Tuesday, March 5, 2019

சோமஸ்கந்தர்

கோணேசர் கோவில் பழைய சிலையில் வரலாற்றில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு விமர்சனம் இருந்தது.. காரணம் தொன்னாடுடைய சிவனை வடநாட்டு சிவன் ஆக்கி வைத்து இருந்தார்கள். பொன்னார் மேனியன்   சிவனுக்கு கழுத்தில மட்டும்தானே நஞ்சு நாம்  உடம்பு முழுவதும்   பரவ விட்டு இருந்தோம்
#இப்போது
#சோமாஸ்கந்த_மூர்த்தி  கி.பி 7 மற்றும் கி.பி 8-ம் நூற்றாண்டு காலத்தில் தமிழகத்தில் சைவம் (சிவம்), சாக்தம் (உமை), கௌமாரம் (முருகன் ) ஆகிய மூன்று வழிபாடுகளையும் ஒருங்கிணைத்துப் பல்லவர் காலத்தில் பிரபலமான வடிவம் இது...

சோமாஸ்கந்தர் வடிவம் பல்லவர் காலத்தில், குறிப்பாக ராசசிம்ம பல்லவன் (நரசிம்மவர்மன் II) காலத்தில் கட்டப்பட்ட கோயில்களில்தாம் புகழ் பெற்றதாக விளங்கத் தொடங்கியது. ராசசிம்மன் கட்டிய அனைத்துக் கோயில்களின் கருவறையிலும் சிவலிங்கத்துப் பின்புறச் சுவரில் சோமாஸ்கந்தர் உருவத்தைச் செதுக்கிய பிறகே சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார்.
பல்லவர்களுக்கு பிறகு சோழர்கள் தொடர்தனர்

கிறிஸ்துவுக்கு பின் 7 நூற்றாண்டுகளில் பல்லவர்களின் ஈழத்து செல்வாக்கு அதுவும் திருகோணமலை செல்வாக்கு அதிகம்  தபசு பல்லக்கன் ஆகிய பல்லவ நாட்டு வியாபாரிகள் திரியாயில் வணக்க தலம் கட்டியதாக இன்னும் திரியாயில் கல்வெட்டு உண்டு.

No comments:

Post a Comment