Saturday, June 30, 2012

சாமி என்ற பெயரில் பேய்கள்- சாராயம் குடிக்கும் (ஆ)சாமிகள்-

மூதூர் பகுதியில் வேத முறைப்படி இந்து ஆலயங்களில் பூசை நடைமுறை இடம் பெற்றாலும்,வேதமுறையற்ற அதாவது அதர்ம வேத பூசை வழிபாடுகள் அதிகம் இடம்பெறுகின்றன.இது மூதூரின் அடையாளம்  கூட,நவராத்திரி காலத்தில் ஊரே களைகட்டும்.
சாமி அருள் வந்து ஆடுதல், கட்டு போடுதல்,கும்பம் ஆடுதல்,மறிப்புப்போடுதல் என்று எங்கும் கலகலப்பாகவே இருக்கும்.
அது மட்டும் அல்ல வைகாசி மதம் வந்தால் எல்லா கோவில்களிலும் வேள்விகள் தீ மிதிப்பு,சாமி ஆடல்கள் என்றும்,வீடுகளில் மடை வைத்தல் பொங்கல் என்றும் ஒரே பக்தி மயமாக இருக்கும்.
 இவ்வாறன நடவடிக்கைகள் மூட நம்பிக்கைகளை சிலர் என்றும் கூறுவார்கள்(அந்த ஆராச்சி எனக்கு எதுக்கு), இது உண்மை பொய் என்பதற்கு அப்பால் இது அம்மக்களின் கலாச்சாரம்,பண்பாடு அது மட்டும் அல்ல இது அப் பிரதேசத்தின் அடையாளம்.இது அப்படியே இருக்கட்டும்.இதை விட்டு நம்அடையாளங்களை தொலைத்துக்கொள்ள கூடாது.
நம்பிக்கைகள் நம்பிகையாகவே இருக்கட்டும்.
இப்பொழுது விடயத்துக்கு வருகிறேன் ,
“சாமி சாராயம் குடிக்கிறது,அதுவும் ராவா அடிக்குது!!!!.
சைட் டிஷ் கூட இல்ல!!!!
பாருங்களன்  எல்லாம் தெரிஞ்ச சாமிக்கு தண்ணி அடிக்க தெரியல்ல...




கவனிக்க வேண்டியது—
  • எந்த மதமாவது மதுவை(போதைப்பொருள்) ஆதரிக்கிறதா?

  • அங்கு சிறுவர்களும் இளையவர்களும் அப்பூசையில் இருக்கும் போது சாமி என்ற பெயரில் சாராயம் குடிக்கும் போது அது சிறுவர்களுக்கும்  இளையவர்களுக்கும் வழி காட்டியாக அமையாதா?
  • இப்படியே அடுத்த சந்ததிக்கு இதுதான் நம் பண்பாடு என்று உணர்த்த போகிறீர்களா???
  • ஊரில் முப்பாட்டன் காலத்தில் இருந்து காணப்படும்  பாரம்பரிய (வேத முறை அல்லாத)வழிபாட்டு முறைகளை கேவலப்படுத்தப்போகிறீர்களா???

  • எல்லாம் அறிஞ்ச சாமிக்கு சாராயம் எதுக்கு???உங்களிடம் கேட்டதா???

  • சாமியாடல் என்பது அதிஉச்ச பக்தி மட்டுமே அது கடவுள் அல்ல என்பது உங்களுக்கு தெரியாதா???


 “நல்லது செய்தாத்தான் அது சாமி தீமைகளை செய்தால் அதுக்கு பெயர் பேய்...”  

Wednesday, March 28, 2012

பௌத்த பூமியா திரியாய் ???


திருகோணமலை ,முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு இடையில் இருக்கும் ஊர்தான் திரியாய்.இரு மாவட்டகளின் எல்லை கிராமம்.இந்த கிராமம் வரலாற்று பின்னணி கொண்டதும் கூட.இலங்கை இனப்பிரச்சனை காரணமாக பாதிக்க பட்ட கிராமங்களுள் ஒன்று.இதன் சுமந்த வடுக்களை பதிவாக எழுதி முடிக்க முடியாது.இப்படி இருக்கையில் புதிதாக ஒரு பிரச்சனை ஒன்று உருவாகி உள்ளது.இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த பொழுதில் இருந்து இப்பிரதேசம் பௌத்த பூமியாக மற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.இந்த கிராமம் வயலும் குளமும் சூழ்ந்த பூமி.முழுக்க முழுக்க தமிழர்கள் வாழும் பூமி.கோணேஸ்வரத்துக்கு நெல் வழக்கும் பூமி.இப்படி எல்லாம் இருப்பதால் என்னவோ ஆசையை துறந்த புத்தனுக்கு இப்பூமி மீது ஆசை வந்து விட்டதோ!!!!
அப்படி என்னதான் இம் மண்ணில் புத்தனுக்கு சொந்தமானது இருக்கிறது என்று நானும் என் நண்பர்களும் பார்க்க புறப்பட்டோம் என் நண்பர்களில் சிலர் அங்கு ஏற்கனவே சென்று வந்ததால் அவர்களின் உதவியையும் பெற்றுக்கொண்டோம் கொஞ்சம் மழை தூறல் கொண்டாட்டமான ஊந்துருளிப்பயணம் . திருகோணமலையில் இருந்து கிட்டத்தட்ட 43km
 (நல்ல வீதிதான், சீனாக்காரன் நல்லாத்தான் பார்த்து பார்த்து ரோடு போட்டு இருக்கான்).
பிரதான வீதியில் இருந்து 2km கிராமத்துக்குள் போய் மறுபடியும் மணல் பாதையால் கொஞ்ச தூரம் போக வேண்டும் .அங்கு  போனால் அங்கு ஒரு ராணுவத்தளம் இருந்தது
(எனக்கு நீட்ட நாட்களாக ஒரு சந்தேகம் ஏன் புத்தன் எங்கு இருந்தாலும் அங்கு கடைசி ஒரு ராணுவ காவலரன் ஆவது இருக்கிறது)
குன்றிற்கு செல்லும் படிக்கட்டுக்கள்
காவல்களைத்தாண்டி சென்றால் அங்கு ஒரு சிறிய குன்று குன்றின் அடிவாரத்தில் பண்டைய கால அகழிகள் காணப்படுகிறது.இது பாதுகாப்புக்கு அமைக்கப்பட்டதா அல்லது நீர் தேவைக்கு அமைக்கபட்டதா தெரியவில்லை.அடுத்து மலை குன்றில் ஏறுவதற்கான படிகட்டுகள் அமைக்க ப்பட்டுள்ளது.இந்த  கட்டுகள் பண்டைய காலத்க்ககுரியதாக  இருந்தாலும் சிறிய அளவில் புனரமைக்கப்பட்டு உள்ளது.சிறிய தூரம் சென்றவுடன் ஒரு இடத்தில் எதோ சிங்களத்தில் எழுதி அம்புக்குறி இடப்பட்டு இருந்தது.என்னதான் இருக்கிறது என்று பார்க்க புறப்பட்டோம்.ஒரு சிறிய ஒற்றை அடிப்பாதை சிறு பற்றை காட்டுப்பகுதிக்கு சென்றது அங்கு சென்று பார்த்த ஒரு அறிவித்தல் பலகை வைக்கப்பட்டு இருந்தது அது இதுதான்
கல்வெட்டின் விளக்கம் 

பல்லவ வியாபாரிகளை பற்றிச் சொல்லும் கல்வெட்டு 
இது மூன்று மொழிகளிலும் காணப்பட்டது அருகில் கல்வெட்டையும் காணமுடிந்தது.அப்போதுதான் நினைவுக்கு வந்தது #தபஸ்சு,பல்லுக்க என்ற வியாபாரிகள் கிரிவிகாரையை கட்டி வணங்கிதாக  பத்தாம் ஆண்டு பாடப்புத்தகத்தில் படித்தது.ஆனால் கிரி என்ற விகாரை கட்டபட்டதாக இக்கல்வெட்டு கூறவில்லை.கிரிகண்ட என்ற கோபுரம் கட்டபட்டதாகதான் கூறப்பட்டுள்ளது.சில வேளை இது சைவ ஆலயமாகவும் இருக்கலாம்.பல்லவ நூல் எழுத்துகள் என்றும் மொழி சமஸ்கிருதம் எனவும் கூறப்பட்டு உள்ளது இந்த கல்வெட்டு 7-8ம் நூற்றாண்டுகுரியது என்று அப்பலகையில் போடப்பட்டுள்ளது.ஆறாம் நூற்றாண்டுக்கு பிறகு பல்லவர் தமிழ் எழுத்துகளில் கல்வெட்டுகளை எழுத ஆரம்பித்து விட்டனர்.அப்படி இருக்கையில் எப்படி இக்கல்வெட்டு சமஸ்கிருத இருக்க முடியும்.அப்படி பௌத்த ஆலயமாக இருந்தால் பாளி மொழி செல்வாக்கு காணப்பட்டு இருக்கலாம்(என்னுடைய அறிவுக்கு எட்டிய டவுட்டு).

புத்த தலம் 
பிறகு சிறிய தூரம் சென்ற உடன் இன்னும் ஒரு சிங்கள அறிவித்தல் பலகை சந்தேகத்துடன் காட்டபட்ட திசை நோக்கிச்சென்றோம்.அது ஒரு இயற்கையாக அமைந்த ஒரு சிறிய கற் குட்டை(பார்த்தல் புரிந்து விடும்) ஆனால் அதற்க்கு எதோ ஒரு கதை சிங்களத்தால் எழுதபட்டு இருந்தது.
பிறகு படிகட்டுகளுக்கு வந்து சிறிய தூரம் சென்ற போது ஒரு இடிபாடு அடைந்த (சிறிது திருத்த பட்டு உள்ளது) ஒரு வட்ட வடிவமான வணக்கத்தலம் குன்றின் உச்சியில் காணப்படுகிறது. சில திருத்தங்களுடன் அது மிகவும் சிறப்பான முறையில் பராமரிக்கப்படுகிறது. அது ஒரு புத்த வணக்கத்தல வடிவமைப்பை கொண்டுள்ளது இதனை சுற்றி கற்தூண்கள் இவைகள கூட்டம் கூட்டமாக காணப்படுகிறது. சில கட்டிடங்களில் அத்திவாரங்கள் உடைந்த ஒரு புத்தனின் சிலையும் காணப்பட்டது. அங்கு இருந்த ஒரு பிக்குவிடம் விசாரித்த போது பண்டைய காலத்தில் புத்த சாதுக்கள் தங்கும் மாடலயங்கள் என்று கூறினார்.அதுமட்டும் அல்லாது அங்கு ஒரு அரச மரக்கன்று நடப்பட்டு கூண்டினால் அடைக்கப்பட்டு ஒரு அறிவித்தல் பலகையும் போடப்பட்டு இருந்தது.அப்படி அறிவித்தல் பலகை போடும்மளவுக்கு  அந்த அரச மரம் என்ன முக்கியத்துவம் வாய்ந்தது????
முக்கியம்தான் சங்கமித்தையும் மகிந்த தேரரும் வட இந்தியாவிலிருந்து கொண்டு வந்து  இலங்கையில் (அனுராதபுரம்) நாட்டிய போதிமரத்தின் கிளையில் இருந்து உருவாக்கப்பட்ட மரம்தான் அது.
அனுராத புரத்தில் இருந்து கொண்டுவந்து நடப்பட்ட மரம் 
அதனை சுற்றி பார்த்து விட்டு கொஞ்ச தூரம் சென்றபோது ஒரு சிறிய பாதை செல்வதை பார்க்கக்கூடியதாக இருந்தது.என் நண்பன் சொன்னான் அது அவர்கள் சென்ற முறை வந்த போது முட்க்கம்பிகளால் அடைக்கப்பட்டு இருந்தததாக கூறி இருந்தான்.நாங்கள் சென்ற போது அது பாதை திறக்கப்பட்டு காணப்பட்டது.நாங்கள் அங்கு சென்ற போது அழிவடைந்த ஒரு கட்டிட அத்திவாரங்களை காணக்கூடியதாக இருந்தது.நாங்கள் அந்த அத்திவாரங்களை பார்க்கும் போது எதோ ஒரு கட்டிட அமைப்பை நினைவுபடுத்திக்கொண்டு இருந்தது.கட்டிட அமைப்பை தவிர்த்த அதன் பாதை எதோ வழமையாக எதோ இடத்தில் நாங்கள் சுற்றி செல்லும் பாதை போல இருந்தது. செல்லச் செல்ல புரிந்து கொண்டோம் அது ஒரு இந்து ஆலயத்தின் அமைப்பை கொண்டது என்பதை,எங்கள் அறிவுக்கு எட்டியவரை அது ஒரு இந்து வழிபாட்டு தலம்தான். ஒப்பிடளவில் பாரத்தால் நன்றாக பராமரிக்க படும் புத்த தலத்ததை விட இக்கட்டிட எச்சம் பெரியது.
மலசல கூடம் ஐந்தாம் நூற்றாண்டு
அவ் கட்டிட எச்சத்தில் சில பகுதிகள் பிரித்து எடுக்கப்பட்டுள்ளது.அதுமட்டும் அல்லாமல் வேறு கட்டிடங்களில் உள்ள கட்டிட எச்சங்கள் இதனுடன் சேர்க்கப்பட்டுள்ளது..இதனை எப்படி நாங்கள் புரிந்து கொண்டோம் என்றால்,இவ் கட்டிட  அமைப்புக்கு கொஞ்சம் அருகில் இன்னும் ஒரு கட்டிட அமைப்பு காணப்படுகிறது.அது ஒரு பண்டைய மனிதர்களின் தங்கும் இடமாக இருந்திருக்க வேண்டும் ஏன் என்றால் அவைகள் அறை போன்ற அமைப்பு காணப்பட்டது அது மட்டும் அல்லாது  பண்டைய கால கல்லால் ஆனமலசலகூடங்கள் கூட காணப்பட்டது.அவற்றில் சில மலசலகூடங்கள் கோவில் அமைப்பை ஒத்த கட்டிட அமைப்புடன் கலக்கப்பட்டுள்ளது.அங்கு சில ராணுவ வீரர்கள் நின்ற படியால் மேலதிக புகைப்படங்களை எங்களால் எடுக்கமுடியவில்லை.

இத்தலத்தை பற்றி ஏற்கனவே வரலாற்று ஆராய்ச்சி தங்கேஸ்வரி கதிராமன்  (முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்)அவர்களால் செயப்பட்டு உள்ளதாக இணையத்தில் படித்தேன்.ஏன் அவ் ஆராய்ச்சி குறிப்புகள் மின் ஆவணப்படுத்தினால்  நமது வரலாறுகளை நாம் பாதுகாப்பதற்கு உதவியாக இருக்கும்.யாரிடமாவது அவ் ஆராய்ச்சி குறிப்புகள் இருந்தால் இணையத்தில் பகிருங்கள்.
நான் இந்த தலத்தை பற்றி கேள்விபட்டது- இராஜேந்திர சோழன் வருகைக் காலத்திற்கு முன்னதாகவே சிவாலயம் மிகப் பிரசித்தி பெற்றிருந்தது. வன்னி பெருநிலப்பரப்பின் எல்லைப்புறத்திலும் திருக்கோணமலை மாவட்ட எல்லைப் புறத்திலும் அமைந்திருந்த இச்சிவாலயத்திற்கு மிகப்பெரும் திரளான வன்னி மக்கள் திருக்கோணேஸ்வரத்தின் வாரிசாக வணங்கி வந்திருந்தார்கள். சோழனின் வருகைக்கு பின்னர் அவ்வாலயம் சோழ மன்னனால் பற்றோடு வணங்கப்பட்டதுடன் கூடவே பெளத்தம் மேல் கொண்ட பக்தியினால் சிறிய பெளத்த விகாரையும் அமைத்து வணங்கினான்.அது மட்டும் அல்லது  பல்லவ வியாபாரிகளின் சஞ்சாரமும் இங்கு காணப்பட்டு இருந்திருக்கிறது.


தடுக்கப்பட்ட பாதை
தமிழ் ராசர்கள் பல்லவர்களினதும் சோழர்களினதும் செல்வாக்கு மிக்க இத்தலம்தற்பொழுது பெரிய அளவில் 'கிரி விகாரை' என உருவெடுத்துள்ளதுடன் சிங்கள மக்கள் எக்காலத்திலும் வாழ்ந்திராத அத்தமிழ்ப் பிரதேசம் இப்பொழுது சிங்கள மக்களின் புரான கால வாழ்விடமாகிவிட்டது.
இந்த தலத்தை என்கனவே இலங்கை பாடப்புத்தகங்களில் பௌத்த தலமாக சேர்க்கப்பட்டு விட்டது.
வழமை போல சில கேள்விகள்
ஏன் அந்த புத்த தலம் மட்டும் பரமரிக்கப்படுகிறது?
ஏன் மற்றைய புராதான கட்டிட எச்சங்கள் பாரமரிக்கப்படவில்லை?
ஏன் மற்றைய கட்டிட எச்சங்களின் வடிவமைப்பு மாற்றப்படுகிறது /சிதைக்கபடுகிறது?

  • இவ்முரண்பாட்டிற்கு தீர்வு காண வழிதான் என்ன?
  • அங்கு ராணுவப்பாதுகாப்பு தேவைதானா?
  • ஒரு வணகத்தலத்துக்காக அங்கு திட்டமிடப்பட்ட நீர் பாசன திட்டங்கள் முடக்கப்படுவது ஏன்?
  • என்னதான் நடக்குது அங்க?

எல்லாம் அந்த அரச   மரத்தடிக்காரனுகுத்தான்  வெளிச்சம் ..............

Saturday, March 24, 2012

கிழக்கிற்கு தனியான தொல்பொருள் கொள்கை?


அகழ்வாராய்ச்சி தொடர்பில் கிழக்கு மாகாணத்தில் தனியான சில கொள்கைகள் பின்பற்றப்பட உள்ளன.
தொல்பொருள் அமைச்சு, தொல்பொருள் ஆணையாளர் உள்ளிட்ட தரப்பினர் இந்தக் கொள்கை வகுப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முழுமையான அதிகாரமுடைய தொல்பொருள் ஆணையாளர் நாயகம் ஒருவரை கிழக்கு மாகாணத்திற்கு என தனியாக நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நிலக்கீழ், நிலத்திற்கு மேல், கடலோரம், வாவி, குளம், அருவி சகல தொல்பொருட்கள் தொடர்பிலும், இறுதித் தீர்மானம் எடுக்கும் முழு அதிகாரம் மாகாண தொல்பொருள் ஆணையாளாருக்கு வழங்கப்படவுள்ளது.
புதிய அகழ்வாராய்ச்சி கொள்கையில், தமிழ் மொழியில் கூறப்பட்டுள்ள விடயங்களை முதன்மையாகக் கருதி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் பல அரிய தொல்பொருள் பொக்கிஷங்கள் கிழக்கு மாகாணத்தில் காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
எதோ நல்லதா நடந்தா  இன்னும் ஒன்ட நாங்க செய்ய தயாராக இருக்க வேண்டும்.
தமிழர் தாயகம்’ கபளீகரம் செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் எண்ணிலடங்காதவை.  கால தேவைக்கேற்றாற்போல் பல கபளிகர வரலாறு ஆதாரத்துடன் மேலும் பல தமிழர்வாழ்விடங்களில் இருந்து வெளிவரல் வேண்டும். இதுவே தமிழர், வரலாற்றுக்கு செய்யும் சேவையுமாகும். 
சிங்கள வரலாற்று ஆசிரியர்களைப் பொறுத்த வரையில் தமிழர்களின் உண்மை வரலாறு பற்றி நன்கு தெரியும். சிங்களத் தேசியத்தின் நன்மை கருதி உண்மையை மறைத்து ஊமையாகியுள்ளார்கள். 
எனவே, இவ்முரண்பாட்டிற்கு தீர்வு காண வழிதான் என்ன?
சர்வதேசத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட நடுநிலைமை வாதிகள் கொண்ட பொதுச்சபைக்குதமிழர் வரலாற்றைஏற்ருகொள்லாத புத்தி ஜீவிகளை அழைக்க வேண்டும். நடுநிலைமை வாதிகளின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளும் நியதியும் வகுக்கப்பட வேண்டும். இதற்கான வேலைத்திட்டங்களை உருவாக்குவதற்கு பல கோணங்களில் இருந்தும் புலம்பெயர் வாழ் இலங்கை வாழ் வரலாற்று  ஆய்வாளர்கள் ஏற்படுத்த வேண்டும். இதற்கு துணையாக  ஈழத்தமிழர்களில் பற்றுக்கொண்ட ஆர்வலர்களும் களத்தில் இறங்கவேண்டும். நிச்சயம் நாம் வரலாற்றை நாம் மீட்க்க முடியும் .

Monday, January 30, 2012

மூதூர் குன்றுகள் புதையல் பூமியா? புதைத்த உடல்கள் எரிக்கப்படுவது ஏன்?

கடந்த 24 ஜனவரி 2012 மூதூர் சென்ற போது ஒருதகவலை கேள்விப்பட்டேன்.மூதூர் கிழக்கு கணேசபுரம் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக 8 நபர்கள் கச்சக்கொடி மலை காட்டுப்பகுதியில் திரிந்து இருக்கிறார்கள் ,அந்த பகுதியில் செனைப்பயிர் செய்பவர்களிடம் சிங்களத்தில் உரையாடி இருக்கிறார்கள்,தாங்கள் போலீஸ் எனவும்  ,மலைப்பகுதிக்கு வரவேண்டாம் எனவும் கூறி இருக்கின்றனர், அவர்கள் நீளமாக முடி வளர்த்து இருந்திருக்கிறார்கள், சந்தேகமடைந்த கிராமமக்கள் கணேசபுர கிராம அபிவிருத்தி சங்க தலைவரிடம் தெரிவிக்க அவர் போலீசார் உதவியுடன் அக்காட்டுப்பகுதிக்கு விரைந்தனர்.எனக்கும் என் நண்பர்கள் சிலருக்கும் அவர்களுடன் செல்ல வாய்ப்பு கிடைத்தது.


கச்சகோடி மலை(குன்று)
இது ஒரு குன்று இதன் தூரம் அகலம் சரியாக தெரியாது!!!ஆனால் திருகோணமலை மாவட்டதின் உயரமான பகுதி. இது மூதூர் கிழக்கு கட்டைபறிச்சான் கிராமத்தில் இருந்து அண்ணளவாக 3KM தூரத்தில் கணேச புரம் என்ற சிறு கிராமத்தில் காணப்படுகிறது.குன்றும் காடும் அதனை சுற்றி வயல்கள் மூதூர் கிராமங்களுக்குரிய அதே அழகு. அந்த குன்றில் இருந்து பார்த்தால் மூதூர் கிராமங்களை  google earth தில் பார்த்த அதே அனுபவம் கிடக்கும்.
சரி சொல்லவந்த விடயத்துக்கு வருகிறேன். நாங்கள் அங்கு சென்ற பொழுது யாரையும் காணவில்லை. ஆனால் பொலிசாரும் மக்களும் எதாவது நடந்திருக்கிறதா என மலையும் அதனை சுற்றி உள்ள பகுதியையும் தேட ஆரம்பித்தனர். திடிரென அங்கு எங்களுடன் வந்த போலீஸ்காரர் ஒருவர் எல்லோரையும் மலையின் நடுப்பகுதியில் உள்ள ஓர் இடத்திற்கு எல்லோரையும் அழைத்தார்.அங்கு சென்று பார்த்தல் 4 அடியில் ஒரு குழி, அது மேலும் ஆழமாக தொண்டபட்டு இருக்கவேண்டும் மீதியை மூடி விட்டார்கள் என்று நினைகிறேன்.அப்போது எல்லோரிடமும் பல கேள்விகள் எழுந்தது.ஏன் தோண்டப்பட்டிருக்கிறது ???புதையலாக இருக்குமோ???அப்படி புதையலாக இருந்தால் எப்படி இவ்வளவு இடம் இருக்க இந்த இடத்தில்தான் புதையல் இருக்கிறது என்று அவர்களுக்கு தெரியும்??? அதற்கும் விடை அந்த இடத்தில் கிடைத்தது அந்த குழிக்கு அருகில் இரண்டு மலையில் புதைந்த கற்கள், இந்த இரண்டு கற்களுக்கு இடையில்தான் இந்த குழி இருந்தது. ஒரு கல்லில் சிறிய ஆமை உருவம் செதுக்கபட்டு இருந்தது.மற்றய கல்லில் சதுர அடையாளம் அது கைபேசியில் உள்ள கஷ்(#)அடையாளம் போல இருந்தது.
என்ன இருந்தது என்று தெரியவில்லை! ஏதாவது இருந்ததா என்றும் தெரியவில்லை! ஆனாலும் ஏதோ ஒன்று எடுக்கப்பட்டு இருக்கிறது,
 இது இரண்டாவது சம்பவம், ஏற்கனவே இம்மலையில் உச்சியில் 2008 காலப்பகுதியில் யாரோ சிலரால் ஒரு பாரிய குழி தொண்டப்பட்டு இருத்தது.இந்த குழியும் அந்த மலையில் உள்ள சில அடையாளம்களின் அடிப்படையில் தோண்டப்பட்டு இருந்தது.அந்த மலையின் உச்சியில் மனிதனால் உருக்கபட்ட நான்கு குழிகள் காணப்படுகின்றன.அந்த குழிகள் கிட்டதட்ட சிறிய உரல் போன்றது. இந்த சிறு குழிகளை  கிராமமக்கள் மூதாதையர் பாவித்த உரல் என்றுதான் நினைத்து வந்தனர். அந்த தோண்டப்பட்ட குழியில் பல செங்கற்களை காணக்கூடியதாக இருந்தது. அது மட்டும் அல்லாது அந்த மலையில் பண்டைய கட்டிட செங்கற்  சிதைவுகள் சில காணப்படுகின்றன.இம் செங்கற்கள் மழையாலும் கற்றாலும் அரிக்கப்பட்டு சிறிய அளவுகள்தான் காணப்படுகிறது. இந்த மலைபகுதியில்தான் எதாவது இருக்கும் என்று கிராமவாசிகளை தவிர்த்த நபர்களுக்கு எப்படி தெரியும்?
அவர்களுக்கான வழிகாட்டி எங்கிருந்து கிடைத்திருக்கலாம் ?
யாரால் புதைக்கப்பட்டு இருக்கலாம்


சவக்குழிகள் தோண்டப்பட்டு உடல் எச்சம்கள் எரிக்கப்படல்
கடந்த சில மாதங்களாக இனம்தெரியாத நபர்களால் கட்டைபறிச்சான் இந்துமாயனத்தில் புதைக்கபட்ட மூன்று உடல் எச்சங்கள் தோண்டி எடுக்கப்பட்டு எரிக்கபட்டு உள்ளது.நாங்கள் அங்கு சென்று பார்த்த பொழுது மூன்று சவக்குழிகள் தொண்டப்பட்டு இருத்தது தோண்டப்பட்ட குழியுள் தேங்காய் புதைக்கப்பட்டு காணப்பட்டது. சுற்றி எங்கிலும் மதுபான போத்தல்கள்,பிளாஸ்திக் சோடா போத்தல்கள் காணப்பட்டன.அது மட்டுமல்லாது ஒரு பெண் உருவபொம்மை செய்யபட்டு ஒரு பெண் அணியும் எல்லா ஆடைகளும் அணியப்பட்டு எரிக்கபட்டு காணப்பட்டது(பாதி எரிந்த நிலையில் காணப்பட்டது). இது புதையல் தொண்டுபவர்களின் வேலை என கிராம மக்களிடம் வதந்தி நிலவுகிறது.
எவ்வாறாகினும் இவ்வாறன செயல்கள் கண்டிக்கத்தக்கன, மயானம்கள் கோவிலை போல புனிதமான இடம்,அங்கு நம் உறவுகளின் உடல்கள் தோண்டி எரிக்கப்படுவது எவ்வளவு ஈனத்தனமான செயல்,ஒவ்வொரு குடும்பமும் எவ்வளவு நம்பிக்கைகளோடு தங்கள் உறவுகளின் உடல்களை புதைத்து விட்டு வருகின்றனர், எமது உறவின் ஓருவரின் சவக்குழி தோண்டப்பட்டு எரிக்கபட்டால் எமக்கு எவ்வளவு கோவம் வரும்?
கேள்விகள் பல பதில் தெரியவில்லை!!!
இது நடந்து முடிந்து விட்டது இனி எதுவும் செய்ய முடியாது என்று சில நண்பர்கள் கருத்துரை அளித்துள்ளார்கள்.நாங்கள் புதையலை தேடவேண்டாம் நம் முப்பாட்டன்களின் வரலாற்றை தேடி ஆவணப்படுத்துவோம்!!!அப்படி இல்லாவிட்டால் அவைகள் கூட காணாமல் போய்விடும் நான் குறிப்பிட்ட மலை தவிர பல மலைகள் மூதூர் கிழக்கில் உள்ளது அது அந்த மலைகளும் அதனை சுற்றி உள்ள பகுதிகளிலும் பல வரலாற்று எச்சம்கள் காணப்படுகிறது அவை தொடர்பான விடையங்களை தொடர்ந்து புகைப்பட ஆதாரங்களுடன் பதிவுகளை தொடருவேன்!!!
தொடரும் ...............

Wednesday, January 25, 2012

தமிழ் கட்சிகள் இணைவு????



இந்த வாரம் நான் கேட்ட இனிப்பான செய்தி தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பை பேச்சு வார்த்தைக்கு அழைத்தது.இது ஒரு நல்ல தொடக்கம் என்று நான் நினைக்கிறேன். என் என்றால் என்னதான் கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் இப்பொழுது இருகட்சிகளும் ஒரு புள்ளியில் நிற்கின்றன.(சந்திரகாந்தன் அவர்கள் சம்பந்தர் அவர்களுக்கு எழுதிய கடிதம் மூலமாக புரிகிறது) காரணம் மாகாணங்களுக்கான காணி போலீஸ் அதிகாரங்கள் அடிப்படையாக கொண்டு அரசுடன் நடக்கும் பேச்சுவார்த்தை !!! இது ஒரு ஆரோக்கியமான விடயம். ஆனாலும் இப்பொழுது ஒரு பிரச்சனை காணப்படுகிறது.என்னவென்றால்”தமிழ் தேசிய கூட்டமைப்பு கேட்பது வடக்கு கிழக்கு இணைத்த மாகாணம் ,TMVP கேட்பது கிழக்கு மாகாணம்.இது ஒன்றுதான் இப்பொழுது சிக்கலை கொடுக்கிறது.
இப்பொழுது என்ன கேட்டு கூட்டமைப்பு அரசுடன் பேசுகிறதோ!!!அதைத்தான் EPDP கூட வலியுறுத்துகிறது.  இவ்வாறு இருக்கும்போதும் போலீஸ் காணி அதிகாரங்கள் பெற்ற வடக்கு கிழக்கு மாகாணம் என்பதுதான் எம்மக்களுக்கு பூரண மனித பௌதிக வளம் கொண்ட மாகாணமாக அமையும். என் என்றால் ஒரு மொழி பேசும் மக்களுக்கு இரண்டு போலீஸ் பிரிவுகள் சட்டம்கள் பொருத்தமற்றது. வடக்குகிழக்கு பண்டைய காலம் தொட்டு தமிழ் மக்களின் பிரதேசமாக இருக்கிறது..அதிகார பகிர்வு சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும்தான், வடக்கு கிழக்கு மக்களுக்கு இடையில் இல்லை.எது எப்படியாகினும் தமிழ் மக்களுக்குகான உரிமை போராட்டம் வடக்கு கிழக்கை அடிப்படையாக கொண்டுதான் தோற்றம் பெற்றது. அதனால் தீர்வுகளும் வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயக பிரதேசத்தை அடிப்படையாக கொண்டு அமையவேண்டும். இதைதான் தமிழ் மக்கள் எதிர்பார்ப்பார்கள்.
இப்பொழுது கூட்டமைப்பு,ஈழமக்கள் ஜனநாயக கட்சி ஆகியன வடக்கு கிழக்கு இணைந்த அதிகாரத்தை கோருகின்றன. தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கிழக்கு மாகாணம் என்ற கொள்கையை விட்டு வடக்கு கிழக்கு இணைத்த மாகாணத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டிய கடப்பாடு உள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசுடன் பேசிய விடயங்களை வெளிப்படையாகக் வெளியிடுவதில்லை இதை சந்திரகாந்தன்(பிள்ளையான்)கூட அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். இதை தவிர்த்து தமிழ் கட்சிகள் குறைந்தது கருத்து பரிமாறலையாவது மேற்கொள்ள வேண்டும்.
இனிவரும் காலங்களிலாவது தமிழ் கட்சிகள் தனித்து செயல்படாமல் விட்டுக்கொடுப்புகளுடனும் அர்ப்பணிப்புக்களுடன் செயல்படுவது நன்று!!!
ஒன்றாய் இணைந்து விட்டால் கட்டாயம் ஒரு முடிவு கிடைக்கும்.
இனியும் நாம் வீரம்,துரோகம் என பேசிக்கொண்டு இருந்தோமானால் கிடைப்பது கூட கிடைக்காது(வீரம் ,துரோகம்என்ற சொற்கள் தமிழ் சினிமாக்காரர்களால் குத்தகைக்கு எடுக்க பட்டு விட்டது). ஏன் என்றால் சர்வேதேச சமுகம் இலங்கை மீது இனபிரச்சனை மீது கடும் இறுக்கத்துடன் செயல்ப்படுகிறது.தமிழர் தீர்வில் அக்கறை காட்டுகின்றன(இந்தியாவும் சீனாவும் அக்கறை கடுவது போல் நடித்து கொண்டு இருகின்றன) இந்த உந்துதளுடன் தமிழ் கட்சிகள் செயல் படவேண்டும் .பழம் கனிகிறது அழுக முதல் சாப்பிட வேண்டும்.