Thursday, January 5, 2012

ஏதாவது நாம் கிழிக்க வேணும்

(2012ன் முதல் பதிவு )
நமது சமகால அரசியலை புரிந்து கொள்ளல் கொஞ்சம் கடினம்தான்.தமிழ் அரசியல் தலைகளின் கோரிக்கைகள் ஒரு புள்ளியில் நிற்கின்றன. கொஞ்சம் விரிவாக சொன்னால் அரசாங்கத்திடம் நல்உறவு கொள்ளும் சில தமிழ் கட்சிகள் அரசுடன் சுமுகமாக இருப்பதற்கு என்ன நோக்கத்தை காரணம் சொன்னார்களோ அதே காரணத்தை கையில் எடுத்து கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசுடன் பேசி கொண்டு இருக்கிறது(இது காலத்தின் கட்டாயம் அது வேறு விடயம்).
நான் சிறு வயதாக இருந்து ஏதோ ஏதோ அரசியல் தீர்வுகள் பற்றி எல்லாம் செய்தியில் சொல்வார்கள். எல்லாம் முடிந்து (தனி நாடு உட்பட ) ஏதோ சொன்னாங்களே.....ஆஆஆஆஅ .......ஆஅ  சமஸ்டி ஆட்சி முறை ...(இந்த விசயமும் ஏற்கனவே நான் பிறக்க முதல் வட்ட சதுர முக்கோண மேசை எல்லாம் போட்டு கதச்சவன்களாம்).
 ஆனால் இப்ப கையில எடுத்து இருக்கிறது சமஸ்டி ஆட்சி முறையின் குறுகிய வடிவமாம்(என்ன கொதறியோ ) அதாவது காணி போலீஸ் அதிகாரம் உட்பட சில விடயங்களை கேட்க போறாங்களாம் கேட்டாங்களாம் கேப்பாங்களாம்.( விளங்கல்லைய? எனக்கும் விளங்கஇல்ல! ஏன் எண்டு தினசரி பத்திரிக்கை பாருங்க விளங்கும்! இத சொல்லுற தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கூட விளங்க இல்ல எண்டு)
(அவன் அவன் அந்த இடத்தில இருந்தாத்தான் தெரியும் கஷ்டம்.எண்டு நீங்க சொல்லுறது விளங்குது ஆனாலும் நாம செய்ய போனத சரியா செய்யணும் அப்படி செய்ய இயலாவிட்டால் என்ன போல இப்படி இருந்து வெட்டியா எழுதணும்)
ஒரு விடயம் மட்டும் விளங்குது என்னதான் ஆளும் தரப்புக்கு ஆதரவு வழங்கும் கட்சிகளுக்கும் ஆதரவு வழங்காத கட்சிகளுக்கும் பிரச்சனை இருந்தாலும் அவர்கள் சொல்லும் நோக்கம் இப்போதைக்கு  ஒன்றுதான்!
அப்ப என்ன எல்லோரும் சேர்ந்து சட்டுபுட்டு எண்டு ஒரு முடிவுக்கு வந்து கூட்டமைப்பு பேசட்டும் அரசுடன் சேர்ந்து இருக்கும் கட்சிகள் உங்கள் வழியில் கேளுங்க! (கிழிஞ்சிது போ)
இது எல்லாம் நடக்கிற காரியமா எண்டு நீங்க சொல்லுவிங்க! இதுக்கு ஒரே பதில்தான் அதுவும் கமல் பாசையில் சொன்னால் “நான் நடக்கும் எண்டு சொல்ல இல்ல ,நடந்தா நல்லம் எண்டுதான் சொல்லுறன்”
ஏன் எண்டா இனி நமக்கு வேற வழி இல்ல இப்படிதான் போகணும். அதற்க்கான சூழ்நிலை இருக்கு! சர்வேதேச சமுகம் இலங்கைய தன்னுடைய கண் பார்வையில வைச்சிருக்கு! ஒரு தீர்வு வழங்க வேண்டிய நிர்பந்தத்தில் இலங்கை அரசும் உள்ளது.
இக்காலகட்டத்தில் இங்கு இருக்கும் மக்களும் இதைதான் விருப்புகிறார்கள்.
14 வருடம் யுத்தத்தை அனுபவித்த எங்களுக்கே இப்படி மனநிலை இருக்கும் போது (நினைவு தெரிந்த நாளில் இருந்து) ஆரம்ப காலத்தில் இருந்து அனுபவித்தவர்களுக்கு எப்படி  இருக்கும்.
மக்களில் மனதில் கொஞ்சம் நின்மதி வந்திருக்கிறது.. அது என்ன எண்டா சாதிச்ச நிம்மதி இல்ல.. ஒரு பிரச்சனையும் இப்போதைக்கு இல்ல ஏன்டா நிம்மதி.....
அரசியல் பற்றி  எனக்கு பெரிதாக ஒன்றும்  தெரியாது! (ஆனால் இலங்கை வரலாறு தெரியும் 2012.01.06 வரை)அப்படி தெரிந்து இருந்தாலும் இலங்கை அரசியலை புரிதல் கடினம். அப்படி இருந்தும் கூட இந்த பொடியனுக்கு தெரியும் விடயம் கூட எமது தமிழ் அரசியல்வாதிகளுக்கு (சகல அரசியல் வாதிகளும்)புரியவில்லை என்றால் அடுத்த சந்ததி உங்களை தூற்றும்!
பின் குறிப்பு –தமிழ் நாட்டு அரசியல் வாதிகளை நம் பிரச்சனையில் இழுப்பது ஏசுவது வாழ்த்துவது நமக்கு எந்த பிரஜோசனமும் இல்ல! அவங்கட பிரச்சனைய (ஏதோ அனையாம் அல்லது ஏதோ ஒரு நடிகனுக்காக பால் அபிசேகம் பண்ணுற பிரச்சனையாக இருக்கும் ) முடிக்கிறத்துக்கு அவங்க நாட்டுல படுறபாட பாருங்க!  இப்போ ஏதோ நகை கடைக்கு புரட்சி செய்றாங்க இன்னும் கொஞ்ச நாள்ல எல்லாம் பெரும் தலைவன் MGR உடன் முடிஞ்சி போச்சி !
*வழமை போல தொப்பி அளவனவங்க போட்டு கொள்ளுங்க! (நிபந்தனைக்கு உட்பட்டது )

No comments:

Post a Comment