Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

Friday, August 31, 2012

தமிழர்களும் செவ்விந்தியர்களும் (Mayans, Incas) :


மகேந்திரன் ஆறுமுகம்
  ஆராட்சி குறிப்புக்கள்  



உலக நாகரீகங்களுடனான நம்முடைய தொடர்பு.இன்று உலகமே Mayan என்கிற வார்த்தையை அறிந்திருக்கிறது. Mayan Calendar-யை வைத்து உலகம் முழுவதும் இன்று பரபரப்பு கிளப்பப்படுகிறது. 2012-ல் உலகம் அழிந்திவிடலாம் என்கிற புனைவுகளும் தொலைக்காட்சி மர்மத் தொடர்களால் முன்னெடுக்கப்படுகின்றன. Mayan-கள் யார் என்றுத் தெரியாதவர்கள் கூட Mayan என்கிறப் பெயரை உச்சரிக்கிறார்கள்.  முன்னோடித் தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்தும் Mayan Calendar பற்றிய நிகழ்ச்சிகளை வெளிநாட்டு தொலைக்காட்சி நிறுவனங்களிடமிருந்து பிச்சையெடுத்து, தமிழ் படுத்தி கட்டைக் குரல்களில் உலக அழிவைப் பற்றி பேசுகின்றன. வரலாற்று அறிவு கொஞ்சம் கூட இல்லாத நம்முடைய தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் Mayan தொடர்பான வரலாற்று நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவது அபத்தம்.

Omlec, Aztec, Mayan, Inca இவைகள் வட மற்றும் தென் அமெரிக்க கண்டங்களில் வாழ்ந்த மக்களுடைய நாகரீகங்களின் பெயர்கள். இவர்களை வெள்ளையர்கள் செவ்விந்தியர்கள் என்று பொதுபட அழைத்தார்கள். ஆங்கிலேயர்கள் இவர்களை செவ்விந்தியர்கள் என்று அழைத்ததற்கு வரலாற்று பின்னனி உண்டு. கி.பி. 14, 15 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியர்கள் இந்தியாவிற்கு செல்ல கடல் வழியைத் தேடிக்கொண்டிருந்தார்கள். அந்த காலகட்டத்தில் Atlantic Ocean-யை குறுக்காக கடந்து இந்தியாவிற்கு போய்விடலாம் என்று Columbus நம்பினார். அவருடைய நம்பிக்கையின்படியே அவர் Atlantic Ocean-யை கடந்தார். ஆனால் அவர் போய் சேர்ந்த கண்டம் அமெரிக்கா. ஆனால் Columbus தாம் வந்து இறங்கிய நாடு இந்தியா என்றே நம்பினார். அமெரிக்க கண்டத்தை சேர்ந்த மக்கள், இனக்குழு வழக்கப்படி தங்கள் உடம்பில் சிகப்பு சாயம் பூசிக்கொள்வது வழக்கம். இதை பார்த்த ஐரோப்பியர்கள் உடம்பில் சிகப்பு சாயம் பூசிய அந்த மக்களையும் தாங்கள் கண்டுபிடித்தது இந்தியா என்கிற நம்பிக்கையையும் ஒன்றாக்கி அந்த மக்களை செவ்ந்தியர்கள் (Red Indians) என்று அழைக்கத் தொடங்கினார்கள். Columbus-க்கு முன்பே Americo Vesbugi என்பவர் அமெரிக்க கண்டத்தை கண்டுபிடித்துவிட்டார் என்பது வேறு கதை. இவரை பெருமைபடுத்தும் விதமாகவே அந்த கண்டம் America என்று அழைக்கப்படுகிறது.

இந்த செவ்விந்தியர்கள் எப்படி இரு அமெரிக்க கண்டங்களிலும் (Green Land, Ice Land, Canada உட்பட) குடியெரினார்கள் என்பது இன்று வரை அவிழ்க்கப்படாத முடிச்சாக இருக்கிறது. ஆனால் ஒன்றை மட்டும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் உருதிபடுத்தியிருக்கிறார்கள். அந்த ஒரு விசயத்தைப் பற்றிதான் நம்முடைய முன்னோடித் தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு தெரியாமல் போயிற்று. வரலாற்று அறிவுக்கும் இவர்களுக்கும்தான் ஏழாம் பொறுத்தமாயிற்றே! வெளிநாட்டு வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்திய அந்த விசயம் செவ்விந்தியர்களுக்கும், தமிழர்களுக்கும் தொடர்பு உண்டு என்பதுதான். இதை படிப்பவர்களுக்கு, இது எதோ இட்டுகட்டிய சமாச்சாரம், வலிந்து தமிழர்களுக்கு பெருமை தேடுகிற விசயம், உலகத்தில் உள்ளவர்களையெல்லாம் தமிழர்களோடு தொடர்புபடுத்துகிற மோசடி என்று நினைக்கத் தோன்றலாம் ஆனால் உண்மை இதுதான்.

நல்லவேளை இந்த உண்மையை கண்டுபிடித்தவர்கள் வெளிநாட்டு வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் அதனால் நம்மவர்கள் இதை நம்பத் துணிவார்கள். நம்மவர்களுக்கு Made in Foreign என்றாலே ஒரு கிலுகிலுப்புதானே! தமிழ் வரலாற்று ஆராய்ச்சியாளர் ஒருவர் இந்த உண்மையை கண்டிருந்தால் அவரை பைத்தியக்காரன் என்று முத்திரை குத்தி மூலையில் தள்ளி இருப்போம். தன் இனத்து அறிஞனை மதிக்காத எந்த இனமும் உருப்பட்டதாக வரலாறு கிடையாது. இதற்கு வாழும் உதாரணம் தமிழனே.

The Conquest of Mexico and Peru என்கிற வரலாற்று நூலை எழுதிய William H. Prescott என்பவரே முதன் முதலில் செவ்விந்தியர் தமிழர் தொடர்பை பற்றி பேசுகிறார். ஐரோப்பியர்கள் எப்படி செவ்விந்தியர்களை, மெக்சிகோ மற்றும் பெரூ நாடுகள் முழுவதிலிருந்தும் ஒழித்துகட்டினார்கள் என்பதை விலாவாரியாக இந்த நூல் விவரிக்கிறது. இந்த நூலின் தொடக்கத்தில் செவ்விந்தியர்களின் பூர்வீகம் குறித்து பேசும் Prescott தமிழர் தொடர்பை அடித்து கூறுகிறார். வரலாற்று ஆராய்ச்சியாளர் இல்லையென்றாலும் சே குவேராவும் தன்னுடைய தென் அமெரிக்க பயண குறிப்புகளில் இதை பற்றி எழுதியிருக்கிறார்.

‘இன்காகள் (Incas) தென் அமெரிக்க சோழர்கள்’ என்கிற ஆராய்ச்சி நூல் ஒன்று தமிழிலும் இருக்கிறது. பத்து வருடங்களுக்கு முன்னால் நூலகத்தில், யாரும் திரும்பி பார்க்க கூட யோசிக்கும் புத்தக அடுக்கில், தூசி தும்பட்டைகளுக்கு மத்தியிலிருந்து எடுத்து இந்த புத்தகத்தை நான் படித்திருக்கிறேன். இந்த புத்தகத்தை எழுதிய ஆராய்ச்சியாளரின் பெயரை நான் மறந்துவிட்டதின் காரணமாக என்னால் அது குறித்த தகவலை தர இயலவில்லை. இது வருத்தமளிக்க கூடி விசயம். இந்த கட்டுரை எழுதும் பொறுட்டு இந்த அறுமையான புத்தகத்தை நூலக்கத்தில் எவ்வளவோ முயன்று தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த புத்தகத்திற்கு மறுபதிப்பு இல்லை என்பதும் வேதனையான விசயம். தமிழ் அறிஞர்களின் ஆராய்ச்சி அறிவு இப்படிதான் கண்டுகொள்ள ஆளில்லாமல் காணாமல் போகிறது.

செவ்விந்தியர்களின் கலாச்சார கூறுகள் மிகத் தெளிவாக தமிழர்களின் கலாச்சார கூறுகளை உள்ளடக்கி இருக்கின்றன. தமிழர்களின் வானியியல், செவ்விந்தியர்களின் வானியியலோடு ஒத்துப்போகின்றன. செவ்விந்தியர்களின் வானியியல் நுட்பத்தை ஆராய்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளர்கள், பல்லாயிரம் ஆண்டுகள் அனுபவத்தின் மூலமாகே இத்தகைய நுட்பங்களை பெற முடியும் என்றும் செவ்விந்தியர்களுக்கு இது ஒரே இரவில் கைவர சாத்தியம் இல்லையென்றும் கணிக்கிறார்கள். காரணம் செவ்விந்தியர்கள் ஒரிடத்தில் நிலைத்து வாழ்பவர்கள் கிடையாது அவர்களுடையது நாடோடி கலாச்சாரம். நாடோடி இனம் வானியியலில் தேர்ச்சி பெறுவது சாத்தியம் அற்றது. தமிழர்களுடனான தொடர்பே இவர்கள் வானியியலில் தேர்ச்சி பெறுவதற்கு உதவியிருக்கும் என்று கருதுகிறார்கள். மெசப்பத்தோமியா, எகிப்பது நாகரீகங்களின் தொடர்புகள் செவ்விந்தியர்களிடம் கிடையாது.

செவ்விந்தியர்கள் ஏறக்குறைய 3000 ஆண்டுகளாக அமெரிக்க கண்டங்களில் வாழ்ந்தாலும் அவர்களுடைய வாழ்க்கை, நிலையான விவசாய முறை சார்ந்த நிலவுடமை கலச்சாரம் கொண்டது கிடையாது. காடு சார்ந்த பொருட்களும், கால் நடைகளுமே அவர்களுடைய சொத்துகள். தென் அமெரிக்காவில் காடுகளிலும், வட அமெரிக்காவில் இடம் விட்டு இடம் நகரும் வகையிலுமே அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை அமைத்துகொண்டார்கள். அமெரிக்கா போன்ற இயற்கை வளம் நிறைந்த நாட்டில், செவ்விந்தியர்கள் நிலையான விவசாய சமூகத்தை ஏற்படுத்தாதது ஆச்சரியமான விசயம். Mel Gibson-னின் Apocalypto படம் தென் அமெரிக்க செவ்விந்தியர்களின் சமுதாய அமைப்பை மிகத் துள்ளியமாக காட்சி படுத்தியிருக்கும். Hollywood-ன் இனவெறிப் பிடித்த Cowboy படங்களில் வெள்ளையர்களுக்கும் செவ்விந்தியர்களுக்கும் இடையிலான சண்டை காட்சிகளில் வட அமெரிக்க செவ்விந்தியர்களின் சமுதாய அமைப்பை தெரிந்து கொள்ளலாம்.

ஐரோப்பியர்களுக்கு அமெரிக்கா என்று ஒரு கண்டம் இருப்பதே கி.பி. 12, 13 நூற்றாண்டுகளுக்கு பிறகுதான் தெரியவந்தது. ஆனால் 2500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களுக்கு அமெரிக்கா கண்டத்தோடு தொடர்பு இருந்திருக்கிறது. இது கற்பனை கதைப் போல இருந்தாலும் இதற்கு வலுவான சான்று உண்டு. தென் பசிபிக் மகாகடலில் (Pacific Ocean) ஆஸ்திரேலிய கடல் பகுதியில் கடல் அகழ்வாராய்ச்சி(Ocean Archeology) மேற்கொண்ட சமயத்தில் மிகப் பெரிய சரக்குக் கப்பல் ஒன்றை கண்டுபிடித்தார்கள். முழுவதும் மரத்தால் கட்டப்பட்டிருந்த இந்த கப்பல் வணிகப் பொருட்களுடன் முழ்கியிருக்கிறது. Carbon-Dating முறையின்படி இந்த கப்பலின் வயது இன்றிலிருந்து 2500 வருடங்களுக்கும் மேல் என்று தெரிந்திருக்கிறது. தரவுகளை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள், தமிழர்கள் வணிகத்திற்கு உபயோகப்படுத்திய கப்பல்களில் ஓன்று ஆஸ்திரேலிய கண்டத்தைத் தாண்டி அமெரிக்கா செல்லும் வழியில் பசிபிக் கடலில் முழுகியிருக்கிறது என்ற முடிவிற்கு வந்தார்கள்.

ஆராய்ச்சியார்கள் கண்ணை மூடிக்கொண்டு இந்த கப்பல் தமிழர்களுடையது என்கிற கணிப்பிற்கு வந்துவிடவில்லை. முதலில் இந்த கப்பல் எந்த மரத்தால் கட்டப்பட்டது என்று ஆராய்ந்தபோது தேக்கு மரத்தால் ஆனது என்று தெரிந்திருக்கிறது. தேக்கு தென்னிந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டுமே கிடைக்க கூடியது. அதுமட்டும் இல்லாமல் 3000 ஆண்டுகளுக்கு முன்னால் கடல்களில் மிகப் பெரிய கப்பல்களை வைத்து வாணிபம் செய்த நாகரீகம் இரண்டே இரண்டுதான். ஒன்று தமிழர்களுடைய நாகரீகம் மற்றது எகிப்திய நாகரீகம். மூழ்கிய அந்த கப்பலின் கட்டுமான அமைப்பு எகிப்தியர்களின் சரக்கு கப்பல்களோடு பொறுந்திபோகவில்லை. மேலும் எகிப்தியர்கள் கறையோரமாகவே பயணித்து செல்லக் கூடியவர்கள். அவர்களுக்கு நடுகடலில் கப்பல் செலுத்தத் தெரியாது. அதன் காரணமாக அவர்களுடைய கப்பல்களின் கட்டுமானமும் கரையோரமாக பயணிக்க ஏற்ற வகையில்தான் இருக்கும்.

கண்டுபிடிக்கப்பட்ட கப்பலோ மிகப் பெரியதாக நிறைய சரக்குகளை கையாளக் கூடியதாக இருந்ததோடு நடுகடலில் பயணம் செய்வதற்கு ஏற்றபடியும் கட்டப்பட்டிருக்கிறது. இந்த கப்பலில் இருந்த சரக்குகளும் தென்னிந்தியாவில் மட்டுமே கிடைக்ககூடியவைகள். தமிழ் இலக்கியங்கள் மட்டுமே கடலில் பயணிக்கும் களங்களுக்கு உபயோகத்தின் அடிபடையில் அமைந்த பெயர்களைப் பற்றி கூறுகிறது. இவைகள் மூலம் தமிழர்களின் கடலோடும் அனுபவத்தை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் இது தமிழர்களுடைய வணிக கப்பல்தான் என்று உறுதி செய்திருக்கிறார்கள். ஆக வெள்ளையர்கள் நாடோடிகளாக சுற்றிதிரிந்த காலத்திலேயே தமிழன் ஆஸ்திரேலிய கண்டத்தையும், அமெரிக்க கண்டத்தையும் கண்டு அறிந்து வைத்திருந்தான். இந்த கண்டங்களோடு வணிகத் தொடர்புகள் அவனுக்கு இருந்திருக்கிறது. நம்முடைய சாபக்கேடு இவற்றை பற்றிய முறையான வரலாற்று ஆவணங்கள் இல்லாதது. 3000 ஆண்டுகளுக்கு முன்பே நடுகடலில் பயணிக்கத் தெரிந்த தமிழன், தன்னுடைய சிறப்புகள் பற்றி பதிய தவறியது கேடுகாலமே.

நல்லவேலை ஆரிய வேதங்கள் கடல் பயணத்தை தடை செய்திருக்கின்றன (கடல் என்றால் ஆரியர்களுக்கு பயத்தில் பேதியாகிவிடும்) இல்லை என்றால் மூழ்கிய இந்த தமிழர்களுடைய கப்பலுக்கு தலைவன்(Captain) ஒரு பிராமணன் என்று இல்லாத வரலாற்றை இருப்பதுபோல் எழுதியிருப்பார்கள். தன்னுடைய சிறப்புகள் பற்றிய விழிப்புணர்வே அற்ற தமிழனும் அதை அப்படியே நம்பிவிடுவான்.

உலக நாகரீகங்களுடனான நம்முடைய தொடர்புகளைப் பற்றி பேச இன்று நாதியில்லை. ஆங்கொன்றும் இங்கொன்றுமாக நம்முடைய சிறப்புகள் குறித்து வரலாற்று ஆதாரங்கள் கிடைத்தாலும் வெகு மக்களிடம் அதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழர்கள் தவறிவிடுகிறார்கள். தவறிவிடுகிறார்கள் என்பதை விட அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. ஆயிரம் ஆண்டுகளாக தொடரும் இந்த அக்கறையின்மை, நாடு இழப்புகளிலும், இனப் படுகொலைகளிலும் தமிழனை கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.

நன்றி: மகேந்திரன் ஆறுமுகம்

Tuesday, August 14, 2012

சுஜாதாவின் பத்துக் கட்டளைகள்


இது ஒரு படித்து பிடித்து போன முகநூல் பதிவு 

1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.

2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.

3. மூன்று மணிக்குத் துவங்கும் மாட்டனி போகாதீர்கள். க்ளாஸ் கட்பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம். இளமைக்காலம், ஒளிக் கீற்றைப் போல் மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள். 

4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் – யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக் கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம். 

5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில், யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம் ஆயிரம் ரூபாய்க்கு ஷர்ட், சுடிதார் கேட்கும் முன். 

6. இந்தச் தகவல்களை படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.

7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம்(உடல்), எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம்.குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்கு கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும், உபத்திரமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை. 

8.எட்டு முறை மைதானத்தை சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்குச் சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாக தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காக சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும். 

9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம். ஒரு மணி நேரம் பாடம் அல்லது புத்தகம் படிக்கலாம். 
10. படுக்கப் போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணன், தங்கை யாருடனாவது பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம், நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்). எதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான். 

Sunday, August 5, 2012

உங்களுக்கு வந்தா இரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்டினியா ???முஹம்மத் யூசுப்களே தமிழன் தமிழந்தாண்டா!!!!!

முகநூல் முஸ்லிம் நண்பர் முஹம்மது யூசுப் அவர்கள் வீரகேசரி பத்திரிகை facebook பக்கத்தில்  தமிழர்கள் அழியப் போகிறார்கள் ,தமிழர்களுக்கு தண்ணீர் கூட கொடுக்க கூடாது,தமிழருக்கு அதிகாரங்கள் கொடுக்க கூடாது,இன்னும் பல சாபங்களையும் ...துவேச பின்னூட்டங்களையும் இட்டார்  (அவற்றைஇப்போதுஅகற்றிவிட்டார்கள்) நான்அந்தநபரைமட்டும்அல்லபலநபர்கள்தங்களுடைய துவேச கருத்துக்களை ஊடகங்கள் ஊடாக வெளியிட்டதை நான் பார்த்திருக்கிறேன்... இந்த முஹம்மது யூசுப்களுக்கு... சில சம்பவங்கள் கூறுகிறேன் ஏன் என்றால் நாங்களும்(மூதூர் தமிழ் மக்கள்) கெட்ட  முஸ்லிம்களால் பாதிக்கபட்டவர்கள்தான்.. இந்த பிரச்னையை பூரணமாக அனுபவித்தவர்கள் மூதூர் தமிழ் பேசும் மக்கள்தான்
எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து மூதூர் நகர பகுதியில் இருக்கும் முஸ்லிம் மக்களுக்கும் நகரத்தை சுற்றி இருக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் எப்போதும் எதோ தகராறு இருந்து கொண்டே இருக்கும்.. சில சமயங்கள் தமிழ் மக்கள் பயத்தின் காரணமாக மூதூர் நகரத்தை விட்டு விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த கட்டைபறிச்சான் கிராமத்துக்கு அகதிகளாக வந்த சம்பவங்களும் உள்ளன. சில நேரங்களில் அவசர விபத்துகள் நோய்களுக்கு கூட மூதூர் தள வைத்தியசாலைக்கு செல்லமுடியாத சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது ஒரு சமயம் முஸ்லிம்கள் எறிந்த நாட்டு வெடி குண்டு வெடித்ததில் சம்பூரை சேர்ந்த ஒருவர் மரணம் அடைந்த சம்பவமும் உள்ளன.அச்சமயத்தில் யுத்த நிறுத்த கண்காணிப்பு குழு இல்லாவிட்டால் அது பாரிய பிரச்சனையாக உருவாகி இருக்கும்.எங்கள் ஊரில் எல்லாம் ஜிகாத் என்ற அமைப்பு மூதூர் முஸ்லிம்கள் உருவாக்கி இருப்பதாக கதைத்து கொள்வார்கள் உண்மையோ பொய்யோ அந்த அல்லாவுக்குத்தான் தெரியும்..

மூதூர் கிழக்கு பகுதியை ராணுவத்தினர் கைப்பற்றிய போது நடந்த களவுச் சம்பவங்கள் எப்படி நடந்தது யுத்தத்தின் போது ராணுவத்தினர் போரில்தான் இடுபட்டனர்.அவர்களுக்கு அதுக்கே நேரம் இருந்திருக்காது ஆனால் நீங்கள் பின்னால் வந்து ....ம்ம்ம்ம் ஒரு வீட்டில் ஒரு மண் சட்டிய கூட விட்டிங்களா??? உங்களுக்கு தெரியும் அந்த பழி ராணுவத்தினர் மீதுதான் விழும்.செய்யாத பிழையை நாங்கள் ஏன் அவர்கள் மீது தூக்கிபோட வேண்டும்...இது என் காலப்பகுதியில் நடந்தது.இது நான் கூறியது சம்பவங்களின் சுருக்கம். என்னுடைய அனுபவம். நான் கூறியது சம்பவங்களின் சுருக்கம்.

திரு-செபஸ்டியன்(வலைப்பதிவாளர்) அவர்கள் (((9(99(900[] நீங்கள் செய்த அநியாங்களை பக்கம் பக்கமாக எழுதி இருக்கிறார்.அவர் எழுதியதிற்கு காரணம் யாரோ ஒரு முஸ்லிம் நபருடைய துவேச பதிவு.
திரு-செபஸ்டியன் அவர்களால் நீதி அமைச்சர் கவனத்திற்கு கொண்டு வந்த பதிவின் சுருக்கம்
நீதி அமைச்சர் கவனத்துக்கு:
இங்கே கீழே தரப்படும் விடங்களை மூதூரிலிருந்து விரட்டப் பட்ட தமிழ் மக்களின் சார்பில் முன்வைக்கிறேன்.
ஆலஞ்சேனை எப்படி ஆலிம்நகராக மாறியது எப்படி?
மூதூர் ஜெட்டியிலிருந்து புளியடிச்சந்தி வரைக்கும் இருந்த தமிழ் மக்களுக்கு நடந்தது என்னஇவர்கள் எங்கே எப்படி இருந்த இடம் தெரியாமல் போனார்கள் இந்த வழியே இருந்த நவரத்தினம் மதுபானக் கடை அடையாளமாக இருந்நது எப்படி இப்போ விளையாட்டு அரங்காக மாறியுள்ளதுஏன்எப்படி?

முஸ்லீம் பிரதேசங்களில் இருந்த இராணுவ முகாம்கள் எப்படி உடனடியாக அகற்றப்படுகிறது இதற்காக காரணங்கள் என்னமுன்பு தமிழர்களின் கிராமமான 64ல் இப்போது முஸ்லீம் கிராமமாக மாறியுள்ளது எப்படிமூதூர் பல நோக்கு கூட்டுறவுச்சங்கம் உதவி முகாமையாளர் ராமச்சந்திரன் சலீம் தலைமையில் கொல்லப்பட்டது?
ஏன்எப்படிமூதூர் பிரதேச சபையில் ஒரு தமிழர் உதவி பிரதி தலைவராக கூட இல்லை ஆனால் வடகிழக்கின் வேறு இடங்களில் உள்ள பிரதேசங்களில் முஸ்லீம்கள் சிறுபான்மையாக உள்ள இடங்களில்(யாழ்) முஸ்லீம்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்கப்படுகின்றது முஸ்லீம் பிரதேசங்களில் உள்ள தமிழர் சிறுபான்மையாக உள்ள இடங்களில் மூஸ்லீம்களால் வழங்கப்படுவதில்லை.

இப்படியான தமிழர் பிரதிநிதித்துவம் பற்றிய பேச்சின் காரணமாகவே முஸலீம்களால் வி எஸ் தங்கராசா ஜிகாத்தினால் கொல்ப்பட்டார் இது தமிழ் கிராமங்களை இணைத்து பிரதேச சபை உருவாக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டதாகவும் இது சில பகுதிகளில் முஸ்லீம்களை சிறுபான்மையினராக்குவதாகவும் கருதியியே இவரது கொலை நடைபெற்றதாக பேசப்படுகின்றது. இதே போலவே மூதூரில் விஏ தங்கராசாவும் டாக்டர் அந்தோனியும்(கத்தோலிக்கர்) கொல்ப்பட்டதாகவும் அறியப்படுகின்றது.

தமிழர் பிரதேசத்திற்காக பஸ்ஓட அனுமதிகொடாமல் முஸ்லீம் அரசியல்வாதிகள் பார்த்துக் கொண்டதிற்கான அடிப்படைக்காரணம் என்னபிரதேசங்களில் முஸ்லீம் ஆட்டோகாரர்களின் உழைப்பிற்காகவே அதுமட்டுமல்ல மூதூர் அண்டிய பிரதேசங்களிலும் தமிழ் ஒருவர் இது வரை ஆட்டோ ஓட்ட முடியாது அப்படி ஒருவர் ஆட்டோ ஓடினால் அவர் கொல்ப்படுவார்.(இது சந்தேகத்திற்க்கு இடமில்லாத கருத்து) தமிழர் பெரும்பான்மையினராக உள்ள இடங்களில் இருக்கும் சிறுபான்மை முஸ்லீம்களுக்கு கிடைக்கும் பிரதிநிதித்துவம் பாதுகாப்பு முஸ்லீம் பகுதிகளில் சிறுபான்மையினராக உள்ள தமிழர்க்கு வழங்கப்படுவதில்லை இத பற்றி கேட்போது முஸ்லீம்களுடன் மக்களுடன் மட்டுமே உறவுகொள் சகோதரன் என்று சொல் மற்வர்களுடன் அல்ல என்ற கருத்துப்பட பதில் வந்ததாம்.

மூதூர் பல நோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் மனேஜர் நாகரத்தினம் மயில்வாகனம் பள்ளி குடியிருப்பை சேர்ந்தவர் வேலை முடிந்து வரும் போது முஸ்லீம்களால் துரத்தப்பட்டு அடிக்கப்பட்டு இனிமெல் தமிழன் முஸ்லீம் பிரதேசத்திற்க்கு வேலைக்கு வரக்கூடாது என் மிரட்டப்பட்டார் ஏன்?(உறவினர்கள் சாட்சியமாக உள்ளனர்)
1990களில் சலீம் (முஸ்லீம் பயங்கரவாதி) தலைமையில் மூதூரில் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது எப்படியார் இந்த அலுவல்களுக்கு உறுதுணையாக இருந்தது விலாசங்களை பார்த்து அந்தக் காலங்களில் தமிழ் இளைஞர்கள் தெரிவு செய்யப்பட்டு கொலை செய்ப்பட்டனர் விசாரணைகள் எங்கேஏன் இது பற்றி முஸ்லீம் புத்திஜீவிகள் வாய் திறக்கவில்லை?

எக்காலத்திலும் கிழக்கில் தமிழர்களால் இப்படியான சம்பவங்கள் நடாத்தப்படவில்லை (ஆதாரம்: எமில்டர் பற்றிமாகரன் நொக்சர்3)(மனித உரிமைகள் குழுவினர்கு கூறியுள்ளனர்) இது வரையில் எந்த ஒரு முஸ்லீம் தலைவர்களும் இதற்காக மன்னிப்பு கேட்டதில்லை ஏன்என்ற கேள்வி தமிழர்களிடையே எழுகின்றதுஏன் இது பற்றி முஸ்லீம் புத்திஜீவிகள் வாய் திறக்கவில்லைஇவர்கள் மனிதர்களா?
உடையார் குடும்பத்திற்க்கு சொந்தமான நிலம் ஆலங்கேணியில் கைலாசபிள்ளை குடும்பம் செல்வம் குடும்பம் ஆகியோர்களை கடத்தி முஸ்லீம்களே கொலை செய்தனர் என்றும் இவர்களின் சொந்த நிலங்கள் முஸ்லீம்கள் பெயருக்கு மாற்ப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகின்றது. எப்படி மாற்றப்பட்டதுஎந்த அரசியல்வாதி இதன் பின்னால்? (2006ல் மணற்சேனையில் விறகு வெட்டி விற்கும் தமிழரை முஸ்லீம் பகுதிகளில் விற்பவர் கொலைசெய்து உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது (அவர்களது லான்மாஸ்டர் கையளிக்கப்படவில்லை) இந்த லான் மாஸ்டர் இன்றும் முஸ்லீம்களால் பாவிக்கப்படுகின்றதே அது எப்படி முடிகிறது?

யோகன் மகன் ஜதீஸ்வரனை பஸ்சிலிருந்து இறக்கி தமிழனை கொலை செய்ய வேண்டும் என்று கொலை செய்ப்பட்டது இவற்றிக்காக எந்த மூதூர் இஸ்லாமிய அமைப்பினரும் மன்னிப்போ அனுதாபமோ பேசவில்லைஏன்?
இப்போதும் 58 பிரதேசத்ற்க்கு தமிழர்கள் போக முடியாத நிலையே உள்ளதாக அறியப்படுகின்றது இந்த கோயிலும் குடியிருப்பு காணிகளும் மக்களிடம் மீள கையளிக்கப்படுமாஇந்த விடயத்தில் முஸ்லீம்களின் நிலைப்பாடுதான் என்ன?
முஸ்லீம்கள் சிறுபான்மையினராக உள்ள இடங்களில் தமிழர்களால் முஸ்லீம்கள் இப்படி இம்மிசைக்கப்படவில்லை என்பது ஆழமானகருத்து. மூதூரில் புனித அந்தோனியார் கோவில் தாக்குதலில் முஸ்லீம்கள் யேசுவின் சிலையை உடைத்து கடலில் போட்டனர் இதை மீள எடுத்து வந்து சிலையை திரும்ப நிலை நிறுத்தியதிற்காக டாக்டர் அந்தோனியை முஸ்லிம்கள் கொலை செய்யதனர் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் பிரதி தலைவர் ரங்காஇ சம்பூர் கூனித்தீவு சிவராசாவைஇ தபாற்கந்தோர் பால்ராஜ் ஆசிரியர் வசந்தன் (கணித ஆசிரியர் இவர்களை கடத்தி கொலை செய்தனர்.

மணல்ச்சேனை 64ல் பஸ்சில் கொலை செய்யப்பட்ட தமிழர்கள் பலர் ஏன் இது பற்றி முஸ்லீம் புத்திஜீவிகள் வாய் திறக்கவில்லைஇவர்கள் மனிதர்கள் இல்லையாஎப்படி முஸ்லீம் தமிழ் இன உறவுகள் பற்றி பேசமுடியும்? 1994ல் தேர்தல் காலத்தில் மூஸ்லீம் காங்கிரஸ் வெற்றிக்காக ஆனன்சேனை மூதூர் ரஞ்சன் மோகன் போன்றோர் கடத்தி கொலை செய்ப்பட்டனர் ராஜதுரை நாகேஸ்வரன் ராஜதுரை ரவிச்சந்திரன் சம்பூர் கட்டைப்பறிச்சான் கொலைகள் முஸ்லீம்களால் தமிழர்கள் இழந்த பிரதேசங்கள் உடைமைகள் உயிர்கள் மிகப் பல இதைப்பற்றி முஸ்லிம் தலைவரகள் பெரிதாக கண்டு கொள்ளவில்லை முஸ்லீம்களால் நடைபெற்ற கொலைகளுக்கும் மன்னிப்பும் கேட்கவுமில்லை. எப்படி முஸ்லீம் தமிழ் இன உறவுகள் பற்றி பேசமுடியும்ஏன் இது பற்றி முஸ்லீம் புத்திஜீவிகள் வாய் திறக்கவில்லைஇவர்கள் மனிதர்கள் இல்லையாஎப்படி முஸ்லீம் தமிழ் இன உறவுகள் பற்றி பேசமுடியும்?
திருகோணமலை லிங்க நகரில் 5 அல்லது 6 முஸ்லீம் குடும்பங்களே இருந்த காலத்தில் இவர்களுக்கு எந்த தமிழர்களும் எந்த இடைஞசல்களும் செய்வில்லை இவர்கள் திரகோணமலையில் பிள்ளையார் கோவிலுக்கு பக்கத்தே பள்விவாசல் கட்ட தமிழரே நிலம் வழங்கினார் இந்தப்பள்ளிவாசல் என்றுமே தாக்கப்படவில்லை மூதூரில் பல தமிழர்கள் தமிழர் கோவில்கள் சேர்ச்சுகள் தாகக்பட்டபோதும் இவைகள் பத்திரமாகவே இருந்தன தமிழர்கள் முஸ்லீம்களை இந்தக்காலங்களில் ஜனநாயகமாகவே நடாத்தினர்.

முஸ்லீம்களில் யார் இந்த சம்பவங்களுக்கு பொறுப்பானவர்கள் என்பது வெளியே வராத வரைக்கும் மூதூரில் நடைபெற்ற பல கொலைகளின் சாட்டியங்கள் ஜ நா மனித உரிமைக் குழுவிடம் பல பதியப்பட்டுள்ளன அதில் பல ஜரோப்பாவில் உள்ள சில முஸ்லீம் எழுத்தாளர்களுடைய பெயர்களும் விபரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
பொதுவாகவே முஸ்லீம்கள் தமது மதம் விடயத்தில் மட்டும் அக்கறையை காட்டிக்கொண்டு அதில் தமது எல்லா விடயங்களையும் வைத்து சவாரி செய்து கொள்வார்கள் தேவைப்படும்போது மதம் என்றும் இனம் என்றும் இலங்கை என்றும் பேசிக்கொள்கிறார்கள்
அஸ்ரப் காலத்தில் தமிழர்களின் காணிகளில் கேட்காமலே துறைமுகம் கட்டப்பட்டும் அந்த காணி சொந்தக்கார் வழக்கு பதிவுசெய்தும் நட்ட ஈடு கொடுக்காமல் இழுபறிப்பட்டது. இப்டியாக என்றுமே முஸ்லீம் நிலங்களுக்கு அஸ்ரப் செய்யவில்லை.
உவைஸ்ஜை புலிகள் சுட்டதும் பாலைநகர் தமிழர்களை (சுத்திகரிப்பு தொழிலாளிகள்)யும் இந்திய வம்சாவழியினரையும் முஸ்லீம்கள் வீடு புகுந்து கொலைகள் செய்தனர்
எத்தனை தமிழ் பிரதேசங்கள் இஸ்லாமிய பெயர் பெற்றன யார் இப்படி மாற்ற்ம செய்கிறார்கள் இதற்கான அடிப்படைகள் என்னஅரசில் எப்படி இதற்காக அனுமதி கொடுக்கப்படுகிறது
மூதூர் கல்வி பணிப்பாளர் ஆர் குணராசாவுடனான பல பிரச்சினைகள் வெளிவரல் வேண்டும்.இந்த பிரச்சினைகளில் சம்பந்தப்பட்ட முஸ்லீம் அமைப்பினர் யார்எதற்காகசெய்தனர் போன்றன வெளிப்படுத்தப்படல் வேண்டும் நீதி வெளிவர வேண்டும் இப்படியான சம்பவங்களுக்கு நீதி கிடைக்காமல் முஸ்லீம்களை தமிழர்கள் எப்படி சகோதர உறவுடன் அணுக முடியும் இவையே தமிழர்களில் பலர் முஸ்லீம்களுக்கு எதிரான குரோதங்களுக்கான காரணங்களுமாகும்.
அரசியல்வாதிகள் தமிழ் பள்ளி ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை முஸ்லிம் ஆசிரியர்களால் நிரப்பி அவர்களை தமிழ் பாடசாலைகளில் வைத்து படிப்பித்தல் தொழிலை ஆரம்பித்து விட்டு பின்னர் நிரந்தர ஆசிரியர்களாக முஸ்லீம் கல்லூரிகளில் நியமித்தனர். ஜேவிபியினர் திருமலையில் ஒரு கருத்தரங்கு கூட்டத்தில் முஸ்லீம் அதிகாரிகளின் பாகுபாடு பற்றி பேசினர் இதன்போது பேசும்போது புலிகளின் பயங்கரவாத்ததைவிட முஸ்லீம்களின் அடிப்படைவாதம் மிக ஆபத்தானது என்றும் இதில் இலங்கையில் ஜிகாத் அல்கைடா புனித இஸ்லாமிய விடுதலை முன்னணிகள் மிக ஆபத்தானவைகள் எனவும் பேசினார்.
இப்படி பலதரப்பட்ட பிரச்சினைகளை இஸ்லாமியர்களால் இஸ்லாத்தின் பெயரால் மூதூர் சார்ந்த பிரதேசங்களின் மிகச்சிலவே இங்கு குறிப்பிட்டவைகள் மிகச்சிலவே. நீதி நியாயம் பேசுவது என்றால் இருபக்கமும் பேச வேண்டும்

மூதூர் பிரதேசத்தில் நடந்த சம்பவங்கள் இவை இப்படி எத்தனையோ பிரதேசங்களில் நடந்து இருக்கிறது.அவர் வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற சம்பவங்களையும் எழுதி இருந்தார் அது சேர்க்கப்படவில்லை.
 முஹம்மது யூசுப்களே  தமிழர்கள் பட்ட துன்பத்தை அளவுகளால் கூட அளக்க முடியாது. ஆனாலும் அவர்கள் இறைமையை விட்டு கொடுப்பதில்லை.அவர்களுக்கு யாரும் தண்ணீர் கொடுக்க தேவை இல்லை அவர்கள் அவர்களின் பூமியில் குடித்து கொள்வார்கள். தமிழர்கள் இன்னமும் இலங்கையில் இருக்கிறார்கள் அவர்கள் அதிகாரத்தை எப்படியாவது பெற்றுவிடுவார்கள்.எங்களிடம் நல்ல அரசியல்வாதிகள் இருக்கிறார்கள் அரசதரப்பிலும் எதிர்தரப்பிலும்.
இவ்வாறு முஹம்மது யூசுப் போல இப்பக்கம்  ஒவ்வொருதமிழனும்துவேசத்தனமாகபேசத்தொடங்கினால்,....????
நீங்கள் எங்கள் மீது கொட்டிய கழிவுகளை நாங்கள் குப்பை தொட்டியில் போட்டு விட்டோம்,தயவு செய்து அவ் குப்பை தொட்டிகளை உங்கள் மீது கொட்ட எந்த தமிழனுக்கும் சந்தர்பத்தை ஏற்படுத்தாதீர்கள்.
முஹம்மத் யூசுப்களே !!!!!நீங்கள் அங்கும் இல்லை இங்கும் இல்லை எங்கு போக போகிறிர்கள்???
பதில் சொல்லும் அளவுக்கு அந்த முஹம்மத் யூசுப் ஒண்டும் அவ்வளவு பெரிய அப்பாடக்கர் இல்லை.அவனை போல பலர் இவ்வாறு கருத்து தெரிவிப்பதால் அவர்களுக்கான பதிலாக இதை எடுத்துக்கொள்ளலாம். நல்ல முஸ்லிம்களும் தமிழர்களும் ஒன்றாகத்தான் இருக்கின்றனர். உங்களை போல முட்டாள்கள்தான் இப்படி எண்ணம் கொள்வார்கள்

பின் குறிப்பு-இந்த பதிவு முஹம்மத் யூசுப்க்களை பற்றியது மட்டுமே முஸ்லிம்களை பற்றியது அல்ல.
ஒரு முகநூல் நண்பரின் முஹம்மத் யூசுப்புக்கான பதில்கள் 
"ஆனால்தமிழர்கள்முஸ்லிம்களைதமிழர்களாகசுட்டிகாட்டிஅவர்களின்நிலபுலன்களைஆட்சிசெய்யநிர்வகிக்கஏன்நீதிசெழுத்தஆசைபடுகின்றனர்"
இது உங்களுடைய கருத்து.. MOHAMAD YOOSUF..உண்மை என்ன தெரியுமா? இலங்கை தமிழன் ஆண்ட நாடு... வந்தவர்கள் எல்லா
ம் ஒட்டிக்கொண்டார்கள்... உரிமை செலுத்தினார்கள்.. ஒதுங்கி போக தமிழர்கள் ஒண்டும் ஒண்ட வந்த பிடாரிகள் இல்லை.. உரிமை செலுத்த தகுதியானவர்கள்.. உரிமை செலுத்துகிறார்கள்... நீங்கள் ஏன் உரிமை கேட்கவில்லை..? உங்களுக்கு தெரிந்திருக்கிறது? நில புலன்களுக்கு யார் உரிமை கொண்டாடலாம்? யார் மூடிட்டு இருக்கலாம் என்று.

TheerththigaSathiyaseelan "உங்களுக்குநீதிகிடைக்கபோவதும்இல்லைஉங்கள்இனம்உறுப்படபோவதும்இல்லை" அப்படியாசொன்னீர்கள்MOHAMAD YOOSUF?
"""தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்.. மறுபடியும் தர்மம் வெல்லும்""" இதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்

Thursday, July 19, 2012

இம்முறை கிழக்கு மாகாண சபைக்கு தமிழர் ஒருவர் முதலமைச்சராக வருதல் சாத்தியமா?இதனால் தமிழ் மக்களுக்கு என்ன பயன் ?


மாகாண சபை தேர்தல் வரப்போகுது ....கள்ள காதலையும் கவர்ச்சி படங்களையும்,வைத்து பிழைத்த புலம்பெயர்(சில) இணையங்கள் தேர்தல் தொடர்பான செய்திகளை வெளியிட தொடங்கி விட்டன. தமிழ் பேசும் மக்களை பொறுத்தவரையில் முக்கியமாக இருப்பது கிழக்கு மாகாண தேர்தல்தான். ஒரு தமிழனிடம் இந்த தேர்தலில் யார் வெல்ல வேண்டும் என்று கேட்டால் என்ன பதில் சொல்வான்?
தமிழ் தேசிய கூட்டமைப்பு ,தமிழ் மக்கள் விடுதலை புலிகள் இந்த இரண்டு கட்சி சார்ந்ததாகவே ஒவ்வொரு தமிழனின் பதில் இருக்கும்.ஆனால் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அரசுடன் இணைந்து போட்டி இடுகிறது. ஒரு தமிழன்தான் முதல்வராக வர வேண்டும் என்று ஒவ்வொரு தமிழரும் நினைப்பார்கள்.
இது சாத்தியமாகுமா? ஏன் என்றால் வாக்காளர்களில் 41 சதவீதமானோர் தமிழ் வாக்காளர்களாகும்.முஸ்லிம் வாக்காளர்கள் 38 சதவீதமாகும். மீதமான தொகையினர் சிங்கள வாக்காளர்களாகும்.நாம் சொல்லலாம் தமிழ் வாக்காளர்கள் அதிகம் ஆகவே ஒரு தமிழர்தான் முதலமைச்சராக வருவார் என்று ....
அங்கதானுங்க இருக்கு டுசிட்டு...........ஒரு ஆய்வில் மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த 76,000 பேர்(தமிழர்கள்) வெளிநாட்டில் இருப்பதாக தெரியவந்துள்ளது.அப்படி பார்தால் திருமலையில்??? அம்பாறையில்???இப்பவே கன்னகட்டுதில்ல....(இப்ப வேற கொஞ்ச பேர் அவுஸ்திரேலியா போய்டாங்க)
சென்ற முறை மாகாண சபைக்கு தெரிவான அரசு சார்பான முஸ்லிம் அக்கத்தவர்கள் அதிகம் என் அப்படி நடந்து???நம் மக்களுக்கு எப்போதும் இந்த தேர்தல் வழியில் நம்பிக்கை இல்லை, காரணம் கடந்த கால நிலவரங்கள் அப்படி .

ஆனால் முஸ்லிம் மக்கள் அப்படி நடந்து கொள்வது இல்லை. முஸ்லிம்களின் வாக்களிப்பு முறை காரணமாக கிழக்கில் அவர்கள் தேர்தலில் தமிழரை விட கூடிய ஆசனங்களைப் பெற்று விடுகின்றனர். அவர்கள் மத்தியில் பல சிறு சிறு கட்சிகள் இருந்தாலும் வாக்களிப்பின் போது கவனமாக செயற்படுவதன் மூலமே இவ்வாறு ஆசனங்களைப் பெறுகின்றனர்.
நம்மக்கள் செய்ய வேண்டியது இதுதான் வாக்களிக்க வேண்டும்.அப்படி வாக்களிப்பை தூண்டும் விதமாக பிரச்சாரங்கள் அமைய வேண்டும்...
தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகக்கொண்ட கிழக்கு மாகாணத்தில் தனது நிலைப்பாட்டை பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்லக்கூடிய முயற்சிகளை முன்னெடுப்பதில் வெற்றிகாணக்கூடியதாக இருக்குமானால் அநேகமாக சகல தமிழ்ப்பகுதிகளிலும் தமிழ்  கட்சிகள் வெற்றிபெறமுடியும்.
அது சரி ஒரு கிழக்கு மாகாண சபைக்கு என்ன அதிகாரங்கள் இருகின்றன??காவல்துறை அதிகாரம்?? காணி அதிகாரம்?
கிழக்கு மாகாண சபைக்கு ஒரு சிற்றூழியரையாவது ஆளுநர் அனுமதி இல்லாமல் நியமிக்கும் அதிகாரம் இருக்கிறதா?? அத விடுங்க
ஆளுநர் அனுமதி இல்லாமல் ஒரு போட்டோ பிரதி இயந்திரம் வாங்கும் அதிகாரம் இருக்கிறதா???
ஒரு தமிழர் முதலமைச்சராக வந்தால் நம் பிரச்சனைகள் தீர்ந்து விடப்போகிறதா ???
ஒன்னுமே இல்லை ஆனாலும் நாம் வாக்களிக்க வேண்டும் தமிழ் கட்சிகளுக்கு...  நாமமும் இந்த நாட்டில் இருக்கிறோம் என்பதற்காக .....

செய்தி –
·         முயற்சிசெய்தால் கிழக்கின் சகல தமிழ்ப் பகுதிகளிலும் தமிழ் கூட்டமைப்பு வெற்றிபெற முடியும் சுட்டிக்காட்டுகிறது (இந்து)

·         கிழக்கில் முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக கூடிய வாய்ப்பு உண்டு. பொது மக்கள் ஐக்கிய முன்னணி பெரும் வெறிவாகை சூடும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கிழக்கு மாகாண பிரதம அமைப்பாளரான அருண் தம்பிமுத்து தெரிவித்துள்ளார்.



·         என்னிடமிருந்த அந்த 7 ஆசனங்களையும் மீண்டும் பெற்று வெற்றி பெறுவேன். கடந்த ஆண்டுகளில் நாங்கள் செய்த சேவைகளை மக்கள் மறக்கமாட்டார்கள். அந்தளவுக்கு இந்திய உட்பட வெளிநாடுகளின் உதவிகள் அரசாங்கத்தின் உதவிகளைப் பெற்று, நான் மாகாணத்தை வளப்படுத்தியுள்ளேன், அதனால் மனத்திருப்தியோடு பதவி விலகுகின்றேன், என கலைக்கப்பட்ட கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

Saturday, June 30, 2012

சாமி என்ற பெயரில் பேய்கள்- சாராயம் குடிக்கும் (ஆ)சாமிகள்-

மூதூர் பகுதியில் வேத முறைப்படி இந்து ஆலயங்களில் பூசை நடைமுறை இடம் பெற்றாலும்,வேதமுறையற்ற அதாவது அதர்ம வேத பூசை வழிபாடுகள் அதிகம் இடம்பெறுகின்றன.இது மூதூரின் அடையாளம்  கூட,நவராத்திரி காலத்தில் ஊரே களைகட்டும்.
சாமி அருள் வந்து ஆடுதல், கட்டு போடுதல்,கும்பம் ஆடுதல்,மறிப்புப்போடுதல் என்று எங்கும் கலகலப்பாகவே இருக்கும்.
அது மட்டும் அல்ல வைகாசி மதம் வந்தால் எல்லா கோவில்களிலும் வேள்விகள் தீ மிதிப்பு,சாமி ஆடல்கள் என்றும்,வீடுகளில் மடை வைத்தல் பொங்கல் என்றும் ஒரே பக்தி மயமாக இருக்கும்.
 இவ்வாறன நடவடிக்கைகள் மூட நம்பிக்கைகளை சிலர் என்றும் கூறுவார்கள்(அந்த ஆராச்சி எனக்கு எதுக்கு), இது உண்மை பொய் என்பதற்கு அப்பால் இது அம்மக்களின் கலாச்சாரம்,பண்பாடு அது மட்டும் அல்ல இது அப் பிரதேசத்தின் அடையாளம்.இது அப்படியே இருக்கட்டும்.இதை விட்டு நம்அடையாளங்களை தொலைத்துக்கொள்ள கூடாது.
நம்பிக்கைகள் நம்பிகையாகவே இருக்கட்டும்.
இப்பொழுது விடயத்துக்கு வருகிறேன் ,
“சாமி சாராயம் குடிக்கிறது,அதுவும் ராவா அடிக்குது!!!!.
சைட் டிஷ் கூட இல்ல!!!!
பாருங்களன்  எல்லாம் தெரிஞ்ச சாமிக்கு தண்ணி அடிக்க தெரியல்ல...




கவனிக்க வேண்டியது—
  • எந்த மதமாவது மதுவை(போதைப்பொருள்) ஆதரிக்கிறதா?

  • அங்கு சிறுவர்களும் இளையவர்களும் அப்பூசையில் இருக்கும் போது சாமி என்ற பெயரில் சாராயம் குடிக்கும் போது அது சிறுவர்களுக்கும்  இளையவர்களுக்கும் வழி காட்டியாக அமையாதா?
  • இப்படியே அடுத்த சந்ததிக்கு இதுதான் நம் பண்பாடு என்று உணர்த்த போகிறீர்களா???
  • ஊரில் முப்பாட்டன் காலத்தில் இருந்து காணப்படும்  பாரம்பரிய (வேத முறை அல்லாத)வழிபாட்டு முறைகளை கேவலப்படுத்தப்போகிறீர்களா???

  • எல்லாம் அறிஞ்ச சாமிக்கு சாராயம் எதுக்கு???உங்களிடம் கேட்டதா???

  • சாமியாடல் என்பது அதிஉச்ச பக்தி மட்டுமே அது கடவுள் அல்ல என்பது உங்களுக்கு தெரியாதா???


 “நல்லது செய்தாத்தான் அது சாமி தீமைகளை செய்தால் அதுக்கு பெயர் பேய்...”  

Wednesday, March 28, 2012

பௌத்த பூமியா திரியாய் ???


திருகோணமலை ,முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு இடையில் இருக்கும் ஊர்தான் திரியாய்.இரு மாவட்டகளின் எல்லை கிராமம்.இந்த கிராமம் வரலாற்று பின்னணி கொண்டதும் கூட.இலங்கை இனப்பிரச்சனை காரணமாக பாதிக்க பட்ட கிராமங்களுள் ஒன்று.இதன் சுமந்த வடுக்களை பதிவாக எழுதி முடிக்க முடியாது.இப்படி இருக்கையில் புதிதாக ஒரு பிரச்சனை ஒன்று உருவாகி உள்ளது.இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த பொழுதில் இருந்து இப்பிரதேசம் பௌத்த பூமியாக மற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.இந்த கிராமம் வயலும் குளமும் சூழ்ந்த பூமி.முழுக்க முழுக்க தமிழர்கள் வாழும் பூமி.கோணேஸ்வரத்துக்கு நெல் வழக்கும் பூமி.இப்படி எல்லாம் இருப்பதால் என்னவோ ஆசையை துறந்த புத்தனுக்கு இப்பூமி மீது ஆசை வந்து விட்டதோ!!!!
அப்படி என்னதான் இம் மண்ணில் புத்தனுக்கு சொந்தமானது இருக்கிறது என்று நானும் என் நண்பர்களும் பார்க்க புறப்பட்டோம் என் நண்பர்களில் சிலர் அங்கு ஏற்கனவே சென்று வந்ததால் அவர்களின் உதவியையும் பெற்றுக்கொண்டோம் கொஞ்சம் மழை தூறல் கொண்டாட்டமான ஊந்துருளிப்பயணம் . திருகோணமலையில் இருந்து கிட்டத்தட்ட 43km
 (நல்ல வீதிதான், சீனாக்காரன் நல்லாத்தான் பார்த்து பார்த்து ரோடு போட்டு இருக்கான்).
பிரதான வீதியில் இருந்து 2km கிராமத்துக்குள் போய் மறுபடியும் மணல் பாதையால் கொஞ்ச தூரம் போக வேண்டும் .அங்கு  போனால் அங்கு ஒரு ராணுவத்தளம் இருந்தது
(எனக்கு நீட்ட நாட்களாக ஒரு சந்தேகம் ஏன் புத்தன் எங்கு இருந்தாலும் அங்கு கடைசி ஒரு ராணுவ காவலரன் ஆவது இருக்கிறது)
குன்றிற்கு செல்லும் படிக்கட்டுக்கள்
காவல்களைத்தாண்டி சென்றால் அங்கு ஒரு சிறிய குன்று குன்றின் அடிவாரத்தில் பண்டைய கால அகழிகள் காணப்படுகிறது.இது பாதுகாப்புக்கு அமைக்கப்பட்டதா அல்லது நீர் தேவைக்கு அமைக்கபட்டதா தெரியவில்லை.அடுத்து மலை குன்றில் ஏறுவதற்கான படிகட்டுகள் அமைக்க ப்பட்டுள்ளது.இந்த  கட்டுகள் பண்டைய காலத்க்ககுரியதாக  இருந்தாலும் சிறிய அளவில் புனரமைக்கப்பட்டு உள்ளது.சிறிய தூரம் சென்றவுடன் ஒரு இடத்தில் எதோ சிங்களத்தில் எழுதி அம்புக்குறி இடப்பட்டு இருந்தது.என்னதான் இருக்கிறது என்று பார்க்க புறப்பட்டோம்.ஒரு சிறிய ஒற்றை அடிப்பாதை சிறு பற்றை காட்டுப்பகுதிக்கு சென்றது அங்கு சென்று பார்த்த ஒரு அறிவித்தல் பலகை வைக்கப்பட்டு இருந்தது அது இதுதான்
கல்வெட்டின் விளக்கம் 

பல்லவ வியாபாரிகளை பற்றிச் சொல்லும் கல்வெட்டு 
இது மூன்று மொழிகளிலும் காணப்பட்டது அருகில் கல்வெட்டையும் காணமுடிந்தது.அப்போதுதான் நினைவுக்கு வந்தது #தபஸ்சு,பல்லுக்க என்ற வியாபாரிகள் கிரிவிகாரையை கட்டி வணங்கிதாக  பத்தாம் ஆண்டு பாடப்புத்தகத்தில் படித்தது.ஆனால் கிரி என்ற விகாரை கட்டபட்டதாக இக்கல்வெட்டு கூறவில்லை.கிரிகண்ட என்ற கோபுரம் கட்டபட்டதாகதான் கூறப்பட்டுள்ளது.சில வேளை இது சைவ ஆலயமாகவும் இருக்கலாம்.பல்லவ நூல் எழுத்துகள் என்றும் மொழி சமஸ்கிருதம் எனவும் கூறப்பட்டு உள்ளது இந்த கல்வெட்டு 7-8ம் நூற்றாண்டுகுரியது என்று அப்பலகையில் போடப்பட்டுள்ளது.ஆறாம் நூற்றாண்டுக்கு பிறகு பல்லவர் தமிழ் எழுத்துகளில் கல்வெட்டுகளை எழுத ஆரம்பித்து விட்டனர்.அப்படி இருக்கையில் எப்படி இக்கல்வெட்டு சமஸ்கிருத இருக்க முடியும்.அப்படி பௌத்த ஆலயமாக இருந்தால் பாளி மொழி செல்வாக்கு காணப்பட்டு இருக்கலாம்(என்னுடைய அறிவுக்கு எட்டிய டவுட்டு).

புத்த தலம் 
பிறகு சிறிய தூரம் சென்ற உடன் இன்னும் ஒரு சிங்கள அறிவித்தல் பலகை சந்தேகத்துடன் காட்டபட்ட திசை நோக்கிச்சென்றோம்.அது ஒரு இயற்கையாக அமைந்த ஒரு சிறிய கற் குட்டை(பார்த்தல் புரிந்து விடும்) ஆனால் அதற்க்கு எதோ ஒரு கதை சிங்களத்தால் எழுதபட்டு இருந்தது.
பிறகு படிகட்டுகளுக்கு வந்து சிறிய தூரம் சென்ற போது ஒரு இடிபாடு அடைந்த (சிறிது திருத்த பட்டு உள்ளது) ஒரு வட்ட வடிவமான வணக்கத்தலம் குன்றின் உச்சியில் காணப்படுகிறது. சில திருத்தங்களுடன் அது மிகவும் சிறப்பான முறையில் பராமரிக்கப்படுகிறது. அது ஒரு புத்த வணக்கத்தல வடிவமைப்பை கொண்டுள்ளது இதனை சுற்றி கற்தூண்கள் இவைகள கூட்டம் கூட்டமாக காணப்படுகிறது. சில கட்டிடங்களில் அத்திவாரங்கள் உடைந்த ஒரு புத்தனின் சிலையும் காணப்பட்டது. அங்கு இருந்த ஒரு பிக்குவிடம் விசாரித்த போது பண்டைய காலத்தில் புத்த சாதுக்கள் தங்கும் மாடலயங்கள் என்று கூறினார்.அதுமட்டும் அல்லாது அங்கு ஒரு அரச மரக்கன்று நடப்பட்டு கூண்டினால் அடைக்கப்பட்டு ஒரு அறிவித்தல் பலகையும் போடப்பட்டு இருந்தது.அப்படி அறிவித்தல் பலகை போடும்மளவுக்கு  அந்த அரச மரம் என்ன முக்கியத்துவம் வாய்ந்தது????
முக்கியம்தான் சங்கமித்தையும் மகிந்த தேரரும் வட இந்தியாவிலிருந்து கொண்டு வந்து  இலங்கையில் (அனுராதபுரம்) நாட்டிய போதிமரத்தின் கிளையில் இருந்து உருவாக்கப்பட்ட மரம்தான் அது.
அனுராத புரத்தில் இருந்து கொண்டுவந்து நடப்பட்ட மரம் 
அதனை சுற்றி பார்த்து விட்டு கொஞ்ச தூரம் சென்றபோது ஒரு சிறிய பாதை செல்வதை பார்க்கக்கூடியதாக இருந்தது.என் நண்பன் சொன்னான் அது அவர்கள் சென்ற முறை வந்த போது முட்க்கம்பிகளால் அடைக்கப்பட்டு இருந்தததாக கூறி இருந்தான்.நாங்கள் சென்ற போது அது பாதை திறக்கப்பட்டு காணப்பட்டது.நாங்கள் அங்கு சென்ற போது அழிவடைந்த ஒரு கட்டிட அத்திவாரங்களை காணக்கூடியதாக இருந்தது.நாங்கள் அந்த அத்திவாரங்களை பார்க்கும் போது எதோ ஒரு கட்டிட அமைப்பை நினைவுபடுத்திக்கொண்டு இருந்தது.கட்டிட அமைப்பை தவிர்த்த அதன் பாதை எதோ வழமையாக எதோ இடத்தில் நாங்கள் சுற்றி செல்லும் பாதை போல இருந்தது. செல்லச் செல்ல புரிந்து கொண்டோம் அது ஒரு இந்து ஆலயத்தின் அமைப்பை கொண்டது என்பதை,எங்கள் அறிவுக்கு எட்டியவரை அது ஒரு இந்து வழிபாட்டு தலம்தான். ஒப்பிடளவில் பாரத்தால் நன்றாக பராமரிக்க படும் புத்த தலத்ததை விட இக்கட்டிட எச்சம் பெரியது.
மலசல கூடம் ஐந்தாம் நூற்றாண்டு
அவ் கட்டிட எச்சத்தில் சில பகுதிகள் பிரித்து எடுக்கப்பட்டுள்ளது.அதுமட்டும் அல்லாமல் வேறு கட்டிடங்களில் உள்ள கட்டிட எச்சங்கள் இதனுடன் சேர்க்கப்பட்டுள்ளது..இதனை எப்படி நாங்கள் புரிந்து கொண்டோம் என்றால்,இவ் கட்டிட  அமைப்புக்கு கொஞ்சம் அருகில் இன்னும் ஒரு கட்டிட அமைப்பு காணப்படுகிறது.அது ஒரு பண்டைய மனிதர்களின் தங்கும் இடமாக இருந்திருக்க வேண்டும் ஏன் என்றால் அவைகள் அறை போன்ற அமைப்பு காணப்பட்டது அது மட்டும் அல்லாது  பண்டைய கால கல்லால் ஆனமலசலகூடங்கள் கூட காணப்பட்டது.அவற்றில் சில மலசலகூடங்கள் கோவில் அமைப்பை ஒத்த கட்டிட அமைப்புடன் கலக்கப்பட்டுள்ளது.அங்கு சில ராணுவ வீரர்கள் நின்ற படியால் மேலதிக புகைப்படங்களை எங்களால் எடுக்கமுடியவில்லை.

இத்தலத்தை பற்றி ஏற்கனவே வரலாற்று ஆராய்ச்சி தங்கேஸ்வரி கதிராமன்  (முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்)அவர்களால் செயப்பட்டு உள்ளதாக இணையத்தில் படித்தேன்.ஏன் அவ் ஆராய்ச்சி குறிப்புகள் மின் ஆவணப்படுத்தினால்  நமது வரலாறுகளை நாம் பாதுகாப்பதற்கு உதவியாக இருக்கும்.யாரிடமாவது அவ் ஆராய்ச்சி குறிப்புகள் இருந்தால் இணையத்தில் பகிருங்கள்.
நான் இந்த தலத்தை பற்றி கேள்விபட்டது- இராஜேந்திர சோழன் வருகைக் காலத்திற்கு முன்னதாகவே சிவாலயம் மிகப் பிரசித்தி பெற்றிருந்தது. வன்னி பெருநிலப்பரப்பின் எல்லைப்புறத்திலும் திருக்கோணமலை மாவட்ட எல்லைப் புறத்திலும் அமைந்திருந்த இச்சிவாலயத்திற்கு மிகப்பெரும் திரளான வன்னி மக்கள் திருக்கோணேஸ்வரத்தின் வாரிசாக வணங்கி வந்திருந்தார்கள். சோழனின் வருகைக்கு பின்னர் அவ்வாலயம் சோழ மன்னனால் பற்றோடு வணங்கப்பட்டதுடன் கூடவே பெளத்தம் மேல் கொண்ட பக்தியினால் சிறிய பெளத்த விகாரையும் அமைத்து வணங்கினான்.அது மட்டும் அல்லது  பல்லவ வியாபாரிகளின் சஞ்சாரமும் இங்கு காணப்பட்டு இருந்திருக்கிறது.


தடுக்கப்பட்ட பாதை
தமிழ் ராசர்கள் பல்லவர்களினதும் சோழர்களினதும் செல்வாக்கு மிக்க இத்தலம்தற்பொழுது பெரிய அளவில் 'கிரி விகாரை' என உருவெடுத்துள்ளதுடன் சிங்கள மக்கள் எக்காலத்திலும் வாழ்ந்திராத அத்தமிழ்ப் பிரதேசம் இப்பொழுது சிங்கள மக்களின் புரான கால வாழ்விடமாகிவிட்டது.
இந்த தலத்தை என்கனவே இலங்கை பாடப்புத்தகங்களில் பௌத்த தலமாக சேர்க்கப்பட்டு விட்டது.
வழமை போல சில கேள்விகள்
ஏன் அந்த புத்த தலம் மட்டும் பரமரிக்கப்படுகிறது?
ஏன் மற்றைய புராதான கட்டிட எச்சங்கள் பாரமரிக்கப்படவில்லை?
ஏன் மற்றைய கட்டிட எச்சங்களின் வடிவமைப்பு மாற்றப்படுகிறது /சிதைக்கபடுகிறது?

  • இவ்முரண்பாட்டிற்கு தீர்வு காண வழிதான் என்ன?
  • அங்கு ராணுவப்பாதுகாப்பு தேவைதானா?
  • ஒரு வணகத்தலத்துக்காக அங்கு திட்டமிடப்பட்ட நீர் பாசன திட்டங்கள் முடக்கப்படுவது ஏன்?
  • என்னதான் நடக்குது அங்க?

எல்லாம் அந்த அரச   மரத்தடிக்காரனுகுத்தான்  வெளிச்சம் ..............

Saturday, March 24, 2012

கிழக்கிற்கு தனியான தொல்பொருள் கொள்கை?


அகழ்வாராய்ச்சி தொடர்பில் கிழக்கு மாகாணத்தில் தனியான சில கொள்கைகள் பின்பற்றப்பட உள்ளன.
தொல்பொருள் அமைச்சு, தொல்பொருள் ஆணையாளர் உள்ளிட்ட தரப்பினர் இந்தக் கொள்கை வகுப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முழுமையான அதிகாரமுடைய தொல்பொருள் ஆணையாளர் நாயகம் ஒருவரை கிழக்கு மாகாணத்திற்கு என தனியாக நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நிலக்கீழ், நிலத்திற்கு மேல், கடலோரம், வாவி, குளம், அருவி சகல தொல்பொருட்கள் தொடர்பிலும், இறுதித் தீர்மானம் எடுக்கும் முழு அதிகாரம் மாகாண தொல்பொருள் ஆணையாளாருக்கு வழங்கப்படவுள்ளது.
புதிய அகழ்வாராய்ச்சி கொள்கையில், தமிழ் மொழியில் கூறப்பட்டுள்ள விடயங்களை முதன்மையாகக் கருதி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் பல அரிய தொல்பொருள் பொக்கிஷங்கள் கிழக்கு மாகாணத்தில் காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
எதோ நல்லதா நடந்தா  இன்னும் ஒன்ட நாங்க செய்ய தயாராக இருக்க வேண்டும்.
தமிழர் தாயகம்’ கபளீகரம் செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் எண்ணிலடங்காதவை.  கால தேவைக்கேற்றாற்போல் பல கபளிகர வரலாறு ஆதாரத்துடன் மேலும் பல தமிழர்வாழ்விடங்களில் இருந்து வெளிவரல் வேண்டும். இதுவே தமிழர், வரலாற்றுக்கு செய்யும் சேவையுமாகும். 
சிங்கள வரலாற்று ஆசிரியர்களைப் பொறுத்த வரையில் தமிழர்களின் உண்மை வரலாறு பற்றி நன்கு தெரியும். சிங்களத் தேசியத்தின் நன்மை கருதி உண்மையை மறைத்து ஊமையாகியுள்ளார்கள். 
எனவே, இவ்முரண்பாட்டிற்கு தீர்வு காண வழிதான் என்ன?
சர்வதேசத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட நடுநிலைமை வாதிகள் கொண்ட பொதுச்சபைக்குதமிழர் வரலாற்றைஏற்ருகொள்லாத புத்தி ஜீவிகளை அழைக்க வேண்டும். நடுநிலைமை வாதிகளின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளும் நியதியும் வகுக்கப்பட வேண்டும். இதற்கான வேலைத்திட்டங்களை உருவாக்குவதற்கு பல கோணங்களில் இருந்தும் புலம்பெயர் வாழ் இலங்கை வாழ் வரலாற்று  ஆய்வாளர்கள் ஏற்படுத்த வேண்டும். இதற்கு துணையாக  ஈழத்தமிழர்களில் பற்றுக்கொண்ட ஆர்வலர்களும் களத்தில் இறங்கவேண்டும். நிச்சயம் நாம் வரலாற்றை நாம் மீட்க்க முடியும் .

Monday, January 30, 2012

மூதூர் குன்றுகள் புதையல் பூமியா? புதைத்த உடல்கள் எரிக்கப்படுவது ஏன்?

கடந்த 24 ஜனவரி 2012 மூதூர் சென்ற போது ஒருதகவலை கேள்விப்பட்டேன்.மூதூர் கிழக்கு கணேசபுரம் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக 8 நபர்கள் கச்சக்கொடி மலை காட்டுப்பகுதியில் திரிந்து இருக்கிறார்கள் ,அந்த பகுதியில் செனைப்பயிர் செய்பவர்களிடம் சிங்களத்தில் உரையாடி இருக்கிறார்கள்,தாங்கள் போலீஸ் எனவும்  ,மலைப்பகுதிக்கு வரவேண்டாம் எனவும் கூறி இருக்கின்றனர், அவர்கள் நீளமாக முடி வளர்த்து இருந்திருக்கிறார்கள், சந்தேகமடைந்த கிராமமக்கள் கணேசபுர கிராம அபிவிருத்தி சங்க தலைவரிடம் தெரிவிக்க அவர் போலீசார் உதவியுடன் அக்காட்டுப்பகுதிக்கு விரைந்தனர்.எனக்கும் என் நண்பர்கள் சிலருக்கும் அவர்களுடன் செல்ல வாய்ப்பு கிடைத்தது.


கச்சகோடி மலை(குன்று)
இது ஒரு குன்று இதன் தூரம் அகலம் சரியாக தெரியாது!!!ஆனால் திருகோணமலை மாவட்டதின் உயரமான பகுதி. இது மூதூர் கிழக்கு கட்டைபறிச்சான் கிராமத்தில் இருந்து அண்ணளவாக 3KM தூரத்தில் கணேச புரம் என்ற சிறு கிராமத்தில் காணப்படுகிறது.குன்றும் காடும் அதனை சுற்றி வயல்கள் மூதூர் கிராமங்களுக்குரிய அதே அழகு. அந்த குன்றில் இருந்து பார்த்தால் மூதூர் கிராமங்களை  google earth தில் பார்த்த அதே அனுபவம் கிடக்கும்.
சரி சொல்லவந்த விடயத்துக்கு வருகிறேன். நாங்கள் அங்கு சென்ற பொழுது யாரையும் காணவில்லை. ஆனால் பொலிசாரும் மக்களும் எதாவது நடந்திருக்கிறதா என மலையும் அதனை சுற்றி உள்ள பகுதியையும் தேட ஆரம்பித்தனர். திடிரென அங்கு எங்களுடன் வந்த போலீஸ்காரர் ஒருவர் எல்லோரையும் மலையின் நடுப்பகுதியில் உள்ள ஓர் இடத்திற்கு எல்லோரையும் அழைத்தார்.அங்கு சென்று பார்த்தல் 4 அடியில் ஒரு குழி, அது மேலும் ஆழமாக தொண்டபட்டு இருக்கவேண்டும் மீதியை மூடி விட்டார்கள் என்று நினைகிறேன்.அப்போது எல்லோரிடமும் பல கேள்விகள் எழுந்தது.ஏன் தோண்டப்பட்டிருக்கிறது ???புதையலாக இருக்குமோ???அப்படி புதையலாக இருந்தால் எப்படி இவ்வளவு இடம் இருக்க இந்த இடத்தில்தான் புதையல் இருக்கிறது என்று அவர்களுக்கு தெரியும்??? அதற்கும் விடை அந்த இடத்தில் கிடைத்தது அந்த குழிக்கு அருகில் இரண்டு மலையில் புதைந்த கற்கள், இந்த இரண்டு கற்களுக்கு இடையில்தான் இந்த குழி இருந்தது. ஒரு கல்லில் சிறிய ஆமை உருவம் செதுக்கபட்டு இருந்தது.மற்றய கல்லில் சதுர அடையாளம் அது கைபேசியில் உள்ள கஷ்(#)அடையாளம் போல இருந்தது.
என்ன இருந்தது என்று தெரியவில்லை! ஏதாவது இருந்ததா என்றும் தெரியவில்லை! ஆனாலும் ஏதோ ஒன்று எடுக்கப்பட்டு இருக்கிறது,
 இது இரண்டாவது சம்பவம், ஏற்கனவே இம்மலையில் உச்சியில் 2008 காலப்பகுதியில் யாரோ சிலரால் ஒரு பாரிய குழி தொண்டப்பட்டு இருத்தது.இந்த குழியும் அந்த மலையில் உள்ள சில அடையாளம்களின் அடிப்படையில் தோண்டப்பட்டு இருந்தது.அந்த மலையின் உச்சியில் மனிதனால் உருக்கபட்ட நான்கு குழிகள் காணப்படுகின்றன.அந்த குழிகள் கிட்டதட்ட சிறிய உரல் போன்றது. இந்த சிறு குழிகளை  கிராமமக்கள் மூதாதையர் பாவித்த உரல் என்றுதான் நினைத்து வந்தனர். அந்த தோண்டப்பட்ட குழியில் பல செங்கற்களை காணக்கூடியதாக இருந்தது. அது மட்டும் அல்லாது அந்த மலையில் பண்டைய கட்டிட செங்கற்  சிதைவுகள் சில காணப்படுகின்றன.இம் செங்கற்கள் மழையாலும் கற்றாலும் அரிக்கப்பட்டு சிறிய அளவுகள்தான் காணப்படுகிறது. இந்த மலைபகுதியில்தான் எதாவது இருக்கும் என்று கிராமவாசிகளை தவிர்த்த நபர்களுக்கு எப்படி தெரியும்?
அவர்களுக்கான வழிகாட்டி எங்கிருந்து கிடைத்திருக்கலாம் ?
யாரால் புதைக்கப்பட்டு இருக்கலாம்


சவக்குழிகள் தோண்டப்பட்டு உடல் எச்சம்கள் எரிக்கப்படல்
கடந்த சில மாதங்களாக இனம்தெரியாத நபர்களால் கட்டைபறிச்சான் இந்துமாயனத்தில் புதைக்கபட்ட மூன்று உடல் எச்சங்கள் தோண்டி எடுக்கப்பட்டு எரிக்கபட்டு உள்ளது.நாங்கள் அங்கு சென்று பார்த்த பொழுது மூன்று சவக்குழிகள் தொண்டப்பட்டு இருத்தது தோண்டப்பட்ட குழியுள் தேங்காய் புதைக்கப்பட்டு காணப்பட்டது. சுற்றி எங்கிலும் மதுபான போத்தல்கள்,பிளாஸ்திக் சோடா போத்தல்கள் காணப்பட்டன.அது மட்டுமல்லாது ஒரு பெண் உருவபொம்மை செய்யபட்டு ஒரு பெண் அணியும் எல்லா ஆடைகளும் அணியப்பட்டு எரிக்கபட்டு காணப்பட்டது(பாதி எரிந்த நிலையில் காணப்பட்டது). இது புதையல் தொண்டுபவர்களின் வேலை என கிராம மக்களிடம் வதந்தி நிலவுகிறது.
எவ்வாறாகினும் இவ்வாறன செயல்கள் கண்டிக்கத்தக்கன, மயானம்கள் கோவிலை போல புனிதமான இடம்,அங்கு நம் உறவுகளின் உடல்கள் தோண்டி எரிக்கப்படுவது எவ்வளவு ஈனத்தனமான செயல்,ஒவ்வொரு குடும்பமும் எவ்வளவு நம்பிக்கைகளோடு தங்கள் உறவுகளின் உடல்களை புதைத்து விட்டு வருகின்றனர், எமது உறவின் ஓருவரின் சவக்குழி தோண்டப்பட்டு எரிக்கபட்டால் எமக்கு எவ்வளவு கோவம் வரும்?
கேள்விகள் பல பதில் தெரியவில்லை!!!
இது நடந்து முடிந்து விட்டது இனி எதுவும் செய்ய முடியாது என்று சில நண்பர்கள் கருத்துரை அளித்துள்ளார்கள்.நாங்கள் புதையலை தேடவேண்டாம் நம் முப்பாட்டன்களின் வரலாற்றை தேடி ஆவணப்படுத்துவோம்!!!அப்படி இல்லாவிட்டால் அவைகள் கூட காணாமல் போய்விடும் நான் குறிப்பிட்ட மலை தவிர பல மலைகள் மூதூர் கிழக்கில் உள்ளது அது அந்த மலைகளும் அதனை சுற்றி உள்ள பகுதிகளிலும் பல வரலாற்று எச்சம்கள் காணப்படுகிறது அவை தொடர்பான விடையங்களை தொடர்ந்து புகைப்பட ஆதாரங்களுடன் பதிவுகளை தொடருவேன்!!!
தொடரும் ...............