Tuesday, January 24, 2012

அன்புள்ள கலாமுக்கு ,,,,,,


மதிப்புக்குரிய அப்துல்கலாம் அவர்களுக்கு இலங்கையில் அமைதிப்படையில் பணி புரிந்த இந்தியவீரன் எழுதிக்கொள்வது.ஐயா நீங்கள் இலங்கை சென்ற பொழுது இந்திய வீரர்கள் நினைவு இடத்தில் பெருமையுடன் அஞ்சலி செய்தீர்கள்

நீங்கள்  அஞ்சலி செய்ததை இட்டு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நாங்கள் பிற நாட்டை எப்படி நீங்கள் பெருமைப்படும் அளவுக்கு பாதுகாத்தோம் என்பதை நீங்கள் கேட்டால் நீங்களும் எங்களை நினைத்து இன்னும் பெருமைப்படுவீர்கள். உங்களுக்காக ஒரு மணித்தியாலம் நடந்த சம்பவத்தை கூறுகிறேன்,கேட்டு பெருமைப்படுங்கள்.
1989 ஆண்டு ஒன்பதாம் மாதம் 13திகதி(புதன்கிழமை) அண்ணளவாக 8.30 இருக்கும் மூதூர், கட்டைபறிச்சான் பகுதியில் உள்ள சின்னமட்டக்களப்பு பகுதியில் எங்களுக்கும் புலிகளுக்கும் சண்டை மூளுகிறது. எங்கள் படை வீரன் ஒருவன் அச்சண்டையில் சாவடைந்தான். அந்த ஆத்திரத்தை தீர்க்க பழிக்குப் பழி வாங்க வேண்டிய தேவை இருந்தது.(எத்தனை சினிமா பார்த்திருப்போம்!! நண்பனை கொன்ற வில்லன் கூட்டத்தை பழி வாங்க வேண்டும்) நாங்கள் கட்டைபறிச்சான் கிராமத்தினுள் புகுந்தோம்.முதலில் எங்கள் கண்ணில்பட்டது.விபுலானந்த வித்தியாலயம் என்ற பாடசாலை. அன்று பள்ளிநாள் எங்களுக்கு வசதியாய் போய்விட்டது.எங்கள் இயந்திர துப்பாக்கிகள் சுழன்றன,எல்லோரும் 9ம் ஆண்டுக்கு உட்பட்ட மாணவர்கள்!!!!!!!!!!11பேர் பலி!!!! படுகாயங்கள்!!!!  பாடசாலையில் இரத்தஆறு ஓட வைத்தோம்.அத்துடன் நாங்கள் முடித்து கொள்ளவில்லை. கண்ணில் பட்ட வீடுகளை நோக்கி எங்கள் துப்பாக்கிகள் முழங்கின. சாவுகள் படுகாயங்கள்,இதில் எங்களுடைய திறமை என்ன என்றால் இறந்தது எல்லாம் சிறுவர்களும் வயோதிபர்களும்.
இப்போது புரிகிறதா? நாங்கள் எப்படி பிற நாட்டையும் அம்மக்களையும் எப்படி பாதுகாத்தோம் என்று!!!!!!!இந்த சம்பவம் ஒரு கிராமத்தில் ஒரு மணித்தியாலம் நாங்கள் நடத்திய சாதனை இது . அத்த ஒரு கிராமத்தில் நாங்கள் செய்த சாதனைகள் வீர தீர செயல்கள் ஏராளம் ஒரு கடிதம் போதாது. இன்னமும் எங்களால் கால் கை (வாழ்கையை) இழந்தவர்கள் சாட்சிகளாக இருப்பார்கள்!!!

உங்கள் பெருமைக்குரிய
இந்தியப்படைவீரன்

(1989.09.13 #####அன்று இந்திய படையால் மேற்கொள்ளப்பட்ட படுகொலை சம்பவம் !!!! என்னதான் அதன் பிறகு 18 வருடங்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டாலும் எம் கிராம மக்களுக்கு மறக்க முடியாத நாள். முதல் முதலாக 11 சிறுவர்களை பிணமாக பார்த்தநாள். என் சகோதரி சங்கீதாவை எங்கள் குடும்பம் இழந்தநாள்!!! அவர்கள் செய்த வீரசெயல்களின் சாட்சியாக கட்டைபறிச்சானில் உள்ள  “தில்லம்கேணி” என்ற அழிந்தகிராமம் இன்னும் சாட்சியாக இருக்கிறது)
***கடிதம் கற்பனை சம்பவம் உண்மை

11 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. இதன் காரணம் தான் ரஜீஜிவ் உடல் துண்டு துண்டாக நிலத்தில் சிதறியது

    ReplyDelete
    Replies
    1. அவர்களுக்கு தெரியும்

      Delete
  3. அதை இந்திய அரசு புரிந்து கொள்ளவில்லையே( இன்னும் )

    ReplyDelete
  4. அதை இன்னும் இந்திய அரசு புரிந்து கொள்ளவில்லையே ...

    ReplyDelete
  5. கள்ளக் காங்கிரஸ் தான் இதற்க்கு காரணம்!!!!!!!!!!

    ReplyDelete
  6. மிக வலிமையான பதிவு செந்தூரன். உள்ளிருந்து வரும் உணர்வு. நன்றாக இருக்கிறது என்று கூட சொல்லலாமா என்றும் தெரியவில்லை!

    இன்னும் எழுதுங்கள்.

    ReplyDelete
  7. வலி....வலி...வலி....வலிகள் மட்டுமே தந்தார்கள்! பட்டவனுக்கு மட்டுமே படுவலி தெரியும். இந்திய அரசுக்கு செம்பு தூக்கி அடிகழுவும் அடிவருடிகளுக்கு அது புரிந்தாலும் புரியாது.


    ReplyDelete
  8. வலி...வலி...வலி... வலி மட்டுமே தந்தார்கள். இந்திய அரசின் சொம்பு தூக்கிகளுக்கும், அடிகழுவிகளுக்கும் செந்தூரனின் இப்பதிவு சமர்ப்பணம்.

    ReplyDelete
  9. செந்தூரன் இன்னும் தகவல்களை இணைத்து புத்தகமாக்கவேண்டும்.

    ReplyDelete