Saturday, March 24, 2012

கிழக்கிற்கு தனியான தொல்பொருள் கொள்கை?


அகழ்வாராய்ச்சி தொடர்பில் கிழக்கு மாகாணத்தில் தனியான சில கொள்கைகள் பின்பற்றப்பட உள்ளன.
தொல்பொருள் அமைச்சு, தொல்பொருள் ஆணையாளர் உள்ளிட்ட தரப்பினர் இந்தக் கொள்கை வகுப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முழுமையான அதிகாரமுடைய தொல்பொருள் ஆணையாளர் நாயகம் ஒருவரை கிழக்கு மாகாணத்திற்கு என தனியாக நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நிலக்கீழ், நிலத்திற்கு மேல், கடலோரம், வாவி, குளம், அருவி சகல தொல்பொருட்கள் தொடர்பிலும், இறுதித் தீர்மானம் எடுக்கும் முழு அதிகாரம் மாகாண தொல்பொருள் ஆணையாளாருக்கு வழங்கப்படவுள்ளது.
புதிய அகழ்வாராய்ச்சி கொள்கையில், தமிழ் மொழியில் கூறப்பட்டுள்ள விடயங்களை முதன்மையாகக் கருதி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் பல அரிய தொல்பொருள் பொக்கிஷங்கள் கிழக்கு மாகாணத்தில் காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
எதோ நல்லதா நடந்தா  இன்னும் ஒன்ட நாங்க செய்ய தயாராக இருக்க வேண்டும்.
தமிழர் தாயகம்’ கபளீகரம் செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் எண்ணிலடங்காதவை.  கால தேவைக்கேற்றாற்போல் பல கபளிகர வரலாறு ஆதாரத்துடன் மேலும் பல தமிழர்வாழ்விடங்களில் இருந்து வெளிவரல் வேண்டும். இதுவே தமிழர், வரலாற்றுக்கு செய்யும் சேவையுமாகும். 
சிங்கள வரலாற்று ஆசிரியர்களைப் பொறுத்த வரையில் தமிழர்களின் உண்மை வரலாறு பற்றி நன்கு தெரியும். சிங்களத் தேசியத்தின் நன்மை கருதி உண்மையை மறைத்து ஊமையாகியுள்ளார்கள். 
எனவே, இவ்முரண்பாட்டிற்கு தீர்வு காண வழிதான் என்ன?
சர்வதேசத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட நடுநிலைமை வாதிகள் கொண்ட பொதுச்சபைக்குதமிழர் வரலாற்றைஏற்ருகொள்லாத புத்தி ஜீவிகளை அழைக்க வேண்டும். நடுநிலைமை வாதிகளின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளும் நியதியும் வகுக்கப்பட வேண்டும். இதற்கான வேலைத்திட்டங்களை உருவாக்குவதற்கு பல கோணங்களில் இருந்தும் புலம்பெயர் வாழ் இலங்கை வாழ் வரலாற்று  ஆய்வாளர்கள் ஏற்படுத்த வேண்டும். இதற்கு துணையாக  ஈழத்தமிழர்களில் பற்றுக்கொண்ட ஆர்வலர்களும் களத்தில் இறங்கவேண்டும். நிச்சயம் நாம் வரலாற்றை நாம் மீட்க்க முடியும் .

2 comments:

  1. இது எம் ஆவணங்களை எடுத்து ஒழிப்பதற்கான கபட நாடகம் நண்பரே

    ReplyDelete
  2. உண்மைதான் தோழா இப்போதே பாதி அளவு அழிக்கப்பட்டு விட்டது

    ReplyDelete