Showing posts with label திருகோணமலை. Show all posts
Showing posts with label திருகோணமலை. Show all posts

Saturday, August 25, 2012

எப்பிடி அன்ன புடிச்சிங்க ???வல போட்டு புடிச்சோம் !!; :P

கிழக்கு மாகாண சபை தேர்தல்க்களம் சூடாக தொடங்கி விட்டது.தமிழரின் சர்வேதேச அணுகுமுறை போராட்ட முறையின் அத்திவாரம் இந்த தேர்தல்.தமிழ் தேசிய கூட்டமைப்புத்தான் முள்ளிவாய்க்காலுக்கு பின்னரான தமிழர்களின் தலைமைத்துவம் என மாறியிருக்கும் காலம் இது.ஏன் என்றால் தமிழ் தேசியத்தை அடையாளமாக கொண்டு தனித்துவமாக எந்த கட்சியும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தவிர இலங்கையில் இல்லை.தமிழர் என்ற அடையாளத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆதரிப்பதை தவிர தமிழ் மக்களுக்கு வேறு வழி இல்லை.




இது ஒரு புறம இருக்கட்டும்.
தனது கட்சியின் கொள்கைகளை நடைமுறை படுத்துவதற்கு அக்கட்சிக்கு தேர்தலில் வெற்றி தேவை, அவ் வெற்றிக்கு அக்கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும்.அப்படி அந்த வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்றால் மக்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டும்.அப்படி அவர் மக்களிடம் இருந்து வாக்குகளை பெற எப்படி பட்டவராக இருந்திருக்க(இருக்க) வேண்டும்???அதாவது ஒரு நல்ல அரசியல் வாதி எப்படி இருக்க வேண்டும்??
கட்சி என்பதை தவிர்த்து தனிப்பட்ட ரீதியில் சமுக அக்கறை கொண்டவராக இருக்க வேண்டும்....தேர்தல் காலங்களில் மட்டும் மக்களில் அன்பு கொண்டவர்களாக இருக்க கூடாது. (நான் சொல்லுறது சரிதானே??)அவர்களைத்தான் மக்களுக்கு பிடிக்கும்.அப்படி எந்த அரசியல் வாதியையும் திருமலை மாவட்டத்தில் நான் கண்டதில்லை.ஒரு தேர்தல் கால கவர்ச்சி காரணமாகவே சிலர் தேர்தலில் வெற்றி பெறுகின்றனர்.
இதுவும் ஒரு புறமாக இருக்கட்டும்
ஒரு வேட்பாளர் தேர்தலில் குதிக்கிறார் என்றால் அவருடைய நோக்கம் என்னவாக இருக்கும் ???சமுகத்தின் மீதான அக்கறையாகத்தான் இருக்கும்.(காலம் காலமாக இதத்தான் சொல்லுறாங்க).
இதைத்தவிர என்ன காரணங்கள் இருக்கும் ஏதாவது உங்களுக்கு தெரியுமா ??
சொல்லுறன் கேளுங்க!!! உங்களுக்கு ஒழுங்கான வேலை இல்லை,அல்லது செய்யும் வேளையில் நீங்கள் எதிர்பார்க்கும் சம்பளம் கிடைக்கவில்லை.இலங்கையில் இருந்து ஒன்றும் செய்ய முடியாது... என் பக்கத்து வீட்டு காரன் எல்லாம் பிரச்சன நேரம் வெளிநாட்டுக்கு போய் அங்க சிட்டிசன் கிடைச்சு இப்ப facebookல காருக்கு முன்னுக்கு நிண்டு போட்டோ எடுத்து போட்டு இருக்கிறான்.!! என்ற பல பிரச்சனைகள் இருக்கும்.இதற்க்கான அவர்களது தீர்வு என்ன?? வெளிநாடு போகணும் ,அங்க போய் எப்படியாவது வாழ்நாள் முழுவதும் அந்நாட்டில் வாழ்வதற்கு ஏதாவது உரிமையை பெற்று விடுவது.இதற்க்கு நீங்கள் இந்த தேர்தலை பயன் படுத்திக்கொள்ளலாம். இதை விட பல காரணங்கள் இருக்கு சொன்னா வெக்கக்கேடு  நமது சமுக அரசியலை இப்படியும் பயன்படுத்தலாமா ???என்று நீங்களே யோசிப்பிங்க அத விடுங்க நாம விசயத்துக்கு வருவம்.
முதலில் நீங்கள் அவன்ட இவன்ட காலப்பிடிச்சி நாலு பேர்களை சேர்த்துக்கொண்டு நீங்களும் சமுகத்தில் பெரிய அப்பாடக்கர் என்ற மாயையை உருவாக்க வேண்டும் பிறகு எப்படியாவது ஒரு கட்சியில் அல்லது சுயட்சையாக அரசியலில் குதிக்க வேண்டும்,
பத்திரிகைகளில் உங்களது செய்தி இடம்பெறுகிற மாதிரி பார்த்துக்கொள்ளுங்கள்.(முழக்கம்,விளக்கம்,விஜயம்)என்ற சொற்கள் முக்கியம்)அரசை தாக்கி பேசிய ஒலி ,ஒளி பதிவுகள் இருந்தால் மிகவும் நல்லது.உங்களது வேட்பாளர் அடையாள அட்டை,செய்திதாள்களில் வந்த உங்களது செய்திகள் என்பவற்றை பத்திரமாக வைத்திருங்கள்.
தேர்தலும் வரும் உங்களது சொந்தங்கள் ,நண்பர்கள் ,தெரிஞ்சவன், எல்லோரும் பழகின பாவத்துக்காக உனக்கு வாக்களிப்பார்கள்.நீ ஒரு தமிழ் தேசியத்துக்கு அப்பால் பட்ட கட்சியின் வேட்பாளர் ஆயின் இம்மாகாண சபை தேர்தலில் தமிழ் மக்களின் எதிர்கால முக்கியத்துவத்தை விளங்காமல்  உனக்கு ஆதரவான உன் உறவுகள் நண்பர்கள் வாக்களிக்கும் போது உனக்கு வந்த வாக்குகள் நம் மக்களுக்கு ஆப்புகளாக மாறும். நீங்கள் இலகுவாக அது இது எல்லாம் காட்டி...ஏதாவது அபிவிருத்தி அடைந்த நாட்டில் அகதி அந்தஸ்து பெற்று விடுங்கள்.....


இது இன்னொரு வகை தமிழ் தேசியம் கதைப்பவர்கள் பற்றி ................
 தேர்தல் காலங்களில் மட்டும் நான் அத்தனையாம் ஆண்டில் இருந்து அரசியலில் இருக்கிறேன், மக்கள் வேண்டுகோள் என்று பீலா விட்டிங்க...மக்கள் அன்றிலிருந்து இன்று வரை  பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் அவர்கள் ஒன்றும் வானத்தில் இருந்து குதித்தவர்கள் அல்ல
கனவான்களே மக்களுக்காக தேர்தலில் ஈடுபடுதல் என்பது தானாக  வரணும்...தானாக வந்தவர்களே  ஒன்றும் செய்ய வில்லை நீங்கள் என்ன செய்ய போகிறிர்கள்???
மக்கள் உங்கள் வெறுப்பில் கட்சிக்கு கூட வாக்களிக்காமல் விட்டு விடுவார்கள்.மக்களோடு மக்களாக ...மக்களுக்காக தங்கள் உயிரை பணயம் வைத்து...யார் என்றாலும் சிரித்த முகத்துடன் உதவி செய்து ...விழாக்களில் அதிதியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படாமல் மக்களுக்காக மக்களோடு இன்னும் அகதியாக இருப்பவர்கள்தான் அவர்களுக்கு தேவை
கனவான்களே ...வெற்றியா நல்லது எதாவது சமுக விழாக்களில் நீங்கள்தான் பிரதம அதிதி...தோல்வியா ஏதாவது அபிவிருத்தி அடைந்த நாட்டில் அரசியல் தஞ்ச அந்தஸ்து...அவ்வளவுதான் ...அங்க போன பிறகு பேஸ்பூக்ல, ட்விட்டர்ல மக்கள் போராட்டம் மயிறு மட்ட என்று தயவு செய்து கூச்சல்  போட வேண்டாம் ..(அதுக்கு அங்க நிறைய பேர் இருக்கிறாங்க )
வேட்பாள கனவான்களே !!!!30 வருட யுத்தம் நம் மக்களை அரசியலில் நாட்டம் இல்லாமல் பண்ணிவிட்டது..அவங்களே அதில் இடுபாடு இல்லாமல் இருக்கும் போது, இந்திய அரசியல் வாதிகள் போல நீங்களும் நடந்தால் என்ன ஐயா செய்வது???மக்களுக்கு உண்மையை சொல்லுங்கள் தமிழ் மக்களுக்கு இந் தேர்தலின் முக்கியத்துவத்தை உணர்த்துங்கள் உங்கள் கட்டுக்கதைகளை விட்டு.
..
பின் குறிப்பு-சில உதிரிகளும் தேர்தல் களத்தில்….. நாயகர்களாக தேர்தல் அறிவிப்பில் இருந்து சமுக சேவகர்களாக மாறிவிட்டார்கள் அவர்களை பற்றி கதைக்க தேவை இல்லை தேர்தலுக்கு பிறகு ஒய்ந்து விடுவார்கள்.

முக்கிய குறிப்பு-வேட்பாளர்களே நீங்கள் தேர்தல் காலங்களில் காட்டும் சமுக அக்கறையை கொஞ்சம் மற்றைய நாட்களில் காட்டுங்கள் தானாக மக்கள் உங்களுக்குத்தான் வாக்களிப்பார்கள்.

Friday, August 24, 2012

First Love


(Una storia d'amore in Ollanta donna di Trincomalee)
Verso la fine del 18 ° secolo! Si potranno godere il sorgere del sole al mattino e in vena di godere oggi. Altra nazione, ma ha dato la sua vita per questo tirukonamalaitan più per favore. Ora ha una grande tragedia. Abolizione nave Turatte purappatuvatar della conchiglia. Suoi occhi dalla sua camera e sono andato al mare con gli occhi ampliato albero purinttatu.La nave è così importante per lei ... Quale potrebbe essere il più importante è una ...... amarla! Reed è nato a Van ollant prancina ollant suo padre, un ufficiale della enpat valttatillai. In questa stagione ha raggiunto l'età di tutti Rockfort piretik, la urumtan di Trincomalee.
In amore con lui dal giorno in cui è ufficiale jocoppiyan militare capito il significato dell'amore enapatarku. Dirgli che ho amato per raggiungere la saturazione completa raggiungere la saturazione completa. Lei lo ama, disse a suo padre. Jocop a parlare con il suo matrimonio Data kurikkapattatu padre. Ma lui non la auguro a nell'ufficio del padre. Citanam Ho provato a chiedere le dimissioni del funzionario militare per la posizione era in kataic. Kovamatainta padre di Rita gli ordinò di andare nel suo ufficio ollantu rimosso.
La nave si preparò per andare a le mosse albero in aria. Nave si muove lentamente. Ritta non sapeva cosa fare. La nave sta andando ad amare la sensazione della sua vita onirica. Uscendo dalla stanza. Con la nave per andare alla montagna camantaram konecar comincia a correre sulla montagna. Miscelato con il mare alla montagna che è una decisione di non correre per la sua vita oltre la collina.

 Provate a immaginare un vero incidente che ha avuto luogo nel 1680 kalappakut
  Etichettare questa storia. Colonnello. Thomas (British Army), si basano su l'anno 1940 di riferimento e con Ollanta etukkapatta.
(Non so il nome di un ufficiale militare ha osservato in questa storia è frutto di fantasia.)

நொக்ஸ் மரம் (Knox Tree)


மூதூர் (கொட்டியாரம்)  எத்தனையோ பல விடயங்களுக்குப் பெயர் பெற்றது. இங்கு ஆங்கிலேயர் ஒருவரின் பெயரில் பிரபலமான வீதி ஒன்று மிக நீண்ட காலமாக இருந்து வருகின்றது. அதுதான் நொக்ஸ் வீதி. மூதூர் நகரின் முக்கியமான வீதிகளில் ஒன்றாகவூள்ள இந்த நொக்ஸ் வீதியூடன் தொடர்புடைய வரலாறு ஒன்றுள்ளது. அந்த வரலாற்றுக்குச் சான்றாக ஒரு புளியை மரம் உள்ளது. கி.பி. 1668ம் ஆண்டளவில் ஆங்கிலேய மாலுமியான றொபட் நொக்ஸ் தலைமையில் பிரயாணம் புரிந்த ‘ஆன்’ (ANN) எனும் கப்பல் புயலில் சிக்கி நமது கொட்டியாரக்குடாவினுhடாக மூதுhரின் கோட்டையாற்றுக் கரையை வந்தடைந்தது. அந்த மாலுமியூம் அவனுடன் வந்திருந்த அவனது இளைஞனாகிய மகன் றொபட் நொக்ஸ் (ஜுனியர்) மற்றும் அவனது நண்பர்கள் குழுவினரும் அங்கிருந்த ஒரு புளியை மரத்தின் கீழ் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த வேளையில் அன்றைய கண்டி இராச்சிய மன்னனின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.17ம் நுhற்றாண்டின் நடுப்பகுதியில் நிகழ்ந்த இந்த வரலாற்றுச் சம்பவத்தை நினைவூ கூருவதற்காக பின்வந்து இலங்கையைக் கைப்பற்றிய ஆங்கிலேயர்களின் அரசு 1893ல் அந்தப் புளியமரத்தின் கீழ் ஒரு நடுகல்லை இட்டது. அந்தக் கல் இன்று வரை உள்ளது. 1964ம் ஆண்டு மார்கழி மாதத்தில் வீசிய புயலில் நிஜ மரம் வீழ்ந்த பின்பு அதே இடத்தில் இப்போது இருப்பது பின்பு இளம் கன்றாக நடப்பட்டு வளர்ந்துள்ள இளம் புளியை மரமாகும். அதனையே இப்போதும் நொக்ஸ் மரம் (Knox Tree) என அழைக்கின்றோம் ..




Pa albero Knox in lingua italiana......
 E 'famosa per molte cose Mutur. Una delle strade più famose del nome di uno dei qui britannico ed è stato per un lungo periodo di tempo. Che noks Road. Strada nella città principale proverbio strade onrakavulla h legata alla storia di vitiyutan noks corona. La prova della storia è un albero di tamarindo. DC Nel 1668 l'esploratore britannico che stava viaggiando in noks ropat 'ma' (ANN), una nave sorpreso dalla tempesta, come il nostro proverbio h Rin Tin raggiunto confine kottaiyarru. La malumiyum era con suo figlio ilainanakiya ropat noks (Jr.) e dei suoi amici e l'equipaggio si trova un albero di tamarindo, il resto della giornata di lavoro, Kandy Unito, re autorità hanno arrestato 17 E Nu h rrant nel bel mezzo del centro storico incidente kuruvatark ricorda la riuscita dello Sri Lanka e catturato il governo britannico nel 1893, la messa a dimora in puliyamarat incaricato uno. La pietra è fino ad oggi. Nave in una tempesta nel dicembre del 1964, dopo la caduta di alberi veri piantati al suo posto è ora il vitello e la crescita giovane albero di tamarindo

 (chenthooran kalirajah)

Saturday, June 30, 2012

சாமி என்ற பெயரில் பேய்கள்- சாராயம் குடிக்கும் (ஆ)சாமிகள்-

மூதூர் பகுதியில் வேத முறைப்படி இந்து ஆலயங்களில் பூசை நடைமுறை இடம் பெற்றாலும்,வேதமுறையற்ற அதாவது அதர்ம வேத பூசை வழிபாடுகள் அதிகம் இடம்பெறுகின்றன.இது மூதூரின் அடையாளம்  கூட,நவராத்திரி காலத்தில் ஊரே களைகட்டும்.
சாமி அருள் வந்து ஆடுதல், கட்டு போடுதல்,கும்பம் ஆடுதல்,மறிப்புப்போடுதல் என்று எங்கும் கலகலப்பாகவே இருக்கும்.
அது மட்டும் அல்ல வைகாசி மதம் வந்தால் எல்லா கோவில்களிலும் வேள்விகள் தீ மிதிப்பு,சாமி ஆடல்கள் என்றும்,வீடுகளில் மடை வைத்தல் பொங்கல் என்றும் ஒரே பக்தி மயமாக இருக்கும்.
 இவ்வாறன நடவடிக்கைகள் மூட நம்பிக்கைகளை சிலர் என்றும் கூறுவார்கள்(அந்த ஆராச்சி எனக்கு எதுக்கு), இது உண்மை பொய் என்பதற்கு அப்பால் இது அம்மக்களின் கலாச்சாரம்,பண்பாடு அது மட்டும் அல்ல இது அப் பிரதேசத்தின் அடையாளம்.இது அப்படியே இருக்கட்டும்.இதை விட்டு நம்அடையாளங்களை தொலைத்துக்கொள்ள கூடாது.
நம்பிக்கைகள் நம்பிகையாகவே இருக்கட்டும்.
இப்பொழுது விடயத்துக்கு வருகிறேன் ,
“சாமி சாராயம் குடிக்கிறது,அதுவும் ராவா அடிக்குது!!!!.
சைட் டிஷ் கூட இல்ல!!!!
பாருங்களன்  எல்லாம் தெரிஞ்ச சாமிக்கு தண்ணி அடிக்க தெரியல்ல...




கவனிக்க வேண்டியது—
  • எந்த மதமாவது மதுவை(போதைப்பொருள்) ஆதரிக்கிறதா?

  • அங்கு சிறுவர்களும் இளையவர்களும் அப்பூசையில் இருக்கும் போது சாமி என்ற பெயரில் சாராயம் குடிக்கும் போது அது சிறுவர்களுக்கும்  இளையவர்களுக்கும் வழி காட்டியாக அமையாதா?
  • இப்படியே அடுத்த சந்ததிக்கு இதுதான் நம் பண்பாடு என்று உணர்த்த போகிறீர்களா???
  • ஊரில் முப்பாட்டன் காலத்தில் இருந்து காணப்படும்  பாரம்பரிய (வேத முறை அல்லாத)வழிபாட்டு முறைகளை கேவலப்படுத்தப்போகிறீர்களா???

  • எல்லாம் அறிஞ்ச சாமிக்கு சாராயம் எதுக்கு???உங்களிடம் கேட்டதா???

  • சாமியாடல் என்பது அதிஉச்ச பக்தி மட்டுமே அது கடவுள் அல்ல என்பது உங்களுக்கு தெரியாதா???


 “நல்லது செய்தாத்தான் அது சாமி தீமைகளை செய்தால் அதுக்கு பெயர் பேய்...”  

Wednesday, March 28, 2012

பௌத்த பூமியா திரியாய் ???


திருகோணமலை ,முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு இடையில் இருக்கும் ஊர்தான் திரியாய்.இரு மாவட்டகளின் எல்லை கிராமம்.இந்த கிராமம் வரலாற்று பின்னணி கொண்டதும் கூட.இலங்கை இனப்பிரச்சனை காரணமாக பாதிக்க பட்ட கிராமங்களுள் ஒன்று.இதன் சுமந்த வடுக்களை பதிவாக எழுதி முடிக்க முடியாது.இப்படி இருக்கையில் புதிதாக ஒரு பிரச்சனை ஒன்று உருவாகி உள்ளது.இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த பொழுதில் இருந்து இப்பிரதேசம் பௌத்த பூமியாக மற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.இந்த கிராமம் வயலும் குளமும் சூழ்ந்த பூமி.முழுக்க முழுக்க தமிழர்கள் வாழும் பூமி.கோணேஸ்வரத்துக்கு நெல் வழக்கும் பூமி.இப்படி எல்லாம் இருப்பதால் என்னவோ ஆசையை துறந்த புத்தனுக்கு இப்பூமி மீது ஆசை வந்து விட்டதோ!!!!
அப்படி என்னதான் இம் மண்ணில் புத்தனுக்கு சொந்தமானது இருக்கிறது என்று நானும் என் நண்பர்களும் பார்க்க புறப்பட்டோம் என் நண்பர்களில் சிலர் அங்கு ஏற்கனவே சென்று வந்ததால் அவர்களின் உதவியையும் பெற்றுக்கொண்டோம் கொஞ்சம் மழை தூறல் கொண்டாட்டமான ஊந்துருளிப்பயணம் . திருகோணமலையில் இருந்து கிட்டத்தட்ட 43km
 (நல்ல வீதிதான், சீனாக்காரன் நல்லாத்தான் பார்த்து பார்த்து ரோடு போட்டு இருக்கான்).
பிரதான வீதியில் இருந்து 2km கிராமத்துக்குள் போய் மறுபடியும் மணல் பாதையால் கொஞ்ச தூரம் போக வேண்டும் .அங்கு  போனால் அங்கு ஒரு ராணுவத்தளம் இருந்தது
(எனக்கு நீட்ட நாட்களாக ஒரு சந்தேகம் ஏன் புத்தன் எங்கு இருந்தாலும் அங்கு கடைசி ஒரு ராணுவ காவலரன் ஆவது இருக்கிறது)
குன்றிற்கு செல்லும் படிக்கட்டுக்கள்
காவல்களைத்தாண்டி சென்றால் அங்கு ஒரு சிறிய குன்று குன்றின் அடிவாரத்தில் பண்டைய கால அகழிகள் காணப்படுகிறது.இது பாதுகாப்புக்கு அமைக்கப்பட்டதா அல்லது நீர் தேவைக்கு அமைக்கபட்டதா தெரியவில்லை.அடுத்து மலை குன்றில் ஏறுவதற்கான படிகட்டுகள் அமைக்க ப்பட்டுள்ளது.இந்த  கட்டுகள் பண்டைய காலத்க்ககுரியதாக  இருந்தாலும் சிறிய அளவில் புனரமைக்கப்பட்டு உள்ளது.சிறிய தூரம் சென்றவுடன் ஒரு இடத்தில் எதோ சிங்களத்தில் எழுதி அம்புக்குறி இடப்பட்டு இருந்தது.என்னதான் இருக்கிறது என்று பார்க்க புறப்பட்டோம்.ஒரு சிறிய ஒற்றை அடிப்பாதை சிறு பற்றை காட்டுப்பகுதிக்கு சென்றது அங்கு சென்று பார்த்த ஒரு அறிவித்தல் பலகை வைக்கப்பட்டு இருந்தது அது இதுதான்
கல்வெட்டின் விளக்கம் 

பல்லவ வியாபாரிகளை பற்றிச் சொல்லும் கல்வெட்டு 
இது மூன்று மொழிகளிலும் காணப்பட்டது அருகில் கல்வெட்டையும் காணமுடிந்தது.அப்போதுதான் நினைவுக்கு வந்தது #தபஸ்சு,பல்லுக்க என்ற வியாபாரிகள் கிரிவிகாரையை கட்டி வணங்கிதாக  பத்தாம் ஆண்டு பாடப்புத்தகத்தில் படித்தது.ஆனால் கிரி என்ற விகாரை கட்டபட்டதாக இக்கல்வெட்டு கூறவில்லை.கிரிகண்ட என்ற கோபுரம் கட்டபட்டதாகதான் கூறப்பட்டுள்ளது.சில வேளை இது சைவ ஆலயமாகவும் இருக்கலாம்.பல்லவ நூல் எழுத்துகள் என்றும் மொழி சமஸ்கிருதம் எனவும் கூறப்பட்டு உள்ளது இந்த கல்வெட்டு 7-8ம் நூற்றாண்டுகுரியது என்று அப்பலகையில் போடப்பட்டுள்ளது.ஆறாம் நூற்றாண்டுக்கு பிறகு பல்லவர் தமிழ் எழுத்துகளில் கல்வெட்டுகளை எழுத ஆரம்பித்து விட்டனர்.அப்படி இருக்கையில் எப்படி இக்கல்வெட்டு சமஸ்கிருத இருக்க முடியும்.அப்படி பௌத்த ஆலயமாக இருந்தால் பாளி மொழி செல்வாக்கு காணப்பட்டு இருக்கலாம்(என்னுடைய அறிவுக்கு எட்டிய டவுட்டு).

புத்த தலம் 
பிறகு சிறிய தூரம் சென்ற உடன் இன்னும் ஒரு சிங்கள அறிவித்தல் பலகை சந்தேகத்துடன் காட்டபட்ட திசை நோக்கிச்சென்றோம்.அது ஒரு இயற்கையாக அமைந்த ஒரு சிறிய கற் குட்டை(பார்த்தல் புரிந்து விடும்) ஆனால் அதற்க்கு எதோ ஒரு கதை சிங்களத்தால் எழுதபட்டு இருந்தது.
பிறகு படிகட்டுகளுக்கு வந்து சிறிய தூரம் சென்ற போது ஒரு இடிபாடு அடைந்த (சிறிது திருத்த பட்டு உள்ளது) ஒரு வட்ட வடிவமான வணக்கத்தலம் குன்றின் உச்சியில் காணப்படுகிறது. சில திருத்தங்களுடன் அது மிகவும் சிறப்பான முறையில் பராமரிக்கப்படுகிறது. அது ஒரு புத்த வணக்கத்தல வடிவமைப்பை கொண்டுள்ளது இதனை சுற்றி கற்தூண்கள் இவைகள கூட்டம் கூட்டமாக காணப்படுகிறது. சில கட்டிடங்களில் அத்திவாரங்கள் உடைந்த ஒரு புத்தனின் சிலையும் காணப்பட்டது. அங்கு இருந்த ஒரு பிக்குவிடம் விசாரித்த போது பண்டைய காலத்தில் புத்த சாதுக்கள் தங்கும் மாடலயங்கள் என்று கூறினார்.அதுமட்டும் அல்லாது அங்கு ஒரு அரச மரக்கன்று நடப்பட்டு கூண்டினால் அடைக்கப்பட்டு ஒரு அறிவித்தல் பலகையும் போடப்பட்டு இருந்தது.அப்படி அறிவித்தல் பலகை போடும்மளவுக்கு  அந்த அரச மரம் என்ன முக்கியத்துவம் வாய்ந்தது????
முக்கியம்தான் சங்கமித்தையும் மகிந்த தேரரும் வட இந்தியாவிலிருந்து கொண்டு வந்து  இலங்கையில் (அனுராதபுரம்) நாட்டிய போதிமரத்தின் கிளையில் இருந்து உருவாக்கப்பட்ட மரம்தான் அது.
அனுராத புரத்தில் இருந்து கொண்டுவந்து நடப்பட்ட மரம் 
அதனை சுற்றி பார்த்து விட்டு கொஞ்ச தூரம் சென்றபோது ஒரு சிறிய பாதை செல்வதை பார்க்கக்கூடியதாக இருந்தது.என் நண்பன் சொன்னான் அது அவர்கள் சென்ற முறை வந்த போது முட்க்கம்பிகளால் அடைக்கப்பட்டு இருந்தததாக கூறி இருந்தான்.நாங்கள் சென்ற போது அது பாதை திறக்கப்பட்டு காணப்பட்டது.நாங்கள் அங்கு சென்ற போது அழிவடைந்த ஒரு கட்டிட அத்திவாரங்களை காணக்கூடியதாக இருந்தது.நாங்கள் அந்த அத்திவாரங்களை பார்க்கும் போது எதோ ஒரு கட்டிட அமைப்பை நினைவுபடுத்திக்கொண்டு இருந்தது.கட்டிட அமைப்பை தவிர்த்த அதன் பாதை எதோ வழமையாக எதோ இடத்தில் நாங்கள் சுற்றி செல்லும் பாதை போல இருந்தது. செல்லச் செல்ல புரிந்து கொண்டோம் அது ஒரு இந்து ஆலயத்தின் அமைப்பை கொண்டது என்பதை,எங்கள் அறிவுக்கு எட்டியவரை அது ஒரு இந்து வழிபாட்டு தலம்தான். ஒப்பிடளவில் பாரத்தால் நன்றாக பராமரிக்க படும் புத்த தலத்ததை விட இக்கட்டிட எச்சம் பெரியது.
மலசல கூடம் ஐந்தாம் நூற்றாண்டு
அவ் கட்டிட எச்சத்தில் சில பகுதிகள் பிரித்து எடுக்கப்பட்டுள்ளது.அதுமட்டும் அல்லாமல் வேறு கட்டிடங்களில் உள்ள கட்டிட எச்சங்கள் இதனுடன் சேர்க்கப்பட்டுள்ளது..இதனை எப்படி நாங்கள் புரிந்து கொண்டோம் என்றால்,இவ் கட்டிட  அமைப்புக்கு கொஞ்சம் அருகில் இன்னும் ஒரு கட்டிட அமைப்பு காணப்படுகிறது.அது ஒரு பண்டைய மனிதர்களின் தங்கும் இடமாக இருந்திருக்க வேண்டும் ஏன் என்றால் அவைகள் அறை போன்ற அமைப்பு காணப்பட்டது அது மட்டும் அல்லாது  பண்டைய கால கல்லால் ஆனமலசலகூடங்கள் கூட காணப்பட்டது.அவற்றில் சில மலசலகூடங்கள் கோவில் அமைப்பை ஒத்த கட்டிட அமைப்புடன் கலக்கப்பட்டுள்ளது.அங்கு சில ராணுவ வீரர்கள் நின்ற படியால் மேலதிக புகைப்படங்களை எங்களால் எடுக்கமுடியவில்லை.

இத்தலத்தை பற்றி ஏற்கனவே வரலாற்று ஆராய்ச்சி தங்கேஸ்வரி கதிராமன்  (முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்)அவர்களால் செயப்பட்டு உள்ளதாக இணையத்தில் படித்தேன்.ஏன் அவ் ஆராய்ச்சி குறிப்புகள் மின் ஆவணப்படுத்தினால்  நமது வரலாறுகளை நாம் பாதுகாப்பதற்கு உதவியாக இருக்கும்.யாரிடமாவது அவ் ஆராய்ச்சி குறிப்புகள் இருந்தால் இணையத்தில் பகிருங்கள்.
நான் இந்த தலத்தை பற்றி கேள்விபட்டது- இராஜேந்திர சோழன் வருகைக் காலத்திற்கு முன்னதாகவே சிவாலயம் மிகப் பிரசித்தி பெற்றிருந்தது. வன்னி பெருநிலப்பரப்பின் எல்லைப்புறத்திலும் திருக்கோணமலை மாவட்ட எல்லைப் புறத்திலும் அமைந்திருந்த இச்சிவாலயத்திற்கு மிகப்பெரும் திரளான வன்னி மக்கள் திருக்கோணேஸ்வரத்தின் வாரிசாக வணங்கி வந்திருந்தார்கள். சோழனின் வருகைக்கு பின்னர் அவ்வாலயம் சோழ மன்னனால் பற்றோடு வணங்கப்பட்டதுடன் கூடவே பெளத்தம் மேல் கொண்ட பக்தியினால் சிறிய பெளத்த விகாரையும் அமைத்து வணங்கினான்.அது மட்டும் அல்லது  பல்லவ வியாபாரிகளின் சஞ்சாரமும் இங்கு காணப்பட்டு இருந்திருக்கிறது.


தடுக்கப்பட்ட பாதை
தமிழ் ராசர்கள் பல்லவர்களினதும் சோழர்களினதும் செல்வாக்கு மிக்க இத்தலம்தற்பொழுது பெரிய அளவில் 'கிரி விகாரை' என உருவெடுத்துள்ளதுடன் சிங்கள மக்கள் எக்காலத்திலும் வாழ்ந்திராத அத்தமிழ்ப் பிரதேசம் இப்பொழுது சிங்கள மக்களின் புரான கால வாழ்விடமாகிவிட்டது.
இந்த தலத்தை என்கனவே இலங்கை பாடப்புத்தகங்களில் பௌத்த தலமாக சேர்க்கப்பட்டு விட்டது.
வழமை போல சில கேள்விகள்
ஏன் அந்த புத்த தலம் மட்டும் பரமரிக்கப்படுகிறது?
ஏன் மற்றைய புராதான கட்டிட எச்சங்கள் பாரமரிக்கப்படவில்லை?
ஏன் மற்றைய கட்டிட எச்சங்களின் வடிவமைப்பு மாற்றப்படுகிறது /சிதைக்கபடுகிறது?

  • இவ்முரண்பாட்டிற்கு தீர்வு காண வழிதான் என்ன?
  • அங்கு ராணுவப்பாதுகாப்பு தேவைதானா?
  • ஒரு வணகத்தலத்துக்காக அங்கு திட்டமிடப்பட்ட நீர் பாசன திட்டங்கள் முடக்கப்படுவது ஏன்?
  • என்னதான் நடக்குது அங்க?

எல்லாம் அந்த அரச   மரத்தடிக்காரனுகுத்தான்  வெளிச்சம் ..............

Sunday, January 8, 2012

முதல் காதல்



 (திருகோணமலையில் ஒரு ஒல்லாந்த பெண்ணின் காதல் கதை )
18ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி !  காலையில் சூரிய உதயத்தை ரசிக்கும் அவளுக்கு இன்று ரசிக்கும் மனநிலை இல்லை.பிற தேசம்  என்றாலும் அவளுக்கு அவள் வாழ்நாளில் அதிக மகிழ்வை தந்தது இந்த திருகோணமலைதான்.இன்று அவளுக்கு பெரும் சோகத்தை கொடுத்து விட்டது.
தூரத்தே கப்பல் புறப்படுவதற்க்கான சங்கொலியும் ஒழித்தது.தன் கண்களை தனது அறையில் இருந்து கொண்டு கடலை நோக்கி கண்களை குவித்த அவளுக்கு பாய்மரம் விரிந்தது புரிந்த்தது.
என்னதான் அந்த கப்பலில் இருக்கிறது அவளுக்கு...எதுவும் முக்கியமான பொருளாக இருக்குமோ......முக்கியமான பொருள்தான் அவள் காதல்!
ப்ரன்சினா வான் ரீட் ஒல்லாந்தில் பிறந்தவள் தந்தை அதிகாரி என்பாதால் அவள் ஒல்லாந்தில் வாழ்த்ததில்லை. இவள் பருவம் அடைந்த வயது தொடக்கம் எல்லாம் இந்த பிரேடிக் மலைக்கோட்டையும்,திருகோணமலை என்ற இந்த ஊரும்தான்.
ஜோசொப்பியன் அவன் கொட்டை ராணுவ அதிகாரி அவனை காதல் கொண்ட நாளில் இருந்து காதல் எனபதற்கு அர்த்தம் புரிந்தது. முதல் காதல் திகட்ட திகட்ட காதலித்தாள் அவனிடம் சொல்லாமலே.
அவனை அவள் காதலிப்பதை தனது தந்தையிடம் சொன்னாள்.அவளது தந்தையும் ஜோசொப்பிடம் பேசி திருமண திகதியும் குறிக்கபட்டது. ஆனாலும் அவன் விருப்பம் அவள் மீது அல்ல அவளது தந்தை பதவி மீது.அதற்காக சீதனமாக அந்த பதவியை கேட்க்க முயன்றான் கடைசில் அவனுக்கு இருந்த ராணுவ அதிகாரி பதவியும் போயிற்று. கொவமடைந்த ரீட்டாவின் தந்தை அவனுக்கு அவன் பதவியை நீக்கி ஒல்லாந்து செல்ல கட்டளை இட்டார்.
கப்பல் செல்ல தயார் ஆகி விட்டது காற்றில் அசைகிறது பாய்மரம்.மெல்ல மெல்ல கப்பலும் நகருகிறது.ரீட்டவுக்கு என்ன செய்வது தெரிய வில்லை.
தன் காதல் கனவு வாழ்க்கை அந்த கப்பலுடன் செல்வதாக உணர்வு.அறையை விட்டு வெளியே வருகிறாள். கோணேசர் மலைக்கு சாமந்தரமாக செல்லும் அந்த கப்பலுடன் தானும் மலையில் ஓட தொடங்குகிறாள்.கடலுடன் கலந்த அந்த மலைக்கு ஒரு முடிவு இருக்கும் என்று தெரியாமல் ஓடிய அவளுக்கு வாழ்வும் அந்த மலையுடன் முடிந்து விட்டது. 

இது ஒரு உண்மை சம்பவம் 1680 காலப்பகுதில் இடம் பெற்றது( கொஞ்சம் கற்பனை)
 இந்த சம்பவங்கள் லேப்.கேணல் .தோமஸ்(பிரித்தானிய ராணுவம்) அவர்களால் 1940 ஆண்டு கண்டு எடுக்கபட்ட ஒல்லாந்த குறிப்புகள் அடிப்படியாக கொண்டது .
(அந்த ராணுவ அதிகாரி பெயர் தெரியவில்லை இக்கதையில் குறிப்பிட்டது கற்பனை பெயர்.)

Wednesday, December 14, 2011

ஏன் மானம்கெட்ட தொழில் உங்களுக்கு"


இன்றைய காலகட்டத்தில் புலம்பெயர் நாடுகளில் இருந்து பல இணையதளங்கள் செயல் பட்டு வருகின்றன அவைகள் எந்த அளவுக்கு நம்பகரமான செய்திகளை வெளியீடுகின்றன?
யுத்தம் முடிவடைந்த காலப்பகுதியில் இருந்து சில இணையங்களில் இலங்கையில் வடகிழக்கு பகுதிகளில் இடம்பெறும் கலாச்சார சீரழிவுகள் பற்றிய செய்திகள் முக்கிய இடம்பெற்று வருகிறது.
சில உண்மையாகினும் பல சொடிக்கப்பட்ட கட்டுகதைகளாக வெளிவருகின்றன.ஏன் இவ்வாறு தங்களின் இணையதளங்களின் விளம்பரத்தை தேடி கொள்வதற்கு தங்கள் பிறந்தஇடத்தை கேவலபடுத்துகிறிர்கள்?கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏன் நண்பர் ஒருவரால் ஒரு இணையத்தின் செய்தி ஒன்று முகஏட்டில் பகிரப்பட்டது.
இது திருகோணமலை எடுக்கபட்டதாக குறிப்பிடபட்டிருந்தது  இது கலாச்சார சீரழிவு எனவும் ....
அந்த ஒளிப்படத்தில் ஒரு இளைஞன் ஒருவரும் ஒரு யுவதின் கையை பிடித்து உரையாடி கொண்டு இருக்கிறார்.அதனை ஒருவர் மறைத்து வைத்த கமரா மூலமாக படம்பிடிக்கிறார்? இதில் யார் செய்தது காலச்சாரசீரழிவு?
  • காதலியின் கையை பிடித்து கதைத்தவரா ?
  • அதை படம் பிடித்த வக்கிர புத்திகொண்டவரா???????
    அல்லது
  • விளம்பரத்திற்காக ஒரு சிறிய விடயத்தை பெரிய விடையமாக்கி அதை அரசியல் ஆக்கி தன் மகளுக்கும் மகனுக்கும் பப்புக்கும்,டேய்டிங்க்கும் போவதற்கும் பணம் கொடுப்பதற்கு நடத்தப்படும் இணையதளங்களா????????

இது என்ன மானம்கெட்ட தொழில் உங்களுக்கு ?????இப்படி வாழ்வதற்கா உயிரை கையில் பிடித்து கொண்டு வெளிநாடு ஓடினாய் ???
உன் மகள்மாரின் மகனின் மனைவியின்  facebook புகைப்பட பகிர்வை பார்! அப்போது விளங்கும் எது காலச்சார சீரழிவு என்று! உன் மகள் மது கோப்பையை உடன் தனது boy friendஉடன் (100 க்கு 1 வீதம் காதலனாக இருக்கலாம்)புகைபடம் எடுத்து facebookல் பகிர்தல் காலச்சார சீரழிவு இல்லையா ???

இவ்வாறன இணையங்கள் ஒன்று புரிந்து கொள்ளவேண்டும்..வெளிநாடுகளில் நம்மவர்கள் செய்வதை விடவா இலங்கையில் நடக்கிறன.
இதுதான் நம் பிரச்சனையா?
உங்கள் இணையங்களில் பகிரப்படும் செய்திகள்தான்  என்ன ?
  • வீரஆவேச கட்டுரைகள்.
  • நடிகர்களின் கிசு கிசு.
  • நடிகைகைகளின் ஜிலு ஜிலு வீடியோ.

வீரமும் ஆவேசமும் இங்கு உள்ளவர்களுக்கு நிறையவே உள்ளது,இருப்பதால் தான்.அவர்கள் எங்கும் ஓடி போய்விடவில்லை. கொழும்பில் இருந்து கூட தமிழர் நலனுக்காக பாடுபடும் ஊடகத்துறைசார்தவர்கள்,அரசியல்வாதிகள்,சமுகநலவாதிகள் உண்டு.
உங்கள் வாய் வீரம் எங்களுக்கு தேவை இல்லை! யுத்த காலத்தில் நீங்கள் என்ன செய்திர்கள் எம் மக்களின் பிணம்களின் படங்களின் போட்டு பிழைத்தீர்கள் .
இவ்வாறு செய்த நீங்கள் இப்போது விபச்சார அரசியல்துணிந்துவிட்டிர்கள்!
காதலன் காதலி கைபிடிப்பது சமுக சீரழிவாம் இது இலங்கை அரசின் செயலாம்!!!!!!!
நாங்கள் ஈழத்தில்தான் இருக்கிறோம் இங்கு நடப்பவை உங்களை விட எங்களுக்கு தெரியும். எதுவும் நடக்கவில்லை என்று நான் சொல்லவரவில்லை!!!! ஆனால் உங்கள் மண்ணை அவமானபடுத்தாதிர்கள் !!!!
அந்த ஒளிப்படத்தில் வந்தவர் யாரகவும் இருக்கட்டும்,!என்ன இனத்தவராக இருக்கட்டும்! மற்றவர்கள் தனிப்பட்ட விடயத்தை விடியோ எடுப்பது எவ்வளவு கேவலமான செயல்!!! அதை வெளியீடு செய்தல் எவ்வளவு ஈனச்செயல்!!!!

பின் குறிப்பு-
தொப்பி அளவானவர்கள் போட்டு கொள்ளவும்!!!