Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Wednesday, August 27, 2014

மதி சுதாவின் தழும்பு -ஒரு சினிமா க்காரனின் சமுகத்தின் பேச்சும் மூச்சும் வாசமும்



இந்த உலகில் பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தையும் தன்னுடைய அப்பா அம்மா சாயலில்த்தான் பிறக்கிறது. பேச்சுக் கூட தன் சூழலில் எப்படி பேசுகிறார்களோ அப்படித்தான் பேசிக்கொள்ளும்.
அப்படித்தான் சினிமாவும் யார் இயக்குகிறானோ அவன் சமுகத்தின் பேச்சும் மூச்சும் வாசமும் அந்த படத்தில் இருக்கும்.அப்படி தன் சமுகத்தில் இருக்கும் ஒருவனின் வலியை பதிவு செய்து இருக்கிறார் மதிசுதா.
ஈழத்தில் இருந்து குறும்படம் எடுக்கிறேன் என்ற பெயரில் தமிழ் நாட்டு காரர்கள் எடுக்கும் வணிக சினிமா போல சிலர் முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் மதி சுதா போன்ற சிலர்தான் அவர்களில் சமுகத்தின் சாயலில் படைப்புகளை தருகின்றனர்.
தழும்பு –ஒரு கை,கால்  இயலாத,  சமுகத்தில் வாழ நினைக்கும் முன்னாள் போராளியின் கதை,
படத்தின் முதல் காட்சியே ஒரு கை இயலாதவர் என்ற காட்சிப்படுத்தல் ஊடாக தொடங்குகிறது . இரண்டாவது காட்சியில் யுத்தத்திற்கு பிறகு நம்சமுகத்தின் நிலைமையையும் முன்னாள் போராளிகளை இந்த சமுகம் எப்படி பார்க்கிறது என்பதையும் பதிவு செய்கிறது.
இப்படி காட்சிகள் மாற முன்னாள் போராளி என்பதால் பயத்தில் உதவி செய்ய மறுக்கும் நண்பனும் , சிகரட் தரவில்லை என்பதற்காக வக்கிலாதவன் என்று கேவலப்படுத்தும் சிறுவனை கோவப்பட்டு அடிப்பதும் , பிறகு சிறுவனின் அப்பா வந்து திட்டும் வார்த்தையும் அதன் பிறகான மனது கனத்த காட்சியில் படம் திரையில் மட்டும் மறைந்து போகும், நம் மனதில் இல்லை.
படத்தில் கொஞ்ச வசனம்தான் ஆனால் ஒவ்வொரு வசனமும் இன்னுமொரு படத்திற்கான கதை சொல்லி விடுகிறது.
உதரணமாக – இயக்கத்தில இருந்து வந்தவருக்கு  சமுகத்திண்ட நிலைப்பாடு விளங்காம இருக்கு.
செத்த சனத்திண்ட காச அடிச்சு கடைய போட்டுடுட்டு ஊர ஏமாத்தி பம்மாத்திய பிளைக்கிறாய், கொலைகார நாயே!
இந்த இரண்டு வசனங்களும் போதும் முன்னாள் போராளிகளை இன்றைய நிலைமையை சொல்ல.
அடுத்து பாலமுரளியின் ஒளிப்பதிவும் மதுரனின் படத்தொகுப்பும் குறைகள் சொல்ல முடியாது, முதல் காட்சியே ஒரு குறடும் சாவியும் இருக்கிற மாதிரி தொடங்கும், அத ஒரு ஒளிப்படமா பார்த்தாக்கூட நல்லா இருக்கும், தேத்தண்ணி குடிக்கிற காட்சி, பொடியன்கள அடிச்ச பிறகு ஒவ்வொரு சைக்கிளா விழுற காட்சி ஒவ்வொன்றும் நன்றாக இருக்கிறது.
சன்சிகன் ஒலிப்பதிவு தர்ஷனன் பின்னணி இசை இரண்டும் படத்திற்கு கைகொடுத்து இருக்கு.
இந்த படத்த பார்க்கும் போது இந்த கதைய எங்கயோ வாசிச்ச மாதிரி இருக்கே எண்டு ஜோசிச்சு கொண்டு இருந்தன். பிறகு படம் முடியும் போது அது நெற்கொழுந்து தாசனின் மூலக்கதையில் இருந்து எடுக்கப்பட்டது என்று போட்டுடாங்க.
அடுத்தது நடிப்பு -அந்த அந்த கதாபாத்திரங்கள் என்ன செய்யுமோ அத நடிச்ச ஆக்கள் செய்து இருகிறாங்க, மதிசுதாவும் அப்படிதான், கை,கால் ஏலாத ஒரு முன்னாள் போராளியாவே இருந்தார்.
இந்த படத்தின் இயக்குனர் மதிசுதா தன்னுடைய வேலைய ஒழுங்கா செய்து இருக்கிறார் என்பதற்கு நான் மேலே சொன்ன காரணங்களே சாட்சி!
நான் மேல நிறைய இடத்தில முன்னாள் போராளி என்ற வார்த்தைய அதிகம் பயன்படுதிட்டன், உண்மை என்ன எண்டா இந்த சமுகத்தில் எப்படி வாழ்வது என்று இன்னும் போராடி கொண்டு இருக்கிறார்கள் இந்த முன்னாள் போராளிகள்!
முக்கியமா இந்த படத்த சமுக வலைதளங்களில் வீரம் பேசும் புலம்பெயர் போலிப் போராளிகளும், தமிழ்நாட்டு காரர்கள் மாதிரி படம் எடுக்க நினைக்கும் ஈழத்து முயல்வோரும் பார்த்தே ஆக வேண்டும்.

Wednesday, August 20, 2014

டியர் #கத்தி #லைக்கா எதிர் போராளிஷ்,



லைக்கா என்ற  வணிகத்தின் நிறுவனர் இலங்கை அரசோட நல்லுறவா இருக்கிறார் /வியாபாரம் செய்றார் எண்டதாலதானே கத்தி படத்த தடை செய்யணும் எண்டு சொல்லுரிங்க.
அப்படி எண்டா நீங்க நிறைய படத்த எதிர்த்து இருக்கணும் இன்னும் எதிர்க்கணும்,நீங்க நிறைய பொருட்கள பயன் படுத்தவே கூடாது.
நீங்க பயன்படுத்திற பாதி பொருட்களின் உற்பத்தியாளர்கள் இலங்கையில நேரடியாக கூட்டுமுயற்சியாளர்களாகவும், நிதி மற்றும் தொழில்நுட்ப பங்காளர்களாக இருக்கிறாங்க என்பது உங்களுக்கு தெரியுமா?
இலங்கையில தொழில் செய்ற இந்திய கூட்டு இணைப்பு நிறுவங்கள்

1.ஐ ஓ சி
போன வருசம் இலங்கையில இருக்கிற தமிழ் சிங்கள மக்களிட்ட தங்களுடைய உற்பத்திய விற்று இலங்கை ரூபா 51.75 மில்லியன் வரிக்கு பிந்திய லாபம் உழைச்சு இருக்குது.

2.எயார்டேல்
2௦௦ அமெரிக்க டொலர் முதலீடு செய்து இருக்கு.அப்ப லாபம் எவ்வளவு இருக்கும்.? 

3.பிரமல் முயற்சியாளர்
இலங்கையில இருக்கிற கண்ணாடி உற்பத்தியில 54 பங்கு இந்த நிறுவனதிட்டதான் இருக்கு 

4.தாஜ் ஹோட்டல்
மூன்று இடத்தில ஹோட்டல் வைச்சு இருக்கிறாங்க 

5.அல்ட்ரா டேக் சிமன்ட்
இந்த நிறுவனத்தோட போன வருச விற்பனைப்புரள்வு 59 மில்லியன் டொலர்
இந்த வருசம் 11௦ மில்லியன் டொலர் எதிர் பார்க்கப்படுதாம்.

6. ஜே வி கோகல்
இலங்கையில இருந்து தேயிலை வாங்கி “super tea” என்ட பெயரில 31 நாட்டுக்கு வியாபாரம் செய்றாங்க.

7.டாட்டா
வாகனம் ,தொலைத்தொடர்பு, கட்டுமானம் ஆகிய மூன்று வியாபாரம் செய்றாங்க, அதுமட்டும்இல்ல EGO அனுமதிப் பத்திரம் குடுத்துத்தான் இலங்கையிலஅவங்கட கம்பனிய கூட்டு இணைச்சு இருக்கிறாங்க.

8.வங்கி
ஸ்டேட் பேங்க் ஒப் இந்தியா, இந்தியன் வங்கி, ICICI வங்கி,axis வங்கி போன்ற வங்கிகள் நிதி சேவை செய்றாங்க.

9.Asian Paints
2௦௦௦ ம் ஆண்டுக்கு முதல் இருந்தே இங்க வியாபாரம் செய்றாங்க.

10.CEAT
களனி டயர் நிறுவனத்துடன் சேர்ந்து உற்பத்தி செய்து 14 நாடுகளுடன் வியாபாரம் செய்றாங்க.

11.ITC வரையறுத்த கூட்டு நிறுவனம்
இலங்கையில கச்சான் கடலை விக்கிறதில இருந்து எல்லாம் விக்கிறாங்க


12.ஸ்ரீ ரேணுகா சுகர்ஸ் வரையறுத்த கூட்டு நிறுவனம்
சீனி வியாபாரம் அதுவும் சின்னதா இல்ல 2௦௦ டொலர் முதலிட்டுத் திட்டதில.
இது மட்டும் இல்ல வாகனம், தொலைக்காட்சி ,வான் போக்குவரத்து,கட்டுமானம் ,லொட்டு லொசுக்கு எல்லா வியாபாரமும் நடக்குது.
இலங்கை நிறுவங்களும் அங்க வியாபாரம் செய்றாங்க நீங்க குடிக்கிற லயன் பீர் 22 % இலங்கையின் உற்பத்தி அது உங்களுக்கு தெரியுமா உங்களுக்கு? சிலோன் பிஸ்கட்,ஜோன் கீல்ஸ், இப்படி நிறைய நிறுவங்கள்
இப்போ நான் சொன்ன நிறுவங்கள் தொடர்புடைய பங்குதாரர், வழங்குனர் இணை  நிறுவங்கள், துணை நிறுவங்கள், பங்காளி நிறுவனங்கள், எல்லா வற்றையும் பட்டியல் இட்டு விட்டு லைக்காவுடன் சேர்ந்து எதிர்கலாம்தானே!!!!
அப்படி எதிர்த்தல் என்பது நீங்கள் கற்காலத்துக்கு செல்வதற்கு சமம். நீங்கள் பயன்படுத்தும் அநேக பொருட்களை நீங்கள் விட்டு விட வேண்டும் ..இப்போ இருக்கும் வணிக கூட்டு இணைப்புகள் மிகவும் சிக்கல் ஆனவைகள் ஒன்றை நம்பிதான் இன்னும் ஒன்று இருக்கும்  .அது மட்டும் அல்ல  பொருளியல்ல ஒரு தத்துவம் இருக்கு எங்களுடைய தேவை உலகத்தில் உள்ள வளங்களை விட அதிகம்.