Showing posts with label முகநூல். Show all posts
Showing posts with label முகநூல். Show all posts

Tuesday, August 14, 2012

சுஜாதாவின் பத்துக் கட்டளைகள்


இது ஒரு படித்து பிடித்து போன முகநூல் பதிவு 

1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.

2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.

3. மூன்று மணிக்குத் துவங்கும் மாட்டனி போகாதீர்கள். க்ளாஸ் கட்பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம். இளமைக்காலம், ஒளிக் கீற்றைப் போல் மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள். 

4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் – யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக் கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம். 

5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில், யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம் ஆயிரம் ரூபாய்க்கு ஷர்ட், சுடிதார் கேட்கும் முன். 

6. இந்தச் தகவல்களை படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.

7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம்(உடல்), எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம்.குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்கு கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும், உபத்திரமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை. 

8.எட்டு முறை மைதானத்தை சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்குச் சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாக தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காக சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும். 

9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம். ஒரு மணி நேரம் பாடம் அல்லது புத்தகம் படிக்கலாம். 
10. படுக்கப் போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணன், தங்கை யாருடனாவது பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம், நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்). எதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான். 

Tuesday, January 24, 2012

அன்புள்ள கலாமுக்கு ,,,,,,


மதிப்புக்குரிய அப்துல்கலாம் அவர்களுக்கு இலங்கையில் அமைதிப்படையில் பணி புரிந்த இந்தியவீரன் எழுதிக்கொள்வது.ஐயா நீங்கள் இலங்கை சென்ற பொழுது இந்திய வீரர்கள் நினைவு இடத்தில் பெருமையுடன் அஞ்சலி செய்தீர்கள்

நீங்கள்  அஞ்சலி செய்ததை இட்டு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நாங்கள் பிற நாட்டை எப்படி நீங்கள் பெருமைப்படும் அளவுக்கு பாதுகாத்தோம் என்பதை நீங்கள் கேட்டால் நீங்களும் எங்களை நினைத்து இன்னும் பெருமைப்படுவீர்கள். உங்களுக்காக ஒரு மணித்தியாலம் நடந்த சம்பவத்தை கூறுகிறேன்,கேட்டு பெருமைப்படுங்கள்.
1989 ஆண்டு ஒன்பதாம் மாதம் 13திகதி(புதன்கிழமை) அண்ணளவாக 8.30 இருக்கும் மூதூர், கட்டைபறிச்சான் பகுதியில் உள்ள சின்னமட்டக்களப்பு பகுதியில் எங்களுக்கும் புலிகளுக்கும் சண்டை மூளுகிறது. எங்கள் படை வீரன் ஒருவன் அச்சண்டையில் சாவடைந்தான். அந்த ஆத்திரத்தை தீர்க்க பழிக்குப் பழி வாங்க வேண்டிய தேவை இருந்தது.(எத்தனை சினிமா பார்த்திருப்போம்!! நண்பனை கொன்ற வில்லன் கூட்டத்தை பழி வாங்க வேண்டும்) நாங்கள் கட்டைபறிச்சான் கிராமத்தினுள் புகுந்தோம்.முதலில் எங்கள் கண்ணில்பட்டது.விபுலானந்த வித்தியாலயம் என்ற பாடசாலை. அன்று பள்ளிநாள் எங்களுக்கு வசதியாய் போய்விட்டது.எங்கள் இயந்திர துப்பாக்கிகள் சுழன்றன,எல்லோரும் 9ம் ஆண்டுக்கு உட்பட்ட மாணவர்கள்!!!!!!!!!!11பேர் பலி!!!! படுகாயங்கள்!!!!  பாடசாலையில் இரத்தஆறு ஓட வைத்தோம்.அத்துடன் நாங்கள் முடித்து கொள்ளவில்லை. கண்ணில் பட்ட வீடுகளை நோக்கி எங்கள் துப்பாக்கிகள் முழங்கின. சாவுகள் படுகாயங்கள்,இதில் எங்களுடைய திறமை என்ன என்றால் இறந்தது எல்லாம் சிறுவர்களும் வயோதிபர்களும்.
இப்போது புரிகிறதா? நாங்கள் எப்படி பிற நாட்டையும் அம்மக்களையும் எப்படி பாதுகாத்தோம் என்று!!!!!!!இந்த சம்பவம் ஒரு கிராமத்தில் ஒரு மணித்தியாலம் நாங்கள் நடத்திய சாதனை இது . அத்த ஒரு கிராமத்தில் நாங்கள் செய்த சாதனைகள் வீர தீர செயல்கள் ஏராளம் ஒரு கடிதம் போதாது. இன்னமும் எங்களால் கால் கை (வாழ்கையை) இழந்தவர்கள் சாட்சிகளாக இருப்பார்கள்!!!

உங்கள் பெருமைக்குரிய
இந்தியப்படைவீரன்

(1989.09.13 #####அன்று இந்திய படையால் மேற்கொள்ளப்பட்ட படுகொலை சம்பவம் !!!! என்னதான் அதன் பிறகு 18 வருடங்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டாலும் எம் கிராம மக்களுக்கு மறக்க முடியாத நாள். முதல் முதலாக 11 சிறுவர்களை பிணமாக பார்த்தநாள். என் சகோதரி சங்கீதாவை எங்கள் குடும்பம் இழந்தநாள்!!! அவர்கள் செய்த வீரசெயல்களின் சாட்சியாக கட்டைபறிச்சானில் உள்ள  “தில்லம்கேணி” என்ற அழிந்தகிராமம் இன்னும் சாட்சியாக இருக்கிறது)
***கடிதம் கற்பனை சம்பவம் உண்மை

Friday, December 16, 2011

நமக்கு தேவை கல்விதான், வாய் வீரம் அல்ல!

ஈழத்தில் சிலருக்கு போர் முடிந்துவிட்டது சிலருக்கு முடியவில்லை! ஆனால் ஈழத்தில் உள்ளவர்கள் யாரவது இப்படி கருத்து தெரிவிக்கிறார்களா?
ஏன் என்றால் இங்கு எல்லாம் முடிந்துவிட்டது.அவ்வளவும்தான் வேறு சொல்வதற்கு ஒன்றும் இல்லை.புலம் பெயர் தமிழர்களே (இணையங்களே) ஒன்று புரிந்து கொள்ளுங்கள்.இங்குள்ள மக்களுக்கு தேவை வாய்வீரம் அல்ல,அடிப்படை உதவிகள். இங்கு உள்ளவர்கள் ஓடி,உறவை இழந்து, மண்ணை இழந்து,கல்வியை இழந்து களைத்து போயிருக்கிறார்கள்.
நீங்கள் இங்கு இருக்கும் போது இருந்த நிலைமை வேறு இன்று வேறு மனநிலையும் வேறு! எனக்கு தெரிந்தவரையில் கல்வியால் மட்டும்தான் நாங்கள் சாதிக்கலாம்.இதற்க்கு ஒரேவழி அடிப்படை உதவிகளையும் கல்வி உதவிகளையும் வழங்குங்கள். நேரடியாக வழங்கலாம் அல்லது இங்கு சேவை நோக்கம் கொண்ட பல தொண்டு நிறுவனங்கள் செயல்படுகின்றன,அவைகள் ஊடக செய்யலாம்.
வீரம் பற்றி பேசுபவர்கள் இங்கு புனர்வாழ்வு பெற்ற போராளிகளுக்கு ஏதாவது உதவி செய்ய முடிந்ததா? அவர்களுக்கு வேலை வாய்ப்பு,குடும்ப சுமை எவ்வளவோ சுமைகள்.இலங்கை அரசு செய்த உதவி கூட நீங்கள் செய்யவில்லை இது அப்பட்டமான உண்மை.
உங்களுக்கு ஒரே ஒரு பிரச்சனைதான் இங்கு நடக்கு நல்ல விடையங்கள் உங்களுக்கு தெரிவதில்லை ஆனால் கெட்ட விடையங்கள் பெரிதக்கபடுகின்றன! அது மட்டும் அல்ல, குடும்ப பிரச்னை கூட உங்கள் இணைய தளங்களில் அரசியல் ஆக்கபடுகின்றன.
நான் குறிப்பிடுவது 2009 பிறகு உள்ள அரசியலை,இது கொஞ்சம் வித்தியாசமானது, நீங்கள் இங்கு இருந்தால் புரிந்து இருக்கும்.
இலங்கை அரசுக்கு எங்களது பிரச்னையை தீர்க்க வேண்டிய கட்டாய சூழல் சர்வதேசம் ஊடக ஏற்பட்டு இருக்கிறதது. இலங்கை அரசியல் வேறு மாதிரி சென்றுகொண்டு இருக்கிறது (அபிவிருத்தியுடன்).
ஆயுதவழி போராட்டம் தொடங்குவதற்கு உயர்கல்வி பல்கலைகழக தெரிவு பிரச்சனை ஒரு காரணம். இப்பொழுது இப்பிரச்சனை முளுவாக தீர்ந்து விட்டது.பல்கலைகழகங்களில் வளாகங்கள் ஒவ்வொரு மாவட்டங்களிலும் அமைய பெற்று விட்டது. பாடநெறிகள் அதிகமாக்க பட்டுவிட்டன. இலங்கை உயர் தொழிநுட்ப கல்வி நிறுவனத்தின் வளாகங்கள் வடகிழக்கில் நான்கு (இரு பிரிவுகள் உட்பட) அமைந்துள்ளது அது மட்டும் அல்லாமல் வவுனியாவில் அமைக்கபட்டு வருகிறது.இன் நிறுவனம் உயர் தொழில்கள் ஆன கணக்கியல்,தகவல் தொழில்நுட்பம்,விவசாயம்,பொறியியல் , ஆகிய வற்றிக்கு பட்டப்படிப்பை வழங்குகிறது. அடுத்த வருடத்தில் இருந்து இன் நிறுவனம் உயர் கல்வி அமைச்சால் பல்கலைகழகக்கல்லூரியாக தரம் உயர்த்தபடவுள்ளது.அவை தவிர இளைஞர் விவகார அமைச்சின் கீழ் தொழில்நுட்ப கல்லூரிகள்,தொழில் பயிர்ச்சி நிலையங்கள், அனைத்து துறைகளுக்கும் பயிற்சிநெறிகளை வழங்குகின்றன .கல்வியல் கல்லூரிகள் (ஆரம்ப காலத்தில் இருந்து இத்துறையில் தமிழர்கள் வெளியிடு அதிகம்)இவை அனைத்தும் இலவச கல்வி அடிப்படையில் தான் இடம்பெறுகின்றன அது மட்டும் அல்லாது பல்கலைகழக,மற்றும் உயர் தொழில் நுட்ப மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்க படுகிறது. தொழில் நுட்ப கல்லூரி மாணவர்களுக்கு போக்குவரத்து படி கிடைக்கிறது.
இதை தவிர வெளிநாட்டு பல்கலைகழகங்கள், கல்லூரிகள் இலங்கையில் நிறுவப்பட்டுள்ளன!
இலங்கை கல்வி துறையில் ஒரு திட்டமிடபட்ட வளர்ச்சியை அடைந்து கொண்டுஉள்ளது(இது நமக்கும்தான்). “இதுதான் தற்போதைய நிதர்சனம்”.
இவைகளை நான் ஏன் குறிப்பிட்டேன் என்றால் நமது மாணவர்கள் உயர் தரத்தை சித்தி அடைந்து விட்டார்கள் (ஆககக் குறைந்தது சாதாரண சித்தி) என்றால் அவர்களுக்கு எதாவது ஒரு உயர் கல்வி வாய்ப்பு நிச்சயம் உள்ளது.
அதற்க்கு சிறு தள்ளுதலையாவது நாம் மேற்கொள்ள வேண்டும். யுத்தத்தால் பாதிக்க பட்ட மாணவர்கக்கு ஒரு அழிப்பான் கொடுப்பது கூட உதவியாக இருக்கும்.
யதார்த்தத்தை புரிந்து நமது மாணவர்களின் கல்வியை உயர்த்துவது நம் கடமை! உதவுவதற்கு வழிகள் அதிகம் உள்ளன!
சமுகவலைதளங்களில் நாடு! மக்கள்! என்று முழங்கும் நீங்கள் நம் இன மாணவர்களுக்கு எதாவது செய்யுங்கள்! 

Wednesday, December 14, 2011

ஏன் மானம்கெட்ட தொழில் உங்களுக்கு"


இன்றைய காலகட்டத்தில் புலம்பெயர் நாடுகளில் இருந்து பல இணையதளங்கள் செயல் பட்டு வருகின்றன அவைகள் எந்த அளவுக்கு நம்பகரமான செய்திகளை வெளியீடுகின்றன?
யுத்தம் முடிவடைந்த காலப்பகுதியில் இருந்து சில இணையங்களில் இலங்கையில் வடகிழக்கு பகுதிகளில் இடம்பெறும் கலாச்சார சீரழிவுகள் பற்றிய செய்திகள் முக்கிய இடம்பெற்று வருகிறது.
சில உண்மையாகினும் பல சொடிக்கப்பட்ட கட்டுகதைகளாக வெளிவருகின்றன.ஏன் இவ்வாறு தங்களின் இணையதளங்களின் விளம்பரத்தை தேடி கொள்வதற்கு தங்கள் பிறந்தஇடத்தை கேவலபடுத்துகிறிர்கள்?கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏன் நண்பர் ஒருவரால் ஒரு இணையத்தின் செய்தி ஒன்று முகஏட்டில் பகிரப்பட்டது.
இது திருகோணமலை எடுக்கபட்டதாக குறிப்பிடபட்டிருந்தது  இது கலாச்சார சீரழிவு எனவும் ....
அந்த ஒளிப்படத்தில் ஒரு இளைஞன் ஒருவரும் ஒரு யுவதின் கையை பிடித்து உரையாடி கொண்டு இருக்கிறார்.அதனை ஒருவர் மறைத்து வைத்த கமரா மூலமாக படம்பிடிக்கிறார்? இதில் யார் செய்தது காலச்சாரசீரழிவு?
  • காதலியின் கையை பிடித்து கதைத்தவரா ?
  • அதை படம் பிடித்த வக்கிர புத்திகொண்டவரா???????
    அல்லது
  • விளம்பரத்திற்காக ஒரு சிறிய விடயத்தை பெரிய விடையமாக்கி அதை அரசியல் ஆக்கி தன் மகளுக்கும் மகனுக்கும் பப்புக்கும்,டேய்டிங்க்கும் போவதற்கும் பணம் கொடுப்பதற்கு நடத்தப்படும் இணையதளங்களா????????

இது என்ன மானம்கெட்ட தொழில் உங்களுக்கு ?????இப்படி வாழ்வதற்கா உயிரை கையில் பிடித்து கொண்டு வெளிநாடு ஓடினாய் ???
உன் மகள்மாரின் மகனின் மனைவியின்  facebook புகைப்பட பகிர்வை பார்! அப்போது விளங்கும் எது காலச்சார சீரழிவு என்று! உன் மகள் மது கோப்பையை உடன் தனது boy friendஉடன் (100 க்கு 1 வீதம் காதலனாக இருக்கலாம்)புகைபடம் எடுத்து facebookல் பகிர்தல் காலச்சார சீரழிவு இல்லையா ???

இவ்வாறன இணையங்கள் ஒன்று புரிந்து கொள்ளவேண்டும்..வெளிநாடுகளில் நம்மவர்கள் செய்வதை விடவா இலங்கையில் நடக்கிறன.
இதுதான் நம் பிரச்சனையா?
உங்கள் இணையங்களில் பகிரப்படும் செய்திகள்தான்  என்ன ?
  • வீரஆவேச கட்டுரைகள்.
  • நடிகர்களின் கிசு கிசு.
  • நடிகைகைகளின் ஜிலு ஜிலு வீடியோ.

வீரமும் ஆவேசமும் இங்கு உள்ளவர்களுக்கு நிறையவே உள்ளது,இருப்பதால் தான்.அவர்கள் எங்கும் ஓடி போய்விடவில்லை. கொழும்பில் இருந்து கூட தமிழர் நலனுக்காக பாடுபடும் ஊடகத்துறைசார்தவர்கள்,அரசியல்வாதிகள்,சமுகநலவாதிகள் உண்டு.
உங்கள் வாய் வீரம் எங்களுக்கு தேவை இல்லை! யுத்த காலத்தில் நீங்கள் என்ன செய்திர்கள் எம் மக்களின் பிணம்களின் படங்களின் போட்டு பிழைத்தீர்கள் .
இவ்வாறு செய்த நீங்கள் இப்போது விபச்சார அரசியல்துணிந்துவிட்டிர்கள்!
காதலன் காதலி கைபிடிப்பது சமுக சீரழிவாம் இது இலங்கை அரசின் செயலாம்!!!!!!!
நாங்கள் ஈழத்தில்தான் இருக்கிறோம் இங்கு நடப்பவை உங்களை விட எங்களுக்கு தெரியும். எதுவும் நடக்கவில்லை என்று நான் சொல்லவரவில்லை!!!! ஆனால் உங்கள் மண்ணை அவமானபடுத்தாதிர்கள் !!!!
அந்த ஒளிப்படத்தில் வந்தவர் யாரகவும் இருக்கட்டும்,!என்ன இனத்தவராக இருக்கட்டும்! மற்றவர்கள் தனிப்பட்ட விடயத்தை விடியோ எடுப்பது எவ்வளவு கேவலமான செயல்!!! அதை வெளியீடு செய்தல் எவ்வளவு ஈனச்செயல்!!!!

பின் குறிப்பு-
தொப்பி அளவானவர்கள் போட்டு கொள்ளவும்!!!

Thursday, June 2, 2011

1.டேய் அண்ணா !
முன்பு க‌ல்லூரி வ‌ருவ‌து எதிர்ப்புற‌ ம‌க‌ளிர் க‌ல்லூரியை க‌ண்காணிக்க‌த்தான் என்றிருந்த‌ உன் க‌ண்க‌ள் இன்று ம‌ட்டும் அக் க‌ல்லூரி ப‌க்க‌மே திரும்ப‌ ம‌றுப்ப‌து ஏன்?
அன்று நீ க‌ல்லூரியின் மாண‌வ‌ன்....இன்று க‌ல்லூரியின் ஆசிரிய‌ன்!!!!



2.ம‌ன்னியுங்க‌ள் ம‌ல‌ர்க‌ளே..
நாங்க‌ள் ம‌னித‌ர்க‌ள்
தெய்வீகத்தனமானது என‌க் கூறி உங்களை கொல்கிறோம்




3.வா கவிதையை எழுதுவோம்
நீ விதை 
எழுதச் சொல்லும் போதுஉன்னை எழுதுகிறேன்
ஆனால் என்னவோ நீயும் கவிதையும் சேர்ந்துஎன்னை எழுதுகிறீர்கள்



4.கல்லுரிச் செல்லும்
என் நண்பனின்
கனவு இருசக்கர வாகனம்!
அப்பா வாங்கித் தர
அபசகுனமானது
அவளுடனான பேருந்து
பயணத்திற்கு!




Tuesday, May 31, 2011

எந்த நட்பும்
ஒரு தலையாய் பூப்பதில்லை
காதலைப் போல ......





அவள் ஒரு அழகான குப்பைத்தொட்டி( தாசி )# வானம் படத்தில் வரும் அனுஷ்காவின் கதாப்பாத்திரம் #




காதல் +நட்பு=பையன்
x +நட்பு =பொண்ணு
#இருபடிச்ச்மன்பாடு தீர்வு காண முடியுமா?///?????







கடவுளில் விலை ஐம்பது ரூபா நடைபாதைக் கடையில்.....