Showing posts with label மூதூர். Show all posts
Showing posts with label மூதூர். Show all posts

Friday, December 14, 2012

பெரும் கற்காலத்தில் என்ன செய்து கொண்டு இருந்தது திருகோணமலை


சென்ற வாரம் மலைமுரசு செய்தித்தாளுக்காக தேடியவை 
இதுவரை திருகோணமலையின்  வரலாறு   ஆய்வாளர்களால் ஆராயப்பட்டு பல நூல்களாக வந்து விட்டன.ஆனால் அவற்றில் வரலாற்றுக் காலம் தான் முக்கியத்துவப் படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் நாகரிக வளர்ச்சியை.வரலாற்றுக்கு முந்திய காலம்,வரலாறு உருவாக்கக் காலம், வரலாற்றுக்காலம் என்று மூன்று வகையாக பிரிக்கலாம்.
ஈழத்து நாகரிக வளர்ச்சியில் இந்த மூன்று காலங்களிலும் திருகோணமலையின் பங்கு முக்கியமானது என்பது இதுவரை கிடைத்த ஆதாரங்களில் இருந்தது புலப்படுகிறது.

இதில் வரலாற்றுக்கு முந்திய காலத்தில் திருமலையின் பங்கு என்ன?
 மக்கள் எழுத்து பாவனையை தொடங்காத காலம் வரலாற்றுக்கு முந்திய காலம் எனப்படுகிறது. எல்லா இனக்குழுக்களின் வரலாறுகளை ஆராயும் போதும் இந்த காலப்பகுதி மிகவும் சவாலுக்கு உரியதாக காணப்படுகிறது. இக்காலப்பகுதில் மக்கள் இருப்பு தொடர்பாக ஆதாரங்களை தேடும் போது பின் வந்த பெரும்கற்காலம் தொடர்பான குறிப்புக்களும்,அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் ,உபகரணங்களின் எச்சங்களும் மட்டுமே  ஆதாரங்களாக கொள்ள முடியும்.
பெரும்கற்கால(கி.மு500 முன்னர்) திருகோணமலை பாரிய சனத்தொகையோ ,கட்டமைக்கபட்ட ஆட்சி முறையையோ கொண்டிருந்திருக்காத,சில மனித குழுக்கள் தங்களது அடிப்படை தேவைகளை நிறைவு செய்து கொண்டு வாழ்திருக்கிறார்கள்.

கதிரவெளி (தற்போது மட்டக்களப்புமாவட்டம்),திரியாய்,தென்னமரவாடி,கிழக்கு மூதூரில் அமைத்துள்ள “ராஜவந்தான்” மலை தொடக்கம் “படைகுமித்த கல்”வரை உள்ள குன்றுகள்   ஆகிய வற்றில் காணப்படும் ஆதாரங்கள் அம்மக்கள் இருப்பை உறுதி செய்கின்றன.

தற்போது திருகோணமலை மாவட்டமாக அடையாளப்படுத்த பட்ட பகுதி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் கிடைக்கும் கருப்பு சிவப்பு நிற பெரும்கற்கால மட்பாண்டங்கள் ,தாழிகள் மக்களின் இருப்புக்கள் இருந்தது என்பதை உறுதி செய்கின்றன.
கண்ணால் காணக்கூடிய ஆதாரங்கள் இப்படி சொல்ல திருமலை பகுதியில் செல்வாக்கை கொண்டிருந்த இம்மக்களை ஆரிய இலக்கியமான ராமாயணம்  உயர் தொழில் நுட்பம் கொண்டவர்களாகவும் ,கட்டுக்கோப்பான ஆட்சி முறையை கொண்டவர்களாகவும் இனம் காட்டுகிறது.அதாவது இந்த மனிதர்களின் தலைவனிடம்(ராவணனிடம்) விமானம் இருந்ததாக கூட அப்புராணம் கூறுகிறது .
இன்னுமொரு ஆரிய புராணமான மாகவம்சம் இம்மனிதர்களை யட்சினிகள் என்ற பெயர் கொண்டு அழைக்கிறது.அதுமட்டும் அல்லாது எதோ ஒரு சக்தியை கொண்ட ஒரு கூட்டமாக அடையாளப்படுத்துகிறது.அதற்க்கு பின் வந்த வரலாற்று ஆசிரியர்கள் அவர்களை  இயக்கர் ,நாகர் என்ற இனமாக அடையாளப்படுத்தினர்.
கி.மு 500 ஆண்டுக்கு பிறகுதான் ஆரியர்கள் இங்கு வந்தார்கள் என்றால்
அதற்க்கு முன் இங்கு வாழ்ந்த மக்கள் யார் ? வரலாற்று ஆசிரியர்கள் இவர்களை அடையாளபடுத்துவதே  இயக்கர் நாகர் என்ற தமிழ் பெயர்களை கொண்டுதான். .அதை விட இங்கு கிடைத்த அடிப்படை தொழில்நுட்பங்களை கொண்ட மட்பாண்டங்கள் மற்றும் பிற உபகரணங்கள் வடிவமைப்பும் காலபகுதியும்  தமிழ் நாட்டில் கிடைத்த பொருட்களுடன் ஒத்து போகின்றன. அப்படியானால் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் பெரும்கற்காலத்தில்  இங்கு வாழ்த்து எந்த இனம் என்று !!!

1917ஆண்டு கந்தரோடையில் ஆய்வு செய்த சேர் போல் பிரிஸ் அவர்கள் 1919 ஆண்டு டெயிலி நியூஸ் என்ற ஆங்கில பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
“இதுவரை கனவிலும் எண்ணிப் பாராத நமது நாகரிகத்தின் கவரத்தக்க வளர்ச்சிக்கட்டம் பற்றிய சான்றுகள் உண்மையாகவே மண்ணுக்குள் புதைந்து இருப்பதை தமிழ் மக்கள் ஒருகாலத்தில் உணர்வார்கள் என்று நம்புகிறேன்...”

Saturday, December 8, 2012

குமரி வரலாற்றில் ஈழத்தின் பங்கு என்ன-கடல் தின்ற நம் நிலம்-பாகம் மூன்று


.அழிந்த குமரிக்கும் ஈழத்திற்க்கும் என்ன சம்பந்தம்

இக்கேள்விக்கு பதில் குமரி இருந்ததாக கூறப்படும் இடத்தின் வரைபடத்தை பார்த்தாலே புரிந்து விடும்.மடகஸ்கார் அவுஸ்ரேலியா இந்தியாவை இணைத்த குமரியில் நடுப்பகுதிதான் இலங்கை.
இவற்றை புவியியல் ரீதியாக நிருபித்து விட்டாலும்...சுவாரசியாமான இன்னுமொரு ஆதாரமும் உண்டு.
சித்தர்கள் என்ற சொல் என்றும் தமிழர் வரலாற்றுடன் தொடர்புடையது. சித்தர்கள் என்பவர்கள் பல்துறை உயர் அறிவு கொண்டவர்களாக காணப்பட்டவர்கள் இன்றைய அறிவியலை விஞ்சும் சக்தி அவர்களிடம் இருந்ததாக சித்தர்கள் பற்றிய ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
நம் குமரிக்கண்டத்தில் இது வரை நான்கு சிறப்பு வாய்ந்த சித்தர்கள் இருந்திருக்கிறார்கள்
•             காகபுசுண்டர்
•             அகத்தியர்
•             போகர்
•             மகாவதார பாபா
நான் ஏன் சித்தர்களை பற்றி கூறினேன் என்றால் இந்த சித்தர்களின் ஒருவர்தான் குமரிக்கும் ஈழத்திற்கு பிணைப்பை உறுதி செய்கிறார்.
வாசித்த உடனே சில பேர் புரிந்திருப்பீர்கள் அது அகத்தியர்தான் என்று ..
அகத்தியரை குறு முனியாக அறிமுகப்படுத்தும் சமய புராணங்கள்,அகத்தியரது குறிப்புகளையையும் தகவல்களையும் மிகைபடுத்தல்களுடனும் புனைவுகளுடனும் தராமல் இல்லை.அது மட்டும் அல்லாது புராணங்கள் தவிர்ந்த சில இந்திய சித்தர்கள் பற்றிய குறிப்புக்களின் ஆணி வேர்கள் அகத்தியரில்தான் முடிகின்றன.
அகத்தியர் என்ற குமரிக்கண்ட  காலத்து மனிதர் சகலகலாவல்லவன் என்பதால் அவர் எந்த துறை சார்த்தவர் என்பதை வரையறுத்து கூறமுடியவில்லை.அவர் எழுதிய நூல்களை பற்றி எழுதப்போனால் குமரி க்கண்டம் பற்றிய தொடர் அகத்தியர் பற்றியதொடராக மாறிப்போகும்.
ஆதலால் வாருங்கள் நாம் நம் குமரிக்கே செல்வோம். அகத்தியர்தான் ஈழத்துக்கும் குமரிக்கும் இருக்கும் தொடர்புக்கு ஆதாரம் என்று சொன்னேன் அல்லவா?சில வேளை உங்களுக்கே தெரிந்திருக்கும் ஈழத்துக்கும் அகத்தியருக்கும் நெருங்கிய தொடர்புகள் இருக்கின்றன என்பது.
அகத்தியரின் ஈழத்து வருகை பற்றி கூறும் திருக்கரசை புராணம் மிகத்தெளிவாக அகத்தியர் ஈழ வருகை பற்றி கூறுகிறது.சில வேளை சிலர் திருகரசை புராணம் என்பதுபுராணம்தானே .அவைகள்  புனைவுகளும் கற்பனைகளும்தானே என்று கூறலாம். உண்மைதான் புராணங்களில் புனைவுகள் அதிகம்தான்.உறவுகளே ! கடந்த கால சம்பவங்கள் வரலாறுகள் ஆகின்றன.. காலம் செல்லச்செல்ல வரலாறுகள் இதிகாசங்களாகவும் புராணங்களாகவும் மாறுகின்றன .
இன்றுவரை திருகோணமலைப் பட்டினத்தில் இருந்து 23 மைல் தொலைவில் உள்ள மூதூர் பகுதியில் அமைந்துள்ள கங்குவேலியில்  (திருக்கரைசையம்பதி) கிராமத்தில் ஆதி சிவன் கோவில் காணப்படுகின்றது. அங்கிருந்து ஆறு கிலோமீற்றர் தொலைவில் அகத்தியர் ஸ்தாபனமானது மகாவலி கங்கைக் கரையில் வனப்பகுதியில்அமைந்துள்ளது
இங்கு அமைந்துள்ள கற்தூண்களும், அகத்தியர் ஆலயமும், சிவலிங்கமும், வரலாற்று சான்றுகள் பதிவு செய்கின்றன.(அகத்தியர் ஸ்தாபனத்தின் வரலாறு சோழர் காலம் வரை நீள்கிறது)
திருமலையை சென்றடைந்த அகத்தியர், அங்குள்ள கங்குவேலிப் பகுதியில் சிவலிங்கம் அமைத்து, தனது தவவலிமையால் கைலை மலையை வழமைக்கு கொண்டு வந்ததோடு, அங்கிருந்தவாறே சிவன் பார்வதி திருமணத்தை தரிசித்ததாகவும் புனைவு கதைகள்  உள்ளன.
இதன் பின்னர் திருமலையில் வாழ்ந்த அகத்திய முனிவர், தற்பொழுது மாவிலாறு என்று அழைக்கப்படும் அகத்தியனாற்றில் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தியதாகவும் ஐதீகங்கள் கூறுகின்றன.
இது போல இந்திய பெரும் கண்டத்திலும் அகத்தியரை பற்றி பல பல  தடயங்கள் உள்ளன.
இவை அனைத்தையும் இணைத்தால் குமரி என்ற புள்ளியில் முடிகின்றன.ஆகவே மிகக்சாதரணமாக புரிகிறது குமரி காலத்திலும் நம் இருப்பு ஈழத்தில் இருந்திருக்கிறது.

Thursday, September 13, 2012

மூதூர் குன்றுகள் புதையல் பூமியா? பாகம் -2 தமிழரின் இருப்புக்கான ஆதாரங்கள் மூதூரில் !!!

திருகோணமலை மாவட்டத்தில் கிழக்கு மூதூரில் கட்டைபறிச்சானில் உள்ள கணேசபுரம் கிராமத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள குன்றுதான்  கச்சக்கொடி மலை.

மூதூர் நகருக்கு அருகாமையில் உள்ள “ராஜவந்தான் மலை(மூன்றாம் கட்டை மலை) தொடக்கம் இளக்கந்தை என்ற ஊர் வரை நீளும் “படைகுமித்த கல் குன்று  வரையிலான குன்றுத்தொடர்களில் உயரமான குன்று இதுதான். இங்கு காணப்படும் கல்வெட்டு  இலங்கையில் தமிழரின் பண்டைய  இருப்பையும் அவர்களது வியாபார நடவடிக்கைகளுக்கும் ஆதாரமாக  திகழ்கிறது.
இந்த கல்வெட்டை படி எடுத்த பேராசியர் க. இந்திரபாலா  அவர்கள் இதில்
ப ரு ம க தி ச பு த லெனே
சகச சங்கமய
என்ற எழுத்துக்கள் இருப்பததாக கண்டு பிடித்தார்
கச்சக்கொடி மலை
முதலில் இது எந்த மொழிக்கு உரியவர்களின் எழுத்துக்கள் என்பதை ஆராய முற்படும் போது. இலங்கையில் காணப்படும் பல கல்வெட்டுக்கள் பல வியாபார குறிப்புகள் ஆகவும்,சமயம் சார்ந்த குறிப்புக்களாகவும் காணப்படுகின்றன.இதில் வியாபர குறிப்புக்கள் பிராகிருத மற்றும் தமிழ் பிராமிகளின் கலப்பு கொண்ட கல்வெட்டுக்கள் அதிகமாக காணப்படுகிறது. இதற்க்கு ஒரு காரணமும் உள்ளது. அக்கால இலங்கை இந்திய வியாபார ஆவணப்படுத்தல்களுக்கு பிராகிருதம் என்ற எழுத்து வடிவம் ஒரு பொதுவான வடிவமாக காணப்பட்டது.பிராகிருதம் என்பது தமிழ் பிராமி எழுத்து வடிவத்தில் இருந்து ஆரிய மொழி எழுத்து வடிவத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட எழுத்து வரி வடிவம்(கொச்சை தமிழ் பிராமி) இதை திராவிடர்களும் ஆரியர்களும் விளங்கி கொள்ள கூடியதாக இருந்தபடியால் பிராகிருதம் வியாபார ஆவணப்படுத்தல் மொழியாக பயன்பட்டு வந்திருக்கிறது.இன்னும் விளக்கமாக சொல்லப்போனால் தற்போது ஆங்கிலம் வியாபார குறியீடாக காணப்படுவது போல தமிழ் கலந்த பிராகிருதம் தென்னாசிய வர்த்தகத்தில் காணப்பட்டு இருக்கிறது.
இதற்க்கு ஆதாரங்களாக தென்னாசிய பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் கலந்த பிராகிருத கல்வெட்டுக்களும் தமிழ் நாணயங்களும் சான்று.
தமிழ் வியாபாரிகள் தங்களுடைய வியாபர குறிப்புக்களை கூடுதலான தமிழ் பிராமி எழுத்துக்களுடன் பிராகிதத்துடன் கலந்து ஆவணப்படுத்தி உள்ளனர் அப்படி பிராகித மொழி காணப்பட்டாலும் அது தமிழ் பிராமிக்கு உரிய சாயலில் காணப்படும்..
அவ்வாறான குறிப்புத்தான் இந்த மலையில் உள்ள கல்வெட்டு. இந்த குறிப்புகளில் முற்று முழுதாக தமிழ் மொழியிலேயே தனது விளக்கத்தை வெளிப்படுத்துகிறது. ஆனாலும் இவை தமிழ் கலந்த பிராகிருத மொழியில் எழுதப்பட்டு உள்ளது.
இதில் வரும் “ம என்ற எழுத்து முற்று முழுதாக தமிழ் பிராமிக்கு உரிய எழுத்து இலங்கையில் உள்ள அனேகமாக உள்ள கல்வெட்டுக்களில் இந்த தமிழ் பிராமிக்குரிய “ம காணப்படுகிறது.அது மட்டும் அல்லதாது இதில் காணப்படும் ஆகிய எழுத்துக்கள் தமிழகத்தில் கண்டு பிடிக்கபட்ட கல் வெட்டுகளுடன் தொடர்புடையதாக இருக்கிறது.
இந்த கல்வெட்டில் காணப்படும் சொற்களை ஒவ்வொன்றாக சொற்களை ஆராயும் போது
ப ரு ம க
இது ஒரு நூற்றுக்கு நூறு தமிழுக்குரிய சொல்(திராவிட சொல்) .இது ஒரு இடுகுறிப் பெயர் சொல்(abstract noun)தமிழக மற்றும் இலங்கை யில் காணப்படும் கல்வெட்டுகளில் இந்த பட்டப்பெயர் அதிகமாக காணப்படுகிறது.இந்த சொல் சிங்கள வரலாற்று ஆசிரியர்களால் பாளி மொழிக்குரிய தலைவன் என்ற சொல் என்று கூறப்பட்டாலும் .எந்த பாளி இலக்கியங்களிலும் பருமக என்ற சொல் இடம் பெறவில்லை.
அதே வேளை பருமக என்பது பருமகன் என்ற சொல்லாகும் பிராகிருதம் கலந்த தமிழ் பிராமிக் கல்வெட்டுகளில் “ன் என்ற எழுத்து பயன் படுத்த பாடமையின் காரணமாக பருமகன் பருமக யாக காணப்படுகிறது. இந்த பரு மகன் என்ற சொல் பெருமகன் என்ற சொல்லின் மறு வடிவம் ,பெரு மகன் என்பது தலைவனை குறிக்கும் சொல் அரசனாகவும் வியாபார தலைவனாகவும் இதன் அர்த்தத்தை நாம் எடுத்துக்கொள்ளலாம்.(ஆதாரம் –இலங்கையில் தமிழும் தமிழர்களும்)
திச (திசன்)
இது ஒரு தமிழ் சிறப்புப்பெயர் சொல் (proper noun) .இது ஒரு நபருடைய பெயரை குறிப்பிடுகிறது. திச என்பது ஒரு தமிழ் பெயர் சொல் ஆகும்.இதற்க்கு தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் பல சான்றுகள் உள்ளன. தமிழ் நாட்டில் ,அழகன் குளத்தில் உள்ள ஒரு ஊரில் கிடைத்த பண்டைய மட்பாண்டத்தில் திச என்ற பெயர் காணப்படுகிறது. இலங்கையில் அம்பாறை மாவட்டம் குடிவில் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றில் தீகவாவியில் இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த திச என்ற தமிழர் பெயர் காணப்படுகிறது அது மட்டும் அல்லாது அவர் தமிழர் என்ற ஆதாரத்துக்கான குறிப்புக்களும் காணப்படுகிறது. அனுராத புரத்தில் காணப்படும் கல்வெட்டு ஒன்றில் திச என்ற தமிழ் வியாபாரியும் அவரது கூட்டத்தாரும் ஒன்று கூடி வணிகம் நடத்த ஒரு மண்டபத்தை அமைத்தாக கூறப்பட்டுள்ளது.பருமக என்ற சொல்லில் “ன் விடுபட்டது போல இதிலும் “ன் என்ற எழுத்து விடுபட்டுள்ளது.அப்படியானால் இது திசன் என்ற சொல்லாக காணப்படுகிறது.




புத(பூதன்)
புத(பூதன்) என்ற சொல் பல்வேறு அர்த்தங்களை கொண்டதாக காணப்படுகிறது.
இது ஒரு சிறப்புப்பெயர் சொல்லாக (proper noun) காணப்படுகிறது. அதாவது இது ஒரு நபருடைய பெயர் இப்பெயர்கள் கி.பி இரண்டாம் நூற்றாண்டு காலப்பகுதில் காணப்பட்ட பூத வழிபாட்டின் காரணமாக ஏற்பட்டு இருக்கலாம். அனுராத புரத்தில் புத என்ற சொல்லின் பெண்பால் சொற்கலான பூதி ,சிவ்பூதி,சமணபூதி என்பன கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.அது மட்டும் அல்லாது அங்கு கிடைத்த ஒரு கல் வெட்டில் வெள்பூத(வேல் பூதன்) என்ற ஆண் பால் பெயரும் காணப்படுகிறது.அது மட்டும் அல்லாது தமிழர்களின் இருப்பை வெளிப்படுத்தும் சங்க இலக்கியங்களில் புத என்ற சொல்லுடன் தொடர்புடைய பெயர்கள் காணப்படுகிறது.உதாரணமாக பூதனார்,வெண்பூதன் ,பூதப்பாண்டியன் போன்ற பெயர்களை குறிப்பிடலாம்.அது மட்டும் அல்லாது இப்பெயர் யாழ்ப்பான காலம் வரை புழக்கத்தில் இருந்தது.(ஆதாரம் -சங்க கால இலக்கியங்கள்)
அதுமட்டும் அல்லாது இது பொதுப்பெயராகவும்(common noun),  காணப்படுகிறது.அதாவது புத்திரன் அல்லது புதல்வன் என்ற அர்த்தங்களை கொண்டு காணப்படுகிறது.(ஆதாரம்- பரண விதான நூல்கள்)






லேனே
இந்த சொல் இரண்டு அர்த்தங்களை கொண்டு காணப்படுகிறது .ஒன்று இது ஒரு பொதுப்பெயராக(common noun), இடைச்சொல்லாகவும்,வினைசொல்லாகவும் (verb)காணப்படுகிறது. லேனே என்ற சொல்லை பெயர் சொல்லாக பார்க்கும்மிடத்து  ஒரு இடத்தை குறிப்பதாக இருக்கிறது அதாவது ஒரு நிலையம் ஒன்று கூடும் இடம் ,வேலைக்க்களம்,பள்ளிக்கூடம் போன்ற அர்த்தங்களை வெளிப்படுத்துகிறது.
இதனை வினைச்சொல்லாக பார்க்கும் மிடத்து செய்தான் நிறுவினான்.இருந்தான் என்ற அர்த்தங்களை கொண்டதாக காணப்படுகிறது.
இதனை இடைசொல்லாக பார்க்கும் போது “ஆல் (உதாரணம் அவனால்)என்ற அர்த்தத்தை கொண்டதாக காணப்படுகிறது (உதவி–அரங்கராஜ்,செம்மொழி ஆய்வு மையம், சென்னை)


சகச
இந்த சொல் எல்லோரும் ,எல்லாவற்றுக்கும், என்ற அர்த்தங்களை கொண்டது (உதவி–அரங்கராஜ்,செம்மொழி ஆய்வு மையம், சென்னை)

சங்கமய
இந்த சொல் இரண்டு அர்த்தங்களை கொண்டு காணப்படுகிறது.கூட்டுப்பெயராகவும்,வினைச்சொல்லாகவும் காணப்படுகிறது.இந்த சொல்லை கூட்டுப்பெயராக பார்க்கும் மிடத்து சங்கம் என்ற பொருளை தருகிறது அதாவது மனிதர் கூட்டம்.
வினைச்சொல்லாக பார்க்கும்மிடத்து ,அமைத்தல் என்ற பொருளை தருகிறது (உதவி–அரங்கராஜ்,செம்மொழி ஆய்வு மையம், சென்னை)


இந்த கல்வெட்டில் என்ன கூறப்பட்டுள்ளது? யாருக்குரியது?

ப ரு ம க தி ச பு த லெனே
சகச சங்கமய
பெருமகன் திசன் புத்திரன் ஆல் எல்லாவற்றுக்கும் அமைக்கபட்டது

இரண்டாம் நூற்றாண்டு காலப்பகுதி தமிழகத்திலும் இலங்கையிலும் வியாபாரம் புரட்சி ஏற்றபட்ட காலம்.இலங்கை துறைமுகங்கள் அதனை அண்டிய பகுதிகளும் வணிகர்களின் தங்குமிடங்களாகவும் களஞ்சிய சாலைகளாகவும்,அவர்களுக்குரிய வழிபாட்டு தளங்களாலும் காணப்பட்டு இருக்கிறது.கிழக்கு இலங்கையில் இலங்கைத்துறை முகத்துவாரமும் ஒரு பண்டைய வணிக மையம் ஆகும்.
அது மட்டும் அல்லாது திரியாய் வரை வணிகர்களின் போக்குவரத்தும் செயல்பாடுகளும் அமைத்திருக்கிறது என்பதற்கு திரியாய் கல்வெட்டுக்கள் சான்று பகிர்கின்றன.இலங்கை துறை முகத்துவாரத்தில் இருந்து திரியாய் செல்வதற்கு கொட்டியார பகுதியைத்தான் வியாபாரிகள் கடந்து செல்ல வேண்டும்.அவ்வாறு கடந்து செல்லும் பாதையில்தான் இவ் மலைக்குன்றுகள் காணப்படுகின்றன.இம் மலைகள் அவர்களுக்கு பாதுகாப்பு அரனாகவும் தங்குவதற்கு இசைவான இயற்கை குகைகளும் காணப்படுவதால் அவர்கள் இம்மலையை தங்குமிடமாகவும் சந்திப்பு நிலையங்களாகவும் பயன்படுத்தி இருக்கிறார்கள்.அதுமட்டும் அல்லாது இம்மலையில் செயற்கையாக அமைக்கப்பட்ட உரல்,பாறைகளில் ஏற்படுத்தப்பட்ட குழிகள்,சுடு மண் கற்கள்(பண்டைய கட்டிட எச்சங்கள்)  என்பன மனிதர் தங்கிய இடம் என்பதை உறுதி செய்கின்றன.


எனவே இம்மலை கல்வெட்டுக்கள் இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த தமிழ் வியாபாரிகளின்  தங்குமிடம் அல்லது சந்திக்கும் இடம்  பற்றிய குறிப்புகள் ஆகும்.
இம்மலையை பயன் படுத்திய வியாபார தலைவனால் இங்கு எதோ அமைக்கப்பட்டு இருக்கிறது
எக்காலத்துகுரியது?
.இந்த கல்வெட்டுக்களில் காணப்படும் திசன் ,பூதன் ஆகிய பெயர்கள் இரண்டாம் நூற்றாண்டுக்கு உரியது என்பதை நிருபிக்கும் வகையில் அமைந்துள்ளன ,புத சொல்பெயர் கி.பி இரண்டாம் நூற்றாண்டு காலப்பகுதில் காணப்பட்ட பூத வழிபாட்டின் அடிப்படையாக கொண்டு காணப்படுகிறது.
பூதன் என்ற பெயர் சங்க காலத்துக்குரிய பெயர் ,கி.பி இரண்டாம் நூற்றாண்டு கூட சங்க காலக்காலம் . இலங்கையில் அனுராத புரத்திலும்,அம்பாறையிலும் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாம் நூற்றாண்டுக்குரிய கல்வெட்டுக்கள் திசன் என்ற இரு தமிழர்களை பற்றியதாக உள்ளது.அதுமட்டும் அல்லாது இதை படி எடுத்த இந்திர பாலா அவர்கள் இதை இரண்டாம் நூற்றாண்டுக்கானது என்று உறுதி செய்துள்ளார்.
.
இவ்வாறு திருகோணமலையின் பண்டைய தமிழ் மக்களின் வரலாற்றை பறைசாற்றி நிமிர்ந்து நிற்கிறது இக்குன்று!!

Friday, August 24, 2012

நொக்ஸ் மரம் (Knox Tree)


மூதூர் (கொட்டியாரம்)  எத்தனையோ பல விடயங்களுக்குப் பெயர் பெற்றது. இங்கு ஆங்கிலேயர் ஒருவரின் பெயரில் பிரபலமான வீதி ஒன்று மிக நீண்ட காலமாக இருந்து வருகின்றது. அதுதான் நொக்ஸ் வீதி. மூதூர் நகரின் முக்கியமான வீதிகளில் ஒன்றாகவூள்ள இந்த நொக்ஸ் வீதியூடன் தொடர்புடைய வரலாறு ஒன்றுள்ளது. அந்த வரலாற்றுக்குச் சான்றாக ஒரு புளியை மரம் உள்ளது. கி.பி. 1668ம் ஆண்டளவில் ஆங்கிலேய மாலுமியான றொபட் நொக்ஸ் தலைமையில் பிரயாணம் புரிந்த ‘ஆன்’ (ANN) எனும் கப்பல் புயலில் சிக்கி நமது கொட்டியாரக்குடாவினுhடாக மூதுhரின் கோட்டையாற்றுக் கரையை வந்தடைந்தது. அந்த மாலுமியூம் அவனுடன் வந்திருந்த அவனது இளைஞனாகிய மகன் றொபட் நொக்ஸ் (ஜுனியர்) மற்றும் அவனது நண்பர்கள் குழுவினரும் அங்கிருந்த ஒரு புளியை மரத்தின் கீழ் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த வேளையில் அன்றைய கண்டி இராச்சிய மன்னனின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.17ம் நுhற்றாண்டின் நடுப்பகுதியில் நிகழ்ந்த இந்த வரலாற்றுச் சம்பவத்தை நினைவூ கூருவதற்காக பின்வந்து இலங்கையைக் கைப்பற்றிய ஆங்கிலேயர்களின் அரசு 1893ல் அந்தப் புளியமரத்தின் கீழ் ஒரு நடுகல்லை இட்டது. அந்தக் கல் இன்று வரை உள்ளது. 1964ம் ஆண்டு மார்கழி மாதத்தில் வீசிய புயலில் நிஜ மரம் வீழ்ந்த பின்பு அதே இடத்தில் இப்போது இருப்பது பின்பு இளம் கன்றாக நடப்பட்டு வளர்ந்துள்ள இளம் புளியை மரமாகும். அதனையே இப்போதும் நொக்ஸ் மரம் (Knox Tree) என அழைக்கின்றோம் ..




Pa albero Knox in lingua italiana......
 E 'famosa per molte cose Mutur. Una delle strade più famose del nome di uno dei qui britannico ed è stato per un lungo periodo di tempo. Che noks Road. Strada nella città principale proverbio strade onrakavulla h legata alla storia di vitiyutan noks corona. La prova della storia è un albero di tamarindo. DC Nel 1668 l'esploratore britannico che stava viaggiando in noks ropat 'ma' (ANN), una nave sorpreso dalla tempesta, come il nostro proverbio h Rin Tin raggiunto confine kottaiyarru. La malumiyum era con suo figlio ilainanakiya ropat noks (Jr.) e dei suoi amici e l'equipaggio si trova un albero di tamarindo, il resto della giornata di lavoro, Kandy Unito, re autorità hanno arrestato 17 E Nu h rrant nel bel mezzo del centro storico incidente kuruvatark ricorda la riuscita dello Sri Lanka e catturato il governo britannico nel 1893, la messa a dimora in puliyamarat incaricato uno. La pietra è fino ad oggi. Nave in una tempesta nel dicembre del 1964, dopo la caduta di alberi veri piantati al suo posto è ora il vitello e la crescita giovane albero di tamarindo

 (chenthooran kalirajah)

Sunday, August 5, 2012

உங்களுக்கு வந்தா இரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்டினியா ???முஹம்மத் யூசுப்களே தமிழன் தமிழந்தாண்டா!!!!!

முகநூல் முஸ்லிம் நண்பர் முஹம்மது யூசுப் அவர்கள் வீரகேசரி பத்திரிகை facebook பக்கத்தில்  தமிழர்கள் அழியப் போகிறார்கள் ,தமிழர்களுக்கு தண்ணீர் கூட கொடுக்க கூடாது,தமிழருக்கு அதிகாரங்கள் கொடுக்க கூடாது,இன்னும் பல சாபங்களையும் ...துவேச பின்னூட்டங்களையும் இட்டார்  (அவற்றைஇப்போதுஅகற்றிவிட்டார்கள்) நான்அந்தநபரைமட்டும்அல்லபலநபர்கள்தங்களுடைய துவேச கருத்துக்களை ஊடகங்கள் ஊடாக வெளியிட்டதை நான் பார்த்திருக்கிறேன்... இந்த முஹம்மது யூசுப்களுக்கு... சில சம்பவங்கள் கூறுகிறேன் ஏன் என்றால் நாங்களும்(மூதூர் தமிழ் மக்கள்) கெட்ட  முஸ்லிம்களால் பாதிக்கபட்டவர்கள்தான்.. இந்த பிரச்னையை பூரணமாக அனுபவித்தவர்கள் மூதூர் தமிழ் பேசும் மக்கள்தான்
எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து மூதூர் நகர பகுதியில் இருக்கும் முஸ்லிம் மக்களுக்கும் நகரத்தை சுற்றி இருக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் எப்போதும் எதோ தகராறு இருந்து கொண்டே இருக்கும்.. சில சமயங்கள் தமிழ் மக்கள் பயத்தின் காரணமாக மூதூர் நகரத்தை விட்டு விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த கட்டைபறிச்சான் கிராமத்துக்கு அகதிகளாக வந்த சம்பவங்களும் உள்ளன. சில நேரங்களில் அவசர விபத்துகள் நோய்களுக்கு கூட மூதூர் தள வைத்தியசாலைக்கு செல்லமுடியாத சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது ஒரு சமயம் முஸ்லிம்கள் எறிந்த நாட்டு வெடி குண்டு வெடித்ததில் சம்பூரை சேர்ந்த ஒருவர் மரணம் அடைந்த சம்பவமும் உள்ளன.அச்சமயத்தில் யுத்த நிறுத்த கண்காணிப்பு குழு இல்லாவிட்டால் அது பாரிய பிரச்சனையாக உருவாகி இருக்கும்.எங்கள் ஊரில் எல்லாம் ஜிகாத் என்ற அமைப்பு மூதூர் முஸ்லிம்கள் உருவாக்கி இருப்பதாக கதைத்து கொள்வார்கள் உண்மையோ பொய்யோ அந்த அல்லாவுக்குத்தான் தெரியும்..

மூதூர் கிழக்கு பகுதியை ராணுவத்தினர் கைப்பற்றிய போது நடந்த களவுச் சம்பவங்கள் எப்படி நடந்தது யுத்தத்தின் போது ராணுவத்தினர் போரில்தான் இடுபட்டனர்.அவர்களுக்கு அதுக்கே நேரம் இருந்திருக்காது ஆனால் நீங்கள் பின்னால் வந்து ....ம்ம்ம்ம் ஒரு வீட்டில் ஒரு மண் சட்டிய கூட விட்டிங்களா??? உங்களுக்கு தெரியும் அந்த பழி ராணுவத்தினர் மீதுதான் விழும்.செய்யாத பிழையை நாங்கள் ஏன் அவர்கள் மீது தூக்கிபோட வேண்டும்...இது என் காலப்பகுதியில் நடந்தது.இது நான் கூறியது சம்பவங்களின் சுருக்கம். என்னுடைய அனுபவம். நான் கூறியது சம்பவங்களின் சுருக்கம்.

திரு-செபஸ்டியன்(வலைப்பதிவாளர்) அவர்கள் (((9(99(900[] நீங்கள் செய்த அநியாங்களை பக்கம் பக்கமாக எழுதி இருக்கிறார்.அவர் எழுதியதிற்கு காரணம் யாரோ ஒரு முஸ்லிம் நபருடைய துவேச பதிவு.
திரு-செபஸ்டியன் அவர்களால் நீதி அமைச்சர் கவனத்திற்கு கொண்டு வந்த பதிவின் சுருக்கம்
நீதி அமைச்சர் கவனத்துக்கு:
இங்கே கீழே தரப்படும் விடங்களை மூதூரிலிருந்து விரட்டப் பட்ட தமிழ் மக்களின் சார்பில் முன்வைக்கிறேன்.
ஆலஞ்சேனை எப்படி ஆலிம்நகராக மாறியது எப்படி?
மூதூர் ஜெட்டியிலிருந்து புளியடிச்சந்தி வரைக்கும் இருந்த தமிழ் மக்களுக்கு நடந்தது என்னஇவர்கள் எங்கே எப்படி இருந்த இடம் தெரியாமல் போனார்கள் இந்த வழியே இருந்த நவரத்தினம் மதுபானக் கடை அடையாளமாக இருந்நது எப்படி இப்போ விளையாட்டு அரங்காக மாறியுள்ளதுஏன்எப்படி?

முஸ்லீம் பிரதேசங்களில் இருந்த இராணுவ முகாம்கள் எப்படி உடனடியாக அகற்றப்படுகிறது இதற்காக காரணங்கள் என்னமுன்பு தமிழர்களின் கிராமமான 64ல் இப்போது முஸ்லீம் கிராமமாக மாறியுள்ளது எப்படிமூதூர் பல நோக்கு கூட்டுறவுச்சங்கம் உதவி முகாமையாளர் ராமச்சந்திரன் சலீம் தலைமையில் கொல்லப்பட்டது?
ஏன்எப்படிமூதூர் பிரதேச சபையில் ஒரு தமிழர் உதவி பிரதி தலைவராக கூட இல்லை ஆனால் வடகிழக்கின் வேறு இடங்களில் உள்ள பிரதேசங்களில் முஸ்லீம்கள் சிறுபான்மையாக உள்ள இடங்களில்(யாழ்) முஸ்லீம்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்கப்படுகின்றது முஸ்லீம் பிரதேசங்களில் உள்ள தமிழர் சிறுபான்மையாக உள்ள இடங்களில் மூஸ்லீம்களால் வழங்கப்படுவதில்லை.

இப்படியான தமிழர் பிரதிநிதித்துவம் பற்றிய பேச்சின் காரணமாகவே முஸலீம்களால் வி எஸ் தங்கராசா ஜிகாத்தினால் கொல்ப்பட்டார் இது தமிழ் கிராமங்களை இணைத்து பிரதேச சபை உருவாக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டதாகவும் இது சில பகுதிகளில் முஸ்லீம்களை சிறுபான்மையினராக்குவதாகவும் கருதியியே இவரது கொலை நடைபெற்றதாக பேசப்படுகின்றது. இதே போலவே மூதூரில் விஏ தங்கராசாவும் டாக்டர் அந்தோனியும்(கத்தோலிக்கர்) கொல்ப்பட்டதாகவும் அறியப்படுகின்றது.

தமிழர் பிரதேசத்திற்காக பஸ்ஓட அனுமதிகொடாமல் முஸ்லீம் அரசியல்வாதிகள் பார்த்துக் கொண்டதிற்கான அடிப்படைக்காரணம் என்னபிரதேசங்களில் முஸ்லீம் ஆட்டோகாரர்களின் உழைப்பிற்காகவே அதுமட்டுமல்ல மூதூர் அண்டிய பிரதேசங்களிலும் தமிழ் ஒருவர் இது வரை ஆட்டோ ஓட்ட முடியாது அப்படி ஒருவர் ஆட்டோ ஓடினால் அவர் கொல்ப்படுவார்.(இது சந்தேகத்திற்க்கு இடமில்லாத கருத்து) தமிழர் பெரும்பான்மையினராக உள்ள இடங்களில் இருக்கும் சிறுபான்மை முஸ்லீம்களுக்கு கிடைக்கும் பிரதிநிதித்துவம் பாதுகாப்பு முஸ்லீம் பகுதிகளில் சிறுபான்மையினராக உள்ள தமிழர்க்கு வழங்கப்படுவதில்லை இத பற்றி கேட்போது முஸ்லீம்களுடன் மக்களுடன் மட்டுமே உறவுகொள் சகோதரன் என்று சொல் மற்வர்களுடன் அல்ல என்ற கருத்துப்பட பதில் வந்ததாம்.

மூதூர் பல நோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் மனேஜர் நாகரத்தினம் மயில்வாகனம் பள்ளி குடியிருப்பை சேர்ந்தவர் வேலை முடிந்து வரும் போது முஸ்லீம்களால் துரத்தப்பட்டு அடிக்கப்பட்டு இனிமெல் தமிழன் முஸ்லீம் பிரதேசத்திற்க்கு வேலைக்கு வரக்கூடாது என் மிரட்டப்பட்டார் ஏன்?(உறவினர்கள் சாட்சியமாக உள்ளனர்)
1990களில் சலீம் (முஸ்லீம் பயங்கரவாதி) தலைமையில் மூதூரில் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது எப்படியார் இந்த அலுவல்களுக்கு உறுதுணையாக இருந்தது விலாசங்களை பார்த்து அந்தக் காலங்களில் தமிழ் இளைஞர்கள் தெரிவு செய்யப்பட்டு கொலை செய்ப்பட்டனர் விசாரணைகள் எங்கேஏன் இது பற்றி முஸ்லீம் புத்திஜீவிகள் வாய் திறக்கவில்லை?

எக்காலத்திலும் கிழக்கில் தமிழர்களால் இப்படியான சம்பவங்கள் நடாத்தப்படவில்லை (ஆதாரம்: எமில்டர் பற்றிமாகரன் நொக்சர்3)(மனித உரிமைகள் குழுவினர்கு கூறியுள்ளனர்) இது வரையில் எந்த ஒரு முஸ்லீம் தலைவர்களும் இதற்காக மன்னிப்பு கேட்டதில்லை ஏன்என்ற கேள்வி தமிழர்களிடையே எழுகின்றதுஏன் இது பற்றி முஸ்லீம் புத்திஜீவிகள் வாய் திறக்கவில்லைஇவர்கள் மனிதர்களா?
உடையார் குடும்பத்திற்க்கு சொந்தமான நிலம் ஆலங்கேணியில் கைலாசபிள்ளை குடும்பம் செல்வம் குடும்பம் ஆகியோர்களை கடத்தி முஸ்லீம்களே கொலை செய்தனர் என்றும் இவர்களின் சொந்த நிலங்கள் முஸ்லீம்கள் பெயருக்கு மாற்ப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகின்றது. எப்படி மாற்றப்பட்டதுஎந்த அரசியல்வாதி இதன் பின்னால்? (2006ல் மணற்சேனையில் விறகு வெட்டி விற்கும் தமிழரை முஸ்லீம் பகுதிகளில் விற்பவர் கொலைசெய்து உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது (அவர்களது லான்மாஸ்டர் கையளிக்கப்படவில்லை) இந்த லான் மாஸ்டர் இன்றும் முஸ்லீம்களால் பாவிக்கப்படுகின்றதே அது எப்படி முடிகிறது?

யோகன் மகன் ஜதீஸ்வரனை பஸ்சிலிருந்து இறக்கி தமிழனை கொலை செய்ய வேண்டும் என்று கொலை செய்ப்பட்டது இவற்றிக்காக எந்த மூதூர் இஸ்லாமிய அமைப்பினரும் மன்னிப்போ அனுதாபமோ பேசவில்லைஏன்?
இப்போதும் 58 பிரதேசத்ற்க்கு தமிழர்கள் போக முடியாத நிலையே உள்ளதாக அறியப்படுகின்றது இந்த கோயிலும் குடியிருப்பு காணிகளும் மக்களிடம் மீள கையளிக்கப்படுமாஇந்த விடயத்தில் முஸ்லீம்களின் நிலைப்பாடுதான் என்ன?
முஸ்லீம்கள் சிறுபான்மையினராக உள்ள இடங்களில் தமிழர்களால் முஸ்லீம்கள் இப்படி இம்மிசைக்கப்படவில்லை என்பது ஆழமானகருத்து. மூதூரில் புனித அந்தோனியார் கோவில் தாக்குதலில் முஸ்லீம்கள் யேசுவின் சிலையை உடைத்து கடலில் போட்டனர் இதை மீள எடுத்து வந்து சிலையை திரும்ப நிலை நிறுத்தியதிற்காக டாக்டர் அந்தோனியை முஸ்லிம்கள் கொலை செய்யதனர் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் பிரதி தலைவர் ரங்காஇ சம்பூர் கூனித்தீவு சிவராசாவைஇ தபாற்கந்தோர் பால்ராஜ் ஆசிரியர் வசந்தன் (கணித ஆசிரியர் இவர்களை கடத்தி கொலை செய்தனர்.

மணல்ச்சேனை 64ல் பஸ்சில் கொலை செய்யப்பட்ட தமிழர்கள் பலர் ஏன் இது பற்றி முஸ்லீம் புத்திஜீவிகள் வாய் திறக்கவில்லைஇவர்கள் மனிதர்கள் இல்லையாஎப்படி முஸ்லீம் தமிழ் இன உறவுகள் பற்றி பேசமுடியும்? 1994ல் தேர்தல் காலத்தில் மூஸ்லீம் காங்கிரஸ் வெற்றிக்காக ஆனன்சேனை மூதூர் ரஞ்சன் மோகன் போன்றோர் கடத்தி கொலை செய்ப்பட்டனர் ராஜதுரை நாகேஸ்வரன் ராஜதுரை ரவிச்சந்திரன் சம்பூர் கட்டைப்பறிச்சான் கொலைகள் முஸ்லீம்களால் தமிழர்கள் இழந்த பிரதேசங்கள் உடைமைகள் உயிர்கள் மிகப் பல இதைப்பற்றி முஸ்லிம் தலைவரகள் பெரிதாக கண்டு கொள்ளவில்லை முஸ்லீம்களால் நடைபெற்ற கொலைகளுக்கும் மன்னிப்பும் கேட்கவுமில்லை. எப்படி முஸ்லீம் தமிழ் இன உறவுகள் பற்றி பேசமுடியும்ஏன் இது பற்றி முஸ்லீம் புத்திஜீவிகள் வாய் திறக்கவில்லைஇவர்கள் மனிதர்கள் இல்லையாஎப்படி முஸ்லீம் தமிழ் இன உறவுகள் பற்றி பேசமுடியும்?
திருகோணமலை லிங்க நகரில் 5 அல்லது 6 முஸ்லீம் குடும்பங்களே இருந்த காலத்தில் இவர்களுக்கு எந்த தமிழர்களும் எந்த இடைஞசல்களும் செய்வில்லை இவர்கள் திரகோணமலையில் பிள்ளையார் கோவிலுக்கு பக்கத்தே பள்விவாசல் கட்ட தமிழரே நிலம் வழங்கினார் இந்தப்பள்ளிவாசல் என்றுமே தாக்கப்படவில்லை மூதூரில் பல தமிழர்கள் தமிழர் கோவில்கள் சேர்ச்சுகள் தாகக்பட்டபோதும் இவைகள் பத்திரமாகவே இருந்தன தமிழர்கள் முஸ்லீம்களை இந்தக்காலங்களில் ஜனநாயகமாகவே நடாத்தினர்.

முஸ்லீம்களில் யார் இந்த சம்பவங்களுக்கு பொறுப்பானவர்கள் என்பது வெளியே வராத வரைக்கும் மூதூரில் நடைபெற்ற பல கொலைகளின் சாட்டியங்கள் ஜ நா மனித உரிமைக் குழுவிடம் பல பதியப்பட்டுள்ளன அதில் பல ஜரோப்பாவில் உள்ள சில முஸ்லீம் எழுத்தாளர்களுடைய பெயர்களும் விபரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
பொதுவாகவே முஸ்லீம்கள் தமது மதம் விடயத்தில் மட்டும் அக்கறையை காட்டிக்கொண்டு அதில் தமது எல்லா விடயங்களையும் வைத்து சவாரி செய்து கொள்வார்கள் தேவைப்படும்போது மதம் என்றும் இனம் என்றும் இலங்கை என்றும் பேசிக்கொள்கிறார்கள்
அஸ்ரப் காலத்தில் தமிழர்களின் காணிகளில் கேட்காமலே துறைமுகம் கட்டப்பட்டும் அந்த காணி சொந்தக்கார் வழக்கு பதிவுசெய்தும் நட்ட ஈடு கொடுக்காமல் இழுபறிப்பட்டது. இப்டியாக என்றுமே முஸ்லீம் நிலங்களுக்கு அஸ்ரப் செய்யவில்லை.
உவைஸ்ஜை புலிகள் சுட்டதும் பாலைநகர் தமிழர்களை (சுத்திகரிப்பு தொழிலாளிகள்)யும் இந்திய வம்சாவழியினரையும் முஸ்லீம்கள் வீடு புகுந்து கொலைகள் செய்தனர்
எத்தனை தமிழ் பிரதேசங்கள் இஸ்லாமிய பெயர் பெற்றன யார் இப்படி மாற்ற்ம செய்கிறார்கள் இதற்கான அடிப்படைகள் என்னஅரசில் எப்படி இதற்காக அனுமதி கொடுக்கப்படுகிறது
மூதூர் கல்வி பணிப்பாளர் ஆர் குணராசாவுடனான பல பிரச்சினைகள் வெளிவரல் வேண்டும்.இந்த பிரச்சினைகளில் சம்பந்தப்பட்ட முஸ்லீம் அமைப்பினர் யார்எதற்காகசெய்தனர் போன்றன வெளிப்படுத்தப்படல் வேண்டும் நீதி வெளிவர வேண்டும் இப்படியான சம்பவங்களுக்கு நீதி கிடைக்காமல் முஸ்லீம்களை தமிழர்கள் எப்படி சகோதர உறவுடன் அணுக முடியும் இவையே தமிழர்களில் பலர் முஸ்லீம்களுக்கு எதிரான குரோதங்களுக்கான காரணங்களுமாகும்.
அரசியல்வாதிகள் தமிழ் பள்ளி ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை முஸ்லிம் ஆசிரியர்களால் நிரப்பி அவர்களை தமிழ் பாடசாலைகளில் வைத்து படிப்பித்தல் தொழிலை ஆரம்பித்து விட்டு பின்னர் நிரந்தர ஆசிரியர்களாக முஸ்லீம் கல்லூரிகளில் நியமித்தனர். ஜேவிபியினர் திருமலையில் ஒரு கருத்தரங்கு கூட்டத்தில் முஸ்லீம் அதிகாரிகளின் பாகுபாடு பற்றி பேசினர் இதன்போது பேசும்போது புலிகளின் பயங்கரவாத்ததைவிட முஸ்லீம்களின் அடிப்படைவாதம் மிக ஆபத்தானது என்றும் இதில் இலங்கையில் ஜிகாத் அல்கைடா புனித இஸ்லாமிய விடுதலை முன்னணிகள் மிக ஆபத்தானவைகள் எனவும் பேசினார்.
இப்படி பலதரப்பட்ட பிரச்சினைகளை இஸ்லாமியர்களால் இஸ்லாத்தின் பெயரால் மூதூர் சார்ந்த பிரதேசங்களின் மிகச்சிலவே இங்கு குறிப்பிட்டவைகள் மிகச்சிலவே. நீதி நியாயம் பேசுவது என்றால் இருபக்கமும் பேச வேண்டும்

மூதூர் பிரதேசத்தில் நடந்த சம்பவங்கள் இவை இப்படி எத்தனையோ பிரதேசங்களில் நடந்து இருக்கிறது.அவர் வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற சம்பவங்களையும் எழுதி இருந்தார் அது சேர்க்கப்படவில்லை.
 முஹம்மது யூசுப்களே  தமிழர்கள் பட்ட துன்பத்தை அளவுகளால் கூட அளக்க முடியாது. ஆனாலும் அவர்கள் இறைமையை விட்டு கொடுப்பதில்லை.அவர்களுக்கு யாரும் தண்ணீர் கொடுக்க தேவை இல்லை அவர்கள் அவர்களின் பூமியில் குடித்து கொள்வார்கள். தமிழர்கள் இன்னமும் இலங்கையில் இருக்கிறார்கள் அவர்கள் அதிகாரத்தை எப்படியாவது பெற்றுவிடுவார்கள்.எங்களிடம் நல்ல அரசியல்வாதிகள் இருக்கிறார்கள் அரசதரப்பிலும் எதிர்தரப்பிலும்.
இவ்வாறு முஹம்மது யூசுப் போல இப்பக்கம்  ஒவ்வொருதமிழனும்துவேசத்தனமாகபேசத்தொடங்கினால்,....????
நீங்கள் எங்கள் மீது கொட்டிய கழிவுகளை நாங்கள் குப்பை தொட்டியில் போட்டு விட்டோம்,தயவு செய்து அவ் குப்பை தொட்டிகளை உங்கள் மீது கொட்ட எந்த தமிழனுக்கும் சந்தர்பத்தை ஏற்படுத்தாதீர்கள்.
முஹம்மத் யூசுப்களே !!!!!நீங்கள் அங்கும் இல்லை இங்கும் இல்லை எங்கு போக போகிறிர்கள்???
பதில் சொல்லும் அளவுக்கு அந்த முஹம்மத் யூசுப் ஒண்டும் அவ்வளவு பெரிய அப்பாடக்கர் இல்லை.அவனை போல பலர் இவ்வாறு கருத்து தெரிவிப்பதால் அவர்களுக்கான பதிலாக இதை எடுத்துக்கொள்ளலாம். நல்ல முஸ்லிம்களும் தமிழர்களும் ஒன்றாகத்தான் இருக்கின்றனர். உங்களை போல முட்டாள்கள்தான் இப்படி எண்ணம் கொள்வார்கள்

பின் குறிப்பு-இந்த பதிவு முஹம்மத் யூசுப்க்களை பற்றியது மட்டுமே முஸ்லிம்களை பற்றியது அல்ல.
ஒரு முகநூல் நண்பரின் முஹம்மத் யூசுப்புக்கான பதில்கள் 
"ஆனால்தமிழர்கள்முஸ்லிம்களைதமிழர்களாகசுட்டிகாட்டிஅவர்களின்நிலபுலன்களைஆட்சிசெய்யநிர்வகிக்கஏன்நீதிசெழுத்தஆசைபடுகின்றனர்"
இது உங்களுடைய கருத்து.. MOHAMAD YOOSUF..உண்மை என்ன தெரியுமா? இலங்கை தமிழன் ஆண்ட நாடு... வந்தவர்கள் எல்லா
ம் ஒட்டிக்கொண்டார்கள்... உரிமை செலுத்தினார்கள்.. ஒதுங்கி போக தமிழர்கள் ஒண்டும் ஒண்ட வந்த பிடாரிகள் இல்லை.. உரிமை செலுத்த தகுதியானவர்கள்.. உரிமை செலுத்துகிறார்கள்... நீங்கள் ஏன் உரிமை கேட்கவில்லை..? உங்களுக்கு தெரிந்திருக்கிறது? நில புலன்களுக்கு யார் உரிமை கொண்டாடலாம்? யார் மூடிட்டு இருக்கலாம் என்று.

TheerththigaSathiyaseelan "உங்களுக்குநீதிகிடைக்கபோவதும்இல்லைஉங்கள்இனம்உறுப்படபோவதும்இல்லை" அப்படியாசொன்னீர்கள்MOHAMAD YOOSUF?
"""தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்.. மறுபடியும் தர்மம் வெல்லும்""" இதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்