Tuesday, August 19, 2014

இலங்கை வரலாற்றில் கம்பளைக் கால முருகன் கோயில் எம்பெக்க - தமிழர் கலையும் கடவுளும்


கண்டி நகர் நோக்கி நெடுஞ்சாலையில் பிரயாணம் செய்பவர்கள் பிலிமத்தலாவை நகரை அடைந்ததும் 'எம்பெக்க' தேவாலயம் என்ற பெயர்ப் பலகையை கண்டு கொள்வர் . அவ்விடத்திலிருந்து செல்லும்போது 1370 ஆம் ஆண்டைச் சேர்ந்த இலங்கை வரலாற்றில் கம்பளைக் காலம் என்று அழைக்கப்படுவதும் 3 ஆம் விக்கிரமபாகு மன்னனின் ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்டதுமான 'எம்பெக்க' தேவாலயம் காணப்படுகின்றது.

வரலாற்று ஐதீகம்(புனைவு )
இந்த தேவாலயம் உருவானது தொடர்பான கொஞ்சம் புனைவுகளுடன் கூடிய கதை ஒன்று உள்ளது. முன்பு ஒரு காலத்தில் எம்பெக்க கிராமத்துக்கு அருகாமையில் பெர வாத்தியக்காரன் ஒருவன் கடுமையான குஷ்ட ரோகத்தால் அவதியூற்றபோது தன்னை இந்த நோயின் அவலத்திலிருந்து மீட்டெடுக்கும்படி அவன் கதிரமலைக் கந்தனிடம் தவஞ்செய்து நேர்த்திக்கடன் வைத்தான். அதனைத் தொடர்ந்து அவனுக்கு அந்த நோயில் இருந்து சுகம் கிடைத்தது. அதனால் மகிழ்ச்சியடைந்த அவன் வருடந்தோறும் கதிர்காமத்துக்குச் சென்று பூஜை வழிபாடுகள் செய்து கந்தப் பெருமானை வழிபட்டு வந்தான். எனினும் வயதாக வயதாக தன்னால் கதிர்காமத்துக்குச் சென்று கந்தப் பெருமானை வழிபட முடியூமா? என்ற கவலை அவனை வாட்டியது. ஒரு நாள் இத்தகைய கவலையூடன் அவன் கந்தப் பெருமானை வணங்கி விட்டு கோயிலுக்கருகாமையில் இருந்த கதிர மரத்தடியில் உறங்கிப் போய் விட்டான். அன்றிரவில் அவன் கனவில் வந்த முருகன்  கவலையை விட்டு ஊருக்குப் போகும் படியும்  ஊரில் நல்ல தகவல் கிடைக்குமென்றும் அருளிச் சென்றார்.
கந்தப்பெருமானில் நம்பிக்கை கொண்டிருந்த அவன் நிம்மதியூடன் ஊர் திரும்பினான். ஊர் திரும்பியவனுக்கு ஒரு விசித்திரமான செய்தி கிடைத்தது. 'எம்பக்க' என்ற கிராமத்து தச்சன் ஒருவன் கதிர மரம் ஒன்றை தரிசித்தபோது ஐந்தாறு அடி உயரத்துக்கு அதில் இருந்து இரத்தம் சீறிப் பாய்ந்ததாம். உடனே அவ்விடத்துக்குச் சென்ற வாத்தியக்காரன் கதிர்காமக் கந்தன் தனக்கு காட்சியளித்து சொன்ன செய்தியைக் கூற தச்சன் அறுசுவையூடன் உணவூ படைத்தான். வாத்தியக்காரன் பெர வாத்தியம் இசைத்து வழிபடத் தொடங்கினான். இன்றும் கூட இங்கு மூன்று வேளை பூசை வழிபாடுகள் உணவூப் படையலுடனும் பெர வாத்திய இசையூடனுமே நடைபெறுகின்றது. கோயிலின் பிரதான மண்டபம் விசாலமாகவூம் பெர வாத்தியம் இசைக்கவூம் ஆடிப்பாடவூம் ஏற்ற விதத்தில் வசதியாக அமைக்கப்பட்டுள்ளது.

வரலாறு
கி.பி. 1370 ஆம் ஆண்டு கம்பளை இராச்சியத்தை 3 ஆம் விக்கிரமபாகு மன்னன் ஆட்சி செய்தபோது மேற்படி எம்பெக்க என்ற இடத்தில்  கதிர்காமக் கந்தனுக்கு வழிபாடு இடம்பெற்று வருவதைக் கண்ணுற்று அங்கு ஒரு தேவாலயத்தை அமைக்க நன்கொடையும்  உதவி உபகாரங்களும் செய்துள்ளான்.
பின்னர் இத்தேவாலயத்தைக் கண்டு களிக்க மன்னன் தனது பல்லக்கில் ஏறி அவ்விடத்துக்கு விஜயம் மேற்கொண்டான். எனினும் அவன் திரும்பிச் செல்ல முற்பட்டபோது பல்லக்கு ஒரு பக்கம் ஒடிந்து சாய்ந்து கொண்டதால் தொடர்ந்து செல்ல முடியவில்லை. இதனை வெறுமனே சாதாரண நிகழ்வாகக் கருதாத மன்னன் யானைத் தந்தங்களுடனும் வெள்ளிப் பூச்சுக்களுடனும் கூடிய அந்த விலையூயர்ந்த பல்லக்கினை மேற்படி தேவாலயத்துக்கே அன்பளிப்புச் செய்தான் என்று சொல்கிறது இக்கோயிலின் இன்னுமொரு வரலாறு .


 இப்பல்லக்கு இன்றுவரையும் பூஜைப் பொருளாக இருந்து வந்துள்ளதுடன் இன்று இக்கோயிலின் அரும்பொருட் காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னரும் அரசன் தனது பட்டத்து ராஜ குஞ்சரங்களின் தந்தங்களை இக்கோயிலுக்கு வழங்கியதுடன் தேவாலயத்தின் பணிகளுக்கென 67 பேரை நியமித்தான். இன்றும் இக்கோயிலின் நிர்வாகத்தை அரத்தன பணிக்கி என்ற பெர வாத்தியக்கார வம்சத்தினரே கவனித்து வருகின்றனர். இக்கோவிலின் பூந்தோட்டத்தினை கவனித்துக் கொண்டிருப்பவர்கள். 'கங்காணி வீட்டு' (கங்காணிகெதர) பரம்பரையினர் ஆகும்.
 பிரதான நிர்வாகிகளாக விதானை ஒருவரும்இ வண்ணக்குரால என்பவரும் நிலமேயால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கம்பளை வரலாற்றுக் காலம் இலங்கை வரலாற்றாசிரியர்கள் இலங்கை வரலாற்றின் கம்பளைக் காலத்துக்கு அதிக முக்கியத்துவம் வழங்குவதில்லை என்றாலும் இக்காலத்தில் இடம்பெற்ற பல நிகழ்வூகள் இப்போதும் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்டுள்ளன. 


குறிப்பாக இலங்கையின் கலை இலக்கிய வளர்ச்சி தொடர்பான சிறப்புகள் இக்காலத்தில் பதியப்பட்டுள்ளன.
இலங்கை வரலாற்றின் இதுவரை காலம் இருந்து வந்த சமஸ்கிருத பாளி மொழிகளின் செல்வாக்கு குறைந்து சிங்கள மொழி இலக்கியங்கள் வளர்ச்சிபெற்றன. இதற்கு முக்கிய காரணம் இந்தியாவின் வட பகுதியில் முஸ்லிம் ஆதிக்கம் அதிகரித்ததால் வட மொழி செல்வாக்கிழந்தமை ஒரு புறமும் மறுபுறம் தென்னிந்தியாவில் எழுச்சி பெற்ற விஜய நகரப் பேரரசு திராவிட மொழிகளை ஊக்குவித்தமையூம் இலங்கைக்கும் விஜய நகர பேரரசுக்கும் ஏற்பட்ட உறவுகளும்  ஆகும்.
விஜய நகர பேரரசு வைஷ்ணவ மதத்தை ஆதரித்ததால் அதேகாலப் பகுதியில் இலங்கையிலும் விஷ்ணு (உபுல்வன் தெய்வம்) தெய்வ வழிபாடு பரவலாயிற்று. இதற்கு மற்றுமொரு காரணம் சீதாவாக்கை காலம் முதல் கம்பளை அரசு காலத்தில் அழகக்கோனார் என்ற தமிழ் கோனார்கள் அரச அதிகாரத்தில் செல்வாக்கு செலுத்தியமையூம் அரசர்கள் தென்னிந்திய பாண்டிய அரச வம்சத்தில் இருந்து பட்டத்து ராணிகளை கொண்டிருந்தமையூம் ஆகும்.
மறு புறத்தில் இந்தியாவில் முஸ்லிம் அரசர்களின் ஆதிக்கம் பெருகிய போது கல் தச்சர்களும் மரச் சிற்பக் கலைஞர்களும் இலங்கையில் வந்து குடியேறியூள்ளனர். இவர்களைக் கொண்டு அரசர்கள் விகாரைகள்இ தேவாலயங்கள் அமைத்தபோது அவற்றில் திராவிட கலை மரபுகள் பொதிந்து காணப்பட்டன. கண்டிக்கும்இ கம்பளைக்கும் நடுவில் உள்ள எம்பெக்கஇ லங்காதிலக்கஇ கடலாதெனிய ஆகிய தேவாலயங்களில் இத் திராவிட கட்டிடக்கலை மரபுகளைக் காணலாம்.
இவற்றில் புத்தபெருமானின் சிலையூடன் விஷ்ணு (உப்புல்வன்) விபீசனன் ஸ்கந்தகுமார (முருகன்) கணேசர் (கணபதி) ஆகியவர்களின் சிலைகளும் புறச் சுவர்களில் வைத்து நிர்மாணிக்கப்பட்டு உள்ளன. அதேபோல் தமிழ் இலக்கிய மரபுகளையொட்டி தூதுக் காவியங்கள் (சந்தேசய) பல தோன்றின. பரவிசந்தேசய (புறாவிடு தூது) அத்தகைய நூல்களில் பெயர் பெற்றது.
தேவாலயத்தின் பணி செய்பவர்களாக நியமிக்கப்பட்டுள்ள பத்து பங்குக்காரர்கள் 
1.கங்காணி வீடு  
2.வீதியே வீடு 
3.முல்கம்பல வீடு
4.கற்பலகை வீடு 
5.மனந்திவெல 
6.சியம்பலாகொட
7.ரன்கம 
8.தும்பக்கே 
9.தொடந்தெனிய 
10.தலவத்துர ஆகிய வீடுகள்.இவர்கள் இணைந்து விமரிசையாக வருடாந்த பெரஹெர வைபவத்தை செய்து வருகின்றார்கள்.


கட்டிடக்கலை மிளிரும் கலையம்சங்கள்
தேவாலயத்தின் கட்டிடத் தொகுதி எட்டு பிரிவூகளைக் கொண்டுள்ளது. அவற்றில் ரிட்டா கெதர (ஆபரணங்கள் வைக்கும் அறை) மற்றும் சிங்காசன மண்டபம் என்பன தேவாலயத்துக்கு வெளியில் அமைக்கப்பட்டுள்ளன. ஏனைய வாகல்கட (நுழைவாயில்) மகா தேவாலயம் (கீழ் தேவாலயம்) முழுத்தென்கெய (மண்டபம்) அட்டுவ (நெற்களஞ்சியம்) புதுகெய (புத்தபெருமான் கோயில்) என்பனவாகும்.
தேவாலயத்தின் கலை வேலைபாடுகள் கொண்ட சிங்காசன மண்டபம் தேவாலயத்தில் இருந்து கொஞ்ச தூரத்தில் நுழைவாயிலுக்கருகே காணப்படுகின்றது. சற்றே மேட்டு நிலத்தில் சிங்காசன பீடம் அமைக்கப்பட்டுள்ளது. பெரஹெர காலத்தில் தேவ ஆபரணங்கள் அதில் அலங்கரிக்கப்பட்டு மன்னன் சிங்காசனத்தில் இருந்து வீதி வலத்தை கண்டு களிப்பான் என்று சொல்லப்படுகின்றது.கோவில் வளவுக்குள்  பிரவேசிக்கும் நுழைவாயில் வாயில் மண்டபம் என்பது மிகுந்த கலை வேலைப்பாடுகளுடன் பொருந்திய தூண்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான கூரை அமைக்கப்பட்டு அவற்றுக்கு மேல் துண்டு துண்டுகளாக சிவந்த ஓடுகள் நேர்த்தியாக பொருத்தப்பட்டுள்ளன. இந்த நுழைவாயில் மண்டபத்தின் மரத் தூண்களின் இரட்டை அன்னப் பறவைகள்இ யானைக் குஞ்சரம் நாகணவாய்ப்பறவை நீண்ட தந்தங்கள் கொண்ட யானை தாய் சேய் அரவணைப்பு வைரவர் போன்ற உருவங்கள் நுண்ணிய கலை வேலைப்பாடுகளுடன் செதுக்கப்பட்டுள்ளன.
 
தேவாலயத்தின் அமைப்பு
பிரதான தேவாலயம் ஐந்து வேறு வேறான கட்டிடங்களை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டுள்ளது. அவையாவன:
1. பெர வாத்தியக்கார மண்டபம்
2. சந்தனக் கூடம்
3. இடைக்கூடம் அல்லது மத்திய கூடம்
4. பிரித் ஓதும் பண்டபம்
5. கர்ப்பக்கிருகம் அல்லது பிரதிஷ்டா மாளிகை
பெர வாத்தியக்கார மண்டபம் என்றழைக்கப்படும் முன் மண்டபம் சற்று நீண்டதும் அகலமானதுமாகும். இதன் நீளமான பக்கத்தில் ஆறு தூண்களும்இ அகலமான பக்கத்தில் நான்கு தூண்களும் கூரையைத் தாங்கி நிற்கின்றன.
அதனைத் தவிர உட்புறம் நான்கு பக்கத்திலும் வரிசையாக மொத்தம் 32 தூண்கள் மேலும் கூரையைத் தாங்கி நிற்கின்றன. கூரையைத் தாங்கும் தூண்களுக்கும் கூரைக்கும் இடையில் இணைப்புப் பாலங்களாக சமாந்தரங்களாக இடது புறமாகவூம் வலது புறமாகவூம் 7 ஜோடித் தூண்கள் கிடையாகப் பொருத்தப்பட்டுள்ளன.
கூரையில் அகலவாக்கில் 12 பராலைகளும் நீளவாக்கில் 66 பராலைகளும் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றைத் தவிர கூரையின் இறங்கு பிரதேசத்தைப் பிரித்து அவற்றில் இரு புறமும் நீளவாக்கில் 41 பராலைகளும் மேற்படி எல்லா தூண்களும் இந்தியாவின் கேரளத்தில் இருந்து தருவிக்கப்பட்ட நன்கு முற்றிய வேங்கை மரங்களில் இருந்து குடைந்தெடுக்கப்பட்டுள்ளன என்று கூறப்படுகின்றது. இச்சித்திர வேலைப்பாடுகளை உருவாக்குவதற்கு தலைமைச் சிற்பியாகச் செயற்பட்டவர் தெல்மட தேவேந்திர மூலாச்சாரியார் என்றும் இவர் விஜயநகர சாம்ராஜ்யத்தின் இறுதிப் பகுதியில் இலங்கைக்குப் புலம்பெயர்ந்தவர் திராவிட கட்டிட பாணியில் சிறப்பு தேர்ச்சி பெற்றவர் .அவரது தலைமையின் கீழ் நூற்றுக்கணக்கான சிற்பிகள் இத்தூண்களில் மரச் சித்திர வேலைப்பாடுகளை செய்துள்ளனர்.மொத்தம் -514


அகலவாக்கில் 12 பராலைகளும் பொருத்தப்பட்டுள்ளன. இந்தப் பாராலைகள் அனைத்தும் கூரையின் உச்சியில் இருந்து நாலாபுறமும் விரிந்துஇ ஒரு குடையை விரித்து வைத்த மாதிரி கூரையைத் தாங்கி நிற்கும் கிடையான தூண்களின் மேல் இறுக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கூரையின் உச்சியில் "குருப்பாவை' என்றழைக்கப்படும் உத்தரத்தில் பிணைக்கப்பட்டிருக்கும்.
கலை அம்சம் கொண்ட பூமடலுடன் செதுக்கப்பட்டுள்ள இத்தகைய 'குருப்பாவை' யூடன் கூடிய உத்தரத் தூண் வேறு எங்குமே கிடையாது என்று சொல்லப்படுகின்றது. ஆதலால் இதனை எம்பெக்க தேவாலயத்துக்கு மட்டுமே உரித்தான விசேட கலை சிருஷ்டியாகக் கருதப்படுகின்றது. அதன் மற்றுமொரு சிறப்பம்சம் எந்த விதமான இரும்பு ஆணி வகைகளும் பாவிக்கப்படாமல் முற்றிலும் மரப் பொறிமுறை வேலைப்பாடுகள் மட்டுமே கொண்டு முழுக் கூரையும் அமைக்கப்பட்டுள்ளமையாகும்.
மரச் சிற்பக்கலை உயர் கலைநுட்பங்கள் கோவில் எங்கும் கலை நுணுக்கங்கள் பொங்கிப் பிரவகித்துக் கிடந்தாலும் பெர வாத்தியக்கார மண்டபம் என்றழைக்கப்படும் முன் மண்டபமே கலைச் சிருஷ்டியின் அச்சாணியாகத் திகழ்கின்றது. முன் சொன்னபடி இம்மண்டபத்தில் காணப்படுகின்ற கலை நுணுக்க வேலைப்பாடுகளை பின்வருமாறு பிரிக்கலாம்.
1. ஒரு தூணில் 4 என 32 தூண்களில் காணப்படும் மரச் சித்திர   செதுக்கல்கள்- 128
2.ஒரு தூணில் 8 என 32 தூண்களில் காணப்படும் சீவல் மர செதுக்கல்கள்   256
3.தூண் உச்சியில் செதுக்கப்பட்டுள்ள அலங்கார தாமரை மலர் வடிவங்கள் -64
4. உத்தரத் தூண் மரச் சித்திர செதுக்கல்கள்- 30
5. உத்தர கிடைத் தூண் மரச் சித்திர செதுக்கல்கள் -36

இலங்கை வரலாற்றில் தமிழர்களுடைய செல்வாக்கு சிங்கள பகுதியில் எப்படி இருந்தது என்பதற்கு எம்பக்க மிகச் சிறந்த சாட்சி ...

Friday, August 30, 2013

நாய்களின் கல்லறைகள் ...கோணேசர் கோவில் கோட்டைக்குள்



திருகோணமலை மனித புதை நிலமாக இருந்த காலங்களும் உண்டு ஆனால் இங்கு நாய்களுக்கு என்று தனியாக புதை நிலம்  இருப்பது எத்தனை பேருக்கு தெரியும்?.
கொட்டியாரம் பற்றிய தகவல்களை இணையத்தில் தேடிக்கொண்டு இருக்கும் போது ஒரு சுற்றுலா பயணியின் வலைப்பக்கம் கண்ணில் பட்டது.அதில் திருகோணமலையில் இருப்பதாக சில கல்லறைகளின் படங்கள் போடப்பட்டு இருந்தது. சில வேளை இது ஆக்கிரமிப்பாளர்கள் கல்லறைகளா என்று வாசித்து பார்த்தால் அவைகள் யாவும் நாய்கள் கல்லறைகள் தொடர்பானவை.
ஆனால் எல்லா நாய்களும் பிரிடிஷ் நாய்கள்....
இவையாவும் ஆங்கில ஆட்சி காலத்தில் அமைக்கபட்டு இருகின்றன.இது திருமலை கோட்டையின் உள்ளே கோணேசர் கோவிலுக்கு செல்லும் வழிக்கு பக்கத்தில் பற்றை கட்டுக்குள் இன்று ஒளித்துக் கொண்டு இருகின்றது.




Thursday, May 9, 2013

பூதம் வெளிப்படும் கிணறுகள் !!!-மாயன்

கடந்தவார மலைமுரசின் ஆசிரிய எழுத்துக்கள் இவை !


செங்கலடிக் கொலைகளின் பின்னர் சுவாரசியமாக அக் கொலைகளை இரசிக்கக் கற்றுக்கொள்ளச் சில இணையத் தளங்கள் தமது செய்திகளை புனையத் தொடங்கி விட்டன. 
ஒரு பதினாறு வயதுப் பெண்ணின் மனப் பிறழ்வைப் புரிந்து கொள்ள முடியாத பெற்றோரும் அதனைப் பயன்படுத்த முனைந்த தமிழ்ச் சமூகமும் கூட தம்மளவில் இக் கொலைகளுக்குப் பொறுப்பு கூறத்தான் வேண்டும். 
அற்புதமான கண்ணதாசனின் பாடலொன்று ஞாபகம் வருகின்றது. - எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே.. அவர் நல்லவராவதும் தீயவராவதும்.... சிறிது மாற்றிக் கொள்வோமா.. பெற்றோர் வளர்ப்பினிலே- என்ற வரிகளின் தார்ப்பரியம் புரிந்து கொள்ளப்படாமலே அல்லது பேசப் படாமலே போய்விடுகின்றது இவ்வகைக் கொலைகளில்.... சமூகம் தனது இறுக்கமான கட்டுக் கோப்புக்களின் வரிகளின் ஊடாக அவர்களைக் கொலையாளிகளாகத் தீர்மானிப்பதுடன் அதற்கான முழுப் பொறுப்பையும் அவர்களின் மீதே சுமத்திவிட்டு நழுவிக் கொள்கின்றது.
எமது ஆறாம் அறிவின் மீது இரசனைக் குறிப்புக்களாகப் பெண்ணும், அவளின் அங்க லாவண்யங்களும், அவளுடனான பாலியல் உறவும் படிந்து கிடப்பதால் அதனைத் தாண்டிப் பெண்ணைப் புரிந்து கொள்ள முடியாதவர்களாக நாம் மாறி விட்டோம் என்பதே உண்மை... அதன் ஒரு விதமான வார்த்தைப் பிரயோகம் தான் காதலிக்கும் பெண்ணை பார்த்து நாம் பயன்படுத்தும் வார்த்தை -- அவளை மடக்கி விட்டோம்-- என்பது. கொலைகளுக்குப் பின் அப் பதின்ம வயதுப் பெண்ணின் மீது வரையப்பட்ட காமம் கலந்த இரசனைக் குறிப்புக்கள் அவள் அனைவருடனும் உடலுறவு கொண்டாள் என்பதும் அவள் போதைப் பழக்கமுடையவள் என்பதுமான நிரூபிக்கப்படாத வரைவுகளே. தனது குழந்தைக்குச் சுதந்திரம் கொடுத்த பெற்றோருக்கு இவ்விடயத்தில் எந்தப் பொறுப்பும் இல்லையா என் நண்பர்களே???? அவர்கள் கொல்லப்பட்டு விட்டதால் அவர்களின் தவறுகள் யாவும் கழுவப்பட்டு விட்டனவா?
கையடக்கத் தொலைபேசியினை வாங்கிக் கொடுத்தது யார்? வீட்டில் தனியே பெண் குழந்தையை விட்டு விட்டு கண்ணும் கருத்துமாய்ப் பணத்தைச் சேர்க்க முனைந்தது யார்? பதின்ம வயதில் பல தடவைகள் காதல் வயப்பட்டதாக கூறப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டு உண்மையாக இருக்குமானால் அதன் மூல காரணத்தைக் கண்டறிய முயற்சிக்காமல் இருந்தது யார்? இப்படி அடுக்கப்படும் கேள்விகளுக்கு பதிலை எவ்விதமான பக்கச் சார்புமின்றி உங்கள் ஆழ் மனதில் கேட்டுப் பாருங்கள்....
இயேசுவின் வரிகளை மீட்டுகின்றேன் நான்... எவனொருவன் குற்றம் செய்யவில்லையோ அவன் மட்டும் முன் வந்து அவளின் மீது கற்களை வீசட்டும்.....

Friday, January 18, 2013

திருகோணமலையின் வரலாற்றையும் ஈழத்தில் சோழர்களின் வரலாற்றையும் வெளிக்கொணர்ந்த வரலாற்றியலாளர் திரு.நா.தம்பிராசா

நன்றி- சத்தியதேவன்

படம்: விமலாதித்தன் 
திருகோணமைலையின் வரலாறுகள் அடங்கிய கல்வெட்டுக்களை தேடித்தேடிக் கண்டுபிடித்து அவற்றை உரியவர்களைக் கொண்டு வாசித்து வெளியிடச் செய்து திருகோணமலையின் வரலாற்றை உறுதியான சான்றுகளுடன் எழுதுவற்கு மூலகாரணமாக திரு.நா.தம்பிராசா அவர்கள் 17-01-2013 அன்று காலமானார்

இவரைப்பற்றி வரலாற்றுத் திருகோணமலை மற்றும் காலனித்துவ திருகோணமலை ஆகிய நூல்களை எழுதிய கலாநிதி கனகசபாபதி சரவணபவன் அவர்களின்குறிப்பு 

1970களுக்கு முன்னர் திருகோணமலையின் வரலாறு வெறும் நாட்டார் கதைகளினாலும் , புராணங்களினாலுமே கட்டப்பட்டிருந்தது. மிகப் பெரிய சோழர்களின் எழுச்சியினால் எழுதப்பட்டிருந்த இந்த மண்ணின் வரலாற்றுச் சித்திரங்கள் புதையுண்டு கிடந்தது. தொகுத்துப்பார்த்து ஒரு வரலாற்றுப் பாரம்பரியத்தை எமது இளைய தலைமுறைக்கு சொல்லமுடியாதளவிற்கு இந்த மண் குறித்த தொடர்ச்சியான அறிவு உருவாக்கப்படவில்லை. கல்வெட்டுக்கள் வாசிப்புக்கு உட்படுத்தப்படாமல் வெறும் கற்தூணாக சாய்ந்து கிடந்தன. விளிப்புணர்ச்சியின்றி சமூகம் அக்கறையற்று வாழ்ந்த காலத்தில் வரலாற்றைத் தேடிய ஒரு மனிதன் மதிப்பிற்குரிய நா.தம்பிராசா அண்ணர் அவர்கள்.

சோழர்கள், பல்லவர்கள், பாண்டியர்கள் வந்தார்கள் சென்றார்கள் என்ற அறிவே இல்லாத காலத்தில் சோழர்களை தேடி ஆராய்வதில் உறுதியான காரணங்களை தேடி அவர் ஆரம்பித்த பயணம்தான் இன்றும் பல்கலைக்கழகங்களில் தொடர்கின்றது.வரலாற்றாய்வு என்ற நீண்ட பயணத்தின் முதல் காலடி அவருக்குரியது. 

சோழர்கால திருகோணமலை நிர்வாக அமைப்பை புரிந்துகொள்வதற்கு திருகோணமலையில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டுக்களே காரணமாக உள்ளன. திரு தம்பிராசா அண்ணர் அவர்கள் தனிமனிதனாக திருகோணமலை வரலாற்றுத் தடங்களை தேடிக் கண்டறிந்தார். பேராதனைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை விரிவுரையாளராக பணியாற்றிய கலாநிதி செ.குணசிங்கம் அவர்கள் அவரது முதுநிலை பட்டத்திற்கான ஆய்வுத் தளமாக கோணேஸ்வரத்தை தேர்ந்தெடுத்திருந்தார். இது 1970களின் ஆரம்ப காலமாகும். பல்கலைக்கழகத்திற்கு வெளியே இருந்தவாறு பல்கலைக்கழக வரலாற்றுத்துறைக்கு தேவையான ஆய்வுகளை திரு தம்பிராசா அண்ணர் செய்தார். அவரால் வெளிச்சம் பாய்ச்சப்பட்ட கல்வெட்டுக்களில் இருந்தே இலங்கையில் சோழர்கால ஆட்சி குறித்த வரலாற்றுச் சித்திரத்தை வரலாற்று ஆய்வாளர்களால் தீட்ட முடிந்ததது. அவற்றுள் கந்தளாய் விஸ்வநாதர் சிவன் கோயில் கல்வெட்டு, பெரிய குளம் கல்வெட்டு, மாங்கனாய் கல்வெட்டு, பளமொட்டைக் கல்வெட்டு, பத்திரகாளி அம்மன் கல்வெட்டு, நிலாவெளி பிள்ளையார் கோயில் கல்வெட்டு, கங்குவேலி கல்வெட்டு, தம்பலகாமம் ஐயனார் திடற்கல்வெட்டு, வில்லூன்றி கந்தசாமி கோயில் கல்வெட்டு என்பன முக்கியமானவை. கலாநிதி செ.குணசிங்கம், பேராசிரியர் சி.பத்மநாதன், பேராசிரியர் கா.இந்திரபாலா ஆகியோர் என அவரது ஆதரவும் உதவியும் பெற்ற வரலாற்றுப் பேராசான்களின் பட்டியல் தொடரும். எனது "வராலாற்றுத் திருகோணமலை" தொடர்பான ஆய்வுகளை 2000 இன் ஆரம்பத்தில் செய்தபோது அவரது உதவிகள் எனக்கு தேவைப்பட்டது. அவரது வரலாற்று ஆர்வம் அறிந்து ஆச்சரியப்பட்ட நிகழ்வுகள் அதிகம். இயல்பாகவே இந்த மண்ணை உயிர் மூச்சாக எண்ணிய அவரது பேச்சில் வீச்சாக வந்து விழும். ஒரு வரலாற்று ஆய்வாளனுக்குரிய கல்வி ஒழுக்கம் அவரிடம் நிரம்பியிருந்தது. அவர் வெளிச்சம் பாய்ச்சி வெளிஉலகிற்ற்கு தெரியப்படுத்திய கல்வெட்டுக்களில் கந்தளாய்க் கல்வெட்டு, மானாங்கேணிக் கல்வெட்டு, நிலாவெளிக் கல்வெட்டு என்பன மிகச் சிறப்பானவை. பத்தாம் நூற்றாண்டுக்குரியதாக கருதப்படும் நிலாவெளிக் கல்வெட்டிலேயே "திருகோணமலை" என்ற சொல் முதன்முறையாக பயன்பட்டிருப்பதை அறிய முடிந்தது. திரு தம்பிராசா அண்ணர் அவர்கள் இது குறித்து மிக அடக்கத்தோடு பல விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார். தான் வாழ்ந்த மண்ணின் மூலவேர்களை, அதன் மண்வாசனையை எதிர்கால சந்த்ததியினரும் தொட்டுணர்ந்து மகிழவேண்டும் என தன் இளமைக்காலத்தை அர்ப்பணித்த ஒரு வரலாற்றுப் பெருந்த்தகை. பேராசிரியர்கள் வரிசையில் நின்று எழுதப்படாமல் மண்ணில் புதைந்து கிடந்த திருகோணமலை வரலாற்று தடயங்களை தேடி ஒரு வரலாற்றைக் கட்டியெழுப்ப அவர் ஆற்றிய பங்கு காலத்தால் அழியாத புகழை அவருக்கு சேர்க்கும். மண் பயனுற வாழ்ந்த ஆசான் அவர்.


 திருகோணமலையின் வரலாற்றையும் இலங்கையில் சோழராட்சியின் வராலற்றில் முக்கால்வாசியையும் இலங்கையின் 10 தொடக்கம் 12ம் நூற்றாண்டு வரையான காலத்தின் வரலாற்றை எழுத பேருதவி புரிந்த அன்னாருக்கு எனது அஞ்சலிகள்.. முன்னாள் சாம்பல்த் தீவு கிரோமதய சபைத்தலைவராக இருந்த அன்னாரின் உதவியால்த்தான் கலாநிதி.செ.குணசிங்கம், பேரா.கா.இந்திராபாலா, பேரா.பத்மநாதன் ஆகியோரின் ஆய்வுகள் முக்கியப்பட முடிந்தது.. வரலாற்றின் கடமையை தன்னால் இயன்ற அளவு செய்தவரை நாமும் நினைவில் வைத்திருப்போமாக



திரு.க.சரவணபவன் அவர்களின் குறிப்பு Sritharan Sam அவர்களின் முகநூல் பதிவிலிருந்து 

Friday, January 4, 2013

திருமலையின் வரலாறு உருவாகிய காலம்



உலக வரலாறுகள் உருவாக்க காலம் என்பது கிட்டத்தட்ட கிறிஸ்துக்கு பின் வந்த காலப் பகுதிகளை ஒட்டித்தான் காணப்படுகின்றன.அப்படித்தான் இலங்கை வரலாறும் கி.மு 500 ஆண்டளவில் விஜயன் வருகையோடு தொடங்குகிறது என்று வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.
ஆனால் மகாவம்சம் விஜயன் வருகைக்கு முன்னரான திருகோணமலையில்  இறுக்கமான ஒரு ஆட்சி முறை இருந்ததை வெளிப்படையாக சொல்லவிட்டாலும் சில இடங்களில் சொல்லாமலும் இல்லை.
அப்படித்தான் விஜயனது வருகைக்குப் பின்னரான சம்பவம் ஒன்றை கூறும் மகாவம்சம் நம் தேடலை அதிகரித்து சென்று விடுகிறது ,
விஜயன் வருகைக்கு பின்னர் விஜயனுக்கு வாரிசு இல்லாமல் போகவே விஜயன் தனது வாரிசுக்காக கலிங்க நாட்டில் இருந்து தனது தம்பி சுமிதனின் மகனான பாண்டு வாசுதேவனை இலங்கை தீவில் உள்ள தனது ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசத்துக்கு அழைக்கிறான்.
அப்படி அழைக்கப்பட்ட பாண்டு வாசு தேவனும் அவனுடைய 32 மந்திரிகளும் துறவிகள் வேடம் பூண்டே திருகோணமலை துறை முகத்தை அடைந்ததாக மகாவம்சம் கூறுகிறது .
இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு நமக்கு ஒரு கேள்வி எழுகிறது.
பாண்டு வாசு தேவனும் அவனது மந்திரிகளும் மாறு வேடத்தில் திருகோணமலைக்கு வர காரணம் என்ன ?
அப்படியானால் விஜயனது கூட்டத்திற்கு எதிரானவர்களின் கட்டமைப்பு  திருகோணமலை பகுதியில் இருந்திருக்க வேண்டும்.அதன் காரணமாகவே இக்குழுவினர் மாறுவேடத்தில் வந்திருக்கின்றனர்.இவ் மகாவம்ச குறிப்பில் இருந்து இன்னும் ஒன்று புலப்படுகிறது.இங்கு வாழ்ந்த மக்கள் துறவிகளை மதிக்கத்தக்கவர்களாக வாழ்த்திருகின்றனர்.ஆகவேதான் பாண்டு வாசுதேவன் குழுவினர் துறவி வேடத்தை தேர்ந்து எடுத்திருகின்றனர்.
ஒழுங்கான ஆட்சி முறையுடன் இம் மக்கள் வாழ்தார்கள் என்று நிருபிக்க மகாவம்சத்தில் இன்னுமொரு குறிப்பு காணப்படுகிறது.துட்டகைமுனு எல்லாளன் போரை பற்றி குறிப்பிடும் மகாவம்சம் எல்லாளனை துட்டகைமுனு வெல்வதற்கு முன்பு 32 தமிழ் ஆரசுகளை வென்றதாக கூறுகிறது.
அதுமட்டும் அல்லாது அக்காலத்தில் மிகப்பிரபலமாக இருந்த கோகர்ண (திருமலை) துறைமுகப்பகுதியை எந்த ஆரிய வம்சத்தில் இருந்து வந்த ஆட்சியாளனும்  ஆண்டதாக குறிப்பிடவில்லை.ஆரிய வம்சத்துக்கு ஆதரவாக எழுதப்பட்ட நூலில் அடிக்கடி கோகர்ணம்(திருமலை)சவாலுக்குரிய பகுதியாகவே குறிப்பிடப்பட்டுள்ளது என்பது அவர்களின் செல்வாக்கு குறைவான இடம் என்பதை மட்டும் காட்டுகிறது .அப்படியானால் அந்த 32 அரசர்களில் யாரோ ஒருவனால் இப்பகுதி ஆளப்பட்டு இருக்கிறது என்பது சந்தேகமில்லாமல் புலப்படுகிறது.

இவ்வாறு சவாலுக்குரிய பிரதேசமாக இருந்த கோகர்ணம் வழிபாட்டு ரீதியாகவும் பிரச்னைகள் ஏற்படுகின்றன.
கி. மு 300 ஆண்டு காலப்பகுதியில்தான் இலங்கையில் சைவ மற்றும் பிராமணர்களின் செல்வாக்கு அதிகரிக்க தொடங்கிய காலம் எனலாம்.இதற்கு முக்கிய காரணம் வியாபார தொடர்புகள்தான்.இதே மாதிரித்தான் சமணமும் தேவாதார மற்றும் மகாயான பௌத்தங்கள் நிறுவன ரீதியாக இலங்கை தீவில் காலடி எடுத்து வைக்கின்றன.
. கி மு 3 நூற்றாண்டு காலப்பகுதியில் மகாயான பௌத்தத்துக்கு மாறிய மகாசேனன் கோகர்ணம்(திருகோணமலை) ,எரகாவில்லை(ஏறாவூர்),மற்றும் இலங்கை தீவின் கிழக்கு பகுதியில் இருந்த பிராமணன் கலந்தனின் ஊர் ஆகிய வற்றில் இருந்த லிங்க கோவில்கள் அழிக்கப்பட்டதாக மாகவம்சம் கூறுகிறது. மகாசெனனால் அழிக்கப்பட்ட மூன்று லிங்க வழிபாட்டு தலங்களும் இருந்த இடங்கள் திருகோணமலையை அண்டிய பிரதேசங்கள்தான் இருந்திருக்கின்றன.
இதில் முக்கியமான விடயம்  என்னவேனில் பலமான தென்னிந்திய தொடர்பை திருகோணமலை கொண்டிருந்திருக்கிறது . என் என்றால் இலங்கையில் லிங்க வழிபாடு என்பது ஆதார ரீதியாக இலங்கை ஆதிக்குடிகளிடம் இருக்க வில்லை.கந்த, வேல் ஆகிய பெயர்களால் அழைக்கப்பட்ட முருக வழிபாடுதான் இவர்களிடம் இருந்தது.அப்படி காணப்பட்ட திருகோணமலையில் வணிகர்களில் வருகை மூலமே லிங்க வழிபாடு அறிமுகப்படுத்த பட்டிருக்க வேண்டும்.
இவ்வாறு திருகோணமலையில் லிங்க வழிபாடு ,மற்றும் மகாயான புத்த மதங்கள் போட்டி போட்டு கொள்ள முருக வழிபாடு அழியாமல் தனித்துவமான வழிபாட்டு முறையாக கி பி எழாம் நூற்றாண்டு வரை சிறப்பாக இருந்ததை சூளவம்சம் சில புனைவுகளுடன் எடுத்துரைக்கிறது.
கி பி எழாம் நூற்றாண்டு காலப்பகுதியில் மானவர்வன் என்ற இளவரசன் கந்தக்கடவுளை நினைத்து வேள்வி செய்ததாகவும் அப்போது கந்த கடவுள் மயில் பறவையில் வந்து காட்சி தந்ததாகவும் பாளி இலக்கியமான சூளவம்சம் கூறுப்பிடுகிறது.