Wednesday, December 14, 2011

ஏன் மானம்கெட்ட தொழில் உங்களுக்கு"


இன்றைய காலகட்டத்தில் புலம்பெயர் நாடுகளில் இருந்து பல இணையதளங்கள் செயல் பட்டு வருகின்றன அவைகள் எந்த அளவுக்கு நம்பகரமான செய்திகளை வெளியீடுகின்றன?
யுத்தம் முடிவடைந்த காலப்பகுதியில் இருந்து சில இணையங்களில் இலங்கையில் வடகிழக்கு பகுதிகளில் இடம்பெறும் கலாச்சார சீரழிவுகள் பற்றிய செய்திகள் முக்கிய இடம்பெற்று வருகிறது.
சில உண்மையாகினும் பல சொடிக்கப்பட்ட கட்டுகதைகளாக வெளிவருகின்றன.ஏன் இவ்வாறு தங்களின் இணையதளங்களின் விளம்பரத்தை தேடி கொள்வதற்கு தங்கள் பிறந்தஇடத்தை கேவலபடுத்துகிறிர்கள்?கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏன் நண்பர் ஒருவரால் ஒரு இணையத்தின் செய்தி ஒன்று முகஏட்டில் பகிரப்பட்டது.
இது திருகோணமலை எடுக்கபட்டதாக குறிப்பிடபட்டிருந்தது  இது கலாச்சார சீரழிவு எனவும் ....
அந்த ஒளிப்படத்தில் ஒரு இளைஞன் ஒருவரும் ஒரு யுவதின் கையை பிடித்து உரையாடி கொண்டு இருக்கிறார்.அதனை ஒருவர் மறைத்து வைத்த கமரா மூலமாக படம்பிடிக்கிறார்? இதில் யார் செய்தது காலச்சாரசீரழிவு?
  • காதலியின் கையை பிடித்து கதைத்தவரா ?
  • அதை படம் பிடித்த வக்கிர புத்திகொண்டவரா???????
    அல்லது
  • விளம்பரத்திற்காக ஒரு சிறிய விடயத்தை பெரிய விடையமாக்கி அதை அரசியல் ஆக்கி தன் மகளுக்கும் மகனுக்கும் பப்புக்கும்,டேய்டிங்க்கும் போவதற்கும் பணம் கொடுப்பதற்கு நடத்தப்படும் இணையதளங்களா????????

இது என்ன மானம்கெட்ட தொழில் உங்களுக்கு ?????இப்படி வாழ்வதற்கா உயிரை கையில் பிடித்து கொண்டு வெளிநாடு ஓடினாய் ???
உன் மகள்மாரின் மகனின் மனைவியின்  facebook புகைப்பட பகிர்வை பார்! அப்போது விளங்கும் எது காலச்சார சீரழிவு என்று! உன் மகள் மது கோப்பையை உடன் தனது boy friendஉடன் (100 க்கு 1 வீதம் காதலனாக இருக்கலாம்)புகைபடம் எடுத்து facebookல் பகிர்தல் காலச்சார சீரழிவு இல்லையா ???

இவ்வாறன இணையங்கள் ஒன்று புரிந்து கொள்ளவேண்டும்..வெளிநாடுகளில் நம்மவர்கள் செய்வதை விடவா இலங்கையில் நடக்கிறன.
இதுதான் நம் பிரச்சனையா?
உங்கள் இணையங்களில் பகிரப்படும் செய்திகள்தான்  என்ன ?
  • வீரஆவேச கட்டுரைகள்.
  • நடிகர்களின் கிசு கிசு.
  • நடிகைகைகளின் ஜிலு ஜிலு வீடியோ.

வீரமும் ஆவேசமும் இங்கு உள்ளவர்களுக்கு நிறையவே உள்ளது,இருப்பதால் தான்.அவர்கள் எங்கும் ஓடி போய்விடவில்லை. கொழும்பில் இருந்து கூட தமிழர் நலனுக்காக பாடுபடும் ஊடகத்துறைசார்தவர்கள்,அரசியல்வாதிகள்,சமுகநலவாதிகள் உண்டு.
உங்கள் வாய் வீரம் எங்களுக்கு தேவை இல்லை! யுத்த காலத்தில் நீங்கள் என்ன செய்திர்கள் எம் மக்களின் பிணம்களின் படங்களின் போட்டு பிழைத்தீர்கள் .
இவ்வாறு செய்த நீங்கள் இப்போது விபச்சார அரசியல்துணிந்துவிட்டிர்கள்!
காதலன் காதலி கைபிடிப்பது சமுக சீரழிவாம் இது இலங்கை அரசின் செயலாம்!!!!!!!
நாங்கள் ஈழத்தில்தான் இருக்கிறோம் இங்கு நடப்பவை உங்களை விட எங்களுக்கு தெரியும். எதுவும் நடக்கவில்லை என்று நான் சொல்லவரவில்லை!!!! ஆனால் உங்கள் மண்ணை அவமானபடுத்தாதிர்கள் !!!!
அந்த ஒளிப்படத்தில் வந்தவர் யாரகவும் இருக்கட்டும்,!என்ன இனத்தவராக இருக்கட்டும்! மற்றவர்கள் தனிப்பட்ட விடயத்தை விடியோ எடுப்பது எவ்வளவு கேவலமான செயல்!!! அதை வெளியீடு செய்தல் எவ்வளவு ஈனச்செயல்!!!!

பின் குறிப்பு-
தொப்பி அளவானவர்கள் போட்டு கொள்ளவும்!!!

No comments:

Post a Comment