் . இலங்கையில் அனுராத புரத்திலும்,அம்பாறையிலும் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாம் நூற்றாண்டுக்குரிய கல்வெட்டுக்கள் திசன் என்ற இரு தமிழர்களை பற்றியதாக உள்ளது.அதுமட்டும் அல்லாது இதை படி எடுத்த இந்திர பாலா அவர்கள் இதை இரண்டாம் நூற்றாண்டுக்கானது என்று உறுதி செய்துள்ளார்.
.
இவ்வாறு திருகோணமலையின் பண்டைய தமிழ் மக்களின் வரலாற்றை பறைசாற்றி நிமிர்ந்து நிற்கிறது இக்குன்று!!