Showing posts with label மொக்கை. Show all posts
Showing posts with label மொக்கை. Show all posts

Tuesday, January 10, 2012

வெட்டி வேல


அது என்ன வெட்டி வேல? ஏதாவது வெட்டுற வேலையா? எல்லா வேலைகளிலும் அதிகமாக வெட்டுதல் என்ற செயல் இருக்கும். தையல்காரர் துணி வெட்டுவார்.விவசாயி மண்ணை வெட்டுவார். முடி திருத்துனர் முடி வெட்டுவார்.கொல்லர் இரும்பை வெட்டுவார்கள்.தட்டார் தங்கத்தை வெட்டுவார்கள்.ஆசிரியர் பிழையான விடைகளை வெட்டுவார்கள்.வைத்தியர் கை கால்களை  வேட்டுவார். எப்படி எல்லோரும் வெட்டி கொண்டுறிருக்க வேல இல்லாத எங்கள ஏன் வெட்டி வேல செய்யிறம் எண்டு சொல்லுறாங்க? அத விடுங்க ஏன் அர்த்தம் இல்லாம இப்படி சொல்றிங்க எண்டு ஜோசிச்சு பார்த்திங்களா? நீங்க நினைக்கிறது எனக்கு விளங்குது “ டேய் இப்படி வெட்டியா இருந்தா இப்படிதாண்டா தொனும்” நீங்க நினைச்சது சரிதானே?
சரி விடுங்க................ வெட்டி வேல எண்டா என்ன?(செம கடுப்பாகிடிங்க  போல)

இது எல்லாம் சரிவராது எண்டுதான் நானும் வெட்டி வேலைய(அர்த்தம்) தேட ஆரம்பிச்சன்! நெட்ல தேடினா! அர்த்தம் புரியல்ல ஆனா வெட்டி வேல அனுபவம் கிடைச்சிது! எல்லோரும் வெட்டித்தனமா எவ்வளவு எழுதினாலும் வெட்டி வேல என்ன எண்டு எழுத்தல்ல!அப்பத்தான் புரிஞ்சிது  இது எல்லாம் வெட்டி வேலை துறையில் முதுமாணி பட்ட பெற்ற என்னை போல உள்ளவர்கள்தான் எழுதவேணும் எண்டு.  ........சரி........  வெட்டி வேலைய பத்தி என்னத்த எழுதிறது? நீங்க கூட ஜோசிச்சு பாருங்க ஒன்டும் தெரியல்லதானே?? ! எக்ஸாம் பேப்பர பார்த்த பீல் இருக்குதில்ல? உங்களுக்கு பதில் தெரியாத ஒன்றை நாங்கள் வெற்றி(ட்டி)கரமாக  நடை முறைபடுத்துகிறோம்!  சரி அத விடுங்க நான்தான் வெட்டியா இப்படி எழுதினா நீங்க இப்படி இருந்து வெட்டியா வாசிப்பிங்களா? போங்கப்பா! போங்க! போய் வேலைய பாருங்க!   முக்கிய குறிப்பு   வெட்டி வேலைக்கு ஒரு வரலாறு உண்டு.ராஜராஜசோழன் தஞ்சை கோயிலை கட்டும் போது பல கிராம மக்களை உணவு மட்டும் கொடுத்து கூலி இல்லாமல் வேலைக்கு அமர்த்தினான்.கிட்டத்தட்ட அடிமைகளாக வேலை வாங்கினான்.(கிட்ட தட்ட ஒரு சின்ன கிட்லர்! இல்ல..... இல்ல....  கிட்லர்தான் பெரிய ராஜராஜசோழன்! வரலாறு தெரிந்தவர்கள் இதற்கு எதிர் கருத்து பேசமாட்டார்கள்!) இந்த வேலையை ( “அப்பறசெண்டிங்க”) செய்பவர்கள் தாங்கள் செய்யும் வேலைக்கு வைத்த பெயர்தான் வெட்டி வேலை! இலங்கை பேச்சு வழக்கில் இந்த சொல் இல்லை ஆனால் சினிமா இந்த சொல்லையும் இலங்கை தமிழில் சேர்த்து விட்டது! தமிழ் சொல்தானே நாமும் அங்கீகரிக்கலாம்! 

கா.செந்தூரன்